சிப்பாய் கலகம் - 1857 நூற்றிஐம்பது ஆண்டு

கார்ல் மார்க்ஸால் முதல் இந்திய சுதந்திரப் போர் என்றும் இந்திய விவசாயிகளின் எழுச்சி என்றும் வர்ணிக்கப்பட்ட 1857 "சிப்பாய் கலகம்" - இவ்வருடம் நூற்றி ஐம்பதாவது ஆண்டை கொண்டாடுகிறது. இந்திய விவசாயிகள் மற்றும் போர் வீரர்களின் பேரெழுச்சியை "கலகம்" என்கிற ஒரு சொல்லாடலால் அதாவது ஆங்கிலத்தில் "மியூட்டினி" என்பதாக கீழ்நிலைப்படுத்துவதிலிருந்து பின்காலணீய கட்டுமானம் குறித்த நமது ஆய்வை துதுவக்க வேண்டியவர்களாக உள்ளோம்.

1857-ற்கு முந்தைய இந்தியாவையும் அதற்கு பிந்தைய இந்தியாவையும் ஒன்று படுத்தி பார்ப்பதில் உள்ள சிக்கல்கள் பற்றி நண்பர் ராமாணுஜம் ஒரு முக்கியமான குறிப்புன்றைத் தந்தார். அதாவது பார்ப்ணியச் சிந்தனை மற்றும் அதன் கட்டுமானம் குறித்து நிகழ்ந்த முக்கிற வேறுபாடுகளை நாம் பிரித்துணர வேண்டும். வேறுவிதமாகச் சொன்னால், 1857-ற்கு பிந்தைய பார்ப்பணீயம் சாதீயத்தை ஒரு அதிகார மையமாக மாற்றியது என்பதாகும்.
Share |
ஜமாலன். Blogger இயக்குவது.