புறாவுக்கு போரா? அல்லது போருக்கு புறாவா? – லீனா மணிமேகலையுடன் ஒரு உரையாடல்

லீனா மணிமேகலை அவர்கள் என்மீதும் தமிழின் மதிப்பு மிக்க எழுத்தாளர்களான கோவை ஞானி, தமிழவன், இன்குலாப், பஞ்சாங்கம் ஆகியவர்களைப் பற்றியும் சில ”அறம்”சார்ந்த கேள்விகளை எழுப்பி எங்களை பெரும் சிக்கலில் மாட்டிவிட்டார். அந்த சிக்கலின் முடிச்சுகளை அவிழ்க்க சம்பந்தப்பட்ட தோழர்கள் பிரேம் மற்றும் மாலதி மைத்ரி அவர்களிடம் விசாரித்து அறிந்தபின் அவரது முகநூல் பதிவை தேடினால் அது கிடைக்கவில்லை. முகநூலை காலி செய்துவிட்டாரா? அல்லது அந்த பதிவை நீக்கிவிட்டாரா? என்று எதுவும் தெரியவில்லை. இதுபோன்ற விஷயங்களில் எனக்கு அவ்வளவு விவரம் பத்தாது. நல்லவேளையாக அதை காப்பி செய்து அன்றே பிரேமிற்கு அனுப்பிய பிரதி உள்ளது.

அதில் சந்திரன் என்ற தோழருக்கு ஒரு திறந்த கடிதம் ஒன்று, மாலதி மைத்ரியின் அறிக்கையில் கையொப்பம் இட்டது பற்றி எழுதி உள்ளார். அதை எனக்க டேக் செய்து உள்ளார். அதன்பின் முதல் கமெண்டில் என்னைப்பற்றி எழுதி எனக்கு அதை டேக் செய்து உள்ளார். இதுபோன்ற விஷயங்களில் நான் கவனம் செலுத்துவது இல்லை என்பதால் அதற்கு எந்த பதிலும் எழுதவில்லை. ஆனாலும் அதன் பின் தமிழவன் பற்றி எழுதி என்னை எங்கே ஜமாலன் என்று அழைத்து ஒரு கமெண்ட் போட்டு உள்ளார். சரி நமது கருத்தை அறிய ஆவல் கொண்டு உள்ளார் என்பதால் நான் அவரிடம் உரையாடலைத் துவங்கினேன். அதன் பின் அவர் முன்வைத்த காரணங்களை அறிந்துகொள்ள சம்பந்தப்பட்ட மாலதி மற்றும் பிரேமிற்கு மின் அஞ்சல் செய்தேன். மாலதி ஒரு விரிவான பதிவை எனக்கு எழுதி அனுப்பினார். அதை இங்கு அவரது அனுமதியுடன் வெளியிடுகிறேன்.

இதை வெளியிடக்காரணம் ஞானி, தமிழவன், இன்குலாப், பஞ்சாங்கம் போன்ற எழுத்தாளர்களை அவர்கள் அறியாமல், வாசிக்காமல் ஏனோதானோ என்று கையெழுத்து இட்டார்கள் என்று தொனிக்கும் வண்ணம் எழுதி உள்ளார். வாசிக்காமல் கையெழுத்து இடுவதன்மூலம் அவர்களது எழுத்து நேர்மை பற்றிய கேள்வி மறைமுகமாக எழுப்பப்படுகிறது என்பதே இப்பதிவை நான் வெளியிடுவதின் நோக்கம். சம்பந்தப்பட்ட அந்த எழுத்தாளர்கள் மாலதி மைத்ரி மற்றும் பிரேமிடம் கூறியதைப் பற்றியதே மாலதியின் இப்பதிவு. கையெழுத்து இட்ட எழுத்தாளர்களை ஒரு போலிஸ் துறை விசாரணைப்போல விசாரித்து, அதை பொய்யென நிருபிக்க அவர் அவசரம் காட்டுவதன் நோக்கமென்ன? தொடர்ந்து வல்லினத்தில் எழுதும் லீனா, இதை அதில் எழுதாமல் முகநூலில் அதுவும் சம்பந்தமில்லாத ஒருவருக்கு கடிதம் எழுதி அதன் கமெண்டுகளில் போட்டதன் நோக்கமென்ன? அறம் அறம் என்று கூறுவதின் உட்பொருள் இதானா? அறம் பற்றி என்னை கேட்பதற்கு முன்பு தன் அறத்தை அவர் பரிசீலிப்பது அவசியம்.

இந்த முழு நிகழ்வுகளையும் புரிந்து கொள்ள லீனாவுடன் ஆன எனது உரையாடலை தருகிறேன்.

மார்ச்-2 ல் எனக்கு வந்த பேஸ்புக் நோட்டிபிகேஷன். என்னை லீனா டாக் செய்து உள்ளார்.

Leena Manimekalai tagged you in a note on Facebook

Inbox

x

clip_image001

Facebook notification+pupmhi7d@facebookmail.com

Mar 2 (3 days ago)

clip_image002

 

clip_image002[1]

clip_image002[2]

to me

clip_image002[3]

Leena Manimekalai tagged you in her note "அன்புள்ள சந்திரன் தோழருக்கு,". You can choose if you want to add it to your timeline.

To read the note, follow the link below:
https://www.facebook.com/n/?notes%2Fleena-manimekalai%2F%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%2F10153966024295657&aref=109121371&medium=email&mid=97cbcfcG5b983b67G6810f5bGa&bcode=1.1393737679.Abk5QiyEPF-3IqGL&n_m=jamalan.tamil%40gmail.com
Remember: Posts you hide from your timeline may still appear in News Feed and elsewhere on Facebook.
Thanks,
The Facebook Team

___
This message was sent to jamalan.tamil@gmail.com. If you don't want to receive these emails from Facebook in the future, please follow the link below to unsubscribe.
https://www.facebook.com/o.php?k=AS1L9k5Itw7NQEzL&u=1536703335&mid=97cbcfcG5b983b67G6810f5bGa
Facebook, Inc., Attention: Department 415, PO Box 10005, Palo Alto, CA 94303

மார்ச் 2 அன்று எனக்கு வந்த மின் அஞ்சல் பேஸ்புக்கிலிருந்து.

facebook

 

Leena Manimekalai mentioned you in a comment.

Leena wrote: "Jamalan Tamil பன்மெய் ஆசிரியர் குழுவில் நீங்களும் ஒருவராமே? நல்லது! அது என்ன என்னை அவதூறு செய்து கட்டுரைகள் வெளியிடுவீர்கள்? கட்டுரைக்கு எழுதும் என் மறுப்புரைகளை வெளியிட மாட்டீர்களா? இது என்ன மாதிரியான எதிக்ஸ்?"

Reply to this email to comment on this note.

See Comment

This message was sent to jamalan.tamil@gmail.com. If you don't want to receive these emails from Facebook in the future, please unsubscribe.
Facebook

மார்ச் 4 அன்று என்னை வம்படியாக லீனா இழுத்த குறிப்பிட்டு டேக் செய்த பேஸ்புக் நோட்டிபிகேஷன்

Leena Manimekalai mentioned you on Facebook

Inbox

x

clip_image001[1]

Facebook notification+pupmhi7d@facebookmail.com

Mar 4 (1 day ago)

clip_image002[4]

 

clip_image002[5]

clip_image002[6]

to me

clip_image002[7]

facebook

 

Leena Manimekalai mentioned you in a comment.

Leena wrote: "எழுத்தாளர் தமிழவன், அறிக்கையா? என்ன அறிக்கை? நான் எதிலும் கையெழுத்திடவில்லையே என்று கேட்கிறார்!
மாலதி மைத்ரிக்கு ஏன் இந்த கயவாலித்தனம்? Hello Jamalan Tamil, Where are you?"

Reply to this email to comment on this note.

See Comment

This message was sent to jamalan.tamil@gmail.com. If you don't want to receive these emails from Facebook in the future, please unsubscribe.
Facebook, Inc., Attention: Department 415, PO Box 10005,

மார்ச்-4 நடந்த உரையாடல்.

· Leena Manimekalai Jamalan Tamil பன்மெய் ஆசிரியர் குழுவில் நீங்களும் ஒருவராமே? நல்லது! அது என்ன என்னை அவதூறு செய்து கட்டுரைகள் வெளியிடுவீர்கள்? கட்டுரைக்கு எழுதும் என் மறுப்புரைகளை வெளியிட மாட்டீர்களா? இது என்ன மாதிரியான எதிக்ஸ்?

March 2 at 8:25am · Like · 2

· Leena Manimekalai Writer- Critic Panjaangam who has signed Malathi's statement has now emailed that he did not know the true picture and conveys a sorry message. \

March 2 at 6:25pm · Edited · Like · 2

· Rama Inba Subramanian Dear Leena , its Tru that v had few issues in sengadal... n in the happenings in Delhi .. apart from this the new issue of Malathi nd you where not clear to me as I was not in system axis and smsd her. How ever, v lie down and spit, it Wil fall in our ...See More

Yesterday at 12:07am · Like · 1

· Leena Manimekalai Inba, What made you sign the statement if you are apparantly not clear about anything at all? Rama Inba Subramanian Hope you have a gesture to withdraw your signature.

Yesterday at 8:52am · Edited · Like · 1

· Leena Manimekalai Writer Kovai Gnani sends his apologies for signing Malathi's maithri's statement without cross checking the facts.

Yesterday at 8:52am · Like · 1

· Leena Manimekalai Poet Inquilab has promised to cross check the facts and expressed his concerns!

23 hours ago · Like · 2

· Leena Manimekalai Rama Inba Subramanian confirms, she did not get to read the statement at all and her signature was added without her email approval!

13 hours ago · Like · 2

· Rama Inba Subramanian Yes. I was only said about sengadal n Delhi issues . I'm no where in the pictures of Tata ,or white van. I explained this to Malathi and said clearly that iv not read the articles as I was not in system . When Malathi said that she was hurt in the Delh...See More

9 hours ago · Like · 1

· Leena Manimekalai எழுத்தாளர் தமிழவன், அறிக்கையா? என்ன அறிக்கை? நான் எதிலும் கையெழுத்திடவில்லையே என்று கேட்கிறார்!
மாலதி மைத்ரிக்கு ஏன் இந்த கயவாலித்தனம்? Hello Jamalan Tamil, Where are you?

34 minutes ago · Like · 1

· Jamalan Tamil தோழர் அதில் கையெழுத்து இட்டவர்கள் அனைவரும் மனப்பிறழ்ச்சியாளர்கள் என்று கூறியபின் ஒவ்வொருவராக எதற்கு சோதித்து உங்கள் வாக்கியத்தையே நீங்கள் பொய்யாக்க விரும்பகிறீர்கள் என்று புரியவில்லை. உங்களுக்கு இப்படி பதில் சொன்னால் ஒருவேளை பிடிக்கலாம். "புறாவுக்கு போரா?”

28 minutes ago · Like

· Leena Manimekalai Jamalan Tamil, நான் ஊரில் இல்லாததால், எனக்கு ஈழத் தமிழ் தோழமைக் குரலில் பங்கெடுத்த தோழர்கள் வாசித்து தான் காட்டினார்கள். அதில் இந்தப் பட்டியல் பெயர்கள் எதுவும் இல்லையே? யாரிடமும் கேட்காமல் சேர்த்ததால்,இறுதிக் கட்டத்தில் சேர்த்தீர்களோ?

24 minutes ago · Like

· Leena Manimekalai Jamalan Tamil, நான் ஊரில் இல்லாததால், எனக்கு ஈழத் தமிழ் தோழமைக் குரலில் பங்கெடுத்த தோழர்கள் வாசித்து தான் காட்டினார்கள். அதில் இந்தப் பட்டியல் பெயர்கள் எதுவும் இல்லையே? யாரிடமும் கேட்காமல் சேர்த்ததால்,இறுதிக் கட்டத்தில் சேர்த்தீர்களோ?

23 minutes ago · Unlike · 1

· Jamalan Tamil பன்மெய் இதழில் நான் ஆசpரியர் குழவில் உள்ளேன். நீங்கள் எதாவது மறுமொழி அனுப்பினீர்களா? அப்படி அனுப்பி இருந்தாலும், ஆசரியர் குழுவின் முடிவின்படிதான் அது வெளியிடப்படும். நடுவுநிலமை, ஜனநாயகம், தனிநபர் சுதந்நதிரம் உள்ளிட்ட அனைத்து முதலாளித்துவக் கருத்தாக்கங்...See More (இந்த பகுதியை விரிவாக்கி முழுவதுமாக வெளியிடலாம் என்றால் தற்சமயம் அந்த சைட் முடப்பட்டுவிட்டது.  நான் நெரடியாக பாக்ஸில் எழுதியதால் அதன் பிறகு சொன்னவை நினைவில் இல்லை. )

23 minutes ago · Like

· Jamalan Tamil தோழர் நான் கையெப்பம் இட்டேன் அதுகுறித்து மட்டுமே எனது கருத்து. பட்டியல் இதுபோன்ற விஷய்ஙகள் தவறாக போஸ்ட் ஆன தபால்போல எனக்கு தொடர்பில்லாமல் வந்து உள்ளது.

22 minutes ago · Like

· Leena Manimekalai இதற்கு முன்னர் மாலதி எழுதிய "கட்டுரைக்கு" எதிர்வினை பன்மெய் மெயிலுக்கு அனுப்பி வைத்தேன். நீங்கள் பிரசுரிக்கவில்லையே ?

19 minutes ago · Like

· Jamalan Tamil தோழர் நீங்கள் என் நட்பு பட்டியலிலம் இல்லை. அது நீங்களே அன்-பிரண்ட் செய்தது. வரலாற்றில் ஒரு முக்கிய திருப்பம் என்னவென்றால், எனக்கு முகுநூலை அறிமுகப்படுத்தி முதல் நட்பானவர் நீங்கள்தான். உங்க்ள அழைப்பில்தான் முகநூலை அறிந்து கொண்டேன். நகைமுரண்.. அதிலிருந்து நீங்களே விலகிவிட்டீர்கள். இருந்தாலும் உங்கள்மீது எனக்குள்ள மதிப்பின் அடிப்படையில்தான் இந்த பதில்களை சொல்கிறேன்.

19 minutes ago · Like

· Leena Manimekalai நீங்கள் கையெழுத்திட்டீர்கள், அது உங்கள் சுதந்திரம். அறிக்கை நீங்கள் ஆசிரியராக இருக்கும் பன்மெய் தளத்தில் வெளி வந்திருக்கிறதே?
நீங்கள் விருப்பத்திற்கு ஒரு தனி ஆள் மீது பொய்களை அடுக்கி அறிக்கை வெளியிட்டு, படைப்பாளிகளிடம் கேட்காமல் வெளியிடுவீர்கள், கேட்டால், புன்நகையுடன் கடந்து போவீர்களா? நல்ல இருக்கே உங்க விளக்கம்

16 minutes ago · Unlike · 1

· Jamalan Tamil அடடா எனது முதல் பதிலை படியுங்கள் வெளியிடவில்லை என்றால் அந்த பத்திரிக்கையின் சில எல்லைக்கு உட்பட்டு நிறத்தப்பட்டிருக்கலாம். நீங்கள் எது பன்மெய் வெளியிடவில்லை என்று கருதுகிறீர்களோ, அதை வெளியிட எண்ணற்ற ஊடகங்கள் இதுபோன்ற இணைய தளங்கள் உள்ளது. அதில் வெளியிட்டு பன்மெயின் ”ஜனநாயக விரோத” போக்கை அம்பலப்படுத்தலாமே. இது எளிமையான ஒன்று. இத்தகைய ”ஜனநாயக விரோத” போக்குகளை தீர்மாணிப்பது மக்கள் மன்றம். அதுதான் சரியானதும்கூட.

16 minutes ago · Like

· Leena Manimekalai உங்கள் கேலி கிண்டல் எல்லாம் வேறு யாரிடமும் வைத்துக்
.கொள்ளுங்கள்! Jamalan Tamil

14 minutes ago · Like

· Jamalan Tamil விளக்கம் நல்லா இருந்தால் நல்ல விஷயம்தானே. ”பொய்கள்” அடுக்கப்பட்டதாக கருதினால் அதை கேட்க எண்ணற்ற தளங்கள் உள்ளது.

14 minutes ago · Like

· Jamalan Tamil தோழர் நான் கேலி கிண்டல் எதுவும் செய்யவில்லை. நான் சொல்வதின் சுருக்கம் இதுதான். உங்களுக்கு வாய்ப்புள்ள தளங்களில் இந்த பொய்கள் பற்றி அம்பலப்படுத்துங்கள் என்பதுதான்.

12 minutes ago · Like

· Leena Manimekalai பொய்களை , வெளியிடுவோம் ஆனால், மறுப்பை வேறு தளங்களில் வெளியிட்டுக்கொள்ளுங்கள் என்பது பத்திரிக்கை அறமல்ல, தடித்தனம்

9 minutes ago · Like

· Jamalan Tamil என்னவேண்டுமானலும் சொல்லிக்கொள்ளுங்கள் தோழர். அது அப்படியே ஆகட்டும் என்பதை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. நன்றி உரையாடலுக்கு.

7 minutes ago · Like

· Leena Manimekalai ஒருவரை முகநூலில் நட்பாக்கி கொள்வதும், பின்பு விலகிக் கொள்வதும் தனிநபர் பிரச்சினை. அதையெல்லாம் பேச வேண்டிய திரி இதுவல்ல. இல்லையென்றாலும் நான் என்ன போஸ்ட் செய்கிறேன் என்பதில் அப்டேட்டாக இருக்கிறீர்கள் போலிருக்கிறதே?

6 minutes ago · Unlike · 1

· Jamalan Tamil நட்பிலிருந்து தானாக விலக்கி கொண்டவர்கள் கேள்வி கேட்பது பற்றித்தான் நான் சொன்னது. உங்கள் போஸ்ட் எதையும் நான் வாசிப்பதில்லை. நீங்கள் எனது மின் அஞ்சலுக்கு அனுப்பியதை வாசித்தேன். மாலதி எனது மின் அங்சலுக்கு அனுப்பியதை வாசித்தேன். அவ்வளவே. அனுப்பாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சனைகள் எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற பிரச்சனைகளில் அப்டேட்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அது சொம்பகளுடன் அலையும் நாட்டாமைகளுக்குதான் தேவை. ஆனாலும் பொவாக அப்டே்டாக இல்லாவிட்டால் நமது காலில் லேபில் கட்டி விற்றுவிடுவார்கள். உலகம் அவ்வளவு வேகமாக போகிறது. தோழர் என்னிடம் நீங்கள் என்ன பதிலை எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை. தடித்தனம் என்றானபின் தொடர்ந்து பதிலை ”கறக்க” ஏன் முயல்கிறீர்கள். விட்டுவிடுங்கள். வேறு பயனுள்ள பணிகளைப் போய் பாருங்கள். இதற்கும் எதாவது சொல்வீர்கள். எனக்கு தெரியும் உன் வேலையைப் பாரு என்று. அதனால்.. தொடர்ந்து பேசினாலும்... இதான். மீண்டும் நன்றி.

a few seconds ago · Like

05/03/2014 11:15 pm – லீனா அவர்களின் அந்த தளம் திறக்கவில்லை.

clip_image004

இந்த நிமிடம் வரை அந்த தளம் திறக்கவில்லை.

இனி மாலதி மைத்ரி எனக்கு அனுப்பிய மின் அஞ்சல்.

வணக்கம் ஐமாலன்

எனக்கு மிக அருவெறுப்பாக இருக்கிறது. இந்த அவதூறுகளுக்கு பதில் சொல்வது. திரும்ப திரும்ப பொய் உலா வருவதால் உண்மையாகிவிடும் என்பதால் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

Leena Manimekalai

Gestern in der Nähe von Jadabpur, India

ஒருவரை மட்டும்தான் மனநோய் விடுதிக்கு அழைத்துச் செல்லப் பரிந்துரைத்திருந்தேன். இப்போது பார்த்தால் ஒரு கூட்டத்தையே அழைத்துச் செல்ல வேண்டும் போலிருக்கிறதே!

நான் அனுப்பிய அறிக்கையில் கையெழுத்திட்டவர்களை பற்றி பிப்ரவரி.4ந்தேதி லீனா முகநூலில் எழுதியது.

வல்லினத்தில் தொடங்கிய விவாதத்தை மாலதி பன்மெய்யிலும் தொடர்ந்திருக்கிறாரே?

அவர் ஆண்டை அடிமை என்றும் டாட்டா என்றும் பொருமலும் பொறாமையுமாய் தன் இணையதளமான உயிர்மெய்யில் உளறியதோடு நிறுத்தியிருக்கலாம்.நூறு பேர் கூடி தேரிழுத்த ஈழத்தமிழர் தோழமைக் குரலையும் சந்திக்கு இழுத்து அசிங்கப்படுத்தியிருக்கிறார். 2009 ல் ஈழத்தமிழர் தோழமை குரலின் போராட்டங்கள் நடந்த காலத்திலேயே அது புலிவாலாக இல்லை என்ற காரணத்தால் அதை தாக்கிய தமிழ்த் தேசிய ஒட்டுக்குழுக்களிடம் கையொப்பங்கள் வாங்கி தலையும் இல்லாத வாழும் இல்லாத ஒரு அறிக்கையை வெளியிடுகிறார். ஈழத்தமிழர் தோழமைக் குரலில் பங்கெடுத்த ஒரு படைப்பாளி கூட அதில் கையெழுத்து வைக்கவில்லை. விவாதம் விவாதமாக இருக்கும் வரை உரையாடலாம் நண்பா. அது தனிநபர் தாக்குதலாக, மன நோய் முற்றிய பினாத்தலாக மாறும் போது, பார்த்து பரிதாபப்படலாம். மாலதியின் வாசகராக அவரை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து செல்லும் பணியை ஏற்றுக்கொள்ள நான் தயாராய் இருக்கிறேன்.

தமிழில் தொடர்ச்சியாக இயங்கும் என்னை வெறும் வாய்ச்சொல் வீரர்கள், இயக்கம் சலித்தவர்கள், நான் செய்ய முடிந்ததை செய்ய இயலாதவர்கள், தங்கள் பொய்களால், அவதூறுகளால் தாக்குகிறார்கள். அவர்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்ற அறிவுரை எனக்கு தொடர்ந்து சொல்லப்படுகிறது. எதிர்ப்பும் செயலூக்கத்தின் ஒரு பகுதியே! பேசுபொருளாக மாறும்போது பொது அபிப்ராயங்கள் மாறுமே, எந்த குழுவிலும் நம்மை சேர்த்துக்கொள்ளாமல் தனிமைப்படுத்துவார்களே, அவமதிப்பார்களே என்றெல்லாம் அஞ்சிக்கொண்டு எதிர்ப்பு செய்ய வேண்டிய இடத்தில் எதிர்க்காமல் அநீதிக்கு முன் மண்டியிடுவது படைப்பாளிக்கு அழகல்ல.

1. பிப்.1ந்தேதி லீனா மணிமேகலையின் வல்லினம் நேர்காணலில் பன்மெய் பற்றிய ஒரு கேள்விக்கு லீனாவின் மேற்கண்ட பதில் இது. கணனி வசதி இல்லாததால் தற்போதுதான் (மார்ச் 3ந்தேதி) தமிழ்நாட்டுக்கு வந்து என்னுடைய அறிக்கையைப் பார்த்ததாக எழுதுகிறார். கணனி வசதி இல்லாமலேயே மிகப் பெரிய நேர்காணலை வல்லினத்துக்கு எப்படி அளித்தார். மண்டபத்தில் யாராவது எழுதி தர ஆட்கள் உள்ளார்களோ. ஒருமுறை என் கவிதையை சுகிர்தராணி கவிதையாகவும் பிரேமின் கருத்துக்களை அவரின் சொந்த கருத்துக்களாகவும் எழுதியிருந்தார். முகநூலிலும் நேர்காணலிலும் எனது கண்டன அறிக்கைப் பற்றி பிப்ரவரியிலேயே அவரின் கருத்தை பதிவு செய்துவிட்டு தற்போது நாடகமாடுகிறார்.

2. இதுவரை லீனா மணிமேகலை எனக்கோ பன்மெய் இணைய தளத்துக்கோ எந்த மறுப்பையும் அனுப்பி வைக்கவில்லை. அப்படி அனுப்பியிருந்தால் அதன் ஆதாரத்தை வெளியிட வேண்டும்.

3. தமிழவன் அவர்கள் கையெழுத்திட்டு நீண்ட நாட்களாகிவிட்டதால் மாலதி மைத்ரி அறிக்கை என்றவுடன் சட்டென்று அவருக்கு நினைவுக்கு வரவில்லை. அப்படி எதுவும் தற்போது கையெழுத்திடவில்லை என்றிருக்கிறார். அதன் பிறகு என்ன விபரம் என்று கேட்க இவர் அந்த அறிக்கைப் பற்றிய விபரத்தை சொல்ல ஆமாம் நண்பர்கள் அனுப்பி வைத்திருந்தார்கள் படித்து பிறகு உடன்பட்டுத்தான் கையெழுத்திட்டேன் என்றும் சொல்லியிருக்கிறார். முதல் வார்த்தையை மட்டும் வெட்டியெடுத்து எனக்கெதிராக திருப்பும் கயவாளித்தனம் லீனாவுக்கு மட்டுமே கைவந்த கலை.

4. கோவை ஞானி அவர்கள் “லீனாவிடம் எதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார். இவரின் முறைகேடுகள் பற்றி நன்றாக தெரியும். டாடாவுக்கு படமெடுத்து தந்தவர் தானே” என்கிறார். “மாலதி மைத்ரி படித்துக் காட்டியதற்கு முழு ஒப்புதலுடனும் நியாமிருப்பதாலும் கையெழுத்திட்டேன்” என்று உறுதியாக தெரிவித்திருக்கிறார். (நிறைய எழுத்தாளர்கள் முகநூல் மற்றும் இணையத்தை பயன்படுதுவதில்லை என்பதை இப்படிபட்டவர்கள் கீழ்தரமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.) மேலும் அசிங்கத்தின் மீது கல்லெறிந்தால் நம் மீதும் அசிங்கம் படும். இதற்கு சிறு குறிப்பை மட்டும் எழுதி ஒதுங்கிவிடுங்கள். உங்கள் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்றார்.

5. எழுத்தாளர் பஞ்சாங்கத்துக்கு “என் தரப்பு நியாங்களை கேட்காமல் எப்படி நீங்கள் கையெழுத்திடலாம்” என்று மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். உங்களிடம் கேட்டிருக்கலாம் அதற்கு மட்டும்தான் மன்னிப்பு என்று பதில் அனுப்பியிருக்கிறார். அவர் கையெழுத்து போட்டதற்கு மன்னிப்பு கேட்கவில்லை.

6. இன்குலாப் அவர்களும் கையெழுத்தை திரும்ப பெறுவதற்கு எந்த அடிப்படையுமில்லை. நான் கையெழுத்திட்டது சரிதான் என்றும் சொல்லியிருக்கிறார்.

7. இன்பா சுப்ரமணியத்திற்கு நான் ஜனவரியில் மின்னஞ்சல் அனுப்பிவிட்டு பேசினேன். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் பிறகு படித்துவிட்டு என்னிடம் பேசுவதாக சொன்னார். ஒருவாரம் கழித்து அவரே என்னிடம் தொலைபேசியில் மிக நீண்ட நேரம் பேசினார். அறிக்கை படித்துவிட்டதாவும் யார் யார் கையெழுத்திட்டுள்ளார்கள் என்றும் கேட்டார். நான் பெயர்களை குறிப்பிட்டேன். ஈழத் தமிழர் தோழமைக் குரலில் உள்ள சில பேர் கையெழுத்திட மாட்டார்கள் அவர்கள் லீனாவுடன் தனிப்பட்ட பிரச்சனைகளில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சொன்னார். லீனாவின் முறைகேடுகள் குறித்தும் நிறைய பகிர்ந்து கொண்டார். தன் ஒப்புதலை குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைப்பதாகவும் சொன்னார். அதன்படி இன்பா தன் ஒப்புதலை குறுஞ்செய்தியாக அனுப்பி வைத்தார். இன்பா சுப்ரமணியம் தற்போது லீனாவின் முகநூலில் வந்து தான் அறிக்கையை படிக்கவில்லை என்றும் மின்னஞ்லில் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதும் வேடிக்கையாக இருக்கிறது. நிறைய நண்பர்கள் தொலைபேசியிலும் குறுஞ்செய்தியிலும்தான் ஒப்புதல் அளித்தார்கள். வெகுசிலர்தான் மின்னஞ்சலில் ஒப்புதல் அளித்தார்கள். இதுதான் வழக்கமாக எல்லோரும் கடைபிடிக்கும் நடைமுறை.

திரும்ப திரும்ப லீனா மணிமேகலைக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் என்றும் பொறாமையில் பேசுகிறேன் என்றும் எழுதுகிறார். இந்த விஷயத்தை இத்துடன் விட்டுவிடுங்கள் என்று அவரது நண்பர்கள் லீனாவுக்கு அறிவுறுத்தியதாகவும் எழுதுகிறார். இப்படி எழுதிவிட்டு கண்டன அறிக்கையில் கையெத்திட்டவர்கள் அனைவரையும் “ஒருவரை மட்டும்தான் மனநோய் விடுதிக்கு அழைத்துச் செல்லப் பரிந்துரைத்திருந்தேன். இப்போது பார்த்தால் ஒரு கூட்டத்தையே அழைத்துச் செல்ல வேண்டும் போலிருக்கிறதே! என்று திமிராக எழுதிவிட்டு அவர்களிடமே போய் கெஞ்சிக்கொண்டிருக்கிறார். என்ன பரிதாபம்.

ஈழத்தமிழர் தோழமை குரலின் போராட்டங்கள் நடந்த காலத்திலேயே அது புலிவாலாக இல்லை என்ற காரணத்தால் அதை தாக்கிய தமிழ்த் தேசிய ஒட்டுக்குழுக்களிடம் கையொப்பங்கள் வாங்கி தலையும் இல்லாத வாலும் இல்லாத ஒரு அறிக்கையை வெளியிடுகிறார்.

இந்த புலிவால் அரசியல் செய்யும் தமிழ் திரைப்படத்துறை சார்ந்தவர்களிடமிருந்துதான் லீனா மணிமேகலை ரூபாய் 1.10,000 நன்கொடை வாங்கி போராட்டத்துக்கு தந்தார். “டெல்லியில் பிரபாகரன் வாழ்க, ராஜபட்சே ஒழிக என்று கோஷம் போட்டார்.” ஐனவரி மாதம் இவரின் வெள்ளைவேன் படம் திரையிடலுக்கு இந்த புலிவால் அரசியல் தலைவர்களான நல்லக்கண்ணு, பாரதி ராஜா மற்றும் ஒவியாவை தான் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். புலிகளின் ஆயுத வன்முறைதான் ஈழ பேரழிவுக்கு காரணம் என்ற கருத்தைதான் பிப்ரவரி 1ந்தேதி வல்லினம் நேர்காணலில் சொல்கிறார். லீனா மணிமேகலை தன்னை புலி போராளி வெற்றிச் செல்வியிடம் புலி பாசிச அரசியல் எதிர்ப்பாளர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டாரா? வெற்றிச் செல்வியிடம் “நீங்கள்தான் ஈழப் படுகொலைக்கு காரணமென்று ஏன் கேள்வி வைக்கவில்லை”. புலி ஆதராவளர்களிடம் புலி ஆதரவு முகம் காட்டி ஆதாயம் பெறுவதும் புலி எதிர்ப்பாளர்களிடம் புலி எதிர்ப்பு முகம் காட்டி ஆதாயம் பெறுவதும் லீனா மணிமேகலையின் வேலை. இது போன்ற இவரின் போலி அரசியலை நான் அம்பலப்படுத்தியதால்தான் இவருக்கு என்மேல் இவ்வளவு வன்மம்.

என் நண்பர்களும் தோழர்களும் திரும்ப திரும்ப சொல்கிறார்கள் அவர் எல்லாவற்றையும் தனக்கான விளம்பரமாக பயன்படுத்திக்கொள்பவர். அசிங்கத்தின் மீது கல்லெறிந்தால் அது நம் மீதும் படுமென்று. இனிமேல் இவரின் பொய்களுக்கும் அவதூறுகளுக்கும் விளம்பர மேனியாவுக்கும் என் நேரத்தை வீணாக்கிக்கொள்ள விரும்பவில்லை.

மாலதி மைத்ரி

இதை வாசிக்கும் நண்பர்கள். இந்த தகவல்களை லீனாவிற்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்கே இத்தனை விரிவாக வெளியிடப்பட்டு உள்ளது, அவர் தற்சமயம் முகநூலில் காணவில்லை என்பதால், அல்லது அவர் என்னை தனது நட்பு பட்டியலில் இருந்து நட்பு-நீக்கம் செய்துவிட்டதால், அவருக்கு இதனை அனுப்ப இயலவில்லை. அவரது மின் அஞ்சலுக்கு இந்த பதிவின் சுட்டி அனுப்பப்படுகிறது.

தனக்கு எதிராக கையொப்பம் இட்டவர்கள் அனைவரையும் மனநோயாளி என்ற அழைக்க ஒரு தனித் துணிச்சல் வேண்டும். அல்லது லீனா அவர்களுக்கு பிடித்தமான மொழியில் சொன்னால் ஒரு ”தனித் தடித்தனம்”  வேண்டும்.

இனி இந்த அல்லது இதுபொன்ற பிரச்சனைகளில் நேரவியரம் செய்வது தேவையற்ற ஒன்று என்ற கருத்துடன் முடிக்கிறேன். பயனுள்ள வகையில் அவர் ஏதேனும் மறுப்போ, தகவலோ தந்தால் இதை தொடர்ந்து பேசலாம். சிலவேளைகளில் தடித்தனத்தை தடித்தனம் கொண்டுதான் எதிர்க்க வேண்டி உள்ளது.

வாசித்த நண்பர்களுக்கு நன்றி.

அன்புடன்

ஜமாலன் (08-03-2014)

1 comments:

leena manimekalai சொன்னது…

Mr.Jamalan, You were bullying me in facebook and hence I removed you from my list. If you copy/paste report to your masters Prem and Malathi, you have to post my note as well. It is funny that you post only your comments and responses. Your readers cannot be definitely fools.

And the whole post says, you have been stalking me. However words you may try to cover up. One can give interviews to Vallinam or any other media on various modes and that interview was taken since many weeks via email, phone, skype etc. And my profession involves lot of travel and that means my access to sites, tamil typing etc will also vary according to areas where I travel. And it is also not possible for me like you spend all the time in stalking right?

And it is very obvious from my conversations with Tamilavan, Gnani, Prabanjan few more in the list that Malathi's hasnt given any background about anything and just was cribbing to them that I asked her to check her state of mind. They clearly said they had no business on anything else written in that "Statement". Irony, none of them actually have read the statement. If you ask me evidences, then show me evidences on each and every signature Malathi got for the statement. Regarding rejoinders to Panmey, I sent my rejoinders to you(One of the Editors), Malathy and Panmey website contact address when Malathy published her first article itself. There was no response and hence I had to publish it in my blog.

Apart from that, you had written that I raised Prabakaran slogans in Delhi! Do you have any evidences of it? Yes, I raised funds for the Delhi struggle from every quarters as it was more an anti war struggle and not meant for removing ban for LTTE. And every other person who supported the movement had read our political resolution in the circular. And Yes, I will show my film "White Van stories" not only to Bharathiraja, but also to Seeman. Even Prabakaran is alive,I will show it to him also.

Who gives you authority to Police me in all these quarters?

Stop your bullying and policing. Be in your limits. You may be a male writer/intellectual with all gangs and power play. But you may have to try some other place to play your gangster games.

Thanks for understanding. Hope you publish this.

Leena Maninmekalai,
09. March 2014, New Delhi

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.