<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-4997678103589622995</id><updated>2012-01-30T14:20:38.547+03:00</updated><category term='பெண்ணியம்'/><category term='பாலினமாதல்'/><category term='விடுதலைப்புலிகள்'/><category term='ஆமினா வதூத்'/><category term='கிம் கி-டுக்'/><category term='Eve Ensler'/><category term='வரலாறு'/><category term='மீள்பதிவு'/><category term='கூடங்குளம்'/><category term='சட்டக் கல்லூரி'/><category term='காமம்'/><category term='அறிவிப்பு'/><category term='கவிதைகள்'/><category term='பின்நவீனத்தவம்'/><category term='Kumbakinam'/><category term='Gilles Deleuze'/><category term='becoming-minor'/><category term='ஏ.கே. ராமானுஜன்'/><category term='நோம் சாம்ஸ்கி'/><category term='Rhizome'/><category term='நையாண்டி'/><category term='ஈழம்'/><category term='Transsexual'/><category term='புதுமைப்பித்தன்'/><category term='திருநங்கைகள்'/><category term='அமேரிக்கா'/><category term='ஜெயமோகன்'/><category term='பின்காலனியம்'/><category term='அறிமுகம்'/><category term='விளையாட்டு அரசியல்'/><category term='அடவி'/><category term='பொது அரசியல்'/><category term='Sigmund Freud'/><category term='சாதியம்'/><category term='தமிழ் கணினி'/><category term='மஹ்முத் தர்வீஸ்'/><category term='மற்ற பதிவுகள்'/><category term='நெருக்கடி'/><category term='அடையாள அரசியல்'/><category term='Perundevi'/><category term='Feminism'/><category term='philosophy'/><category term='வலசை'/><category term='Desiing Machine'/><category term='இஸ்லாமிய அடிப்படைவாதம்'/><category term='பின்நவீனத்துவம்'/><category term='இலக்கியம்'/><category term='ஹிஜாப்'/><category term='விவாதம்'/><category term='திரைப்பட ஆய்வு'/><category term='அகம்பன்'/><category term='பிரபாகரன்'/><category term='தேய்வசுந்தரம்'/><category term='Fatima Mernissi'/><category term='ஈவ் இன்ஸ்லர்'/><category term='Islamic Feminsm'/><category term='சங்ககாலம்'/><category term='சினிமா'/><category term='பதிவர் வட்டம்'/><category term='Transgender'/><category term='அகதிகள்'/><category term='உடல் அரசியல்'/><category term='புர்கா'/><category term='தத்துவம்'/><category term='மண்ட்டோ'/><category term='தமிழ் ஈழம்'/><category term='அர்ப்பணம்'/><category term='குடிக்கலாச்சாரம்'/><category term='நாரத ராமாயணம்'/><category term='தீராநதி'/><category term='பிரிவினை'/><category term='அழகியல்'/><category term='Noam Chomsky'/><category term='சென்னை பல்கலைக்கழகம்'/><category term='becoming-minority'/><category term='மார்க்ஸ்'/><category term='அமைப்பியல்'/><category term='காலக்குறி'/><category term='தேசிய அரசியல்'/><category term='சீட்டாட்டம்'/><category term='யதார்த்தவாதம்'/><category term='செம்மொழி'/><category term='மேதினம்'/><category term='திராவிடம்'/><category term='தமிழ் பதிப்பகங்கள்'/><category term='cartesian dualism'/><category term='Post Colonialism'/><category term='மாண்ட்டோ'/><category term='வாசித்தவைப் பற்றி'/><category term='பிராய்டியம்'/><category term='பொதுவானவை'/><category term='ஞாநி'/><category term='Kim Ki-Duk'/><category term='Structralism'/><category term='தமிழக அரசு'/><category term='தமிழவன்'/><category term='கார்டீசியன்'/><category term='கோட்பாடுகள்'/><category term='அஞ்சலி'/><category term='புகழேந்தி'/><category term='கால்டுவெல்'/><category term='நாவல்கள்'/><category term='அனுபவம்'/><category term='Amina Wadud'/><category term='Deluze'/><category term='உடலரசியல்'/><category term='என்.ஜி.ஓ'/><category term='நவீன தொண்மங்கள்'/><category term='தலித்'/><category term='மந்திரச்சிமிழ்'/><category term='பொருளாதாரம்'/><category term='Civil Society'/><category term='assemblage'/><category term='பெரியாரியம்'/><category term='காந்தி'/><category term='இந்திய அரசு'/><category term='Sadat Hassan Manto'/><category term='தமிழ் நாவல்கள்'/><category term='நாகர்ஜீனன்'/><category term='தமிழ் எழுத்தாளர்கள்'/><category term='Partition'/><category term='அறிவியல்'/><category term='Western Philosophy'/><category term='நவீன தொன்மங்கள்'/><category term='திறனாய்வு'/><category term='பாலியல் அரசியல்'/><category term='பிராய்ட்'/><category term='அயோத்தி'/><category term='இருமைவாதம்'/><category term='அணுஉலை எதிர்ப்பு'/><category term='பிரேம்'/><category term='NGO'/><category term='சிதைவாக்கம்'/><category term='புள்ளியல்'/><category term='தேசியம்'/><category term='ஈரானிய திரைப்படங்கள்'/><category term='நட்சத்திரவாரம்'/><category term='மொழியும் நிலமும்'/><category term='கதையாடல்'/><category term='மத அரசியல்'/><category term='Gender'/><category term='கொரிய திரைப்படங்கள்'/><category term='சிவில் சமூகம்'/><category term='வளைகுடா அரசியல்'/><category term='Korean Film'/><category term='Karl Marx'/><category term='முபீன் சாதிகா'/><category term='Freud'/><title type='text'>மொழியும் நிலமும்</title><subtitle type='html'>மொழியும் மொழிசார்ந்த நிலமும்</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://jamalantamil.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://jamalantamil.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>187</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-2607624402431008083</id><published>2012-01-24T23:44:00.001+03:00</published><updated>2012-01-24T23:44:48.018+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Deluze'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருநங்கைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலினமாதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Transsexual'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Transgender'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடையாள அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Gilles Deleuze'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Gender'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Rhizome'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Feminism'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடலரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல் அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><title type='text'>மோலார் அடையாளங்களும், மூலக்கூறுகளின் உருவாகுதலும் - பாலின அடிமைகள் பற்றிய கதையாடல் – 3</title><content type='html'>&lt;h5&gt;&lt;a href="http://jamalantamil.blogspot.com/2012/01/1_12.html"&gt;மோலார் அடையாளங்களும், மூலக்கூறுகளின் உருவாகுதலும் - பாலின அடிமைகள் பற்றிய கதையாடல் – 1&lt;/a&gt;&lt;/h5&gt;  &lt;h5&gt;&lt;a href="http://jamalantamil.blogspot.com/2012/01/2_15.html"&gt;மோலார் அடையாளங்களும், மூலக்கூறுகளின் உருவாகுதலும் - பாலின அடிமைகள் பற்றிய கதையாடல் – 2&lt;/a&gt;&lt;/h5&gt;  &lt;p align="justify"&gt;&lt;img style="display: block; float: none; margin-left: auto; margin-right: auto" src="http://www.unc.edu/~samkit/hijras/source/image/hijras15.jpg" width="566" height="379" /&gt;உலகின் புராணங்கள் மற்றும் கடவுள் பற்றிய பல தொன்மங்களில் திருநங்கைகள் பற்றிய கதையாடல்கள் உள்ளன. அக்கதையாடல்கள் திருநங்கைகளை சமூகவயப்படுத்தும் நோக்கினையே கொண்டிருக்கிறது. அவர்களை பாலினமாகவோ அல்லது அவர்களது பாலற்ற தன்மையினால் உருவாகும், சமூக ஒழுங்கின்மைக்கு அஞ்சி, அவர்களை சமூக அமைப்பிற்குள் இருத்தும் நோக்கையே கொண்டிருக்கின்றன. திருநங்கைகளுக்கு இருபாலின-அடையாளத்தில் ஒன்றை வழங்குவதன்மூலம் அவர்களை சமூகவயப்படுத்துவதே அத்தொன்மங்களின் நோக்கமாக உள்ளது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;சான்றாக, பகுச்சரமாதா கதையில் குஜராத்தில் இருந்த சரன் இனத்தை சேர்ந்த பகுச்சரா என்பவளும் அவளது தங்கையும் ஒருநாள் தேரில் செல்லும்போது, பாப்பியா என்பவனால் தாக்கப்படுகிறார்கள். எதிரிகள் தாக்கும்போது அவர்களை எதிர்த்து வெல்லமுடியாத நிலையில், சகோதரிகள் இருவரும் தங்கள் இன வழக்கப்படி தங்களை அழித்துக்கொள்ளும் முகமாக தங்களது முலைகளை அறுத்துக்கொள்கிறார்கள். இப்படி முலை அறுப்பதன் வழியாக தெய்வநிலையை அடைகிறார்கள் கண்ணகிப்போல. முலைஅறுத்தல் என்பது பெண்மையாக கட்டப்பட்ட பாலின அடையாளத்தை துறந்து வெளியேறுதலே. இப்படி வெளியேறுபவர்கள் தெய்வமாக்கப்பட்டு சமூகத்தின் கருத்தியல் அங்கமாக ஆக்கப்படுகிறார்கள். பாப்பியா ஆண்மையற்றவனாக சபிக்கப்படுகிறான். பகுச்சரமாதாவை பெண் உடையிலும், பெண்ணாக செயல்பட்டும் வழிபட்டால சாபம் நீக்கப்படுவான் என்பதால் அவன் தன்னை ஒரு திருநங்கையாக மாற்றிக்கொண்டு வழிபடுகிறான். அதனால் திருநங்கைகள், தங்களது மாதாவாக பகுச்சரமாதாவை இன்றும் வழிபடுகிறார்கள். இதனால் அவர்களது சாபம் நீக்கப்படும். அதாவது திருநங்கையாக பிறத்தல் சபிக்கப்பட்டது என்பதையும், அது ஒரு குற்றத்தின் விளைவு என்பதையும் இத்தொன்மக் கதையாடல் சமூகத்திற்கு சொல்கிறது. இதில் பெண் என்பதால் ஒரு உடல் மீது பாலியல் வன்முறை செய்பவன் அந்த பெண்ணாக மாறி அதன் வலியை உணர்வதற்கான நாடகமும் உள்ளது. திருநங்கையாதல் என்பது ஒரு பாலினத்தேர்வு அதை சாபமாக மாற்றுகிறது இக்கதையாடல். பகுச்சரமாதா பற்றிய பல தொன்மங்கள் உள்ளது. எல்லா தொன்மங்களிலும், ஆண்மையற்றவன், ஆண்மை பெறுதல் என்கிற ஒரு முடிவே எட்டப்படுகிறது. ஆண்மையை அளிக்கும் தாயாக இருக்கிறது இக்கடவுள்., திருநங்கைகளை ஆண்மை இழந்தவர்கள் என்பதாக பாலினமாதலின் அரசியலுக்குள் வைப்பதே இத்தொன்மங்களின் நோக்கமாக உள்ளது. அதாவது ஆண்-பெண் பாலின-இருமை எதிர்வாக கட்டப்பட்ட சமூக அமைப்பில், சமூகவயமாக வேண்டுமானால் எதாவது ஒரு பாலினத்திற்குள் அடக்கப்பட வேண்டும், அப்படி அடங்காதவர்கள் சபிக்ப்பட்டவர்களாக, பாவப்பட்டவர்களாக. குறையுடையவர்களாக மாற்றப்படுகிறார்கள். இப்படி அவர்களை வகைப்படுத்துவதன் மூலம், அல்லது அடையாளப்படுத்துவதன் மூலம், பாலின-இருமை-எதிர்வு சமூகத்திற்குள் ஒரு பாலின தேர்விற்குள் அடக்கப்படுகிறார்கள். அதற்கு கடவுள்கள் வழியாக தெய்வீகமாக்கப்படுதலும், புனிதப்படுத்தலும் சடங்காதலும் நிகழ்த்தப்படுகிறது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;ராமாயணத்தில் ராமன் காட்டிற்கு போகும் முன் அயோத்தியின் எல்லையில் தன்னை வழி அனுப்ப வந்தவர்களிடம் ஆண்களும், பெண்களும் இல்லத்திற்கு திரும்பும்படி அறிவிக்கிறான். 14 ஆண்டுகள் வனவாசம் கழிந்து நாடு திரும்பும்போது, அந்த எல்லையில் ஒரு திருநங்கை நிற்கிறார். ராமன் ஆண், பெண் என்று சொன்னதால், தான் ஆணுமல்ல, பெண்ணுமல்ல என்பதால் ராமனின் வாக்குபடி வீடு திரும்பமுடியாமல் நின்றுவிடுகிறார். அவரது அந்த உணர்வை மதித்து ராமன் அவரை ரட்சித்ததால், திருமணம், குழந்தை பிறப்பு போன்ற சடங்குகளில் அவர்களிடம் ஆசி பெறுவது புனிதமாக கருதப்படுகிறது. மஹாராஷ்டிராவில் இன்றும் இப்பழக்கம் உள்ளது&lt;a href="#_ftn1_6610" name="_ftnref1_6610"&gt;[1]&lt;/a&gt;. இதிலும், பாலின குழப்பம் என்பது ராமனின் வாக்கை கையாள்வதில் உள்ள குழப்பத்தை சுட்டுகிறது. இதில் உள்ள மற்றொரு உட்பொருள் சட்டம், வாக்கு, மொழி எல்லாம் பாலினத்தன்மை கொண்டது என்பதுதான். அது ஆண்-பெண் இருமை எதிர்வு பாலின ஒழுங்குசார் தன்மைக் கொண்டது என்பதால், அதற்குள் திருநங்கைகள் என்கிற பாலின மற்றவர்கள் அடங்கமாட்டார்கள் என்பதுதான். அவரை புனிதப்படுத்தி சமூகவயத்திற்குள் அடக்கவேண்டியதேவை உள்ளதையே இப்புராணக்கதையாடல் விளக்குகிறது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;மகாபாரத அரவான் கதைப்படி, பாண்டவர்கள் வெற்றியடைய, காளியின் சக்தியைப்பெறவேண்டி அரவானை பலியிடுகிறார்கள். அரவான் இறக்குமுன் திருமணம் செய்ய ஆசைக்கொள்கிறான், அதன்படி நாளை இறக்கப்போகும் அவனை பெண்கள் திருமணம் செய்ய தயாரற்ற நிலையில், கிருஷ்ணன் மோகினியாக மாறி அரவானை திருமணம் செய்துகொள்கிறார். மோகினி என்பது மோகத்தை வெளிப்படுத்தும், ஒரு பெண் யட்சி. இக்கதையின்படி, திருநங்கைகள் மோகினியாக, கிருஷ்ணனின் ஒரு மாற்று வடிவமாக, அவதாரமாக உள்ளவர்கள் என்பதால் கடவுளின் மறுவடிவமாக மாற்றப்படுவதும், ஆண் பெண்ணாக மாறி திருமணம் செய்வதால், இந்த திருநங்கைகள் சமூக நிறுவனமான குடும்பம் என்கிற அமைப்பின் திருமண பந்த்த்திற்குள்ளும் வைக்கப்படுகிறார்கள். இதன்மூலம் தன்உடல்மீது செலுத்தப்பட்ட சமூகவலியை தெய்வீக இதமாக ஆக்கிக்கொள்கிறார்கள். ஆண் பெண்ணாக மாறி ஆணைபுணர்தல் என்பது ஐயப்பன் பற்றிய கதையாடலிலும் உள்ளது. இவற்றில் திருநங்கைகளின் பாலற்ற தன்மை அல்லது பாலின அமைப்பிற்குள் தங்களை இறுத்திக்கொள்ளாத தன்மை, சமூகமீறலாக மாறிவிடாமல் சமூக அமைப்பிற்குள் இருத்தப்படுகிறது. அதாவது பாலற்ற உடல்களின்மீது பாலின சமூகவிதிகள் எழுதப்படுகிறது. இத்தகைய புராணங்கள் உலகின் எல்லா இனங்களின் தொன்மங்களிலும் வெவ்வேறு வடிவில் உள்ளன. இது குறித்து விரிவாக மாறியப்பாலினங்கள் பற்றி தொகுக்கப்பட்ட களைக்களஞ்சியங்களில் வாசித்தறியலாம்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;பாலினமாதலின் அரசியலில் அல்லது இருபாலின உடல் உருவாக்கத்தில் திருநங்கைகளின் உடல் என்பது ஒரு முரணாக இருபாலின உடல் உருவாக்கத்தை கவிழ்த்துவிடக்கூடியதாக இருப்பதால், அதனை பல தொன்மங்கள், புராணங்கள், கதையாடல்கள் வழியர்க புனிதமாக, சடங்காக, பாவமாக, நோயாக, குறையாக, தண்டனையாக, சாபமாக பல வடிவங்களில் சமூகத்தின் உடலியல் தளங்களில் எழுதி வைத்து உள்ளன. பாலற்றதான உடல்களின் மீது ஆணையும் பெண்ணையும் எழுத, ஆணும் பெண்ணுமற்றதான இந்த உடலை விலக்கி வைக்கவேண்டிய தேவையும், அதே நேரத்தில் இவற்றின் இருப்பைக் கண்டு அஞ்சி அதனை ஒழுங்கமைத்து தனது கண்காணிப்பில் வைக்க வேண்டிய தேவையும் அதிகாரத்திற்கு அவசியப்படுகிறது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;ஆண், பெண் என்கிற பாலுமையில் ஆண்மை, பெண்மை என்கிற பண்பாட்டு கருத்தாக்கம் கட்டமைக்கப்பட்டால் அது பாலினமாக கருதப்படுகிறது. பாலுமை என்பதை பிறப்பு உருப்புகள் அடிப்படையில் தீர்மானிப்பதாக உள்ளது. தொடைகளுக்கிடையில் என்ன உள்ளது? என்பது பாலுமையை தீர்மானிப்பதாகவும், நடை, உடை. பாவனைகளில் என்ன உள்ளது என்பது பாலினத்தை தீர்மானிப்பதாகவும் கருதப்படுகிறது. 2000 த்திற்கு ஒருவர் என்கிற வீத்த்திலும், உலகில் வருடத்திற்கு 65,000 பேர் மாற்றுப்பாலினமாக பிறக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம். பிறப்பின் அடிப்படையில் மாற்றுப்பாலினத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக பிறக்கின்றனர். இத்தகையவர்களை ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்க வேண்டிய ஒரு அழுத்தநிலைக்கு ஆளாக்குகிறது சமூகம். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;பாலுமை(sex) மற்றும் பாலினம்(gender) என்கிற சொற்கள் ஒரு குழுப்பமான நிலையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தோற்றம் பற்றிய மூன்றுவிதமான கருத்தாக்கங்கள் நிலவுகிறது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;1. பாலுமை, பாலினம் இரண்டும் உடலின் பிறப்பில் உள்ளது என்ற கருத்து. இது சாராம்சவாதிகளின் கருத்து. ஒரு உடல் பிறக்கும்போதே பாலுமையுடன் பிறக்கிறது. ஆண் பெண் வேறுபாடு சாராம்சமானது அடிப்படையானது என்பது இதன் அரசியல். பாலின அடையாளங்கள் இயல்பானது, இயற்கையானது என்பது. நவீன சமூகத்தின் முதலாளித்துவத்தின் அரசியல்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;2. பாலுமை பிறப்பிலேயே ஒரு உடலில் உள்ளது. பாலினம் மட்டும் பண்பாட்டு கட்டுமானம் என்ற கருத்து. இது சிமோன்-தி-போவாவின் “பெண் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறாள்” துவங்கிய பெண்ணியலாளர்களின் அரசியல். பெண் என்பது ஒரு கலாச்சாரக்கட்டுமானமாக தந்தைவழி சமூக நோக்கில் கட்டமைக்கப்பட்டது என்பது. ஆண் பெண் பாலின அடையாளங்கள் கட்டமைக்கப்பட்டதுதான், ஆனால், பெண் என்கிற அடையாளம் அதில் மறுக்கப்பட்டு உள்ளது. அதனை கட்டமைப்பதற்கான போராட்டங்களை முன்னெடுப்பது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;3. இரண்டுமே கட்டுமானம்தான், ஒரு உடலில் பாலுமை என்பதும் இல்லை பாலினம் என்பதும் இல்லை இரண்டுமே ஒரு உடலின் உருவாக்க போக்கில் அதன் நிகழ்வுகளைக்கொண்டு கட்டமைக்கப்படுவதே என்கிற கருத்து. இது பிரஞ்சு சிந்தனையாளர் பூக்கோ துவங்கி ஜீதித் பட்லர் மற்றும் தெல்யுஸ்-கத்தாரி போன்ற சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டது. இவர்கள் இந்த பாலினமாதல் அரசியலை அடையாள அரசியலுக்கு எதிராக விரிவுபடுத்தி மாறியப்பாலினத்தினர் பற்றிய “குயிர் தியரி“ எனப்படும் ”கோணல்கள் கோட்பாடு” (தமிழில் குயிர் என்பதை எப்படி சொல்வது என்பது சிக்கலாக உள்ளதால் கோணல்கள் என்கிற வார்த்தையே பயன்படுத்துகிறது.) வரை விரிவுப்படுத்தியுள்ளனர்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;யுத-கிறித்துவ-இஸ்லாமிய மூலக்கதைகளில் உள்ள ஆதாம்-ஏவால் என்கிற தொன்ம அடிப்படையில், ஆண் பெண் என்கிற இருபாலின ஒழுங்கமைப்பாக சமூகம் கட்டப்படுகிறது. அதாவது இருமை எதிர்வாக இது கட்டப்பட்டு உள்ளது. இது ஒருவகையான மத விதிமுறைகளின் ஆழ்தள கட்டமைப்பு. உலகின் அனைத்து உடல்களையும் இந்த இரு பாலினத்திற்குள் அடக்க முனைவதால், இந்த எதிர்வை அடிப்படையாக்க் கொண்ட ஒரு சமூக அமைப்பே வரலாற்றுரீதியானது, அங்கீகரிக்கப்பட்டது, இயல்பானது, இயற்கையானது என்ற நிலை உருவாகியுள்ளது. பண்டைய காலங்களில் தன்பால்-புணர்ச்சியாளர்கள் ஒரு பாலினவகையாக அல்லது தனிப்பாலுமையாக இருந்தனர். அவர்களை இன்றைய எதிர்பால்-வேட்கை கொண்ட ஆண்-பெண்-இருமை-எதிர்வு-சமூக அமைப்பிற்குள் ஆணாகவும், பெண்ணாகவும் வகைப்படுத்தி, தன்பால்-புணர்ச்சியை குற்றமாக மாற்றியது நவீன சமூகம். மாற்றுப்பாலியளார்களையும், தனியானதொரு பாலுமை கொண்டவர்களாக இல்லாமல், இருமை-பாலினத்திற்குள் அடக்கவே முனைகிறது. 17-ஆம் நூற்றாண்டிற்கு பிறகான கிறத்துவ-விக்டோரியன் அறமதிப்பீடுகள் வழியாக, பாலியல் சொல்லாடல்கள் கட்டப்படுவதையும், பாலியல் ஒழுங்கமைக்கப்படுவதையும் விவரிக்கிறார் பூக்கோ தனது பாலியல் வரலாறு என்கிற நூலில். 200 ஆண்டுகளுக்கு முன்பாக கே எனப்படும் தன்பால் புணர்ச்சியாளர்கள் என்கிற வகைத்திணையே இல்லை, இரண்டு ஆண்களுக்கு இடையிலான பாலுணர்வை சோடமி என்ற சொல்லால்தான் குறித்தனர். அதன்பின் மருத்துவம் மற்றும் உளவியல் சொல்லாடல்கள் வழியாக கட்டப்பட்டதே ஹோமோசெக்சுவாலிட்டி எனப்படும் தன்பால் புணர்ச்சி என்ற சொல். பிறகு அது சிறிது சிறிதாக குற்ற உணர்வாக கட்டமைக்கப்பட்டு, எதிர்பாலின வேட்கை மட்டுமே இயல்பானதாக வடிவமைக்கபட்டது என்கிறார் பூக்கோ.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;மாற்றுப்பாலுணர்வாளர்கள் இந்த இரு-பாலின-அமைப்பிற்குள் விடுதலை வேண்டுபவர்களாகவும், மாறியப்பாலினத்தினர் இந்த இரு-பாலின-அமைப்பிலிருந்து விடுதலை வேண்டுபவர்களாகவும் உள்ளனர். உடல்கள் பாலுமை கொண்டவையாக மாற பாலினமாக்கல் என்பது அவசியப்படுகிறது. பாலின அரசியலை ஆராய்ந்த ஜீதித் படலர் பாலினம் என்பது சொல்லாடல்களான மொழி, இயக்கம், மொழியற்ற பரிமாற்றம். நடத்தை, நிறுவன அமைப்புகள், வழக்கப்படுத்தப்பட்ட செயல்பாடுகள் போன்றவற்றால் கட்டப்பட்டது என்கிறார். பாலுமை என்பது உடலுக்கு கொடுக்கப்பட்டு அதனால் பாலினம் செயற்கையாக உட்செலுத்தப்பட்டு கட்டப்படுவதல்ல மாறாக பொருளியல் ரீதியாக உடல்கள் ஆளப்படுவதற்கான ஒரு கலாச்சார விதி என்று பட்லர் கருதுகிறார். இதனை அவர் தனது நூல்களில் விரிவாக விளக்கிச் செல்கிறார். பாலினம் என்கிற அறிதல் சட்டகத்தின் கட்டமைப்பினால் கண்டடடையப்படும் உடல்சார்ந்த பாலுமையால்தான், பாலியல் சார்ந்த உடல்கள் (sexed bodies) இருப்படைகின்றன. பாலுமையை அறிவதற்கே பாலினம் என்கிற அடிப்படையான அறிதல் தேவைப்படுகிறது. அதாவது ஆண் பெண் என்கிற பாலினம் கட்டமைக்கப்பட்டு, அதை வைத்து பிறக்கும் உடலை ஆண் பெண் என்கிற பாலுமை கொண்ட உடலாக அடையாளப்படுத்தப்படுகிறது. பாலுமைக்கு முன்பாகவே பாலினம் என்பது உருவாகியுள்ளது. பாலுமையை அடையாளப்படுத்துவது பாலினம்தான். கலாச்சார கருவிகளாக மாறிவிட்ட பாலினமாதல் என்பதன் அரசியலே ஆண் பெண் என்கிற இரு-பாலின-சமூகத்தின் அடிப்படையாக உள்ளது. அதனால்தான் இந்த இருபாலினமற்ற அடையாளத்தைக்கொண்ட மாறியப்பாலினத்தினரான திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்ட அனைவரும் இந்த சமூகத்தின் தனித்த இருப்பற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களையும் இந்த பாலினமாதல் அரசியலுக்குள் உள்ளடக்கி சமூகவயப்படுத்துவதே நிகழ்கிறது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;பாலினமாதல் அரசியல் என்பது அடையாள அரசியலுடன் உறவுடையது. அடையாள அரசியல் என்பது இன்றைய சமூக அமைப்பிற்குள் வாழ்வதற்காக உற்பத்தி செய்யப்பட்ட பல அடையாளங்களுக்குள் உடல்களை வகைப்படுத்துவது. அடையாளம் என்பது தெல்யுஸ்-கத்தாரி கூறுவதைப்போல ஒரு மோலார் நிலை. அதாவது ஒரு குறிப்பிட்ட நிலையில் ஒரு உடல் நிலைநிறுத்தப்பட்டு, அதிலிருந்து அது இயங்காமல் அந்த நிலையிலிலேயே தேங்கி செயல்படுவது. பாலுமை மற்றும் பாலினம் என்பது மோலார்நிலை. நிலையான இருப்பை கொண்டவை. எப்போதும் மாறாத, மாற்றங்களை நிறுத்திவிட்ட நிலை. தன்னை மையமானதாக மாற்றிக் கொண்டுவிட்ட நிலை. மாறாக, ”உருவாகுதல்” எனபது மூலக்கூறு நிலை என்கிறார்கள். இந்நிலை ஒரு பண்மைநிலை, சல்லிவேர்களைப்போல படரும் நிலை (ரைசோமேட்டிக்), படைப்பாக்க நிலை, தேக்கமற்ற நிலை, மையமற்ற நிலை. தன்னிலையாக்கத்திற்கு உட்படாத நிலை. இந்நிலையில் ஒரு உடல் எதுவாகவும் உருவாகும் தன்மை கொண்டதாக இருக்கும். தனது மோலார் அடையாள நிலைக்கு மற்றமையை உட்படுத்தி அதன்மீது அதிகாரம் செலுத்துவதாக இருக்காது. பாலற்றதாக உள்ள மாறியப்பாலினத்தினர் ஒரு அடையாள அரசியலுக்குள் சிக்காமல் தங்களை உருவாகுதல் என்கிற நிலையில் வைத்துக்கொள்வதற்கான விடுதலை பெற்ற உடல்களாக உள்ளனர். இவர்கள் சமூகத்தின் அங்கமாக உள்ள மதம், சாதி, பால், பாலினம், நிறம் உள்ளிட்ட எந்த மோலார் அடையாளத்திலும் இல்லாதவர்கள். இவர்கள் எதுவாக வேண்டுமானாலும் உருவாகும் தன்மையில் தங்களை வைத்துக்கொண்ட விடுதலைப்பெற்றவர்களாக உள்ளனர். அதனால்தான் இந்த இரு-பாலின-நிறுவனமாகவிட்ட சமூகம் இவர்களை இல்லாதொழிப்பது, புற்க்கணிப்பது அல்லது உள்வாங்கி ஒரு பாலினமாக தனது அடையாள எல்லைக்குள் வைப்பது என்கிற நிலையை எடுக்கிறது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;அதாவது மாற்றுப்பாலினத்தவர்களை கண்டு சமூகம் அச்சம் கொள்ளவோ அல்லது அவர்களை புனிதப்படுத்தவோ காரணம், அவர்கள் சமூகத்தின் அடிப்படை உடலமைப்பு விதியான இரு-பாலின விதியை பகடி செய்து, அதை இல்லாதொழித்துவிடக்கூடிய அபாயம் இருப்பதால்தான். அல்லது இரு-பாலின வேட்கை என்பதில் ஒரு உடைசலை உருவாக்கி பாலின அடையாளத்தை சிதைத்துவிடக்கூடியவர்களாக அவர்களது செயல்கள் இருப்பதால்தான். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;1. சமூக பாலினவிதிகளுக்கு எதிரான ஒரு உடல்சார் நாடகத்தை அவர்கள் நிகழத்தி சமூகம் எப்படி பாலியலை பாலினம் வழியாக கட்டமைத்தது என்பதை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;2.&amp;#160; உடலிற்குள் உள்ள பாலின்பம் என்பது பிற உடல் வேட்கைதானே ஒழிய அது எதிர்பால் உடல் வேட்கை அல்ல என்பதை வெளிப்படுத்தியப்பபடி உள்ளனர்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;3. ஆண் பெண் இன்கிற இறுகிய அமைப்பிற்குள்ளான உடல்களை போலச்செய்து அதன் சாராம்சத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறார்கள்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;4. ஆண்-பெண் என்கிற தெளிவான அடையாளத்தை தெளிவற்றதாக ஆக்கிவிடுகிறார்கள்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இருபாலின உடல் 1. சமூகவிதி 2. குடும்ப விதி 3 சட்ட விதி என்ற மூன்று விதமான அமைப்பு விதிகளுக்கு உட்பட்டதாக உள்ளது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;1. சமூகவிதி என்பது ஒரு உடல் ஆண்-பெண் இருமை எதிர்வு பாலினமாக இருத்தல். பைனரி எனப்படும் இருமை எதிர்வு என்பது போர் எந்திரக் கட்டைமைப்பிற்கான அடிப்படை சமூகவிதி. இன்றைய முதலாளித்துவ சமூக அமைப்பு இந்த முரணியக்க விதியை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. எப்போதும் இணக்கமற்ற முரணில் சிக்கியிருப்பது. எதிரெதிரான இரண்டு அடையாளங்களை நிலைநிறத்தி இரண்டிற்குமிடையில் ஒரு பதற்றத்தை வைத்திருப்பது. இந்த முரணிண் அடிப்படையில் இரண்டு சக்திகளை மோதவிடுவது. இவர்கள் இந்த இருபாலின-கட்டமைவிற்குள் வருவதில்லை. போர் எந்திரத்திற்கு வெளியில் நிற்பவர்கள்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;2. குடும்பவிதி எனபது சமூக உற்பத்திக்கான அமைப்பு. இது தந்தைமை ஆதிக்கத்தை உருவாக்கும் இடிபலாக்க காதல் எந்திரத்தினை அடிப்படையைக் கொண்டது. இது அதிகாரத்தை ஏற்பதற்கான இணக்கத் தன்னிலையாக்கத்தினை உருவாக்குவது. இவர்கள் தாய் ஆதிக்கத்தை முன்வைத்து தந்தமையை காலவதியாக்கி வேறு ஒரு குடும்பமற்ற கூட்டமைப்பை உருவாக்குகிறார்கள். இதில் குருதிவழி என்கிற வரலாறு கலாச்சார பாரம்பரியம் இல்லை. இதற்குள் நெகிழ்வான சமூக உறவுகளை பகடி செய்யும் உறவுமுறைகள் உள்ளன. அந்த உறவுமுறைகள் பிற்ப்படிப்படையிலான குடும்ப அமைப்பை கொண்டதல்ல. எப்போதும் நெகிழ்வான, சுதந்திரமான ஒரு உறவைக் கொண்ட அமைப்பு அது. இவர்கள் இதனை ஜமாத் என்கிறார்கள். இந்த ஜமாத்திற்குள் சிறுசிறு நிர்வாக வசதிக்கான குடும்பமாக உள்ளனர்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;3. சட்டரீதியான விதிமுறைப்படி இருபாலின உறவிற்கான சட்டங்கள் இவர்களை தனது நீதிபரிபாலன எல்லைக்குள் கொண்டு வர முயல்கிறது. சட்டத்தை மீறிய உறவுகளை உருவாக்கும் அதிகாரம் இவர்களிடமே உள்ளது. குடும்பத்திற்கான சட்டவிதிகள் இவர்களிடம் இல்லை. இவர்கள் சட்டத்திற்கு வெளியே நிற்பதால் சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறார்கள். சட்டத்தினை முற்றிலுமாக இல்லாமல் ஆக்கிவிடுகிறது இவர்களது உடல். &lt;b&gt;&lt;/b&gt;சட்டம் என்பது ஆண்-பெண்-பாலின-குடும்ப அமைப்பிற்கானதாக உள்ளதால் இவர்களை அது உள்ளடக்கமுடியாததாக உள்ளது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இவர்கள் ஒரு பொருண்மையான சமூக குழுவாக உள்ளனர். அதில் முழுமையான உடல் பாலியல் சுதந்திரம் உள்ளது.&lt;b&gt; &lt;/b&gt;அந்த கட்டுபாடற்ற தன்மை நிறுவன அங்கங்களான சமூகத்தில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தும் என்கிற அச்சம் உள்ளது. சமூகம் இவர்கள்மீது உள்ள தனது அச்சத்தால், இவர்களது இருப்பை இல்லாதொழிப்பதில் மூர்க்கமான வன்முறையை செலுத்துகிறது. சமூகத்தின் அங்கமாகா உடல்களாக இவர்கள் இருப்பதே இப்போதைய அரசிற்கான அதிகாரத்திற்கான சிக்கல். உண்மையில் மாறியப்பாலினத்தினர்தான் விடுதலைபெற்ற பாலினத்தினர். இரு-பலினத்தை ஏற்றவர்கள் ஒருவகையில் சமூகத்தின் பாலின விதிக்கு அடிமைப்பட்டவர்களே. பாலினத்திற்கு அதன் இருமைவிதிகளுக்கு அடிமையாகிவிட்டவர்கள். மாறியபாலினத்திற்கு இருமை இல்லை. ஒருமை மட்டுமே உள்ளது அதுதான் அவர்களது பன்மையாக உள்ளது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;-ஜமாலன் &lt;a href="mailto:jamalan.tamil@gmail.com"&gt;jamalan.tamil@gmail.com&lt;/a&gt; (23-10-2011 - 25-11-2011) வலசை 2012&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font color="#ff0000" size="1"&gt;நண்பர் நேசமித்திரனின் வலசை என்கிற இதழுக்காக திருநங்கைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரை.&amp;#160; இதழ் அநேகமாக புத்தகக்கண்காட்சியில் வெளிவந்திருக்கலாம்.&amp;#160; மிக நீண்ட கட்டுரை என்பதால் பகுதி பகுதியாக இங்கு வெளியிடப்படுகிறது.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;div align="justify"&gt;   &lt;hr align="left" size="1" width="33%" /&gt;&lt;/div&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref1_6610" name="_ftn1_6610"&gt;[1]&lt;/a&gt; இப்பழக்கத்தை திருநங்கைகள் பற்றிய ஆவணப்படங்களிலும், தமிழில் திருநங்கைகள் பற்றி வெளிவந்த நர்த்தகி என்கிற திரைப்படத்திலும் காணலாம். திருநங்கைகள் பற்றிய மற்றொருபடம் நவரசா. இவ்விரு படங்களும் திருநங்கைகள் பற்றிய தமிழில் வந்த முழுநீளப்படங்கள். இவற்றின் கதையாடல் ஒத்த தன்மையைக் கொண்டிருந்தாலும், இரண்டும் இரண்டு வேறுபட்ட சூழலில் உருவாகும் திருநங்கைகள் பற்றியது. நவரசா, ஒரு சிறுமியின் பார்வையில், அவர் புரிந்துகொள்வதை பெரியவர்கள் புரிந்துகொள்ளமுடியாத சூழலை நுட்பமாக அம்பலப்படுத்தும் படம். &lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4997678103589622995-2607624402431008083?l=jamalantamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jamalantamil.blogspot.com/feeds/2607624402431008083/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4997678103589622995&amp;postID=2607624402431008083' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/2607624402431008083'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/2607624402431008083'/><link rel='alternate' type='text/html' href='http://jamalantamil.blogspot.com/2012/01/3_24.html' title='மோலார் அடையாளங்களும், மூலக்கூறுகளின் உருவாகுதலும் - பாலின அடிமைகள் பற்றிய கதையாடல் – 3'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-351225274278221580</id><published>2012-01-23T01:43:00.000+03:00</published><updated>2012-01-23T01:44:14.007+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய அரசு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிவில் சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடையாள அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='NGO'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மத அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தேசிய அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமேரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Civil Society'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்.ஜி.ஓ'/><title type='text'>மேலே பூதம் கீழே ஆழ்கடல் - சிவில் சமூகமும் அரசுசாரா சமூகமும் –3</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;a href="http://jamalantamil.blogspot.com/2012/01/1.html"&gt;&lt;strong&gt;மேலே பூதம் கீழே ஆழ்கடல் - சிவில் சமூகமும் அரசுசாரா சமூகமும் –1&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;h5 align="justify"&gt;&lt;a href="http://jamalantamil.blogspot.com/2012/01/2_20.html"&gt;மேலே பூதம் கீழே ஆழ்கடல் - சிவில் சமூகமும் அரசுசாரா சமூகமும் –2&lt;/a&gt;&lt;/h5&gt;  &lt;p align="justify"&gt;&lt;img style="display: block; float: none; margin-left: auto; margin-right: auto" src="http://www.hudson.org/files/media/BradleyCenter/raised-hands.jpg" width="531" height="362" /&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;கதை-1 ல் கூறியபடி நுகர்விற்கானவர்களாக மக்கள் திரளை படைப்பது. சிவில் சமூகம் என்பது நாகரீகப்படுத்துதல் என்பதுடன் உறவுகொண்டதாக உள்ளது. இது உலகளாவிய ஒரு பொதுஅமைப்பை கட்டுவதாக உள்ளது. குடிமக்கள் உருவாக்கமே இதன் அடிப்படையாக உள்ளது. சிவில் சமூகம் என்பது அரசியலற்றதாக கருதப்படுகிறது. காரணம், சிவில்சமூகம் என்கிற கருத்தாக்கமே வணிகமயமாக மக்கள்திரளை மாற்றும் ஒன்று. அரேபியா போன்ற மதவாத நாடுகளில் முதலில் செருப்புபோடும் கலாச்சாரத்தை பரப்பும் கதையாக ஜனநாயகத்தை, சுதந்திரத்தை பரப்புவதுதான் என்.ஜி.ஓ.க்கள் மற்றும் ஊடகங்களின் பணி. பரபப்பட்டவுடன் மக்கள்திரள் தான் உணர்ந்த சிவிக் பண்புகளின் அடிப்டையில் புரட்ச்சிக்கான உந்துதலை பெறுகிறார்கள். இதன் பொருள் அரேபிய அரசுகள் மக்கள் நலன் கொண்ட அரசுகள் என்று பொருளல்ல, அவை அடிப்படையில் எதேச்சதிகார, பாரம்பரிய மன்னராட்சி அரசுகள் மட்டுமல்ல புதிதாக உருவாகிவரும் முதலாணமை அரசியலில் ஊறித்திளைத்து வெளிப்படும் ஊழலின், மனிதத்தன்மையற்ற அடக்குமுறைகளின், பணம் மட்டுமே, சொத்து மட்டுமே குறி என்கிற நுகர்வின் ஆகப்பெரும் சீரழிவைக்கொண்ட அரசுகள்தான். இத்தகைய அரசுகளின் கீழ் மக்கள் பெறும் தன்னெழுச்சியான எதிர்ப்பை இத்தகைய அரசுசாரா நிறுவனங்கள் ஒரு நெகிழ்வான போக்கிற்கு மாற்றியமைக்கின்றன. அந்நெகிழ்வு போராட்டத்திற்கு பிறகு வழிகாட்டுதலற்ற திக்கற்ற நிலைக்கு ஆளாக்குவதாக உள்ளது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;அரேபிய புரட்சிகளுக்கு பின்புலமாக அமெரிக்க ஆதரவு என்.ஜி.ஓ.க்கள் பங்கு முக்கியமானது. குறிப்பாக சோவியத் ரஷ்யாவின் கம்யுனிச வீழ்ச்சியில் பொருளியல் பண்டங்களைவிட, கருத்தியல் பண்டங்களான ஜனநாயகம், சமத்தும், மனித உரிமை போன்றவை முக்கிய பங்காற்றின. மேற்கத்தியத்தின் இக்கருத்தியல் பண்டங்களை விற்பனை செய்யும் முகவர்களாக செயல்பட்ட என்.ஜி.ஓ.க்கள் சோவியத் ரஷ்யாவிற்கு பின் அரேபிய பகுதிகளை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பினார்கள். கடந்த 20 ஆண்டுகளாக என்.ஜி.ஓ.க்களின் பரவலாக்கம் அரேபிய நாடுகளில் மேற்கத்திய பாணியிலான சிவில் சமூகத்தை உருவாக்க பணியாற்றி வருகின்றன. அதன் உச்ச விளைவுதான், இறுகிய அரேபிய இஸ்லாமிய சமூக அமைப்பை இளகவைத்து, புரட்சியை உருவாக்கியது. 2003 நவம்பர்-6ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜார்ஜ் புஷ் இதனை பிரகடனம் செய்தார் ”60- ஆண்டுகளாக மேற்கத்திய தேசங்கள் மத்திய-கிழக்கு நாடுகளின் விடுதலையின்மையை பொறுத்துக்கொண்டுவிட்டன அது நம்மை பாதுகாப்பற்ற நிலையில்தான் வைத்து உள்ளது. மத்தியகிழக்கு நாடுகளின் விடுதலைக்காக அமெரிக்கா புதிய திட்டத்தை (நியு பாலிசி) முன்னெடுக்க வேண்டும்”. இதன் பொருள் அந்த புதிய பாலிசியில் ஒன்றுதான், போர் மற்றும் சமூகநலப்பணிகளின் வடிவில் உருவாக்கப்பட்ட என்.ஜி.ஓ. வலைப்பின்னல். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இது நேரடியாக அமெரிக்க ஆதரவுநிலையில் செயல்படாது. இன்னும் குறிப்பாக எதிரான நிலையில்தான் செயல்படும். அமெரிக்காவிற்கு எதிராக இது மக்களை திரட்டும். ஆனால், அரசு என்கிற அமைப்பிற்கு எதிராக இது செயல்படாமல், அதன் திட்டவடிவிற்குள்தான் இது செயல்படும். அமெரிக்கா மக்கள் ஆதரவைவிட அரசு ஆதரவில்தான் தனது வெளி உறவுக்கொள்கைகளை உருவாக்குகிறது. ஆனால், இந்த என்.ஜி.ஓ.க்கள் மக்கள் மனநிலையை சிவிக் பண்புகள் என்பதாக, அமெரிக்க அரசின் முனமாதிரி பற்றிய ஆழ்மன கனவை உருவாக்கிவிடுபவை. வெளியில் அமெரிக்காவை எதிர்ப்பதும், மனதளவில் ஒரு சுதந்திர-ஜனநாயக-மக்கள் நல்வாழ்வு அரசின் முன்மாதிரியாக அமெரிக்க அரசை கருதிக்கொள்வதும் செயல்படுத்தப்படுகிறது. அதாவது அமெரிக்க ஆதரவுநிலை பரவலாகவும் மேலொட்டமாகவும் பார்த்தால் அரேபிய மக்களிடம் இல்லை என்பதால், அமெரிக்கா தனது அரசு பற்றிய கனவை அகநிலையில் வளர்த்தது. அரேபியர்கள் அமெரிக்காவை எதிர்த்தனர், பின்லாடன் உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளை ஆதரித்தனர். புஷ்ஷும் பின்லாடனும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக உள்ள்வர்கள். இவர்களது செலாவணி என்பது ஒரே நாணயத்தின் செலாவணிதான். சான்றாக, பின்லாடன் விரும்பியபடி, அமெரிக்க பொருளாதாரத்தை நடுவீதிக்கு கொண்டுவந்தவர் புஷ். அமேரிக்காவின் உலக மேலாண்மை கனவிற்கு வழியமைத்து தந்தவர் பின்லாடன். இதுதான் உலக பயங்காரவாத்த்திற்கு எதிரான போர் மற்றும் உலக அரசியலை பயங்கரவாதம் ஜனநாயகம் என்கிற இரமைவாத-போர் எந்திரக்கட்டமைப்பிற்குள் கட்டமைக்க காரணமாக நடந்த விளையாட்டு.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;பின்லாடன் உலக வணிக மையத்தை, உலக முதலாண்மை நிறுவனத்தின் குறியீடாக நின்ற இரட்டைக்கோபுரத்தை தகர்த்து, உலக பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தவே. அதை வளைகுடா ஆப்கான் ஈராக் போரின் மூலம் நடைமுறைப்படுத்தினார் புஷ். இந்த அதிகாரத்தின் ஆணவமிக்க விளையாட்டில், பாதிக்கப்பட்டிருப்பது உலகின் வாழ வழியற்ற மக்கள்கூட்டம்தான். ஆனால், பின்லாடனை புஷ் எதிர்ப்பது என்பதும், இருவரும் எதிரெதிரானவர்கள் என்பதும், வெளிப்படையாக தெரிந்தாலும், உலகை வீழ்ச்சியடைய செய்ததில் இருவரின் பங்கும், விமான இடிப்பு-ஆப்கன் போராட்டம் என்பதன் வழியாக ஒரு பேரரசின் விளையாட்டாக நிகழ்த்தப்பட்டதே. அதாவது உலகில் தீவிரவாதம் பேரரசின் எதிர் வடிவமாக தன்னை அறிவித்தது 9/11 என்கிற நிகழ்வில்தான். இந்த புள்ளியில் உலக முதலாண்மை என்பது ஒரு புதிய பரிமாணத்தை, அரசுமுறையின் வடிவத்தை, அரசிற்கும் தனக்குமான உறவை வரையறுத்துக்கொண்டது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;சுருக்கமான பொருளில் சிவில் சமூகம் என்பது, அரசிலிருந்தும் சந்தையிலிருந்தும் பிரித்து இனக்குழுவாக உள்ள மக்களிடம் தன்னிச்சையான வாழ்வை உருவாக்கும் ஒன்றாக செயல்படுகிறது. மக்களை அரசியலற்றவர்களாக மாற்றுவதே அதன் பணி. காளான்களாய் முளைத்த இந்நிறுவனங்கள்தான் அரேபிய புரட்சியை நடத்தின. சிவில் சமூகம் என்பது அரசிற்கு சமமான அதிகாரத்தை பெற்றதாக முன்வைக்கப்படுகிறது. இந்தியாவில் அன்னா ஹசாரேவின் அரசியல் அதைத்தான் முன்வைக்கிறது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;சிவில் சமூகத்திற்கு உதவுதல் என்பது அமெரிக்காவின் திறனை முன்னெடுப்பதாக உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் 1991-2001-ற்கு இடையில் மட்டும் சிவில் சமூகத்தை பலப்படுத்தவென ஏறக்குறைய 150 மில்லியன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இத்திட்டங்கள் என்.ஜி.ஓ.க்களால் நடைமுறைப்படுத்தப்பட்டன.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;சிவில் சமூக அமைப்புகள் குடிமக்களின் குரலாக தங்களை அறிவிக்கின்றன. மக்களின் அரசியல், சமூக மற்றும் ஆன்மீக நோக்கினை அமைதியான முறையில் கூட்டாக வெளிப்படுத்துவதற்கான ஒரு கருவியாக உள்ளன. சிவில் சமூக அமைப்புகள் மக்களின் அடிப்படை ஜனநாயக மதிப்பீடுகளை கற்றுத் தருகின்றன. மக்களின் தேவைகளை அரசின் திட்டங்களுடன் ஒருங்கிணைத்து, அரசின் ஆளுகையினை மக்கள் ஏற்கும்படி செய்கின்றன. அரசியல் சட்டம் மக்களை நேரடியாக அரசு அதிகாரத்திற்குள் வைக்கிறது என்றால், சிவில் சமூக அமைப்புகள் மக்களுக்கு அரசியல் சட்டத்தை நடைமுறையில் சாத்தியப்படுத்துவதாக உள்ளது அல்லது அரசியல் சட்டத்தை ஏற்கும் ஒப்புக்கொள்ளும் தன்னிலைகளாக குடிமக்களை மாற்றியமைக்கிறது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;சிவில் சமூகம் என்பது மேற்கத்தியர்களின் மனதில் “மக்கள் அதிகாரத்திற்கான” இயக்கமாக அதனால், எதேச்சதிகாரத்தை தூக்கி எறிந்து மேற்கத்திய ஜனநாயகத்தை கொண்டுவருவம் ஒன்றாக கருதப்படுகிறது. உலகெங்கிலும் அமெரிக்க மற்றும் மேற்கத்திய ஜனநாயகத்தை உவந்தளிக்கும் கருவியாக செயல்படுகிறது. சிவில் சமூகம் என்பது சிவிலிட்டி அதாவது நாகரீகப்பண்பு கொண்ட ஆண் என்கிற பிம்பத்தின் அடிப்படையில் உருவாகியது. அதாவது ஐரோப்பிய ஆண் பிம்பமே இதன் அடிப்படை.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;காட்சி-1ம் கதை-1ம்&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;சிவில் சமூகம் மற்றும் ஜனநாயகம் என்பதை கட்டமைப்பதில் ஒத்திசைவு (கான்சென்ஸஸ்) என்கிற பண்பே அடிப்படையானது என்பது ஹெபர்மாஸின் கோட்பாடு. முரண்களே (கான்பிளிக்ட்) அடிப்படையானது என்பது பூக்கோவின் கோட்பாடு. முரண்களின் அடிப்படையில் போர் எந்திரங்களின் வழி ஜனநாயகத்தை சிவில் சமூகத்தை உருவாக்குவது என்பது காட்சி-1 ன்படி நடப்பது. ஒத்திசைவின்வழி உருவாக்குவது என்பது கதை-1 ன்படி நடப்பது. இந்த இரண்டையும் உலகப்பேரரசு தனது தந்திரமாக, கருவியாக பயன்படுத்தி உலக சிவில் சமூகத்தை உருவாக்குகிறது. அப்படி உருவாக்குவதன்மூலம் தனது ஆளுகையை உலகில் உறுதி செய்துகொள்கிறது. இப்படி உறுதிசெய்யப்பட்ட ஆளுகையால், தனக்கான எதிரிகளை கட்டமைப்பதும், அவர்கள் குறித்த பயங்கரத்தை உருவாக்கி பயமுறுத்துவதும், தொடர்ந்து நிகழத்தப்படும் நாடகங்களாக உள்ளது. பயங்கரவாதிகளுக்கும், பேரரசிற்கும் இடையில் நிகழும் இந்த நாடகத்தின் பாத்திரமேற்பவர்களாக, காட்சியாளர்களாக உலக மக்கள் நிறுத்தப்பட்டு உள்ளனர். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இன்றைய இந்தியாவில் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் சட்டத்தை ஏற்ற தேசிய, பிராந்திய கட்சிகள் காட்சி-1 ல் உள்ளதைப்போல, அதிகாரத்தை நேரடியாக அரசு என்கிற வடிவத்தில் செலுத்தி ஒரு பொருளாதாரப் போரை நிகழ்த்திக்கொண்டு உள்ளன. ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ, ஐ.எஸ்.எஸ். உள்ளிட்ட இஸ்லாமிய மதவாத அமைப்புகள் கதை-2ல் சொன்னதைப்போல கலாச்சார எந்திரங்களாக செயல்பட்டு குடிமக்களை அரசின் ஆளுகைக்கு தயாரித்து அளிக்கின்றன. பேரரசின் இந்த இரண்டு வடிவங்களும்தான் இன்றைய இந்திய அரசியலின் பிரதானப் போக்காக உள்ளது. பேரரசின் உடலுறுப்போடு தன்னை இணைத்துக்கொள்ளாத எந்த அதிகார அரசியலுக்கும் இருப்பற்ற நிலையை உருவாக்கி காட்டிக்கொண்டு உள்ளது இந்த நிலைமை. “டெவில் அண்ட் டீப் சீ“ என்பதைப்போல மக்கள் மேலே பூதம் கீழே சீற்றம் கொண்ட கடல் என்ற தத்தளிப்பில் மரணபயத்திற்குள் நிறுத்தப்பட்டு உள்ளனர். இதில் யார் பூதம் யார் கடல் என்பதை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தலைவிதி என முத்திரையிட்டு தீர்மானிக்கும் ஜனநாயக சிவில் உரிமைகள் மட்டுமே மக்களுக்கு மனம் உவந்து அதிகாரத்தால் அளிக்கப்பட்டு உள்ளது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;- ஜமாலன் (&lt;a href="mailto:jamalan.tamil@gmail.com"&gt;jamalan.tamil@gmail.com&lt;/a&gt;) 16/12/2011 - &lt;strong&gt;&lt;a href="http://www.adavimagazine.blogspot.com/"&gt;அடவி&lt;/a&gt; 2012&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;பயன்பட்ட கட்டுரைகள்&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;The War on Terrorism or a Global Crusade against Islam - Mahboob A. Khawaja, Ph.D. &lt;a href="http://www.asiantribune.com/news/2011/11/27/war-terrorism-or-global-crusade-against-islam"&gt;http://www.asiantribune.com/news/2011/11/27/war-terrorism-or-global-crusade-against-islam&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://www.chris-floyd.com/articles/1733-darkness-renewed-terror-as-a-tool-of-empire.html"&gt;Darkness Renewed: Terror as a Tool of Empire&lt;/a&gt; -&amp;#160;&amp;#160; CHRIS FLOYD &lt;a href="http://www.chris-floyd.com/component/content/article/1733-darkness-renewed-terror-as-a-tool-of-empire.html"&gt;http://www.chris-floyd.com/component/content/article/1733-darkness-renewed-terror-as-a-tool-of-empire.html&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;The Imperial Anatomy of Al-Qaeda. The CIA’s Drug-Running Terrorists and the “Arc of Crisis” Part I by Andrew Gavin Marshall - &lt;a href="http://globalresearch.ca/index.php?context=va&amp;amp;aid=20907"&gt;http://globalresearch.ca/index.php?context=va&amp;amp;aid=20907&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;Multi-Billion-Dollar Terrorists and the Disappearing Middle Class - James Petras Economic &amp;amp; Political Weekly EPW october 1, 2011 vol xlvi no 40&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;MIDDLE EASTERN DEMOCRACY Is Civil Society the Answer? - Amy Hawthorne - © 2004 Carnegie Endowment for International Peace.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;NGOs and Their Role in the Global South - Monsiapile Kajimbwa - &lt;a href="http://www.icnl.org/research/journal/vol9iss1/art_7.htm"&gt;http://www.icnl.org/research/journal/vol9iss1/art_7.htm&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;அமேரிக்க பணத்தில் கொழிக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பெரியார்தளம் - &lt;a href="http://www.periyarthalam.com/2011/12/09/rss-run-by-american-money/"&gt;http://www.periyarthalam.com/2011/12/09/rss-run-by-american-money/&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4997678103589622995-351225274278221580?l=jamalantamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jamalantamil.blogspot.com/feeds/351225274278221580/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4997678103589622995&amp;postID=351225274278221580' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/351225274278221580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/351225274278221580'/><link rel='alternate' type='text/html' href='http://jamalantamil.blogspot.com/2012/01/3_23.html' title='மேலே பூதம் கீழே ஆழ்கடல் - சிவில் சமூகமும் அரசுசாரா சமூகமும் –3'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-7727745171881340115</id><published>2012-01-20T12:46:00.001+03:00</published><updated>2012-01-20T23:35:10.593+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாமிய அடிப்படைவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய அரசு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிவில் சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடையாள அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='NGO'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மத அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நெருக்கடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமேரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வளைகுடா அரசியல்'/><title type='text'>மேலே பூதம் கீழே ஆழ்கடல் - சிவில் சமூகமும் அரசுசாரா சமூகமும் –2</title><content type='html'>&lt;h5 align="justify"&gt;&lt;a href="http://jamalantamil.blogspot.com/2012/01/1.html"&gt;மேலே பூதம் கீழே ஆழ்கடல் - சிவில் சமூகமும் அரசுசாரா சமூகமும் –1&lt;/a&gt;&lt;/h5&gt;  &lt;p align="justify"&gt;&lt;img style="display: block; float: none; margin-left: auto; margin-right: auto" alt="globalization cartoons, globalization cartoon, globalization picture, globalization pictures, globalization image, globalization images, globalization illustration, globalization illustrations" src="http://www.cartoonstock.com/newscartoons/cartoonists/ktu/lowres/ktun128l.jpg" width="469" height="344" /&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;உலகமயமாதல் என்பது இரண்டாம் உலகப்போருக்கு பின்பு, உருவான தேசிய எழுச்சிகைளை கட்டுக்கொள் கொண்டுவந்து நாடுகள் பல உருவானதன் வழியாக, பரஸ்பர ஒப்பந்தங்களின் வழியாக, உலக மூலதனச்சந்தையை திறந்ததால் உருவானது. அதற்காக உலக அமைப்பில் உருவாக்கப்பட்ட சர்வதேச அமைப்புகள், உலகை வழிநடத்துவதாக மாறியது. அந்த சர்வதேச அமைப்புகளை தங்களது கைப்பாவைகளாக அமெரிக்க-ஐரோப்பிய அரசுகள் பயன்படுத்திக்கொண்டு வந்து உள்ளன. உலக ஒழுங்கு என்கிற சொல்லாடல்வழி அமெரிக்க-சோவியத் பனிப்போர் முடிவிற்கு கொண்டுவந்தபின், வளைகுடாப்போரைத் துவங்கி, மத்திய-கிழக்கு நாடுகளையும், இஸ்லாமிய-அடிப்படைவாதத்தையும் தனது எதிரியாக மாற்றிக்கொண்டது அமெரிக்கா. இரண்டாம் உலகப்போருக்கு பிந்தைய இன்றைய உலகவரலாற்றினை மாற்றியமைத்தவர்கள் மூன்றுபேர். சோவியத் பனிப்போரை முடிவிற்கு கொண்டுவந்த மிகைல் கோர்பச்சேவ், வளைகுடா யுத்தத்தை துவக்கி மத்தியகிழக்கு அரேபிய நாடுகளை போர்களமாக்கிய சதாம் உசைன், இரட்டைக்கோபுர தாக்குதலை நடத்தி பயங்கரவாதத்தின் உலகப் பேரரசை நிறுவிய ஒசாமா பின்லேடன். இவர்கள் அமெரிக்கா நிகிழ்த்திய தனது மேலாண்மை நாடகத்தில் கதாநாயகர்களாக அறிமுகமாகி இறுதியில் கட்டமைக்கப்பட்ட வில்லன்களாக மாற்றப்பட்டவர்கள். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இந்த உலக மேலாண்மை நாடகத்தை “பயங்காரவாத்த்திற்கு எதிரான யுத்தமாக” நடத்திய அமெரிக்கா இராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் போர்களுக்காக செலவழித்த தொகை 3.2 டிரில்லியன் டாலர்கள் (The Costs of War since 2001, Eisenhower Study Group, June 2011) மாதத்திற்கு 10 மில்லியன் டாலர் செலவழித்து உள்ளது. அதே சமயம் இத்தகைய யுத்தங்களால் தாலிபான் போன்ற அமைப்புகள் உளவியல்ரீதியாக வலுவான நிலையை அடைந்து உள்ளன (Financial Times, 30 June 2011, p 8). இதனால் அமெரிக்காவில் 1993-2006 வரை 7 சதவீதத்திற்கு மேலான மிதமான வருமானம் தரும் பணிகள் மறைந்தொழிந்துவிட்டன (Financial Times, 30 June 2011, p 4). சமத்துவமின்மை என்பது உலகிலேயே அதிகமாக உள்ளது அமெரிக்காவில்தான் என்கிறார் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பணி புரிந்த பேராசிரியர் ஜேம்ஸ் பெட்ராஸ் (Multi-Billion-Dollar Terrorists and the Disappearing Middle Class - James Petras Economic &amp;amp; Political Weekly EPW October 1, 2011 vol xlvi no 40). அமெரிக்கா இந்த யுத்தச் செலவீனத்தால் மத்தியதரவர்க்கத்தின் வாழ்வை படுகுழிக்குள் தள்ளியதை விவரிக்கிறது இக்கட்டுரை. ஒரு சில முதலாண்மை நிறுவனங்கள் தங்கள் வருவாயை பெருக்க ஒட்டுமொத்த தேசத்தையும், அதன் அரசையும் பயன்படுத்தும் இந்த முறைதான் தற்போதைய பேரரசு உருவாக்கத்தில் கவனிக்க வேண்டிய அம்சம். அரசு முதலாண்மை நிறுவனங்களை காப்பதற்கு என்கிற கோட்பாடுகள் மாறி, அரசை முதலாண்மை நிறுவனங்கள் பொறுப்பேற்று நடத்தும் (ஸ்பான்ஸர்) நிலைக்கு வளர்ந்துவிட்டன. முதலாண்மையாளர்களுக்கு தேசம், நிறம் எல்லை எதுவும் இல்லை. அவர்கள் உலகளாவியவர்கள். அதனால் உலகமயத்துடன் உலகை ஓரமைவாக்கத்திற்குள் கொண்டு வந்துவிட்டனர்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இது முதலாளித்துவத்தின் மிகச்சாதரண நுட்பம் மட்டுமல்ல. முதலாண்மை (கார்பரேட்) எப்படி பிற நாடுகளை சூறையாடி தன்னை நிர்மாணித்துக் கொள்கிறது என்ற உத்தியும்கூட. காட்சி-1ல் சாப்ளின் செய்யும் குற்றம் படத்தில் குற்றமாகவே பதிவாகும். ஆனால் இன்றைய இயல் உலகில் முதலாண்மை நிறுவனங்கள் இதனை தேசபக்தி, சமூக பாதுகாப்பு, தீவிரவாதத்திற்கு எதிரான போர், சிவில் சமூகத்தை காப்பது, ஜனநாயகத்தை உருவாக்குவது என்கிற பெயரில் நிகழ்த்துகின்றன. இவற்றை அவை குற்றமாக செய்வதில்லை. இதுதான் நீதியாக பறையறிவிக்கின்றன. நீதியை மேலிருந்து இறக்குமதி செய்கின்றன. நீதியை வழங்குவதன் வழியாக, தங்களை நீதிமான்களாக உயர்த்திக்கொள்கின்றன. உலகநீதி என்கிற ஒன்றை இதன் வழியாக உருவாக்கி நிலைநிறுத்துகின்றன. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;காட்சி-1 உருவகிக்கும் பிம்பம் பல தளத்திலானது. குறிப்பாக, முதலாளியம், ஏகாதிபத்தியம் உள்ளிட்ட பலவும் செய்யும் சித்துவேலை இதுதான். அதாவது பிள்ளையை கிள்ளிவிடுவது, தொட்டிலை ஆட்டுவது. இங்கு பிள்ளையை உலக நிதிநிறுவனங்கள் கிள்ளிவிட, தொட்டிலை ஆட்டும் பணியை செய்வது இந்த அரசுசாரா நிறுவனங்கள். உலக நிதி நிறுவனங்களின் வழியாக கடன்சுமையை ஏற்றி, ஒருபுறம் மக்கள் நலத்திட்டங்களை நிறுத்துவது, மற்றொருபுறம் இத்தகைய நிறுவனங்கள் வழியாக மக்கள் நலத்திட்டத்திற்கு சார்பாக அரசை எதிர்த்து போரிடுவது. இதான் பிள்ளையை கிள்ளி தொட்டிலை ஆட்டும் வேலை.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;கதை-1&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;கதை-1 ல் உள்ள முதலாவது ஆராய்ச்சியாளன் பொதுபுத்தி அடிப்படையில் இயங்குபவன். உலகம் இப்படி இயற்கையாக இருப்பதாக நம்புபவன். இரண்டாமவன் முதலாண்மை கல்வி நிறுவனங்களில் மேலாண்மை படிப்புகளை கற்றவன். ஒன்றை உருவாக்கி அதற்கு தீனிபோடும் கலாச்சார கட்டுமானம் பற்றி அறிந்தவன். மனிதர்களை கலாச்சாரத்தின் வழியாக நுகர்வாளர்களாக உருவாக்க முனைகிறான். முதலாண்மை வாழ மனிதர்கள் தேவையில்லை. நுகர்வாளர்கள்தான் தேவை. அந்த நுகர்வை உருவாக்க கலாச்சாரக் கட்டுமானம் தேவை. அதை உருவாக்கவேண்டியது முதலாண்மை நிறுவனங்களின் முதல் பணியாக உள்ளது. அப்பணிகளை சர்வதேச அளவில் செவ்வனே நிறைவேற்றுபவைதான் கலாச்சார நிறுவனங்களான ஊடகங்கள், நவீன இலக்கியங்கள், நவீன கலைகள் மற்றும் என்.ஜி.ஓ.க்கள் எனப்படும் அரசுசாரா நிறுவனங்கள். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;செவ்வியல் முதலாளித்துவம் மறைந்து அந்த இடத்தில் உலக முதலாண்மை நிறுவனங்கள் அதிகாரம் பெற்றுவிட்ட ஒரு சூழல்தான் உலகமயமாதலின் வெளிப்பாடு. &lt;font color="#ff0000"&gt;&lt;strong&gt;&lt;strike&gt;(நண்பர் ராஜன்குறை இந்த வகை முதலாளியத்தின் பண்பியல் மாற்றத்தை குறிக்க முதலீட்டியம் என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார். முதலீட்டியம் என்பது உலகளாவியது, அது தனிமுதலாளிகளைக் குறிப்பது அல்ல. உலகில் “பேரரசு” ஒன்றின் செயல்பாட்டிற்கான பின்புலமாக முதலீட்டியத்தை குறிக்கிறார் என்று நினைக்கிறேன். இது குறித்து அவரது ”முதலீட்டியமும் அதன் பிறகும்” என்கிற நூலில் முதன் நிலையான ஒரு அறிமுகம் உள்ளது. நான் முதலாண்மை நிறுவனங்கள் என்பதற்கு கார்பரேட் கம்பெனிகள் என்பதற்கான தமிழ் சொல்லாகவே பாவிக்கிறேன்.*)&lt;/strike&gt;&lt;/strong&gt;&lt;/font&gt; இந்நிறுவனங்கள் தனக்கான உலகை கட்டமைக்க பல அரசாங்கங்களை நடத்திக்கொண்டு உள்ளன. அவ்வரசாங்கங்கள் சர்வதேச நிறுவனங்களை உருவாக்கி அவற்றின் வழியாக ஓர் உலக ஆட்சியை நிறுவி உள்ளன. இந்த உலக ஆட்சிக்கான சிவில் சமூகங்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதே உலக கார்பரேட் மற்றும் அரசுகளின் நிதிஉதவி பெற்று இயங்கும் என்.ஜி.ஓ.க்கள். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் சிவில் சமூகங்கள் பற்றிய ஆய்வும், இடையீடும், பணிகளும் செய்து அதை சர்வதேச சிவில் பண்புகளாக உருவாக்கப்பட்டுள்ள “ஜனநாயகம்” ”சுதந்திரம்” ”சமத்துவம்” “சகோதரத்தவம்” ”மனிதநேயம்” உள்ளிட்டவற்றிற்கான கருத்தியல்சார்ந்த மனித குழுக்களை கட்டமைப்பதும், மனிதர்களை நுகர்வாளர்களாக உருவாக்குவதையும் செய்கிறார்கள். கருத்தியல் பண்டங்களை இறக்குமதிசெய்து விநியோகிப்பதும், அதை நுகரச்செய்வதும் இவர்களது முக்கிய பணி. சமீபத்திய அரேபிய புரட்சிகள் துவங்கி இந்தியாவில் அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு “இரட்சக அரசியல்வரை“ (Messianic Politics) சிவில் சமூகம் பற்றிய பேச்சு உலகளவில் அதிகமாகி உள்ளது. இந்த “இரட்சக அரசியல்” மனநிலை அதிகாரத்தை தூக்கி எறியும் அளவிற்கு அரேபிய நாடுகளில் ஒரு பாலைவன புயற்காற்றைப்போல சுழற்றி அடித்தது. அரேபிய புரட்சி மற்றும் இந்திய சிவில் சமூக கட்டமைப்பில் இச்சுழல்காற்றை உருவாக்கிய என்.ஜி.ஓ.க்களின் இடையீடுபற்றிய ஒரு கவனத்தை ஏற்படுத்திக்கொள்ள முனைவது அவசியம்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;img style="display: block; float: none; margin-left: auto; margin-right: auto" src="http://www.tribuneindia.com/2007/20070507/edit.jpg" width="507" height="342" /&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;உண்மையில், இந்தியாவில் சிவில் சமூகம் உள்ளதா இல்லையா? என்கிற விவாதங்கள் ஒருபுறம் உள்ளன. அரசியல் சார்ந்த சிவில் சமூகம் உருவாகும் முன்பே, பிராமண அல்லது ஆரிய தர்மாவை அல்லது வரணாசிரம-தர்மத்தை பின்பற்றும், சாதிய குழுக்களை அடிப்படையாகக் கொண்ட தர்ம-சமூகம் உருவாகிவிட்டது. பழங்குடிகளின் கூட்டாச்சியை, சம-தர்ம சமூகத்தை உருவாக்க முனைந்த பௌத்தம்கூட பின்னாளில் இந்த வர்ண-தர்ம-சமூகத்தால் உள்வாங்கப்பட்டது. காரணம், தர்ம-சமூகம் அரசியலின் இடத்தில் தர்மத்தை வைத்தது. உரிமையின் இடத்தில் கடமையை வைத்தது. நிர்வாகத்தின் இடத்தில் குடும்பத்தை வைத்தது. அமைப்புகளின் இடத்தில் விசுவாசத்தை வைத்தது. தனிமனிதனின் இடத்தில் குழுமனிதனை வைத்தது. உள்ளுணர்வின் இடத்தில் கண்காணிப்பை வைத்தது. மனதின் இடத்தில் மனசாட்சியை வைத்தது. அறிவின் இடத்தில் உணர்வை வைத்தது. அறத்தின் இடத்தில் குழு-தர்மத்தை வைத்தது. சுதந்திரத்தின் இடத்தில் மோட்சத்தை வைத்தது. சிவில் சமூகத்தின் இடத்தில் சாதிய-தீண்டாமையை கொண்ட வர்ண-தர்ம-சமூகத்தை வைத்தது. அரசியலின்-தர்மத்தை, அரசியலின் அறத்தை தர்மத்தின் அரசியலாக மாற்றியது. தர்மா வர்ணங்களால் ஒழுங்கமைக்கப்பட்டது. புராணங்களின், கதையாடல்களின் வழியாக ராஜதர்மம்கூட வர்ணதர்மத்தை காப்பதற்கானதாக உருவானது. வர்ண-தர்மத்திற்கு அப்பால் ஒரு சிவில் சமூகம் என்கிற பொதுவெளி சாத்தியமற்ற நிலையில், சிவில்சமூகம் பற்றிய நிறைய பேச்சுகள் சமீபகாலங்களில் பெருக்கப்படுகின்றன. இந்திய சிவில் சமூகத்தில் சாதியத்தின், சாதியக் குழுக்களின் பங்கு என்ன? என்பதை தீர்க்காமல், சிவில்சமூகம் என்கிற குடியாண்மை சமூகத்தை உருவாக்கமுடியாது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இப்படி பெருக்கப்படுவதற்கு காரணமாக இந்திய அரசு மாறிவரும் உலகயமயமாதலில் சிவில்சமூக உருவாக்கத்தை தனது அதிகார அமைப்பிற்கு ஏற்ப ஒருவகை அதிர்ச்சி-உறிஞ்சியாக (shock absorber) உருவாக்க முனைகிறது. அதற்கான முயற்சியில் அரசுசாரா நிறுவனங்களின் பணிகளை அரசே நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்படுத்துகிறது. சிவில்சமூக உருவாக்கத்தில் என.ஜி.ஓ.க்கள் எனப்படும் அரசுசாரா நிறுவனங்களின் பணியும் பங்கும் ஆராயப்படவேண்டிய ஒன்று. எகிப்தில் நிகழ்ந்த புரட்சி துவங்கி அரேபியா முழுவதும் பரவிய அரேபிய புரட்சிகளுக்கு பின்னுள்ள அரசுசாரா நிறுவனங்களின் பங்களிப்பு முக்கியமானது. இந்நிறுவனங்கள் சமூகத்தின் மைக்ரோ லெவல் எனப்படும் மிகச்சிறிய அளவிலான ஒரு குழுவிற்குள் துவங்கி விரிந்து பரவுகிறது. வேர்க்கால்மட்ட அரசியலே இக்குழுக்களின் அடிப்படை செயல்களமாக உள்ளது. இந்தியாவில் அன்னா ஹசாரே போன்ற நடுத்தரவர்க்கத்தின் புதிய அதிகாரத்தை பங்கிட துடிக்கும் சிவில் சமூக “மெசையாக்“களை உருவாக்குவது இத்தகைய அரசுசாரா நிறுவனங்களின் முக்கியப்பணியாகும். அதற்காக முதலாளிய அரசுகள் நிறைய நிதிகளை அளிக்கிறது. உலகம் இன்று ஒருவகையில் இந்த கண்ணிற்கு தெரியாத சிறு சிறு நிறவனங்களின் வழியாக பேரரசின் அதிகார முகவர்களாக செயல்படுகிறது. இந்நிறுவனங்கள் என்ன செய்கிறது எப்படி தங்கள் வலைப்பின்னலை விரிக்கிறார்கள் என்பதை இவற்றின் அசுர வளர்ச்சியிலிருந்து அறியலாம்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;2009 ஆம் ஆண்டு கணக்கின்படி சர்வதேச அளவில் இயங்கும் அரசுசாரா நிறுவனங்கள் சுமார் 40,000 வரை உள்ளது என்கிறது ஒரு அறிக்கை. தேசிய அளவில் பார்த்தால் அதன் எண்ணிக்கை இதைவிட அதிகம். ரஷ்யாவில் மட்டும் 2,77,000 ம் அமைப்புகளும், இந்தியாவில் 33,00,000 அமைப்புகள் இயங்கி வருவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது 400க்கும் குறைவான இந்தியர்களுக்கு ஆரம்பக் கல்வி, ஆரம்ப சுகதார நிலையம் என்ற கணக்கில் ஓர் அரசுசாரா நிறுவனம் இயங்கிவருகிறதாம். அதாவது இந்நிறுவனங்கள், அரசின் பொதுநிறுவனம், அரசிற்கு வெளியல் உள்ள தனியார் நிறுவனம் இரண்டையும் போல ஒரு மூன்றாவது நிறுவனமாக செயல்படுகிறது. அரசையும், மக்களையும் இணைக்கும் கண்ணியாக இது செயல்படுகிறது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;அரசு இரண்டுவடிவங்களில் தனது அதிகாரப்பரவலை செயல்படுத்துகிறது. காவல்துறை, இராணுவம், நீதி-பரிபாலன சட்ட அமைப்பு உள்ளிட்டவற்றைக் கொண்ட வன்முறை சார்ந்த கருவிகளை வெளிப்படையானதாக வைத்து உள்ளது. குடும்பம், கல்வித்துறை, தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட குடியாண்மை சமூகம் கருத்தியல் வழியாக இணக்கமான மனநிலையை உருவாக்குவதாக உள்ளது. ஓர் அரசமைப்பு வன்முறைக் கருவிகளைக் கொண்டு மட்டுமே ஆளமுடியாது, அதிகாரம் செலுத்த முடியாது. தனது ஆளுகையை ஏற்கக்கூடிய தன்னிலைகளை உருவாக்க வேண்டும். அதற்கு இந்த அரசுசாரா, தன்னார்வ, தொண்டு நிறுவனங்கள் பணியாற்றுகின்றன. சீர்திருத்தம், அடிப்படை மாற்றம் என்கிற இரு சொல்லாடல்களுக்குள், சீர்திருத்தம் என்பதை முன்வைப்பதன்மூலம், அடிப்படை மாற்றத்தை பற்றிய அக்கறையின்மையை உருவாக்கக்கூடியதாக உள்ளது. தன்னிலைகளை திருத்தம் செய்து சீர்திருத்தி அரசின் ஆளுகைக்குள் நிலைநிறுத்துவதாக உள்ளது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இந்தியாவின் மிகப்பெரிய என்.ஜி.ஓ. என்றால் அது மதம் சார்ந்த இயக்கங்கள்தான். சான்றாக, இந்திய தேசியத்தின் பாதுகாவலனாக, மரபின் மைந்தனாக தன்னை அறிவித்துக்கொண்டு, தேசிய சுயசேவகர்கள் என்று சொல்லும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சொல்லலாம். இவ்வமைப்பு அரசுசாரா நிறுவனங்களுக்கு, சிவில் சமூக சேவைகளுக்கு ஒதுக்கபட்ட அமெரிக்க நிதி ஆதாரங்களைக்கொண்டு இயங்குவதை பெரியார்தளத்தில் உள்ள இக்கட்டுரை விவரிக்கிறது. (&lt;a href="http://www.periyarthalam.com/2011/12/09/rss-run-by-american-money/"&gt;http://www.periyarthalam.com/2011/12/09/rss-run-by-american-money/&lt;/a&gt;)&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இந்தியாவில் 1.5 மில்லியன் என்.ஜி.ஓ. அமைப்புகள் உள்ளன. 26.5 சதவீதம் என்.ஜி. ஓக்கள் மதநடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள். 21.3 சதவீதம் சமூக சேவை இயக்கங்கள். ஐந்திற்கு ஒன்று கல்வியிலும், 17.9 சதவீதம் விளையாட்டு மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள். 6.6 சதவீதத்தினர் சுகாதரப்பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். (Overview of civil society organizations INDIA – Asian Development Bank) இத்தகைய வேர்க்கால்மட்ட நடவடிக்கைகளால்தான் இந்தியாவில் சிவில் சமூக உருவாக்கம் நிகழ்கிறது. இத்தகைய பணிகளால், மக்களின் மனசாட்சி என்பது சிவிக் பண்புகளால் கட்டப்படுகிறது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;சிவிக் பண்புகளாக மேற்கத்தியம் முன்வைக்கும் அடிப்படையான ஒன்று ஜனநாயகம். ஆனால், இந்தியாவில் ஜனநாயகம் என்பது பிரதிநிதித்துவ அரசியலாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதே ஒழிய, பங்கேற்பின் அசியலாக அல்ல. ஜனநாயகம் என்பது சமத்துவ பண்பை அடிப்படையாகக் கொண்டது. அது மற்றமையுடன் பங்கேற்பதன்வழியாக ஒரு சமத்துவநிலையை உருவாக்க்க்கூடியது. ஆனால், இந்திய தர்மா-வர்ணப்பண்புகளால் கட்டப்பட்ட மனதில், ஜனநாயகம் என்பது பிரதிநிதித்துவமாக மட்டுமே புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் குழுவின் பிரதிநிதியாக ஜனநயாகம் கையாளப்படுகிறது. தனிமனிதனின் பண்பாக ஜனநாயகம் இங்கு வளர்த்தெடுக்கப்படவில்லை. காரணம் இந்தியாவின் அடிப்படை அலகாக தனிமனிதன் இல்லை. குழுக்களே உள்ளன. அந்த குழுக்கள் சாதிகளாக, இனமாக, பாலினமாக இப்படி ஏதோ ஒரு நிலையான அடையாளம் (மோலார் அடையாளம்) கொண்டதாக உள்ளது. அடையாளத்தின் ஜனநாயகம் மட்டுமே அரசியல் கோரிக்கையாக உள்ளது. தனி உடலின் ஜனநாயகம் என்பது சிந்தனை அளவில்கூட சாத்தியமற்றதாக உள்ளது. தனக்கும் மற்றமைக்கும் குறைந்தபட்சம் சகமனிதனுக்கும் இடையில்கூட ஒரு சமநிலையை தரும் சமத்துவத்தை தரும் ஜனநாயகப்பண்பு இல்லை. எப்போதும் தன்மோகத்தின் உச்சியில் நின்று, தன்னை உயர்வாகக் கருதும் ஒரு ”புனித தெய்வீக” தன்-மையவாத பிம்பமே மேலோங்கி உள்ளது. அதனால்தான் ஜனநாயகம் என்பது எப்போதும் ஒரு பிரதிநிதித்துவ அரசியல் சொல்லாடலாக உள்ளதே தவிர, பங்கேற்கும் கலாச்சார சொல்லாடலாக மாறவில்லை.&lt;/p&gt;  &lt;p&gt;(தொடரும்)&lt;/p&gt;  &lt;p&gt;- ஜமாலன் (&lt;a href="mailto:jamalan.tamil@gmail.com"&gt;jamalan.tamil@gmail.com&lt;/a&gt;) 16/12/2011&amp;#160; - &lt;strong&gt;&lt;a href="http://www.adavimagazine.blogspot.com/"&gt;அடவி&lt;/a&gt; 2012&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;* – இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நணபர் ராஜன்குறையின் நூலின் பெயர் ”முதலீட்டியமும் மானுட அழிவும்” (&lt;a href="http://www.keetru.com/index.php?option=com_content&amp;amp;view=article&amp;amp;id=14819:2011-05-26-11-11-47&amp;amp;catid=1328:2011&amp;amp;Itemid=575"&gt;கீற்றில் இதனை வாசிக்கலாம்&lt;/a&gt;&lt;/font&gt;&lt;font color="#004080"&gt;&lt;/font&gt;&lt;font color="#ff0000"&gt;. சுட்டி தந்த ஜெ.பி. ராஜேந்திரன் அவர்களுக்கு நன்றி.) எனது கவனக்குறைவினாலும், நேரமின்மையினாலும் சரிபார்க்காமல் நிகழ்ந்த தவறுக்கு வாசகர்கள் மற்றும் ராஜன்குறையிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இதில் ராஜன்குறையின் கருத்தாக நான் குறிப்பிட்டிருப்பவை அவரது நூல் வாசிப்பில் எனக்கு ஏற்பட்ட புரிதலே தவிர இவை ராஜன்குறையின் கருத்துக்கள் அல்ல. அவரது கருத்தை அறிய விரும்பும் வாசகர்கள் அவசியம் புலம் வெளியிட்டு உள்ள அந்த நூலை வாசிக்கவும்.&amp;#160; இது குறித்து பேஸ்புக்கில் நிகழ்ந்த எங்கள் உரையாடலை இதில் வாசிக்கலாம். &lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;a href="http://www.facebook.com/jamalan.tamil/posts/215402001884495?notif_t=share_comment"&gt;http://www.facebook.com/jamalan.tamil/posts/215402001884495?notif_t=share_comment&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;strong&gt;&lt;font color="#ff0000"&gt;இந்த வரிகளை நீக்கிவிடுகிறேன் இக்கட்டுரையில் நன்றி.&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4997678103589622995-7727745171881340115?l=jamalantamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jamalantamil.blogspot.com/feeds/7727745171881340115/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4997678103589622995&amp;postID=7727745171881340115' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/7727745171881340115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/7727745171881340115'/><link rel='alternate' type='text/html' href='http://jamalantamil.blogspot.com/2012/01/2_20.html' title='மேலே பூதம் கீழே ஆழ்கடல் - சிவில் சமூகமும் அரசுசாரா சமூகமும் –2'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-2034951623349403226</id><published>2012-01-19T00:25:00.000+03:00</published><updated>2012-01-19T00:26:45.485+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடலரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sigmund Freud'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='cartesian dualism'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிராய்ட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிராய்டியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இருமைவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Freud'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கார்டீசியன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மந்திரச்சிமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><title type='text'>இடிபல் முக்கோணத்தில் சிக்கிய கார்டீசிய உடல் – பிராய்டின் மூடுண்ட கனவுகள் - 3</title><content type='html'>&lt;h6&gt;&lt;a href="http://jamalantamil.blogspot.com/2012/01/1-1.html"&gt;இடிபல் முக்கோணத்தில் சிக்கிய கார்டீசிய உடல் – பிராய்டின் மூடுண்ட கனவுகள் - 1&lt;/a&gt;&lt;/h6&gt;  &lt;h6&gt;&lt;a href="http://jamalantamil.blogspot.com/2012/01/2.html"&gt;இடிபல் முக்கோணத்தில் சிக்கிய கார்டீசிய உடல் – பிராய்டின் மூடுண்ட கனவுகள் - 2&lt;/a&gt;&lt;/h6&gt;  &lt;p align="justify"&gt;&lt;b&gt;&lt;u&gt;இடிபஸ் புராணம் &lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;– &lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;தாய் மோகமா? தந்தையின் சாபமா?&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;பண்டைய கிரேக்கத்தில் புழங்கிய தந்தையைக் &lt;a href="http://lh4.ggpht.com/-y7BW9-KH3NU/Txc5CYpT_GI/AAAAAAAABkA/OvPDU-LtLrA/s1600-h/clip_image002%25255B6%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="clip_image002" border="0" hspace="12" alt="clip_image002" align="right" src="http://lh6.ggpht.com/-itATrNp_dQU/Txc5EJ563iI/AAAAAAAABkI/w5Qm2pRXD1I/clip_image002_thumb%25255B3%25255D.jpg?imgmax=800" width="189" height="356" /&gt;&lt;/a&gt;கொன்று தாயை மணந்துகொள்ளும் ஒரு வாய்மொழிக் கதையாடலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதையே இடிபஸ் புராணம். தந்தையை அல்லது தாய்வழிச்சமூகத்தில் தந்தை-ஸ்தானமாக அறியப்பட்ட தாயமாமனைக் கொல்வது என்கிற புராணிகம் உலகின் பெரும்பாலான சமூகங்களில் காணப்படுகிறது. யூத-கிறிதுவ-இஸ்லாமிய மூலத்தொன்மங்களில் சொல்லப்படும் மோசஸ்-மெசையா-மூசாவுக்கு எதிரான எகிப்திய பரோமன்னன் கதைதுவங்கி, இந்தியாவின் யாதவ-கிருஷணன் மற்றும் கம்சன் கதைவரை இது உள்ளது. ராமாயணம், மகாபாரதம் மற்றும் பல உதாரணங்களை தருகிறார் ஏ.கே. ராமானுஜன் தனது இந்தியன் இடிபஸ் என்கிற கட்டுரையில். தந்தை அல்லது தாய்மாமனைக் கொல்லுதல் என்பது, மதங்களின் உருவாக்கத் தொன்மக்கதையாடல் எனலாம். இக்கதையாடல்கள் விதிவாதத்தை சமூகத்தில் நிலைநிறுத்தி, விதியின் மூலகர்த்தாவாக கடவுளை கட்டமைப்பதற்கானதாகவும், விதியின் கைகளில் தப்பமுடியாததாக மனிதஉடல் மாட்டிக்கொண்டிருப்பதான ஒரு மூலமுதல் தத்துவத்திற்கான அடிப்படையாகவும் கட்டப்பட்டவை. இக்கதையாடலில் தாயை மணந்து குழந்தைகள் பெற்று குடும்பமாக இருப்பது என்பது கிரேக்க கதையாடலில் முக்கியமான ஒரு வேறுபாடாக உள்ளது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இடிபஸை நாயகனாகக் கொண்ட இப்புராணம் ஒரு வாய்மொழிக் கதையிலிருந்து நாடகங்களாகவும், கிளைக்கதைகளாகவும் வழங்கப்பட்டுவந்தது. அது கிரேக்க நாடகாசிரியரான ஸோபோகளிஸால் (Sophocles) கி.மு. 492-ல் “இடிபஸ் ரெக்ஸ்“ அல்லது “மன்னன் இடிபஸ்“ என்கிற புராண-நாடகமாக எழுதப்பட்டது. இப்புராணத்தின்படி கிரேக்க நகரமான தீப்ஸில் பிளேக் நோய் பரவுகிறது. நோய்க்கான காரணத்தை அறிந்து தீர்க்க மன்னன் இடிபஸ் முயல்கிறான். இடிபஸின் மனைவியான ஜொகாஸ்டாவின் முன்னாள் கணவனாகிய மன்னன் லயாஸை கொன்றவனை கண்டுபிடித்து தண்டித்தால் இந்நோய் தீரும் என்று குறி கேட்டுவந்து சொல்கிறான் அவளது சகோதரன் கிரியான். கண்தெரியாத டைரிஸியஸ் என்கிற தீர்க்கதரிசியிடம் அக்குற்றவாளியை கண்டுபிடித்து சொல்லும்படி கேட்கிறான். டைரிசியஸ் லயாஸைக் கொன்ற கொலையாளி தனது சொந்த பிள்ளைகளுக்கு தந்தையாகவும், சகோதரனாகவும் மேலும் தனது மனைவிக்கு மகனாகவும் இருக்கிறான் என்ற ஒரு புதிர்வாசகத்தை கூறி நீதான் அந்த கொலையாளி என்று சொல்கிறான். இது தனக்கு நேர்ந்த அவமானம் எனவும் கிரியான் மன்னனாக ஆசைப்பட்டு டைரிசியஸிற்கு பரிசுகள் தந்து இப்படி சொல்லவைத்துள்ளதாக கூறி கிரியான் ஒரு ராஜத்துரோகி என்ற குற்றச்சாட்டை வைக்கிறான். தந்தைக்கும் தாய்மாமனுக்குமான முதல் முரண் இங்கு வெளிப்படுகிறது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இடிபஸ் ஜொகாஸ்டாவிடம் டைரிசியஸ் சொன்ன தீர்க்கதரிசனத்தை சொல்கிறான். ஜொகாஸ்ட்டா மன்னன் லயாஸ் தனது சொந்த மகனால் கொல்லப்படுவான் என்ற முன்னறிவிப்பால் தனது குழந்தையை அதன் பாதங்களில் ஆணிகள் அறைந்து காயமாக்கி ஒரு மேய்ப்பனிடம் மலைகளில் எறிந்துவிடும்படி தந்துவிட்டதாகவும், ஆனால், லயாஸ் கொல்லப்பட்டதோ மூன்று பாதைகள் சந்திக்கும் குறுக்கு ரோட்டில் கொள்ளையர்களால்தான், அவனது சொந்த மகனால் அல்ல என அதை பார்த்த ஒரே சாட்சியான இடையன் சொன்னதைக் கூறுகிறாள். இடிபஸ் அச்சாட்சியை அழைத்துவரும்படி ஆணையிடுகிறான். சாட்சிக்காக காத்திருந்த நேரத்தில் ஜொகாஸ்டாவிடம் இடிபஸ் தனது கடந்தகாலக் கதையை சொல்கிறான். அவன் இளைஞனாக இருந்தபோது ஒருவன் நீ உனது தந்தையின் மகனல்ல என்று சொன்னதால், டெல்பி என்ற பகுதியில் உள்ள ஒரு முன்னறிவிப்பாளரிடம் சென்று தனது பிறப்பை அறிய முயல்கிறான். அந்த முன்னறிவிப்பில் அவன் தனது தந்தையைக் கொன்று தாயை மணப்பான் என்று சொல்லப்பட்டதால், அச்சமுற்று அந்நகரத்தை விட்டு வெளியேறுகிறான். அவனது பயணத்தில் ஒரு குறுக்குப்பாதையில் இருமாப்புள்ள ஒரு மனிதனை எதிர்கொள்கிறான். இடிபஸை அவன் அவமானப்படுத்தியதால் அவனை கொன்றுவிட்டதாகவும் சொல்கிறான். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;அச்சமயத்தில் பழைய நகரத்திலிருந்து அவனது தந்தை இறந்ததை சொல்ல வந்த செய்தியாளன், இறந்தவன் உன் தந்தை அல்ல பலவருடங்களுக்கு முன்பு ஒரு குழந்தையை ஒருவன் தன்னிடம் தந்ததாகவும, அதை தான் மன்னரிடமும் ராணியிடமும் தந்ததாகவும், அதனை இடிபஸ் என்ற பெயரிட்டு வளர்த்தார்கள் என்றும் கூறுகிறான். அதற்கு ஆதாரமாக இடிபஸின் பாதத்தில் உள்ள ஆணி அறையப்பட்ட காயமே சாட்சி என்கிறான். இடிபஸ் யார் உன்னிடம் அந்த குழந்தையை தந்தது என்று கேட்டதற்கு அவன் லயாஸ் மன்னனின் வேலைக்காரன் என்கிறான். இடிபஸ் அவனை அனுப்பி அந்த வேலைக்காரைனை கண்டுபிடித்து அழைத்துவரச் சொல்கிறான். இடிபஸ்முன் அந்த பழைய வேலைக்காரனை கொண்டுவருகிறார்கள். அவன்தான் அந்த செய்தியாளனிடம் குழந்தையை தந்தவன் என்றும், அந்த குழந்தைதான் லயாஸ்-ஜொகாஸ்டாவின் மகன் என்றும் லயாஸ் மலையடிவாரத்தில் கொல்லப்பட்டது பழைய முன்னறிவிப்பின் தீர்க்கதரிசனப்படி அவனது மகனான இடிபஸால் என்ற உண்மையைச் சொல்கிறான். தந்தையைக்கொன்று தாயை மணந்த முன்னறிவிப்பின் விதி தெளிவாகிவிட்டதால் இடிபஸ் ஜொகாஸ்டாவை கொல்வதற்காக தேடிச்செல்கிறான். அவள் தூக்கில் தொங்குவதைக் காண்கிறான். அவளது ஆடையில் இருந்த தங்க ஊக்கை எடுத்து தனது கண்களில் குத்திக்கொள்கிறான். தனது பிள்ளைகளை கிரியானிடம் ஒப்படைத்துவிட்டு இடிபஸ் நகரத்தைவிட்டு வெளியேறுகிறான். தந்தை-மகன்-தாயமாமன் என்கிற கதையின் அதிகாரச்சுற்று இவ்வாறாக முடிகிறது.. இடிபஸ் ஜொகாஸ்டாவை கொல்ல முயன்றது ஏன்? அவள் தூக்கில் தொங்கியது ஏன் என்கிற கொலை தற்கொலை என்கிற முடிச்சு ஒன்று புதிராக இதில் பின்னப்பட்டுள்ளது. கதையின் மையமான தாய் தற்கொலையின் மூலம் தன்னை இன்மையாக்கிக் கொள்கிறாள். ஆண் தண்டிப்பவனாகவும், தண்டித்துக்கொள்பனாகவும், பெண் சுயதண்டித்தலுக்கு உள்ளாகக் கூடியவளாகவும் இருப்பதை சொல்வதாக இதனைக் கொள்ளலாம். பெண்ணுடல் தாய் வழியாக இன்மையாக்கப்பட்ட வரலாறாக இதனை வாசிக்கலாம்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இக்கதையொடு தொடர்புடைய மன்னன் லயாஸின் மேல் படிந்த சாபம் பற்றிய மற்றொருக்கதையில், லயாஸ் தனது நகர் அந்நியர்களால் கைப்பற்றப்பட்டபோது வெளியேறி மற்றொரு நகர மன்னனிடம் அடைக்கலாமாக இருந்தபோது அம்மன்னன் மகனை வன்புணர்ச்சி செய்துவிடுகிறான். அதனால் அவனது மகன் அவனைக் கொன்று அவனது மனைவியை (தாயை) மணப்பான் என லயாஸ்மீது சாபம் கவிகிறது. இச்சாபத்தின் கதைதான் இடிபஸ் புராணம். தன்பால்புணர்ச்சிக்கு சபிக்கப்பட்ட கதை, தகாப்புணர்ச்சிக்கான சாபமாக தந்தையின் கொலையிலும் தாயின் தற்கொலையிலும், மகன் குருடனாவதாகவும் மாறுகிறது. கொலை செய்யப்பட்ட தந்தை, தற்கொலைக்கு தள்ளப்பட்டுவிட்ட தாய், குருடான மகன் இதுதான் இந்த முக்கோணத்தின் விதி. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இப்புராணம் இத்தனை விரிவாக சொல்லப்பட்டது, பிராய்டிய ஈடிபல் சிக்கலில் விடுபட்ட சில புள்ளிகளை வைத்தும் அதைப் புரிந்துகொள்ள முயலவே. புரணாங்களில் அல்லது தொன்மங்களில் பலவகைகள் உண்டு. இப்புராணங்கள் உருவாக்க புராணங்கள் (founding myth) வகையைச் சேர்ந்தவை. அரசு உருவாக்கும், நகர் உருவாக்கும், சில முன்மாதிரி பாத்திரங்களை உருவாக்கி சமூகத்திற்கு பின்பற்ற அளித்தல் என்கிற வகையைச் சேர்ந்தவை. அதாவது வரலாற்றுத்தன்மையுடன் உறவு கொண்டவை. முன்மாதிரி பாத்திரங்கள் என்பதால் இவை சமூகப்பொதுமை கொண்டவையாக உள்ளன. பிராய்ட் இந்த பொதுதன்மையை, ஒரு தொன்மக் கதையாடலின் அடிப்படை வரலாறாக அல்லாமல், அல்லது நாடகத்தின் பாத்திரமாக அன்றி மனிதஉருவாக்கத்தின் அடிப்படையானதாகக் கொள்கிறார். அதனால் இத்தொன்மங்கள் பற்றிய நமது வாசிப்பின்வழி பிராய்டின் சிந்தனை தடத்தை புரிந்துகொள்ளமுயலாம். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;b&gt;&lt;u&gt;இடிபல் எனும் &lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;‘&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;தந்தை‘மை சொல்லாடல்&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;முதலில் இப்புராணத்தின்படி இரண்டு பாலியல் சிக்கல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று தன்பால்புணர்ச்சி மற்றொன்று தகாப்புணர்ச்சி எனப்படும் தாயுடன் ஆன புணர்ச்சி. அதாவது பிராய்டின் பாலுணர்ச்சி பற்றிய சிந்தனையில் ஆரம்பத்தில் தன்பால்புணர்ச்சி என்கிற சிக்கலை முன்வைத்ததும், அதனால் சபிக்கப்பட்டு அச்சாபம் தகாப்புணர்ச்சியாக வெளிப்பட்டதை மறைத்தோ அல்லது மறந்தோ இடிபல் சிக்கலாக முன்வைத்ததும் இக்கதையாடல்களின் அடிப்படையில்தான். தன்பால்புணர்ச்சி என்கிற ஹோமோசெக்ஸ் குறிப்பாக ஆண்களுக்கிடையிலான பாலியல் தடைபடுத்தப்படுகிறது. அது தடைபடுத்தப்பட்டால், அடுத்து ஆண் பெண்ணுடன் ஏற்படுத்திகொள்ளும் எதிர்பால்-புணர்ச்சி எனப்படும் ஹெட்ரோசெக்ஸ் தகாப்புணர்ச்சி நோக்கி நகர்ந்துவிடுவதை, இடிபல் புராணம் சாபமாகவும், தகாப்புணர்ச்சியை குற்றஉணர்வாகவும் மாற்றி தந்தைவழி-குடும்ப சமூகஅமைப்பு ஒழுங்கமைக்கப்படுகிறது என்பது இப்புராணத்தின் அடிப்படை வாசிப்பில் ஒன்று. அதாவது இப்புராணத்தில் முக்கியமான முரண்பாடு தந்தையும்/மகனுமான இடிபஸூக்கும் சகோதரனும/தாய்மாமனும் ஆன கிரியானுக்கும் இடையிலான அதிகாரப்போட்டிதான். இப்போட்டி தாய் என்கிற பெண்உடலின் மீது வைத்து கதையாடப்படுகிறது. அதாவது தாய்வழிச்சமூகத்தில் தாயக்குப்பின் அதிகாரம் பெற்ற ஆண் அவளது சகோதரனே அதாவது தாய்மாமனே. அவன் பணி பாதுகாவலனின் பணி. இங்கு தாய்மாமனின் பாதுகாவல் பணியை பெண் உடல்மீதான முற்றதிகாரமாக மாற்றி அவனை அதிகாரமற்றவனாக ஆக்கப்பட்ட ஒருசமூகத்தில், தந்தையும் மகனும் பதிலீடாக அதிகாரம் பெறுகின்றனர். அதாவது தாயின் கால்வழி மறுக்கப்பட்டு, தந்தையின் கால்வழி பாரம்பரியமாக மாறுகிறது. தந்தையின் கால்வழி பாரம்பரியம் என்பதுடன் மதங்களின் உருவாக்கம் நிகழ்கிறது. இறை என்பது இந்த தடைசெய்யப்பட்ட குற்றவியலின் கண்காணிப்பாக மாற்றப்படுகிறது. இறைக்கு ஆண் என்கிற அதாவது தந்தை என்கிற ஆண்பால் தன்மை தரப்படுகிறது. தடைசெய்யப்பட்ட தன்பால்புணர்ச்சி (தந்தை-மகன் புணர்ச்சி) மற்றும் தகாப்புணர்ச்சியின்மேல் (தாய்-மகன் புணர்ச்சி) மதங்கள் மற்றும் குடும்பங்கள் கட்டப்படுகின்றன. இதுதான் பிராய்டிய ஆழ்மன ”இத்”-தாக அதாவது இடிபல் சிக்கலாக நவீன சமூகத்தில் கட்டமைகிறது. பிராய்டு கண்டு சொன்ன ஆழ்மனம் முதலாளியத்தின் நவீன மதமாக மாறியது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இக்கதையாடலில் பிளேக் இறையின் சாபமாக கவிகிறது. நோய் உடல் சார்ந்ததாக அல்லது சூழல் சார்ந்ததாக அல்லாமல் இன்றுவரை ஒரு தண்டனையாக கருதப்பட்டே வந்துள்ளது. காரணம் தகாப்புணர்ச்சி என்கிற மதவிரோத செயலை செய்தவன் அச்சமூகத்தில் இருப்பதால் உண்டான தெய்வக்குற்றமே கதையாடலின் மையம். தகாப்புணர்ச்சி குற்றம் என்பதாக கட்டப்படுவதே இக்கதையாடலுக்கான தேவையாக உள்ளது. தந்தை மற்றொரு ஆணுடன் உறவு கொண்டதால், தாயுடன் உறவு தடைபடுத்தப்படுகிறது. அப்படி உறவு ஏற்பட்டால் அதன்விளைவான மகனால் அவனது உயிருக்கு ஆபத்து என்கிற தண்டனை முன்வைக்கப்படுகிறது. கதையின் மௌனத்தில் தந்தையைக் கொல்லுதல் தாயின் பாலியலை கட்டவிழ்ப்பதற்கான செயலாக உள்ளது. அதே தாய் மகனுடன் புணர்ந்து 4 பிள்ளைகள் பெற்று அரசியாக இருக்கிறாள். தாய்-மகன் உறவு அறியப்படாதவரை தகாப்புணர்ச்சி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இக்கதையில் தந்தைமையின் அதிகாரத்திற்குள் சிக்கிய தாயின் பாலியலை விடுவிக்கிறான் மகன். இங்கு தந்தைமீதான பொறாமை என்பதோ காயடிப்பு சிக்கலோ இல்லை. தந்தையை கொல்லுதல் அகங்காரத்தை சூப்பர்ஈகோ என்கிற லிங்க-அதிகாரத்தை வெட்டி எறிவதே தவிர தந்தை என்கிற காயடிப்பு அதிகாரத்திற்கு எதிராக அல்ல. தந்தை என்பதற்காக அவன் கொல்லப்படுவதில்லை. தாய் என்பதற்காக அவள் மணமுடிக்கப்படுவதுமில்லை. தந்தை தாய் என்கிற உறவு கதையாடலின் புதிர் தன்மையில் விடுவிக்கப்பட்டே வெளிப்படுகிறதே ஒழிய விருப்பின் அடிப்படையில் நிகழவில்லை. விருப்பின் அடிப்படையில் நிகழாத ஒன்றை பிராய்ட் ஆழ்மனவிருப்பாக கட்டமைக்கிறார். இவ்விருப்பிற்கான சொல்லாடல் களத்தை திறந்துவிடும் செயலாக இது அமைகிறது. இதிலிருந்து பாலியல் விருப்பு என்பது பெருக்கப்பட்டு பாலியல் என்பது ஆழ்மன இச்சையாக கதைக்கப்பட்டு சமூக இயக்கத்தின் மையமாக வந்தமைகிறது. அவ்வகையில் பாலியலை சமூக சொல்லாடலாக மாற்றியது பிராய்டியம்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இடிபல் சிக்கல் எங்கு வெளிப்படுகிறது என்றால் பிளேக் என்கிற நோயால். அதாவது தெய்வகுற்றமாக அது மாற்றப்படுவதால். ஒரு தெய்வகுற்றத்திற்கு பலியிடப்பட்ட ஒருவனது கொலை எப்படி மற்றொரு தெய்வக்குற்றமாகும். இரண்டுவகையான பாலுந்துங்களும் தெய்வகுற்றமாக கருதப்படுவதால், புராணம் முன்வைக்கும் நுட்பமான செய்தி தாய்-தந்தை-மகன் என்கிற உறவை உருவாக்க தகாப்புணர்ச்சி தடை தெய்வீக விதியாக முன்வைக்கப்படுவதே. அதாவது குடும்பங்கள் தகாப்புணர்ச்சியின்மேல்தான் கட்டப்பட்டுள்ளன. மகனை தந்தையாக்குவதன்மூலம் அதிகாரம் ஆணிய-பேரிருப்பை நிரந்தரமானதாக மாற்றுகிறது. தந்தை என்கிற உயிரியல்-தந்தை தந்தையின் ஸ்தானம் என்கிற கலாச்சார-தந்தையாக மாற்றப்படுகிறது. வாரிசு என்கிற அதிகார-உரிமை தொடர்ந்து ஆணிய இருப்பில் கைமாறிக்கொண்டே இருக்கிறது. மதங்களின் இந்த இடிபலாக்க இத்தை நவீன சொல்லாடலில் கொண்டுவந்து முதலாளிய நவீனத்தின் மனக்கூறாக மாற்றி வைக்கிறார் பிராய்ட். பாலியல் குடும்பங்களின் மையமாகவும், உடல்களின் லிபிடனல்-இயக்க ஆற்றலாகவும் மாறிவிடுகிறது. அதாவது உடலில் தங்கியிருந்த பாலியலை மனதிற்கு மடைமாற்றிவிடுகிறார் பிராய்ட். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இப்புராணத்தில் டைரீசியஸின் புதிர்வாக்கியம் ஒரு சித்திரத்தை தருகிறது. அதாவது தாயை மணந்ததால் ஒருவன் தந்தையாக, சகோதரனாகவும், கணவனாகவும, மகனாகவும் இருக்கிறான் என்பதே அந்த புதிர். இதில் ஆண் என்பவன் ஒரு பெண்ணை தாயாக மையப்படுத்தி நான்கு உறவுநிலைகளை ஏற்படுத்துகிறான். தாயை மணந்தால் கணவன், மகன், தந்தை, சகோதரன் என்கிற நான்கு உறவும் ஒருவனுக்கே ஏற்பட்டுவிடுகிறது. தந்தை-தாய்-மகன் என்கிற குடும்ப முக்கோணத்தில், தாயின் சகோதரன் அல்லது பெண்வழி உறவு என்பது வெளித்தள்ளப்படுகிறது. இங்கு சமூகநிலை அல்லது தாய் என்கிற சமூகச்சொல்லாடல் புதிய குறியமைப்பிற்குள் நுழைகிறது. இயற்கை-தாயாக இருந்த பண்டைய சமூக ஆதித்தாய், நவீனக் குடும்பஅமைப்பின் மையஅச்சாக அதாவது உயிரியல்-தாயாக மாறுகிறாள். தாய்மாமன் என்கிற ஸதானம் தந்தை என்கிற ஸதானமாக மாற்றப்பட்டு பண்டைய காலத்தில் உயிரியல்-தந்தையாக இருந்தவன் கலாச்சார-தந்தையாக மாறுகிறான். தாய்வழி-இயற்கை தந்தைவழி-கலாச்சர அமைப்பாக மாற்றம் கொள்கிறது. அதாவது பண்டைய அமைப்பு தலைகீழாக்கப்படுகிறது. இத்தலைகீழாக்கத்தில் “இத்“ என்பது கீழே ஒடுக்கப்பட்டதாக உள்ளார்ந்து அமைந்துவிடுகிறது. மனம் என்கிற சுயத்தின் கலாச்சார தொழில்நுட்பம் கட்டப்படுகிறது. கணவன் என்கிற புதிய உறவினால் தாய் என்பவள் மனைவி என்கிற பாத்திரத்தை ஏற்று சகோதரி என்கிற பாத்திரத்தை இரண்டாம்நிலைக்கு தள்ளுகிறாள். அதாவது கிரியான் என்கிற சகோதரன் பின்தள்ளப்பட்டு இடிபஸ் அதிகாரம் பெறுகிறான். தாயை உள்ளே அமுக்கிவிட்டு தந்தையும் மகனும் மேலெழும்பி வருவதே கதையாடலின் அடிப்படை சட்டகம்&lt;a href="#_ftn1_4716" name="_ftnref1_4716"&gt;[1]&lt;/a&gt;. தந்தை மறைபொருளாகவும், மகன் நேர்பொருளாகவும், தாய் உட்பொருளாகவும், தாய்மாமன் வெளிப்பொருளாகவும் கதைக்குள் பொருள் கொள்ளப்படுகிறார்கள். கதையாடல் இந்நான்கு பொருள்கொள்ளுதல்கள் வழியாக கட்டப்படுகிறது. மறைபொருளான தந்தை மதங்களின் மறைபொருளான இறையாக இயக்கம் கொள்வதே நவீன மனம். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;b&gt;&lt;u&gt;மனம் எனும் முதலாளிய தொழில்நுட்பம்&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;தந்தை என்கிற ஆணாதிக்கம் முற்றதிகாரமாக மாறியதைதான் பிராய்ட் தனது இடிபல் முக்கோணத்தின் வழியாக இயல்பாக்கம் செய்தார். நவீன குடும்பங்கள் உருவாக்கிய இந்த இடிபல் முக்கோணம் மனம் என்கிற ஒன்றின் கட்டமைப்பில்தான் தனக்கான வேர்களை கொண்டு உள்ளது. இந்த மனதை உருவமைத்த பிராய்ட் நவீன விஞ்ஞானத்தின், மறுமலர்ச்சியின் கார்டீசிய சொல்லாடலின் பிளவை அப்படியே ஏற்றதின் வழியாக முதலாளித்துவத்திற்கான மனஅமைப்பை வெளிப்படுத்தினார். இன்று நாம் மனமாக உணர்நதுகொண்டிருப்பது இந்த கார்டீசிய மனதைதான். இந்த மனம் எல்லாவற்றையும் இருமையாக பகுக்கும் தன்மை கொண்டது. எப்போதும் எதிர்மையுடன் உறவுகொண்டது. சொல்வதற்கு எதிரானதாக இயக்கம் கொள்வது. இந்த மனம் எதிரெதிரான சக்திகள் நடிக்கும் ஒரு நாடக அரங்கு போன்றது. இந்த அரங்கின் திரைக்கதை ஆசிரியன் சூப்பர்ஈகோ என்றாலும், கதையின் கருவை தருவது இத். நடிப்பது ஈகோ என்பதாக உள்ளது. இது உலகின் அனைத்து சிக்கலையும் குடும்பத்துடன் இணைப்பது. தாயை அறியாத நாடோடிக் குழந்தை, குடும்பம் உருவாகாத அல்லது இல்லாத குழந்தை, தாயை அறியாத தொட்டில் குழந்தை ஆகியவற்றின் இருப்பையோ நிராகரிப்பது. அவர்களையும் குடும்பம் என்ற அமைப்பிற்குள் திணிப்பது. எல்லா சமூக நடவடிக்கைகளையும் தனிமனிதனின் சிக்கலாக மாற்றுவது. தனிமனிதனை அவனது மனமாகச் சுருக்குவது. மனதை நினைவிலியாகவும், நினைவிலியை இத்தாகவும், இத்தை இடிபலாகவும் மாற்றியமைப்பது. குடும்ப பிரமிடின் உச்சியில் தந்தையும் அடியில் தாயுமாக கட்டமைப்பது. தாய் என்கிற உடலின்மேல், உறவின்மேல் மகனையும் தந்தையையும் சுமப்பது. பெண் என்கிற இருப்பை மறுப்பதால் மனம் என்பதே ஆணிய தொழில்நுட்பமாக வடிவமைத்தது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;மனம் என்பதில் நினைவிலியை தனிமனிதனின் எல்லைக்குட்படுத்துவது. அதன்வழியாக முதலாளித்துவத்திற்கான எல்லைகளை மறுவரையறை செய்தது. முதலாளித்தவத்திற்கு தேவையான உற்பத்தி சக்திகளான மனிதர்களின் உடலை அவர்களது விருப்பத்தை முதலாளித்துவ எல்லைக்குள் வரையறை செய்தது. விருப்பத்தை உட்செறித்த வேட்கையாகவும், அது இன்மையால் திருப்பதியற்றதாக உள்ளதாகவும், அதனை பதிலீடுசெய்வதற்காக சமூகத்தின் உற்பத்தியில் பங்குபெறச் செய்வதாகவும் எதிர்மறையான கருத்தாக்கத்தை கட்டமைத்தது. விருப்பு சமூக உற்பத்திக்கான ஆற்றல் அதனை இன்மையாக்கியதன் மூலம் முதலாளித்துவ உற்பத்தி எந்திரங்களில் விருப்பின் பதிலீடுகளை தேடும் மனதாக உருவானது. முதலாளித்துவத்தின் பித்துநிலை என்பது இப்படி இருப்பு-இன்மை என்கிற இருமைக்குள் சிக்கியதால், மனமும் முதலாளித்துவத்தின் இருப்பு-இன்மை என்பதற்குள் சிக்கிக்கொண்டுவிட்டது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;பின்குறிப்பு – இந்திய இடிபலாக்கம் என்பது மேற்கத்திய பிராய்டிய இடிபலாக்கத்திற்கு தலைகீழாக உள்ளதாக இந்தியவியல் ஆய்வாளர்கள் குறிப்பாக ஏ.கே. ராமனுஜன் போன்றவர்கள் ஆராய்ந்துள்ளனர். அதை ஒட்டிய இந்தியமனம் என்பதன் இச்சிக்கல்பற்றி பிறிதொரு கட்டுரையாக எழுதப்படவேண்டும் என்பதால் அது குறித்து இங்கு எழுதப்படவில்லை. &lt;/p&gt;  &lt;p&gt;(முற்றும்)&lt;/p&gt;  &lt;p&gt;- ஜமாலன் 16-04-2011 &lt;a href="mailto:jamalan.tamil@gmail.com"&gt;jamalan.tamil@gmail.com&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p&gt;&lt;font color="#ff0000" size="1"&gt;மந்திரச்சிமிழ் - (ஏப்ரல் 2011 மார்ச் 2012) – 7 இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை பகுதியாக பிரித்து வெளியிடப்படுகிறது.&amp;#160; புத்தகச்சந்தையில் தற்போது அன்னம் புத்தக நிலையத்தில் இவ்விதழ் கிடைக்கும். உள்ளடக்கத்தை கீழ்கணட் இணைப்பை கிளிக் செய்து பார்த்துகொள்ளலாம்.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;div align="justify"&gt;&lt;font size="1"&gt;     &lt;hr align="left" size="1" width="33%" /&gt;&lt;/font&gt;&lt;/div&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref1_4716" name="_ftn1_4716"&gt;&lt;font size="1"&gt;[1]&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; இதற்கு இடிபஸ் விடுவிக்கும் ஸபிங்சின் புதிரில் விடை உள்ளது. அதாவது அப்புதிரில் காலையில் நான்கு கால்களும் மதியத்தில் இரண்டு கால்களும் மாலையில் மூன்று கால்களும் உள்ள உயிரி எது? என்பதே ஸ்பிங்ஸின் புதிர். இப்புதிருக்கு இடிபஸ் முன்வைக்கும் பதில் ஆண் (Man) என்பதுதான். அதாவது தந்தைமையின், ஆணாதிக்கத்தின் மேலாண்மை என்பதற்கான குறியீடே இந்த ஆண் என்கிற பதில்.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4997678103589622995-2034951623349403226?l=jamalantamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jamalantamil.blogspot.com/feeds/2034951623349403226/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4997678103589622995&amp;postID=2034951623349403226' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/2034951623349403226'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/2034951623349403226'/><link rel='alternate' type='text/html' href='http://jamalantamil.blogspot.com/2012/01/3.html' title='இடிபல் முக்கோணத்தில் சிக்கிய கார்டீசிய உடல் – பிராய்டின் மூடுண்ட கனவுகள் - 3'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh6.ggpht.com/-itATrNp_dQU/Txc5EJ563iI/AAAAAAAABkI/w5Qm2pRXD1I/s72-c/clip_image002_thumb%25255B3%25255D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-5607262070979789493</id><published>2012-01-15T01:33:00.001+03:00</published><updated>2012-01-15T01:44:04.584+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல் அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலினமாதல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருநங்கைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடலரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Transsexual'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Transgender'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடையாள அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Gender'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Feminism'/><title type='text'>மோலார் அடையாளங்களும், மூலக்கூறுகளின் உருவாகுதலும் - பாலின அடிமைகள் பற்றிய கதையாடல் – 2</title><content type='html'>&lt;h5 align="justify"&gt;&lt;a href="http://jamalantamil.blogspot.com/2012/01/1_12.html"&gt;மோலார் அடையாளங்களும், மூலக்கூறுகளின் உருவாகுதலும் - பாலின அடிமைகள் பற்றிய கதையாடல் – 1&lt;/a&gt;&lt;/h5&gt;  &lt;p align="justify"&gt;&lt;img style="display: inline; margin-left: 0px; margin-right: 0px" align="left" src="http://www.gaychristian101.com/images/GalliPriest.jpg" width="328" height="340" /&gt;ஒருமுறை சென்னையில் ஒரு பஸ்ஸில் பிரயாணித்துக் கொண்டிருந்தபோது, கடைசி சீட்டிற்கு முன்பு உள்ள பெண்கள் இருக்கையில் நானும் மற்றொருவரும் அமர்ந்திருந்தோம். அப்பொழுது இரண்டு திருநங்கைகள் ஏறினார்கள். அவர்கள் எனது சீட்டு அருகில் வந்தவுடன், பெண்கள் இருக்கை என்பதால் நான் எழுந்துவிட்டேன். என் அருகில் அமர்ந்தவர் எழவில்லை. அவர்கள் இது பெண்கள் சீட்டு எழுந்து இடம்விடும்படி கூறினார்கள். அவர் எடக்காக அது பெண்களுக்குத்தான் உங்களுக்கில்லை என்றார். அவர்கள் நடத்துனரிடம் சொன்னார்கள். நடத்துனர் அதை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் விடுவதாக இல்லை. அத்தனைபேர் மத்தியிலும், அந்த சீட்டை பெறுவது தங்கள் உரிமை என்பதாக அவர்கள் அவருடன் சண்டையிட்டார்கள். அவன் நீங்கள் பெண்கள் இல்லை என்பதாக வாதாடிக்கொண்டிருந்தான். அங்க உள்ளவர்கள் யாரும் இவர்களுக்கு ஆதரவு தரவில்லை. நான் உட்பட. சென்னை இன்றுவரை கிராமங்களைச் சேர்ந்த எனக்கு ஒரு பேரச்சம் தரும் நகரம் மற்றும் என்னைப் போன்றவர்களின் நாகரீக நடுத்தரவர்க்க மொன்னைத்தனம் என்பதும் காரணம். பேச்சு முற்றியதுடன் தாங்கமுடியாத கோபம் வந்த அவர்களில் ஒருவர் நாங்கள் பெண்கள் இல்லாமல் யார்? பார்த்துக்கோ எங்களிடம் என்ன இருக்கிறது என்று தங்கள் பாவாடையை தூக்கி தங்கள் குறி உள்ள இடத்தை அத்துனை கூட்டத்தின் மத்தியில் காட்டி நல்லா பார்ரா நான் ஆம்பளயா என்றார்கள். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;கூட்டம் உறைந்துபோக, அவமானமாக கருதிய அவன் அனைத்து சென்னை வசவுகளிலும் அவர்களை திட்டிக்கொண்டே எழுந்து, அடுத்து வந்த நிறுத்தத்தில் இறங்கியவன் வண்டி புறப்படும் தருணத்தில் சன்னல் வழியாக அவர்களில் ஒருவர் முகத்தில் ஓங்கி ஒரு குத்து குத்தி தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டான். அவர் வலி பொறுக்காமல் அவனை திட்டிக்கொண்டே வந்தார். இதை யாரும் ஒரு ஆணிடமோ, பெண்ணிடமோ பொது இடத்தில் செய்யமுடியாது. அங்கு உள்ளவர்கள் அதற்காக எதாவது செய்வார்கள். இவர்கள் அடிவாங்கியும் யாரும் கண்டுகொள்வதாக இல்லை. அந்த வன்முறை எனக்கு நீண்டநாட்கள் மனதில் உறைந்துபோய் இருந்தது. அது ஒரு அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆணாக அந்த நிர்வாணத்தை நான் பார்த்த்தும், ஆணாக மற்றொருவன் அதை வன்முறையாக எதிர்கொண்ட விதமும். அவர்களது நிர்வாணம் ஒரு ஆணை அம்மணமாக்கிவிட்டதை பொறுக்காத தன்முனைப்பு, இயலாமை, ஆண் என்கிற அகங்காரம், எல்லாம் அவனது அந்த ஒரு குத்தின் வன்முறையில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டது. ஆணிய லிங்க அதிகாரம் தனது வன்முறையை பிற உடல் மீது செலுத்துவதற்கான அனைத்து உரிமைகளையும் பெற்றதாக உள்ளது. பொது வெளிகளை தனக்கு உரியதாக அது அதிகாரம் செய்கிறது. தனிவெளிகளை பெண்களின் இருப்பியல் புலமாக ஆக்கி உள்ளது. இந்த பொது/தனி வெளி பிரிவனை நவீன சமூக உருவாக்கத்தில் கட்டமைக்கப்பட்ட ஆண்-பெண் எதிர்பாலின விதியமைப்பின் விளைவாக உருவானது. ஆணுடல் பொதுவெளியிலும், பெண்ணுடல் தனிவெளியிலும் செயல்படுவதற்கான விதிமுறைகளை வகுத்து வைத்து உள்ளது. இந்த இரண்டு வெளிகளும் மறுக்கப்பட்டவர்களான மாறியப்பாலினத்தினர், தங்களுக்கென்று தனிப்பட்ட வெளிகள் அற்றவர்களாக உள்ளனர். அல்லது புதிதான வெளிகளை உருவாக்கிக்கொண்டு உள்ளனர். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;img style="display: inline; margin-left: 0px; margin-right: 0px" align="left" src="http://3.bp.blogspot.com/_HiMP6woo0_U/SSUoPDkH-NI/AAAAAAAAAb8/u6Ev9cjC-NY/s320/05.jpg" width="287" height="278" /&gt;ஒழுங்கமைக்கப்பட்ட இருபாலியலுக்கு அப்பால் உள்ளதை, இருபாலியலில்கூட மற்றொரு பாலினமான பெண்களை தனது அதிகார எல்லைக்குள் வைத்துக்கொள்வதன்மூலம், ஆணுடல் தன்னை அடையாளப்படுத்தி இன்புற்றுக்கொள்கிறது. ஆண் தன் உடலை மையமாக வைத்துக்கொள்வதற்காக பெண் மற்றும் இருபால் உடல்களை விளிம்பில் வைக்கிறது. ஆணுடலை உருவமைக்க இந்தவகை உடல்கள் பற்றிய கதையாடல்கள பல்கிப் பெருக்கி, சமூகத்தில் புறக்கணிப்பின் விளிம்பில் வைக்கப்படுகின்றன. இவற்றினை ஒரு திட்டமிட்ட ஆணிய சதியாக கருதிக்கொள்ள வேண்டியதில்லை. இருபாலின-எதிர்வை அடிப்படையாக்க் கொண்ட சமூகம் கட்டப்பட்டு அதன் இயக்கத்தின் போக்கில் ஏற்பட்ட அதிகாரச் செறிவிற்கான நுட்பமாக உருவானவையே இவை. இரண்டு பாலினங்களே இயற்கையானது மற்றது இயல்பற்றது, குறைபாடுடையது என்ற அதிகாரம் உருவாக இந்த சமூக செயலியக்கம் நிகழ்கிறது. மற்றொருவகையில் இந்த மற்ற பாலினங்களின் இருப்பில்தான், தனது இருப்பு உள்ளது என்பதால், அந்த இருப்புக்களை ஒவ்வொரு கணத்திலும், நிகழ்விலும் அதற்கான அடையாளச் செயல்களை வெளிப்படுத்தியப்படி உள்ளது ஆண் என்ற பெரிருப்பு. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இவ்வாறான, ஆணியம் என்கிற லிங்கத்தின் அதிகாரம் பரவிய ஒரு சமூகவெளியில்தான் மூன்றாம் பாலாக அறியப்படும் இவர்கள் தங்கள் வாழ்தலை நிகழ்த்த வேண்டி உள்ளது. உடை தோலாக மாறிவிட்ட ஒரு சமூகத்தில், தோலையே உடலாக கொண்டவர்கள்தான் இத்தகையவர்கள். ஒருவகையில் சமூகத்தின் மையஅச்சாக உள்ள கிரேட்-பேலஸ் எனப்படும் மஹா-லிங்கத்தை பகடி செய்து அதை வெட்டி எறிந்தவிட்டு, தனது நிர்வாணத்தின் மூலம் சமூகத்தின் அம்மணத்தை அம்பலப்படுத்துபவர்கள். குறிகளால் இணைக்கபட்ட பாலின-சமூகத்தில், குறிகளை வெட்டி எறிவதன்மூலம், சமூகத்தில் தங்களது இணைப்பு சங்கிலியை அறுத்துவிடுகிறார்கள். சமூகத்தின் பாலுமை மற்றும் பாலின பேரெந்திரத்தை பகடி செய்து அதன் இயக்கத்தை முட்டி நிறுத்துபவர்களாக உள்ளனர். இருபாலின இயக்கவிதிகளுக்கு உட்படாத இவ்வுடல்களைக் கண்டு திகப்படையும், பாலின எந்திரம், தான் இயங்க, இத்தகைய உடலிருப்பை புறக்கணித்து ஒதுக்கிவைத்து சமூகத்தின் உடலெந்திரங்களை ஒழுங்கமைத்தபடி உள்ளது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இந்தியாவில் இவர்கள் ஹிஜ்ரா&lt;a href="#_ftn1_5317" name="_ftnref1_5317"&gt;[1]&lt;/a&gt;க்கள் என்கிற அரபு-உருது சொல்லால் அழைக்கப்பட்டாலும், நபும்சகர், அரவாணிகள் என்கிற சமஸ்கிருதப் பெயரைக்கொண்டிருந்தாலும், திருநங்கை-திருநம்பி என்கிற அழகான தமிழ்ச்சொல்லால் அழைக்கப்பட்டாலும், அல்லது அலி என்கிற பழக்கச்சொல்லால் அழைக்கப்பட்டாலும், பேடி, பொட்டை என்கிற வழக்குச்சொல்லால் அழைக்கப்பட்டாலும் இவர்களது தோற்றம் பற்றிய தொன்மங்கள் இன்றைய ஆண்-பெண் என்கிற அங்கீகரிக்கப்பட்ட இருபால்-உடல் என்கிற கட்டமைப்பின் மையமாக உள்ளதை விளக்குவதாக உள்ளது. அதாவது, இருபாலாக இருந்த பூர்வீக உடலிலிருந்தே இன்றைய ஒருபாலாக உள்ள ஆண் பெண் உடல்கள் தோற்றம் கொண்டதாக மேற்கத்திய தத்துவத்தின் ஊற்றுக்கண்ணாக உள்ள கிரேக்க தோற்றவியல் தொன்மம் ஒன்று விவரிக்கிறது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;img style="display: block; float: none; margin-left: auto; margin-right: auto" src="http://idata.over-blog.com/4/28/29/15/L-androgyne_2443492-L.gif" /&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;கிரேக்க த்த்துவஞானியான பிளேட்டோவின் சிம்போஸியத்தில் உரையாடும் அரிஸ்டோபென் காதலின் வரலாற்றை அறியும் முன் உடல்கள் ஆதிகாலத்தில் தோன்றிய வரலாற்றை விவரிக்கிறார். அதில் உடல்கள் இன்றுபொல் ஒன்றாக இல்லை எல்லாம் இரட்டையாக இருந்தது. உடல்கள் உருளைவடிவமாக இரண்டு தலைகள் நான்கு கைகள் நான்கு கால்கள் என இருந்தன. அன்று மூன்று பாலுமை இருந்தது. இரட்டை ஆண்கள், இரட்டை பெண்கள் மற்றும் ஆண்ட்ரோஜைனஸ் எனப்படும் ஆண்-பெண் கலந்த உடல்களாக இருந்தது. ஆண்கள் சூரியனின் சந்ததி, பெண்கள் பூமியின் சந்ததி, மூன்றாம் பாலினர் சந்திரனின் சந்ததியைச் சேர்ந்தவர்கள். எந்த திசையில் வேண்டுமானாலும் நடக்கும் ஆற்றல் பெற்ற இவ்வுடல்கள், கடவுளையே சண்டைக்கு அழைக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்தவையாக இருந்தன. இவ்வுடல்களது பேராற்றலைக்கண்ட கடவுள் இவ்வுடல்களை அழித்துவிடலாம் என தனது தேவதைகள் அடங்கிய குழுவில் தீர்மானிக்கிறார் அப்போது சீயஸ் தேவதை, இவ்வுடல்களை அழிக்காமல் ஆற்றலைக் குறைக்க ஒரு திட்டம் இருப்பதாக கூறுகிறது. அவ்வுடல்களை இரண்டாக பிரித்துவிடலாம் என்கிறது. அதன்படி, அவர்களை இரண்டாக பிரித்து, அப்போலா தெய்வத்திடம் வெட்டப்பட்ட திறந்த பகுதியை தோளால் மூடி முடிச்சிட சொல்கிறது. அவர்களது தலையை திருப்பி வைத்துவிடும்படி சொல்கிறது. அதாவது அந்த முடிச்சிட்ட பகுதிதான் தொப்புளாகவும், பின்புறம் இருந்த தலை முன்புறமாக திருப்பவும் படுகிறது. இப்படி செய்வதன் வழியாக திரும்ப அவர்கள் இணையமுடியாத நிலையை சீயஸ் உருவாக்கிவிடுகிறது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;அதாவது ஒரு தோளிற்குள் இருந்த உடல்களை இரண்டாக பிளந்து முடிச்சிட்டு, தலையை திருப்பி வைப்பதன்மூலம், அதன் சம்சீர் குலைந்து இணையமுடியாத நிலை உருவாகிவிடுகிறது. தொடர்ந்து தான் இழந்த பாதியோடு இணைய மறுபாதியை தேடி அலைகிறது. ஒரு உடல் இறந்தவுடன் மற்றொரு உடலை தேடி ஒட்டிக்கொள்வது நடக்கிறது. இந்நிலையில் அவர்கள்மீது பரிவுகொண்ட சீயஸ், அவர்கள்து பழைய உடலில் முன்புறமும், புதிய உடலில் பின்புறமும் உள்ள ஆண், பெண் குறிகளை முன்புறம் மாற்றி திருப்பிவிடுகிறது. அதன் பின் அவ்வுடல்கள் ஆண் பெண் என்கிற எதிர்பாலினத்துடன் இணைவது நடக்கிறது. ஆணிலிருந்து பிரிந்த ஆண்உடல், ஆண்உடலான தனது பாதியை தேடுவதால் அது ஹோமோசெக்ஸ் எனப்படும் ஆண்-தன்பால் புணர்ச்சியின் விருப்புடையதாகவும், பெண் உடலிலிருந்து பிரிந்த பெண் உடல், தனது பாதியாக பெண் உடலை தேடுவதால் லெஸ்பியன் என்கிற பெண்-தன்பால் புணர்ச்சியில் விருப்புடையதாகவும், ஆண்டிஜைனஸ் என்கிற ஆண்-பெண் இருபாலின உடல்களில் இருந்து பிரிந்த உடல்கள் ஆண்-பெண் உடலை தேடும் ஹெட்ரோசெக்ஸ்வல் எனப்படும் எதிர்ப்பால்-புணர்ச்சியில் விருப்புடையதாகவும் உருவானது. உடல் மீதான காதல் உருவான கிரேக்கத் தொன்மைக்கதை இதுதான். இறுதியாக இக்கதையை சொல்லிய அரிஸ்டோபென் ஒரு எச்சரிக்கையை விடுகிறார். கடவுளை புறக்கணிப்பவர்கள் இப்படி கடவுளால் பிரிக்கப்பட்டு தண்டனைக்கு ஆளாவார்கள் என்று. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இத்தொன்மத்தை வாசித்தால், இதில் இன்றைய பாலியலில் உள்ள மூன்று முக்கிய பாலியல் நடவடிக்கையும், ஒரு உடல் மற்றொரு உடலை தேடுவது தனது மூலாதார உடலை தேடுவதே என்கிற இயல்புணர்ச்சியின் வடிவமைப்பு பற்றிய தொன்மத்தை அடையலாம். இதில் நாம் கவனம் கொள்ள வெண்டியது என்னவென்றால், இன்றைய ஆண்-பெண் எதிர்ப்பால் வேட்கை (ஹெட்ரோசெக்சுவல்) உள்ள இயல்பானவர்களாக சமூகம் அறுதியிட்டு உள்ள உடல்கள், ஆதியில் கலப்பு பாலினமாக அதாவது இருபால் உறுப்புகளைக்கொண்ட இரட்டை உடல்களாக கதையாடப்பட்டு உள்ளது என்பதே. மூன்றாம் பால் என்பது தொன்மரீதியாக உடல்களின் உற்பத்தியான பாலற்றதாக இருந்து உள்ளது. இன்றைய உலகெங்கிலும் பாலியலாக அங்கீகரிக்கப்ட்ட எதிர்பாலியல் மோகம் என்பது இருபாலியல் உடல்களிலிருந்தே உருவாகி வந்துள்ளது என்பதே இத்தொன்மத்தின் அடிப்படை. இந்த அடிப்படைக்குள், பாலினம் என்பதற்கான கட்டுமானக்கதையாடல் உள்ளதை அறியலாம். அதாவது பாலினம் என்பதற்கான தோற்ற மூலமான ஒரு வரலாற்றை கட்டுகிறது. பாலினம் என்பது இயல்பானது என்பதாக அது கடவுளின் தோற்றத்தில் உருவானது என்பதும், உடலின் தோற்றத்தில் தங்கி உள்ளது என்பதாகவும் சொல்கிறது. பாலினம் என்பது ஒரு கலாச்சார கட்டமானம் என்பதை மறைக்க, அது மூலமுதலானது, வரலாறு கொண்டது, ஒரு உடலின் பிறப்போடு உருவானது என்பதாக விளக்க முனைகிறது. அல்லது பாலுமை வேறுபாட்டை பாலினமாக்கிய தொன்மக்கதையாடல் எனலாம். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;img style="display: inline; margin-left: 0px; margin-right: 0px" align="left" src="https://encrypted-tbn1.google.com/images?q=tbn:ANd9GcTAPFXa2Stq1MUjrz1LixV7AED52akHDVM4aqPEXZFA0CXMHoq9" width="214" height="459" /&gt;பிராஜபதி என்பது பாலற்ற ஒன்றாகவும் அதிலிருந்து ஆண் பெண் உடல்கள் பிரிந்தன என்பதும் இந்திய வேதமதத்தின் தொன்மங்களில் ஒன்றாகும். இது கிரேக்க ஆண்ட்ரோஜைன் தொன்மத்தை ஒத்த ஒன்று. அதேபோல் இருபாலின உடலைக்கொண்ட கிரேக்க ஹெர்மோபுரோடைட் என்கிற தொன்மத்திற்கு இணையான ஒரு தொன்மமாக அர்த்தநாரீஸ்வரத் தொன்மத்தை கூறலாம். படைப்புக்கடவுளான பிரம்மன் தொடர்ந்து கடவுள் மற்றும் ஆண்களை படைக்க, அவர்களால் மறுஉற்பத்தி செய்யமுடியவில்லை. பிரம்மன் பெண்கடவுள் தன்மையை பிரிக்கும்படி சிவனிடம் வேண்ட, சிவன் பிரம்மனின் முன்பு பெண்ணியத்தன்மையை வெளிப்படுத்துகிறார். அதிலிருந்து பிரம்மன் பெண்ணிய ஆற்றலைப்பெற்று மனித உடல்கள் உற்பத்தி செய்கிறார் ஆண் பெண்கள் என. அதன்பின் ஆண் பெண் உடல்கள் பிற உடல்களை உற்பத்தி செய்யத் துவங்குகின்றன. சிவனிற்குள் உள்ள இந்த பெண்மைய ஆற்றலே, அர்த்தநாரீஸ்வரத்தின்&lt;a href="#_ftn2_5317" name="_ftnref2_5317"&gt;[2]&lt;/a&gt; அடிப்படை ஆகும். இப்புராணக்கதையாடலில், ஆண் பெண் என்கிற இரண்டு பாலுமைகளும், சிவன் என்ற ஒற்றை உடலுக்குள்தான் உள்ளன என்பதும், உற்பத்தியின் பொருட்டு இரண்டு பாலுமையாக வடிவமைவதையும் சொல்கிறது. இதில் ஆண்மை என்பதும் பெண்மை என்பதும் பாலினம் சார்ந்தவை. இவை தனித்த உடலாக மாறும்போது ஆண் பெண் என்கிற பாலுமைகாளக மாறுகின்றன. அதாவது பாலுமையே பாலினத்தால் கட்டப்படுவதாக, பாலினமாதல் விதிக்கு எதிரானதாக இப்புராணக்கதையாடல் உள்ளது. பாலுமையால் பாலினம் குறிக்கப்படுவதில்லை, பாலினத்தால்தான் பாலுமை குறிப்பிடப்படுகிறது எனபதே. ஆதிகாலங்களில் பாலினத்தை உருவாக்க அல்லது பாலுமையை புரிந்துகொள்ள இத்தகைய தொன்மங்கள் கட்டப்பட்டுள்ளன. இத்தொன்மங்கள் வழிதான் பாலினம் என்பது உடலின் ஆண்-பெண் குறிசார்ந்த பாலுமையுடன் இணைத்து அடையாளப்படுத்தப்பட்டது. ஒன்றின் தோற்ற வரலாற்றை கதையாடுவதன்மூலம், அது இயற்கையானதாக, இயல்பானதாக சாராம்சப்படுத்தப்படுகிறது. இச்சாராம்சங்கள், தன்னிலையாக்கத்தின் வழியாக அடையாளமாகிவிடுகிறது. இந்த அடையாளங்கள் சமூகத்தின் அங்கமாக உடல்களை மாற்றிவிடுகிறது. இவ்வாறாக நிலையான அடையாளங்கள் வழியாக உடல் சமூகவயப்படுத்தப்படுகிறது. சமூகத்தின் மிகப்பெரு அச்சுறத்தல் உடல்கள் அடையாளமற்று இருப்பதே. காரணம் அடையாளமற்ற உடல் சமூகத்தின் அங்கமற்ற உடல்களாக உள்ளது. &lt;/p&gt;  &lt;p&gt;(தொடரும்)&lt;/p&gt;  &lt;p&gt;-ஜமாலன் &lt;a href="mailto:jamalan.tamil@gmail.com"&gt;jamalan.tamil@gmail.com&lt;/a&gt; (23-10-2011 - 25-11-2011)&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;font color="#ff0000" size="1"&gt;நண்பர் நேசமித்திரனின் வலசை என்கிற இதழுக்காக திருநங்கைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரை.&amp;#160; இதழ் அநேகமாக புத்தகக்கண்காட்சியில் வெளிவந்திருக்கலாம்.&amp;#160; மிக நீண்ட கட்டுரை என்பதால் பகுதி பகுதியாக இங்கு வெளியிடப்படுகிறது.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p&gt;   &lt;hr align="left" size="1" width="33%" /&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref1_5317" name="_ftn1_5317"&gt;[1]&lt;/a&gt; ஹிஜர் என்கிற அரபிச்சொல்லின் வேரடியாக உருதில் உருவாகி உள்ள சொல் இது. அரபி மூலத்தில் இச்சொல்லிற்கு பொருள் வெளியேற்றப்படுதல், இனக்குழுவிலிருந்து வெளியேறுதல் இப்படி பலபொருட்கள் உள்ளது. மூன்றாம் பாலினமாக இவர்கள் பாலியல்-நில-எல்லைகள (sexual territory) விட்டு வெளியேறுதலை குறிப்பதாகவும், தாங்களது வாழ்நிலை குழு அல்லது அமைப்பிலிருந்து வெளியேறுவதையும் குறிப்பதாக கொள்ளலாம். &lt;a href="http://en.wikipedia.org/wiki/Hijra_(South_Asia)#cite_note-4"&gt;http://en.wikipedia.org/wiki/Hijra_(South_Asia)#cite_note-4&lt;/a&gt; முகமது நபி அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு வெளியேறியதை குறிப்பதற்கான சொல் ஹிஜ்ரத் என்பதும், இஸ்லாமிய ஆண்டு துவக்கமாக இது கொள்ளப்படுவதும் இச்சொல் மூலத்தைக்கொண்டதே. வெளியேறுதல் என்பதை குறிப்பதே. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref2_5317" name="_ftn2_5317"&gt;[2]&lt;/a&gt; பக். 43 - Encyclopedia of Hinduism - Constance A. Jones and James D. Ryan J. Gordon Melton, Series Editor 2007 - Facts On File, Inc. An imprint of Infobase Publishing&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4997678103589622995-5607262070979789493?l=jamalantamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jamalantamil.blogspot.com/feeds/5607262070979789493/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4997678103589622995&amp;postID=5607262070979789493' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/5607262070979789493'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/5607262070979789493'/><link rel='alternate' type='text/html' href='http://jamalantamil.blogspot.com/2012/01/2_15.html' title='மோலார் அடையாளங்களும், மூலக்கூறுகளின் உருவாகுதலும் - பாலின அடிமைகள் பற்றிய கதையாடல் – 2'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_HiMP6woo0_U/SSUoPDkH-NI/AAAAAAAAAb8/u6Ev9cjC-NY/s72-c/05.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-7460296842612559036</id><published>2012-01-14T01:08:00.001+03:00</published><updated>2012-01-14T01:08:54.034+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடலரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Sigmund Freud'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='cartesian dualism'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிராய்ட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிராய்டியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இருமைவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கார்டீசியன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மந்திரச்சிமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><title type='text'>இடிபல் முக்கோணத்தில் சிக்கிய கார்டீசிய உடல் – பிராய்டின் மூடுண்ட கனவுகள் - 2</title><content type='html'>&lt;h5 align="justify"&gt;&lt;a href="http://jamalantamil.blogspot.com/2012/01/1-1.html"&gt;இடிபல் முக்கோணத்தில் சிக்கிய கார்டீசிய உடல் – பிராய்டின் மூடுண்ட கனவுகள் - 1&lt;/a&gt;&lt;/h5&gt;  &lt;p align="justify"&gt;&lt;b&gt;&lt;u&gt;மனதின் வரைபடம் &lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://upload.wikimedia.org/wikipedia/commons/b/be/Structural-Iceberg.svg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="clip_image002" border="0" hspace="12" alt="clip_image002" align="left" src="http://lh6.ggpht.com/-DCMUT_6n-zM/TxCrbJPFHXI/AAAAAAAABjw/j0Al2PjIQoE/clip_image002%25255B4%25255D.gif?imgmax=800" width="198" height="240" /&gt;&lt;/a&gt;நவீன காலத்திற்கான மனம் குறித்து முழுமையான ஆய்வை செய்தவர் சிக்மண்ட் பிராய்ட். மனம் என்பதற்கான கார்டீசிய வரையறை அடிப்படையில் பிரக்ஞையை தனது ஆய்வுப்புள்ளியாகக் கொண்டு மனம் குறித்த வரைபடத்தை வரைகிறார். மனிதன் பிற உயிரினங்களின் பரிணாமத் தொடர்ச்சி என்கிற டார்வினியமும், மனம் சிந்திக்கும் பொருள் என்கிற கார்டீசியமும் கலந்த கலவையில்தான் பிராய்டியம் பிறக்கிறது. சிந்தனை சுயபிரக்ஞையின்பாற்பட்டது என்பதால் ‘நான்‘தான் மனதின் அடிப்படை ஆதரமாக உள்ளது. நான் என்பதே மனித உடலின் தனிச்சிறப்பான மையம். இந்த மையம் எப்படி நானாக வடிவமைகிறது என்பதை கண்டடைந்த ஒரு கருத்தாக்கமே பிராய்டியம். மனிதஉடல் பரிணாமம் அடைந்தாலும் மனம் மிருகஉணர்ச்சிகளைக் கொண்டது என்கிற உடல்/மனம் என்கிற இருமைவாத பிளவை ஏற்றுக்கொண்டது. மிருகஉணர்ச்சிகள் என்று சொல்லப்பட்ட இயல்புணர்ச்சிகளே மனித செயலுக்கான அடிப்படை விருப்பாற்றலை தருவதாக உள்ளது. மிருக உணர்ச்சி என்பது வழிமுறைப்படுத்தப்படாத பாலுந்த ஆற்றல். அவ்வுணர்ச்சிகள் சாவு மற்றும் வாழ்வு என்கிற இயல்புணர்ச்சிப் பாற்பட்டவை என்கிறது பிராய்டியம். டார்வினின் இருத்தலுக்கான போராட்டமே பிராய்டிய மொழியியல் சாவு-வாழ்வு என்ற இயல்புணர்ச்சியாக வடிவமைகிறது. இது உடலின் ஒவ்வொரு செல்லிலும் ஒரு உயிர்த்தலின் செய்தியாக உள்ளது. உயிர்உறை ஆற்றலான இச்செய்தியை பிராய்ட் உயிர்-வாழ் உணர்வு (life instinct), உயிர்-சிதை உணர்வு (death instinct) என்கிற இருமையாக பகுக்கிறார். இந்த இருமையில் உயிர்-வாழ் இயல்புணர்விற்கான அடிப்படை பாலியல் உணர்ச்சிகள்தான். இதுவே மனதின் அடிப்படை ஆதாரம் என்கிறார். இந்த ஆதாரத்தைக்கொண்டு பிராய்ட் மனதை மூன்றடுக்குகளாகப் பிரிக்கிறார். இவ்வடுக்கில் ஆழ்தளத்தில் ஒடுக்கப்பட்ட பாலியல் இச்சைகளின் ஆற்றலை இத் என்றார். இந்த இத் என்பது நினைவிலி எனப்படும் மனதின் ஆழ்தள அடுக்காகும். இதன்மீது ஈகோ எனப்படும் நினைவுமனம் நீரில் கிடக்கும் பனிக்கட்டிப் போல அமிழ்ந்தும் ஒரு பகுதி வெளியேவும் மிதக்கிறது. நீர்-பனிக்கட்டி உருவகத்தில் உள்ள மற்றொரு எண்ணம், நீர் குளிர்வில் திடமடைந்துதான் பனிக்கட்டியாகிறது என்பதால் மனதின் இந்த அடுக்குகள் சமூக-கலாச்சார குளிர்விப்பால் (பதங்கமாதலால்) திடமடைந்தவை என்பதே. ஒரு குறிப்பிட்ட வெப்பத்தில் மனம் என்பது சலனமற்ற நீராக மாறிவிடும் என்பதே. இது ஒருவகை மனம் பற்றிய ஆன்மீகம்சார்ந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது.&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;ஈகோ மிதப்பதால் கரையவும், அமிழவும் ஆன ஒரு உருவகத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் இணையாக சூப்பர்-ஈகோ என்கிற பகுதி அமைகிறது. அதாவது இத் என்பது உயிர்த்தல் என்கிற இயல்புணர்ச்சி சார்ந்தது. அடிப்படை மன ஆற்றல் செறிந்த உயிர் வாழ்வின் பகுதி. ஈகோ என்பது சமூகத்தின் கலாச்சார வாழ்விலிருந்து பெற்ற ஆற்றலைக்கொண்டு இத்தை கட்டுப்படுத்தி வழிமுறைப்படுத்துவது. கலாச்சார மனித உருவாக்கத்தை செய்யும் தன்முனைப்பான பகுதி. நான் என்கிற சமூகத்தன்னிலையை உருவமைக்கும் பகுதி. சூப்பர் ஈகோ என்பது ஆளுமையை சமைக்கும் சமூக-அரசியல்-அதிகார வாழ்வின் பகுதி. சமூகத்தில் என்னவாக வாழவேண்டும் என்பதை உருவாக்கும் பகுதி. நல்லது/கெட்டது, நன்மை/தீமை போன்ற சமூக அறம் சார்ந்த மதீப்பிடுகளைக்கொண்ட பகுதி. இம்மூன்றில் மனதின் அடுக்குகளாக உள்ள நினைவிலியில் முழுக்க அமிழ்ந்துகிடப்பது இத். ஈகோ மற்றும் சூப்பர்ஈகோ என்பது நினவிலி மற்றும் நினைவுமுன் மற்றும் நினைவு அடுக்கில் உள்ளவை.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இத் ஒழுங்கமைக்கப்படாத இயல்புணர்ச்சிகளை இயக்குவது. ஈகோ யதார்த்த்திற்கு ஏற்ப ஒழுங்கமைக்கும் பணியை செய்கிறது. சூப்பர்ஈகோ ஆராய்க்கூடிய அறம்சார்ந்த பணியை செய்கிறது. இத்திற்கும் சூப்பர்ஈகோவிற்கும் இடையிலான முரண்பாடுகளை சமப்படுத்தி இயக்குவது ஈகோவின் பணி. மனசாட்சி என்று சொல்லப்படுவது சூப்பர்ஈகோவினால் இயக்கப்படுவதே. அதான் ஆசிரியன், மனதின் அதிகாரி. அதுதான் தந்தை. ஒவ்வொரு மனதிற்குள்ளும் வரையப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள தந்தை. தாய் என்கிற புராதன தன்மை கொண்ட இத் என்கிற ஒழுங்கற்ற ஆற்றலை வழிமுறைப்படுத்தி தனக்குக்கீழ் அடக்கி வைக்கும் தந்தை. இந்த தாய் தந்தையிடம் சிக்கிய மகன் இருவருக்கும் இடையில் நின்று மத்தியஸ்தம் செய்யும் பணியை செய்வது ஈகோ. இத்திற்கும் சூப்பர் ஈகோவிற்கும் இடையிலான போராட்டத்தை ஒழுங்கமைத்து வெளிப்படுவதே ஈகோ. பிராய்டின் இந்த வரைபட மாதிரியில் அவர் கண்டடைந்ததுதான் இடிபல் சிக்கல் எனப்படும் இடிபஸ் காம்பளக்ஸ்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;b&gt;&lt;u&gt;இடிபலாக்கமும் மனமும் &lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இத்-தின் அடிப்படையாக பிராய்ட் முன்வைத்தது இடிபல் சிக்கல் என வர்ணிக்கப்பட்ட தாய்மீதான் மோகம். ஒரு குழந்தை பிறந்தவுடன் தனது தாயை மோகிக்கிறது. இதனை பிராய்ட் வாய்வழி கட்டம் (ஓரல் பேஸ்) என்கிறார். உண்ணுதல் என்கிற உடலிற்கான ஆற்றலை பெரும் வாய் மற்றும் அதன் சுவைகள் உணரப்படுதல். வளரும் குழந்தை தனது உற்பத்தியாக வெளிப்படுத்தும் மலத்தினால் அடையும் இன்பம் என்பதை குதவழி கட்டம் (ஏனல் பேஸ்) என்கிறார். அதாவது கழிவு வெளியேறும் நிலையில் பெறும் அடக்குதலால் பெறும் இன்பம். அதன்பின் குழுந்தை லிங்ககட்டம் (பாலிக் பேஸ்) எனப்படும் பாலியல் இன்பக்கட்டத்தை அடைகிறது. அதாவது பாலியல்குறிகளின் வழி பெறும் இன்பம். இக்கட்டத்தில்தான் குழந்தையின் ஈகோ உருவாக்கம் நிகழ்கிறது. இக்கட்டத்தில் குழந்தை தாய்மீதான தனது மோகத்தை, தந்தையால் இழக்க வேண்டியதாக உணர்கிறது. இதனை காயடிப்பு சிக்கல் என்பார் பிராய்ட். வளரவளர தாயின்மீதான மோகம் என்பது தடைசெய்யப்பட்டதாக உள்ளதால், அதனை தனது ஆழ்மனதிற்குள் அடக்கிவிடுகிறது. இப்படி அடக்கப்பட்ட பாலுணர்ச்சி அதன் “இத்“-என்கிற ஆழ்மனதின் மையமாகிறது. இது பல பதிலீடுகள் வழியாக வெளிப்பாடு கொள்கிறது. ஒரு மனிதனின் மொத்த வாழ்விலும் இது ஆதிக்கம் செலுத்தி, நினைவற்ற நிலையில் செயல்பட்டு நினைவு செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், சிலவேளைகளில் கட்டுப்பட்டு வேறு வடிவில் வெளியேறவுமான இயக்கமாக உள்ளது. மனிதனின் அனைத்தையும் வடிவமைப்பது இந்த இடிபல் சிக்கல் என்கிற இத்தின் அடக்கப்பட்ட தாய்-மோக நனவிலி செயல்பாடுதான் என்பது பிராய்டியத்தின் மையமான சிந்தனை.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;”டாடி-மம்மி-மீ” அதாவது ”தந்தை-தாய்-நான்” என்பதுதான் உலகப் புகழ்பெற்ற பிராய்டின் இடிபல் முக்கோணம். அதாவது நவீன குடும்ப முக்கோணத்தின் அடிப்படை சட்டகம்&lt;a href="#_ftn1_4044" name="_ftnref1_4044"&gt;[1]&lt;/a&gt;. இந்த சட்டகம் உருவாகும் முறையியலையே இடிபலாக்கம் எனலாம். அதாவது ஒரு உடல் குடும்ப அமைப்பிற்குள் இருத்தப்படுவதே இடிபலாக்கம் எனலாம். இதனை முன்சொன்ன மனதின் ஒரு அடுக்கமைவு வரைபடமாக வாசிக்கலாம். தாய்-நனவிலி (இத்), தந்தை-நனவு மனம் (ஈகோ), நான்-பேரகம் (ஸுப்பர் ஈகோ)&lt;a href="#_ftn2_4044" name="_ftnref2_4044"&gt;[2]&lt;/a&gt;. நானின் விதி மீறல் என்பதற்கான தடை “டாடி-மம்மி”. அல்லது நான் என்பது இந்த முக்கோணத்தில் சிக்கியுள்ள ஒரு உடலின் விருப்பாற்றல் எனலாம். சமூகம் என்கிற பொதுத்தளத்திற்குள் நவீன குடும்பம் என்கிற தனித்தளத்தை மறுசங்கேதப்படுத்திய கதைதான் இந்த இடிபலாக்கம். அதாவது கூட்டுக்குடும்பத்தை எல்லைநீக்கம் செய்துவிட்டு தனிக்குடும்பங்களை (நியுக்ளியர் குடும்பம்) எல்லைப்படுத்திய கதை. அல்லது தடைகள் வழி கட்டப்பட்டு சமூகம் பற்றிய வர்ணனை எனலாம். இவ்வர்ணனை வழியாக தடை உருவாக்கிய அமைப்பிற்குள், தடைமீறலும், தடைபடுத்தலுமான அதிகார விளையாட்டிற்கான களத்தை அமைத்தல். அக்களத்தில் உடல் என்பதற்கான மனதை கட்டமைத்தல். உடலெனும் சிறையில் நனவிலியை வைத்து, சமூக நனவுகள் வழியாக கண்காணித்தல். கார்டீசிய இருமை பிளவை அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்கான மனதை உருவமைத்தல். இதுதான் பிராய்டியம் என்கிற கருத்தாக்கத்தின் வளர்ந்தகதை வாழ்ந்தகதை வாழும்கதை மட்டுமல்ல வாழப்போகும் கதையுமாக உள்ளது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;தெகார்த்தால் மறுமலர்ச்சியடைந்த முப்பரிமாண நவீன உலகில் பிராய்டால் மறுகண்டுபிடிப்பு செய்யபட்டதே இந்த முக்கோணம். இடிபலாக்கம் தனித்த உடலின் விருப்பை நரம்புநோய்க்கொண்ட இந்த முக்கோணத்திற்கு நகர்த்தியதன் மூலம் நிறைவேறா வேட்கையாக மாற்றியது. அல்லது இம்முக்கோணத்திற்குள் வைத்து உடலின் பாலியல்-விருப்பாற்றலை வாசித்தது. பிராய்ட் ஆரம்ப நாட்களில் பல மன-நோயாளிகளை ஆய்வு செய்தபோது அவர்களது குழந்தை பாலுமை தவறாக கையாளப்பட்டதுவே காரணம் என்பதாக தனது கோட்பாட்டை நிறுவினார். இத்தகைய நோயாளிகளின் கதைகளை ஒரு அதிபுனைவாக (பேண்டஸியாக) நம்பத்துவங்கினார். இவை குழந்தை பாலுமையில் அடக்கப்பட்ட அல்லது பதுக்கப்பட்ட சுய-இன்ப நினைவின் வெளிப்பாடாக கருதினார். இதிலிருந்து நார்சிசம் என்கிற தற்காதல் மனநிலைபற்றிய கோட்பாடுகளை உருவாக்கினார். பிறகு பதுக்கப்பட்ட அல்லது அடக்கப்பட்ட தாய்மீதான பாலியல் மோகத்தின் விளைவாக வெளிப்பட்ட இடிபல் சிக்கலின் அதிபுனைவுகள் என்பதாக இதனை வளர்த்தெடுக்கிறார். இப்படி சுய-இன்பத்திலிருந்து இடிபலுக்கு நகர அவர் பின்பற்றியது கிரேக்க புராணக் கதையாடலை. இந்த முக்கோணத்தை புரிந்துகொள்ள அந்த கிரேக்க புராணத்தை வாசித்தறிவது அவசியம். &lt;/p&gt;  &lt;p&gt;(தொடரும்)&lt;/p&gt;  &lt;p&gt;- ஜமாலன் 16-04-2011 &lt;a href="mailto:jamalan.tamil@gmail.com"&gt;jamalan.tamil@gmail.com&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;மந்திரச்சிமிழ் - (ஏப்ரல் 2011 மார்ச் 2012) – 7 இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை பகுதியாக பிரித்து வெளியிடப்படுகிறது.&amp;#160; புத்தகச்சந்தையில் தற்போது அன்னம் புத்தக நிலையத்தில் இவ்விதழ் கிடைக்கும். உள்ளடக்கத்தை கீழ்கணட் இணைப்பை கிளிக் செய்து பார்த்துகொள்ளலாம்.&lt;/p&gt;  &lt;p&gt;&lt;a href="http://issuu.com/jamalan/docs/contents"&gt;http://issuu.com/jamalan/docs/contents&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;div align="justify"&gt;   &lt;hr align="left" size="1" width="33%" /&gt;&lt;/div&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref1_4044" name="_ftn1_4044"&gt;[1]&lt;/a&gt; குடும்பத்தை கட்டுப்படுத்த தடைசெய்ய வரையப்படும் சிவப்பு முக்கோணம் இதிலிருந்துதான் பெறப்பட்டிருக்கும் போலிருக்கிறது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref2_4044" name="_ftn2_4044"&gt;[2]&lt;/a&gt; இத், ஈகோ, சூப்பர்-ஈகோ என்பது பிராய்டு பயன்படுத்திய சொற்கள் அல்ல. அது அவரது ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களால் பயன்படுத்தப்பட்டதே. பிராய்ட் ஜெர்மன் மொழியில் &lt;b&gt;das Es&lt;/b&gt;,&amp;quot; &amp;quot;&lt;b&gt;das Ich&lt;/b&gt;,&amp;quot; and &amp;quot;&lt;b&gt;das Über-Ich&lt;/b&gt;&amp;quot; –என்ற சொற்களை முறையே ”the It,&amp;quot; &amp;quot;the I,&amp;quot; the &amp;quot;Over-I&amp;quot; (or &amp;quot;Upper-I&amp;quot;); பயன்படுத்தினார என்றும் அவரது ஜெர்மானிய மூலச்சொற்கள் சுயவிளக்கம் தரக்கூடியவையாக உள்ளதாகவும் ஜெர்மானிய வாசிப்பாள்கள் சொல்வதாக குறிப்பிடப்படுகிறது..&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4997678103589622995-7460296842612559036?l=jamalantamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jamalantamil.blogspot.com/feeds/7460296842612559036/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4997678103589622995&amp;postID=7460296842612559036' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/7460296842612559036'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/7460296842612559036'/><link rel='alternate' type='text/html' href='http://jamalantamil.blogspot.com/2012/01/2.html' title='இடிபல் முக்கோணத்தில் சிக்கிய கார்டீசிய உடல் – பிராய்டின் மூடுண்ட கனவுகள் - 2'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh6.ggpht.com/-DCMUT_6n-zM/TxCrbJPFHXI/AAAAAAAABjw/j0Al2PjIQoE/s72-c/clip_image002%25255B4%25255D.gif?imgmax=800' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-6148420909560887690</id><published>2012-01-12T00:46:00.000+03:00</published><updated>2012-01-12T00:48:01.987+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல் அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருநங்கைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடலரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலசை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Transsexual'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Transgender'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடையாள அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='becoming-minority'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணியம்'/><title type='text'>மோலார் அடையாளங்களும், மூலக்கூறுகளின் உருவாகுதலும் - பாலின அடிமைகள் பற்றிய கதையாடல் – 1</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;font color="#ff0000" size="1"&gt;நண்பர் நேசமித்திரனின் வலசை என்கிற இதழுக்காக திருநங்கைகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரை.&amp;#160; இதழ் அநேகமாக புத்தகக்கண்காட்சியில் வெளிவந்திருக்கலாம்.&amp;#160; மிக நீண்ட கட்டுரை என்பதால் அதன் ஒரு பகுதி இங்கு வெளியிடப்படுகிறது. &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;blockquote&gt;   &lt;p align="justify"&gt;&lt;i&gt;”&lt;/i&gt;&lt;i&gt;பாலினப் பிரிவு தற்கால பண்பாட்டிற்குள் உள்ள “மனிதமாகிய&lt;/i&gt;&lt;i&gt;” &lt;/i&gt;&lt;i&gt;தனியர்களின் பகுதியாக உள்ளது&lt;/i&gt;&lt;i&gt;;&lt;/i&gt;&lt;i&gt; அதனால், யார் தங்களது பாலின உரிமையை நடைமுறைப்படுத்துவதில் தோல்வியடைகிறார்களோ அவர்கள் தொடர்ந்து தண்டிக்கப்படுகிறார்கள். ஏனெனில், பாலினம் எந்த “சாரத்“-தையும் வெளிப்படுத்துவதும் அல்லது புறநிலைப்படுத்துவதும்மில்லை, எந்த ஒரு ஆதர்ச லட்சியத்திற்காக ஏங்குவதுமில்லை&lt;/i&gt;&lt;i&gt;; &lt;/i&gt;&lt;i&gt;ஏனெனில் பாலினம் என்பது ஒரு உண்மை அல்ல, பல்வேறுவிதமான பாலின நடவடிக்கைகள் பாலினம் என்ற கருத்தை படைக்கின்றன, இந்த நடவடிக்கைகள் இல்லாமல், பாலினம் என்கிற ஒன்றே இல்லை. பாலினம் என்பது ஒரு கட்டமைப்பு அது தொடர்ந்து தனது தோற்ற மூலத்தை மறைத்தபடியே உள்ளது.&lt;/i&gt;&lt;i&gt;” - &lt;/i&gt;&lt;i&gt;ஜீதித் பட்லர்&lt;a href="#_ftn1_4971" name="_ftnref1_4971"&gt;&lt;b&gt;[1]&lt;/b&gt;&lt;/a&gt; &lt;/i&gt;&lt;i&gt;&lt;/i&gt;&lt;/p&gt; &lt;/blockquote&gt;  &lt;p align="justify"&gt;&lt;img style="display: block; float: none; margin-left: auto; margin-right: auto" alt="Portrait+of+a+reputed+hermaphrodite+%2528Hijra%2529+and+companions+-+Eastern+Bengal+1860%2527s" src="http://3.bp.blogspot.com/-Yv-3E2CMUF4/TiFUBPQFxQI/AAAAAAAALKQ/FFP7YG-fAB0/s1600/Portrait+of+a+reputed+hermaphrodite+%2528Hijra%2529+and+companions+-+Eastern+Bengal+1860%2527s.jpg" /&gt;&lt;/p&gt;  &lt;h3&gt;&lt;font size="2"&gt;&lt;a href="http://www.oldindianphotos.in/2011/07/portrait-of-reputed-hermaphrodite-hijra.html"&gt;Portrait of a reputed hermaphrodite (Hijra) and companions - Eastern Bengal 1860's&lt;/a&gt;&lt;/font&gt;. &lt;font size="2"&gt;Hermaphrodites, also known today in South Asia as 'hijra', are often followers of the Hindu goddess Bahuchara Mata.      &lt;br /&gt;Source: British Library (bl.uk)&lt;/font&gt;&lt;/h3&gt;  &lt;p align="justify"&gt;கண்ணம்மா என்கிற சொல்லிலிருந்து இதனை துவங்கலாம். கண்ணம்மா என்பது மஹாகவி பாரதியால் பரவலாக்கப்பட்ட ஒரு சொல். அதற்குமுன்பு அச்சொல் இருந்திருக்கலாம். ஆனால் பாரதிக்குபின்தான் அது பரவலாக அறியப்பட்டுள்ளது. பாரதி தமிழ் மொழிக்குள், தமிழ் உடலுக்குள் பாய்ச்சிய பல ஆற்றல்களில் ஒன்று. அதனுள் காதல், அனுக்கம், நேசம், நட்பு, அன்பு என உணர்வீர்ப்பான சொற்களின் பொருள் அடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், எனக்கோ இச்சொல் இளம் வயதில் என்னை பயமுறுத்திய ஒரு திருநம்பியை குறிக்கும் சொல். &lt;a name="_GoBack"&gt;&lt;/a&gt;அவரை அன்று வழங்கிய “அலி“ “ஒம்பது” போன்ற சொற்களால்கூட சொல்ல அஞ்சுவோம். அவர் பற்றிய பல கதைகள் காற்றில் பரவிக்கொண்டிருக்கும் அதை “மித்“ என்றுதான் சொல்லவேண்டும். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;அவரை எங்கள் ஊரில் குறிப்பாக எங்கள் தெருவில் அனைவருக்கும் தெரியும். எனது கிராமத்தில் பிளஸ்-டு இல்லை என்பதால் எங்கள் ஊரிலிருந்து 3 கி.மி. தூரத்தில் இருந்த ஊரில்தான் பெரும்பாலவனவர்கள் படித்தோம். காலையிலும், மாலையிலும் கருங்கல்சாலையில் நடைதான். பேருந்து கிடையாது. சாலையின் இருமருங்கிலும் தோட்டங்கள், வயல்கள். மாணவர்கள், மாணவிகள் என கும்பல் கும்பலாக போவோம். எங்கள் தெருமுடியும் பள்ளிவாசலுக்கு பின்புற சாலையில் நடந்தால் குளம், அதன்பின் பத்ரகாளி கோவில், அதைதாண்டினால் கிறித்தவர்களின் இடுகாடு, அப்புறும் இருபுறமும் நஞ்சை வயல்கள் முடிந்து வரும் புஞ்சைமேடு. அதில் வேலி அடைக்கப்பட்ட ஒரு பெரிய தோட்டம். அதன் நடுவில் ஒரு குடிசை. அக்குடிசைதான் கண்ணம்மாவின் வீடு. அந்த வீட்டிலிருந்து கால் கி.மீ. நடந்தால் ரயில்வே கேட் அதன்பின் ஒரு சின்ன ஊர் அதை தாண்டினால் எங்கள் பள்ளி. இரவில் எந்த வெளிச்சமும் இல்லாமல் இருண்டு கிடக்கும் அந்த சாலையில், தன்னந்தனியாக அந்த குடிசையில் வாழ்ந்தவர்தான் கண்ணம்மா. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;நல்ல உயரமான, திரளான தொள்களை உடைய, எப்போதும் மடித்து கட்டிய வேட்டி, கைவைத்த பனியன், தலையில் முண்டாசு, அதற்குள் அவரது கூந்தல் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும், ஆணாக தோற்றம் தரும் ஆணுடைக்குள் ஒரு பெண். வயது அப்போதே 50 முதல் 60க்குள் இருக்கலாம். நாங்கள் அந்த வயலை தாண்டியவுடன் தயராகிவிடுவோம். அவரது தோட்டம் முடிந்து ரயில்வே கேட்டை அடையும் வரை திரும்பிகூட பார்க்காமல் ஒரே ஓட்டம். அந்த கண்ணம்மா ஒரு கொலைகாரர், முரடர், பிள்ளை பிடிப்பவர் இப்படியாக பல ”பூச்சாண்டி” பயங்கள்தான் காரணம். நான் ரகசியமாக அவரை அவர் அறியாமல் சிலமுறை பார்த்து உள்ளேன். தடை செய்வதை அறிவது மனதின் ஒரு அடிப்படை இயக்கம்தானே. இத்தனைக்கும் எனது தாத்தாவிற்கு அவரை நன்றாகத் தெரியும். ஒருமுறை எனது தாத்தாவை பார்க்க வீட்டிற்குகூட வந்தார். அப்போ அவரை வீட்டிற்குள்ளிருந்து எட்டி எட்டி பார்த்தோம் நாங்கள். ஆனாலும், அவர் ஒரு பெண் ஏதோ ஒரு காரணம் பொருட்டு ஆணாக இருக்கிறார். தனியாக அந்த இருள் அடர்ந்த பகுதியில் என்பது மட்டும் தெரியும். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;அப்போது பாரதி கவிதைகளை படித்து காற்று வெளியடை கண்ணம்மாக்களை (பன்மைதான், காரணம் ஒரு கண்ணம்மாவை வெளியூரில் வைத்துக்கொண்டு பள்ளியில் மற்றொன்று தேடுவதால்) தேடிக்கொண்டிருந்த காலகட்டம். இடைக்கிடை இந்த கண்ணம்மா பயம்வேறு. அவர் கையில் எப்போதும் ஒரு ஆயுதத்துடன்தான் இருப்பார். இடுப்பில் திருக்கைவால் கட்டியிருப்பார். பிச்சுவா எனப்படும் கத்தி வைத்திருப்பார். பல பஞ்சாயத்துகளையும் தீர்த்துவைப்பார். களவாடுவார். கள்ளுகுடிப்பார். இப்படி பலநூறு கதைகள். சிலநேரங்களில் இளைஞர்கள் வயதானவர்கள் அவர் வீட்டு திண்ணையில் அமர்ந்து அவருடன பேசுவதைக் கேட்டிருக்கிறேன். எப்போதும் தனது தோட்டத்தில் எதாவது வேலைகள் செய்து கொண்டிருப்பார். ஒருமுறை நாங்கள் ஓடியதை பார்த்து, “ஏம்பா இப்படி ஓடுகிறீர்கள், இங்க வாங்க மாங்காய் தருகிறேன்“ என்று கூப்பிட்டு உள்ளார். ஒருமுறைகூட எங்களை அவர் மிரட்டியதில்லை. ஆனால் அவர்பற்றிய பயம் போனதே இல்லை. ஊரில் குழந்தைகளை பயமுறுத்த கண்ணம்மாவிடம் பிடித்து கொடுத்துவிடுவேன் என்று அம்மாக்கள் மிரட்டுவது உண்டு. பலவருடங்கள் கழித்து நான் திரும்ப ஊருக்கு போனபோது கண்ணம்மா இறந்துவிட்டதாக சொன்னார்கள். அந்த வீடு சிதிலமடைந்துவிட்டிருந்தது. தோட்டம் வெறிச்சோடி இருந்தது. வேறுயாரோ அவரது உறவினர்கள் அதை வைத்திருப்பதாக சொன்னார்கள். ஆனால் 25 ஆண்டுகள் கழித்து இதை எழுதும்போதும் எனக்கு அவரது அந்த வெள்ளை உடையுடன் தனது நீண்ட கூந்தலின் கொண்டையை மறைக்கும் முண்டாசுடன் கற்பு, கன்னிமை, வீரம், அச்சம் தருதல் உள்ளிட்ட எல்லாவற்றிலும் புராதனத்தாய்போன்று ஒருவித உக்கிரமும், சாந்தமும் கலந்த முகத்துடன் தோற்றம் தருகிறார். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இன்று அவரது அந்த தனிமையின் காரணம் புரிகிறது. அது ஒரு சமூக புறக்கணிப்பு. பெண் ஆணாக மாறி வாழும் வேட்கையால் புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கலாம்&lt;a href="#_ftn2_4971" name="_ftnref2_4971"&gt;[2]&lt;/a&gt;. ஒரு பெண்ணாக தனிமையில் வாழ ஆணுடை தரித்து ஆணாக மாறி வெளிப்பாடு கொண்டிருக்கலாம். ஆனால், அவரது வீரமும் துணிச்சலும், அந்த பகுதியில் ஒரு அச்சத்தை உருவாக்கி இருந்தது உண்மை. புறக்கணிப்பின் துயரமே அவரிடம் வீரமாக மாறிவிட்டது. சமூகம் ஏற்படுத்திய அச்சத்தை, அதற்கு எதிராக பாவித்தார் போலிருக்கிறது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;எங்கள் தெருவில் இருவர் இருந்தனர். அதில் ஒருவர் எனது தூரத்து உறவினர். மற்றொருவர் தெருவில் உள்ளவர். இருவரும் ஆண்கள்தான். இஸ்லாமியர்கள். ஊர் ஜமாத்தை&lt;a href="#_ftn3_4971" name="_ftnref3_4971"&gt;[3]&lt;/a&gt; சேர்ந்தவர்கள். அவர்களுக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். ஆனால், இருவரும் பெண்மையாக அல்லது பெண்பாலினமாக அறியப்பட்ட பாவனைகளைக் கொண்டவர்கள். இன்றுவரை அப்படித்தான் உள்ளனர். சென்றமாதம் அவரை சந்தித்தபோதுகூட, அவர் வந்து ”மச்சான், மச்சான்” என்று அதே பெண்மை நாடகத்தின் நளினத்துடன்தான் பேசிவிட்டு போனார். பேச்சில் பேண் குரல், நளினம், நடை, எல்லாம் பெண்மையின் நிகழ்த்துதலாகவே அவர்களிடம் உள்ளது. ஊரில் தனித்தன்மை கொண்ட அவர்கள் இருவரும், கொஞ்சகாலம் ஒன்றாக திரிந்தார்கள். ஆனால் அவரவர் குடும்பத்தில்தான் இருந்தனர். ஆண்கள் அனைவரையும் மச்சான் என்று விளிப்பார்கள். இளைஞர்கள் அவர்களிடம் வம்பளந்தால், நடுவீதியில் அவர்களது குறிகளைப் பிடிக்க முயல்வார்கள். வெட்கம் கெட்டவர்கள் என்று மற்றவர்கள் அவர்களை வசைபாடுவார்கள். அவர்களுக்கு பிற ஆண்கள் மீது ஈர்ப்பு இருந்ததே காரணம். பெண்களுடன் அதிகம் புழங்கமாட்டார்கள். ஆனால் உடைகள் மற்றவை எல்லாம் ஆண்களுக்கானவைதான். மாற்றுப்பால் உணர்வை உள்ளுக்குள் கொண்ட வெளித்தோற்றத்தில் ஆண்பாலாக உள்ளவர்கள். இவர்களது பிரச்சனை உடல் சார்ந்ததா? மனம் சார்ந்ததா? என்பது புரியாத புதிர். இன்றுவரை அது புரியாத புதிராகவே வைக்கப்பட்டுள்ளது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இப்புதிரை மருத்துவத்துறை சொல்லாடல்கள்தான் உருவாக்கி, அதற்கு கீழ்கண்டவாறு விதிமுறைகளையும் உருவாக்கி உள்ளன. அதாவது, இருபாலுமைக்கொண்டவர்களை (intersexuality) சரியான மனமும், தவறான/குழப்பமான உடலும் கொண்டவர்களாக கருதி, உடல்ரீதியான பிரச்சனை உரியவர்களாகவும், மாறியப்பாலினத்தை (transsexuality) சேர்ந்தவர்கள், குழப்பமான/தவறான மனமும், சரியான உடலும் கொண்டவர்களாக கருதி மனம்ரீதியான பிரச்சனைக்கு உரியவர்களாகவும் கருதப்படுகிறார்கள். நவீன மருத்துவத்துறை, இவர்களது உடல்களை மாற்றுப்பாலின அறுவைச்சிகிச்சைகள் மூலம் இரு-பாலின உடலமைப்பிற்குள் ஒழுங்கமைக்க முயல்கிறது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இவ்வாறு, இன்றைய பாலின உடல்கள் மருத்துவ-உடல்களாக (medicalized body) கட்டப்பட்டது. அதாவது உடல்பற்றிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட உயிர்மருத்துவம் உருவாக்கிய உடல்&lt;a href="#_ftn4_4971" name="_ftnref4_4971"&gt;[4]&lt;/a&gt;. இது நமது மூதாதைகளிடம் இருந்த, அல்லது அவர்களது உடலாக இருந்த, உடலல்ல. நவீனத்துவம் உருவாக்கிய மருத்துவ உடல். உலகின் மருந்து நிறுவனங்களிற்க்கான நுகர்வு உடல். மாற்றுப்பாலுணர்வு கொண்டவர்களை நோயாளிகளாக, மருத்துவத்தால் குணப்படுத்த வேண்டியவர்களாக கருதப்படுவது இதனால்தான். இது மேற்கத்திய பண்பாடு உருவாக்கிய உடல்-மருத்துவ-விதியாகும். உடல் ஒரு பாலுமையாக, பாலினமாக கட்டப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதால், அதிலிருந்து விலகியவர்களை நோயாளிகளாக காணும் போக்கு உருவாகுகிறது. பாலியல் சிறுபான்மையாக உள்ள இத்தகையவர்களை பெரும்பான்மை பாலியலுக்குள் கட்டுப்படுத்தும் போக்கும் சரிசெய்யும் போக்கும் நிலவுகிறது. இவர்களை கோணல்கள் (queer) என்றும், எதிர்பாலின-வேட்கை கொண்டவர்களை நேராளர் (straight) என்றும் வகைப்படுத்தும் போக்கு உருவாகுகிறது. இந்த வகைப்பாட்டிற்குள், லெஸ்பியன், கே எனப்படும் தன்பால் புணர்ச்சியாளர்கள், டிரான்ஸ்செக்ஸவல் எனப்படும் மாற்றப்பாலுணர்வாளர்கள், டிரான்ஸ்ஜென்டர் எனப்படும் மாறியபாலினத்தார், எல்லோரையும் அடக்குகிறார்கள். மாறியப்பாலினத்தார்&lt;a href="#_ftn5_4971" name="_ftnref5_4971"&gt;[5]&lt;/a&gt; பற்றிய இந்த உரையாடலில் இந்த புதிரின் அரசியலை விளங்கிக்கொள்ள முயலலாம். அதற்கு முன்பாக நான் பார்த்த மற்றொரு நிகழ்வையும் விவரித்துவிடலாம். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;(தொடரும்)&lt;/p&gt;  &lt;p&gt;-ஜமாலன் &lt;a href="mailto:jamalan.tamil@gmail.com"&gt;jamalan.tamil@gmail.com&lt;/a&gt; (23-10-2011 - 25-11-2011)&lt;/p&gt;  &lt;div align="justify"&gt;   &lt;hr align="left" size="1" width="33%" /&gt;&lt;/div&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref1_4971" name="_ftn1_4971"&gt;[1]&lt;/a&gt; ”Discrete genders are part of what “humanizes” individuals within contemporary culture; indeed, those who fail to do their gender right are regularly punished. Because there is neither an “essence” that gender expresses or externalizes nor an objective ideal to which gender aspires; because gender is not a fact, the various acts of gender create the idea of gender, and without those acts, there would be no gender at all. Gender is, thus, a construction that regularly conceals its genesis.” - Judith Butler, “Performative Acts and Gender Constitution: An Essay in Phenomenology and Feminist Theory” (1988)&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref2_4971" name="_ftn2_4971"&gt;[2]&lt;/a&gt; மகராசன் என்பவரால் தொகுக்கப்பட்ட ”அரவாணிகள் உடலியல் உளவியல் வாழ்வியல்” தோழமை வெளியீடு 2007 என்கிற நூலில் அரவாணிகள் பற்றிய பல தகவல்கள் உள்ளன. அவர்களது உடலியல், அறிவியல், உளவியல் பற்றிய இந்தியா சார்ந்த தொன்மங்கள் மற்றும் அவர்களது அன்றாட வாழ்வியல், சடங்குகள், இலக்கியங்கள் வரை தொகுக்கப்பட்டு உள்ளது என்பதால் அவற்றை தவிர்த்த வேறு ஒரு தளத்தில், கோணத்தில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. தொகுப்பு என்பதால் அந்நூலில்கூட கூறியதுகூறலாக பலரும் அரவாணிகள் பற்றிய வரலாற்று, தொன்ம, வாழ்வியல் குறிப்புகளை கூறுகிறார்கள். எல்லோரும் அரவாணிகள் பற்றிய வரலாற்றை அரவாண் பலியிலிருந்தே துவங்குகிறார்கள் அதில். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref3_4971" name="_ftn3_4971"&gt;[3]&lt;/a&gt; ஜமாத் என்கிற அரபிச் சொல், சமூகக் குழுவாக வாழ்வதை குறிப்பதாகும். இஸ்லாமியர்களது குழு அமைப்பை குறிக்கும் சொல். மாறியப்பாலினத்தை சேர்தவர்களும் ஜமாத்தாகத்தான் வாழ்கிறார்கள். அவர்களது குழுவாழ்வை குறிப்பதும் இந்த ஜமாத் என்கிற சொல்தான். வடஇந்திய இஸ்லாமிய சமூகம் இவர்களை அரவணைத்ததால் இந்த சொல் வந்திருக்கலாம். இக்குழுவினர் பயன்படுத்தும் பல சொற்கள் அரபு-உருதுச் சொற்கள். ஓரமைவாக்க இஸ்லாமிய அடிப்படைவாதம் இவர்களை நிராகரிக்கிறது என்பதையும், சவுதி அராபியா போன்ற இஸ்லாமிய நாடுகள் கடுமையான தண்டனைகளை இவர்களுக்கு எதிராக சட்டமாக்கி வைத்து உள்ளதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref4_4971" name="_ftn4_4971"&gt;[4]&lt;/a&gt; பக்-218 Encyclopedia of Sex and Gender – Men and Women in the World’s Culture – edited by Carol R. Ember and Melviln Ember - ©2003 Kluwer Academic/Plenum Publishers,New York “நீரின்றி அமையா உலகு“ என்பதைப்போல “மருந்தின்றி வாழா உடல்“ என்ற நிலை உருவாகி உள்ளது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref5_4971" name="_ftn5_4971"&gt;[5]&lt;/a&gt; Transgender எனப்படும் ஆங்கிலச்சொல்லையே இங்கு மாறியப்பாலினத்தார் என்றும், Transsexual என்பதை மாறியப்பாலுணர்வாளர் என்ற சொல்லாலும் குறிக்கிறேன். Gender என்பது பாலினம் என்ற சொல்லாம், Sex பாலுமை என்ற சொல்லாலும் குறிக்கப்படுகிறது. &lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4997678103589622995-6148420909560887690?l=jamalantamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jamalantamil.blogspot.com/feeds/6148420909560887690/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4997678103589622995&amp;postID=6148420909560887690' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/6148420909560887690'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/6148420909560887690'/><link rel='alternate' type='text/html' href='http://jamalantamil.blogspot.com/2012/01/1_12.html' title='மோலார் அடையாளங்களும், மூலக்கூறுகளின் உருவாகுதலும் - பாலின அடிமைகள் பற்றிய கதையாடல் – 1'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/-Yv-3E2CMUF4/TiFUBPQFxQI/AAAAAAAALKQ/FFP7YG-fAB0/s72-c/Portrait+of+a+reputed+hermaphrodite+%2528Hijra%2529+and+companions+-+Eastern+Bengal+1860%2527s.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-7599134430327570731</id><published>2012-01-10T23:42:00.000+03:00</published><updated>2012-01-10T23:43:06.098+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இஸ்லாமிய அடிப்படைவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அடவி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிவில் சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='NGO'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பொருளாதாரம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அமேரிக்கா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='என்.ஜி.ஓ'/><title type='text'>மேலே பூதம் கீழே ஆழ்கடல் - சிவில் சமூகமும் அரசுசாரா சமூகமும் –1</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;font color="#ff0000"&gt;&lt;strong&gt;வெளிவர உள்ள &lt;a href="http://www.adavimagazine.blogspot.com/" target="_blank"&gt;அடவி&lt;/a&gt; என்கிற இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை. அநேகமாக நாளை அது புத்தகக் கண்காட்சியில் கிடைக்கலாம்.&amp;#160; இங்கு பகுதியாக வெளியிடப்படுகிறது. &lt;/strong&gt;&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;blockquote&gt;   &lt;p align="justify"&gt;”உண்மைக்கு மாபெரும் எதிரியாக இருப்பது -வேண்டுமென்றே திட்டமிட்ட நேர்மையற்ற - பொய் அல்ல ஆனால் -தொடர்ந்த போலியான மற்றும் யதார்த்தமற்ற- ஒரு புராணம்”&lt;a href="#_ftn1_7045" name="_ftnref1_7045"&gt;[1]&lt;/a&gt;. – ஜான் எப். கென்னடி.&lt;/p&gt; &lt;/blockquote&gt;  &lt;p align="justify"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; border-top: 0px; border-right: 0px" border="0" alt="Charlie Chaplin in The Kid - Charlie Chaplin" align="left" src="http://www.popartuk.com/g/l/lgpp30266+charlie-chaplin-in-the-kid-charlie-chaplin-poster.jpg" width="241" height="332" /&gt;காட்சி:1. ஒரு கண்ணாடி சரிசெய்பவனும் அவனால் வளர்க்கப்படும் ஒரு அனாதை சிறுவனும் சாலையில் நடந்து வருகிறார்கள். சிறுவன் ஒரு குறிப்பிட்ட தெருவிற்குள் போய் தனது கால்சராயில் வைத்து உள்ள கற்களால் கண்ணில்படும் முதல் வீட்டின் சன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டு ஓடிவிடுகிறான். கண்ணாடி உடைந்தவுடன் வீட்டுக்காரப் பெண்மணி வந்து இப்படி ஆகிவிட்டதே என்று பார்த்துக்கொண்டு இருக்கிறார். அச்சமயத்தில் உடைந்த கண்ணாடிகளை சரிபார்ப்பவன் அவ்வழியாக வந்து அந்த கண்ணாடியை பேரம்பேசி சரி செய்து கொடுக்கிறான். இது 1921–ல் சார்லி சாப்ளினால் எடுக்கப்பட்ட “த கிட்ஸ்“ படத்தின் ஒரு காட்சி. இரண்டு பேரும் அனாதைகள், வருமானத்திற்காக இப்படி செய்வதாகக் காட்டப்படும் ஒரு காட்சி இது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;கதை:1. செருப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று குறிப்பிட்ட ஒ&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" border="0" align="right" src="http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQwdbce20Lu5uxnehKpI9xPvTK_weN0c_LFr-rvZ4v5zp8WOUUnT_etVXmf" width="303" height="233" /&gt;ரு தீவில் தனது நிறுவனத்தை துவக்கினால் எப்படி இருக்கும் என ஆராய இரண்டு நபர்களை தனித்தனியாக அனுப்புகிறது. ஆராய்ச்சி முடிந்தபின் ஒருவன் சொன்னான் அந்த தீவில் யாரும் செருப்பு அணிவதில்லை அதனால், அங்கு செருப்பு தயாரிப்பு நிறுவனம் துவங்குவது புத்திசாலித்தனம் இல்லை என்று. ஆனால், மற்றொருவன் சொன்னான் அந்த தீவுதான் செருப்பு தயாரிக்கும் நிறுவனம் துவக்க சரியான இடம். அங்கு யாருமே செருப்பு போடவில்லை. நாம் செய்யவேண்டியது, செருப்பு போடும் கலாச்சாரத்தை அவர்களிடம் பிரச்சாரம் செய்து உருவாக்குவதுதான். அப்படி ஒரு கலாச்சாரம் உருவாகிவிட்டால் செருப்பு வியாபாரம் நன்றாக நடக்கும். நிறுவனத்திற்கும் கொள்ளை லாபம் என்றான். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;காட்சி -1 &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;img style="display: block; float: none; margin-left: auto; margin-right: auto" src="http://www.adamzyglis.com/images/cartoon350.jpg" width="426" height="337" /&gt;காட்சி-1 ல் உள்ளபடிதான் ‘தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தம்’ என்ற பெயரில் அமெரிக்கா ஈராக், ஆப்கானில் ஒரு யுத்தத்தை நிகழ்த்தியது. கிட்ஸ் படத்தில் வரும் அந்த சிறுவனின் பணியைப் போல அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும், ஐக்கிய நாட்டு சபை அனுமதியுடன் ஈராக், ஆப்கான் யுத்தத்தை நடத்தின. யுத்தம் நடப்பதற்கு முன்பே மறுநிர்மாணம் என்ற பெயரில் பெரும் கட்டுமான நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தங்களை தயாரித்துக் கொண்டு களமிறங்கின. 1997-ல் உருவாக்கப்பட்ட புதிய அமெரிக்க சகாப்தம் (Project for the New American Century (PNAC)) என்கிற திட்டத்தின் அடிப்படையில் அமெரிக்க தாராளவாத ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தி எதேச்சதிகார ஆட்சிகளை தூக்கி எறிவதற்காக ஈராக், சவுதி அரேபியா, சிரியா, பாலஸ்தீன் போன்ற இலக்குகளை தீர்மானித்து தங்கள் செயல்திட்டத்தை துவங்கினார்கள். உண்மையில் 9/11 அதன் பிறகே நடந்தது. அந்த நிகழ்விற்கு முன்பாகவே அந்த நிகழ்விற்கான போக்கை உருவாக்கியது சர்வதேச அமைப்புகளும், அமெரிக்காவும். பால் கிரேக் அறிக்கையின்படி அமெரிக்காவின் “தீவிரவாதத்திற்கு எதிரான போர்” என்பது உண்மையில் ஹாலிபர்டன், பெக்டல் போன்ற முதலாண்மை நிறுவனங்களின் எண்ணை மற்றும் எரிவாயு தொழிலுக்காகவே நடத்தப்பட்டது. 2003 மார்ச்சில் ஈராக்கிற்கு படைகளை அனுப்புவதற்கு முன்பாக, அமெரிக்க பாதுகாப்பு செயலராக இருந்த ராம்ஸ்பெல்ட் உலகின் மிகப்பெரும் எண்ணை நிறுவனமான ஹாலிபர்டன் நிறுவனத்திடம் 7 பில்லியனுக்கு ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;அல்கொய்தா தீவிரவாத அமைப்பு என்கிற ஒன்றே இல்லை என்பதும், அது ஆப்கானில் சோவியத்தை வீழ்த்த உருவாக்கப்பட்ட முஜாஹீதீன்கள் அமைப்பிற்கான ஒரு “தகவல்தொகுப்பாக” (database) அமெரிக்க வெளி உறவுக்கொள்கையை அமல்படுத்தவென அமெரிக்க உளவுநிறுவனம் மற்றும் அதன் துனை அமைப்புகளான சர்வதேச உளவு நிறுவனங்கள் உள்ளிட்ட வலைப்பின்னலில், பனிப்போருக்கும், பனிப்போருக்குப் பிறகான “புதிய உலக ஒழுங்கு” என்பதை நிலைநிறுத்தவும் உருவாக்கப்பட்டது. உண்மையில் அப்படி ஓர் இஸ்லாமிய படையோ அல்லது பயங்கரவாத குழுவோ இல்லை. அது பொதுமக்களை நம்ப வைப்பதற்காக அடையாளப்படுத்தப்பட்ட ஒரு “பேய்”. அது தொலைகாட்சி பார்வையாளர்கள் பயங்காரவாதத்திற்கு எதிரான போரின் தலைமையை ஏற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்ட ஒன்று. அதை நடத்தியது அமெரிக்க மற்றும் அமெரிக்க சார்புநாடுகளின் பணவெறிகொண்ட ஆர்வலர்கள் என்கிறது குளோபல் ரிசர்ச் என்கிற வலைதளம். (The Imperial Anatomy of Al-Qaeda. The CIA’s Drug-Running Terrorists and the “Arc of Crisis” Part I by Andrew Gavin Marshall - &lt;a href="http://globalresearch.ca/index.php?context=va&amp;amp;aid=20907"&gt;http://globalresearch.ca/index.php?context=va&amp;amp;aid=20907&lt;/a&gt;) மேலும் சர்வதேச போதைப்பொருள் வலைப்பின்னல் அரசியலுடன் இது தொடர்புகொண்டுள்ளதையும், அமெரிக்கா, பிரான்ஸ், சவுதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட உளவு நிறுவனங்கள் உருவாக்கிய ஸபாரி கிளப் (The Safari Club) என்பதே இத்தகைய தீவிரவாத அமைப்புகளுக்கு பின்புலமாக செயல்பட்டதை விவரிக்கிறது இக்கட்டுரை. பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்த காரணமாக அமைந்த இரட்டைக்கோபுர தாக்குதல் நிகழ்த்துவதற்கான நிதி ஆதாரம் எப்படி அவர்களுக்கு வந்தது என்பதை பற்றி உளவுத்துறை எதையும் அறிவிக்கவில்லை. இந்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்பது அமெரிக்க உலகத்தலைமையை நிலைநாட்ட நிகழ்த்தப்பட்ட ஒன்று என்பதும், அதற்கு காரணமாக அமைந்தது இந்தத் தாக்குதல் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. சோவியத் பனிப்போருக்கு பிறகு அமெரிக்கா தன்னை உலகத் தலைமையாக நிறுவிக்கொள்ள நிகழ்த்தப்பட்டதே வளைகுடா யுத்தம். இந்த யுத்தத்திற்கு காரணமாக சொல்லப்பட்ட சதாம் உசேன், ஈரானிற்கு எதிராக அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவர் என்பதும் வளைகுடா யுத்தம் எண்ணைக்காக நடத்தப்பட்ட போர் என்பதும் உலகறிந்த உண்மை. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;ஆனால், அது உலகில் பேரரசு தனது எதிரியை அமைப்பாக்கம் செய்த ஒரு யுத்தம். தனது எதிரியை பலம் மிக்கவனாகக் காட்டி, அவனைவிட தனது பலத்தை அதிகமாகக் காட்டிய ஒரு நாடகம் அது. அமெரிக்க மற்றும் உலக மக்கள் மனதில் ஒரு பயத்தை உருவாக்கவே தீவிரவாதம் பற்றிய சொல்லாடல்கள், காட்சிகள், கதையாடல்கள் பெருக்கப்பட்டன. உண்மையில் மக்கள் வறுமையால், அதுவும் பேரரசுகளின் ஆசைக்கனவுகளால் ஏற்பட்ட வறுமையால், பஞ்சத்தால், பட்டினியால் பசி, ஏழ்மை, இல்லாமை என கண்ணிற்கு தெரியாத அதிகாரத்தின் வெடிகுண்டுகளால் கொத்து கொத்தாக சாகடிக்கப்படுகிறார்கள். ஆனால், தீவிரவாதத்தால் கொல்லப்படும் மக்களையே வண்ண வண்ணமாகக் காட்சிப்படுத்துவதன்மூலம் ஒரு நிச்சயமற்ற வாழ்வுபற்றிய பயத்தை உருவாக்குகிறார்கள். பேரரசு தனக்கு எதிராக இப்போது நாடுகளை உருவாக்காமல், உலக-தீவிரவாதம் என்கிற கண்ணிற்கு தெரியாத கருத்தியல்சார் எதிரிகளை உருவாக்கிக்கொண்டு உள்ளது. உலகமயமாதல் வழியாக தனது அதிகாரத்தையும், உலக-தீவிரவாதத்தை எதிரியாக சித்திரித்து எதிர்-இருப்பையும் கொண்டு தன்னை தகவமைத்துக்கொண்டு உள்ளது. தீவிரவாதத்தையும், ஜனநாயகத்தைப்போல உலகமயமாக்கிவிட்டது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;(தொடரும்)&lt;/p&gt;  &lt;p&gt;- ஜமாலன் (&lt;a href="mailto:jamalan.tamil@gmail.com"&gt;jamalan.tamil@gmail.com&lt;/a&gt;) 16/12/2011&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&amp;#160;&lt;/p&gt;  &lt;div align="justify"&gt;   &lt;hr align="left" size="1" width="33%" /&gt;&lt;/div&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref1_7045" name="_ftn1_7045"&gt;[1]&lt;/a&gt;“The greatest enemy of the truth is not the lie – deliberate, contrived, and dishonest – but the myth – persistent, pervasive, and unrealistic.” - John F. Kennedy&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4997678103589622995-7599134430327570731?l=jamalantamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jamalantamil.blogspot.com/feeds/7599134430327570731/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4997678103589622995&amp;postID=7599134430327570731' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/7599134430327570731'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/7599134430327570731'/><link rel='alternate' type='text/html' href='http://jamalantamil.blogspot.com/2012/01/1.html' title='மேலே பூதம் கீழே ஆழ்கடல் - சிவில் சமூகமும் அரசுசாரா சமூகமும் –1'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-2819396947186558639</id><published>2012-01-09T00:18:00.000+03:00</published><updated>2012-01-09T00:19:38.351+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல் அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடலரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='cartesian dualism'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிராய்ட்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இருமைவாதம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Freud'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கார்டீசியன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மந்திரச்சிமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Western Philosophy'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><title type='text'>இடிபல்[1] முக்கோணத்தில் சிக்கிய கார்டீசிய உடல் – பிராய்டின் மூடுண்ட கனவுகள் - 1</title><content type='html'>&lt;blockquote&gt;   &lt;p align="justify"&gt;”தாயின் மீது காதலும், தந்தைமீது பொறாமையும் என்னிடம் நிலைத்திருப்பதை கண்டேன். இப்போது இதனை குழந்தைமையின் அகில உலக நிகழ்வாக கருதுகிறேன்.” - சிக்மண்ட் பிராய்ட் &lt;/p&gt; &lt;/blockquote&gt;  &lt;p align="justify"&gt;&lt;b&gt;&lt;u&gt;அறிமுகம்&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt; &lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;மனிதஉடல் சமூகவயமாகியபின் தன்னை மையமாக வைத்து சிந்திக்கத் துவங்கியது. மறுதலையாக சமூகவயம் என்பது மனிதஉடலை மையமாக வைத்து சிந்திப்பதில் துவங்குகிறது. இப்படி சிந்திப்பதற்கு உயர்வகை பாலூட்டி என்கிற உயிரியல் பரிணாம வளர்ச்சி ஒரு காரணம். இவ்வளர்ச்சியை இயற்கை &lt;img style="display: inline; margin-left: 0px; margin-right: 0px" align="left" src="http://4.bp.blogspot.com/_8N14Ygk6t2s/TD2IBpou7AI/AAAAAAAACGY/SiQFgAcaiAU/s320/freud_wideweb__430x395.jpg" width="273" height="251" /&gt;தேர்வு என்கிறார் டார்வின். சிந்தனை என்கிற மனித-வரலாற்று கதையாடலால் இயற்கை தேர்ந்தெடுத்த மனிதஉடல், இயற்கையை தேர்வதாக மாறியது. இக்கதையாடலால் இயற்கையை புறமாக்கி தன்னை அகமாக்கிக் கொண்டது. இதற்கான முறையியலாக, புறஉலகையும், அகஉலகையும் புரிந்துகொள்வதற்கான அறிதலாக உருவாக்கிய கருத்தாக்கங்கள்தான் தத்துவங்கள்&lt;a href="#_ftn2_1452" name="_ftnref2_1452"&gt;[2]&lt;/a&gt; என்று அறியப்படுகிறது. தத்துவத்தின் பேசுபொருளாக கருதப்பட்டு வந்த உள்-வெளி அகநிலை-புறநிலை, அகம்-புறம், சிந்தனை-வாழ்நிலை, மனம்-உடல், என்பதான இருமைக் கருத்தாக்கங்களில் ஒருகூறான உள்-அகநிலை-அகம்-சிந்தனை-மனம் ஆகியவற்றினை ஆராய்ந்து பார்க்க முனைவதே இங்கு எழுத்தாகிறது. அகநிலை அகமாகி, மனமாகி வரலாற்றில் வளர்ந்து சிந்தனையை வந்துடைந்துள்ள கதைதான் அது. அகத்தின் செயல் சிந்தனையாக வர்ணிக்கப்பட்டது தெகார்த்தால். அகநிலை புறநிலை என்கிற இருமையை உருவாக்கிய கார்டீசியத்தில் சிந்தித்தல் என்பதே மனம் என்பதற்கான சிறப்புக்கூறாக முன்வைக்கப்பட்டது. அகநிலை பொருண்மையற்றது என்பதையும், அதன் இருப்பை அறிய சிந்திக்கும் செயலையும் முதன்மைப்படுத்தியது. ஒரு உடலின் “சிந்திக்கும் பொருளே“ மனம் என்றது. மனம் என்ற ஒன்றை எப்படி புரிந்துகொள்வது? அதற்கான வரையறை என்ன? அதற்கான வரைபடம் என்ன? மனம் என்கிற ஒன்று உண்டா? எங்கு உள்ளது? அதன் செயல் என்ன? இப்படி அடுக்காக கேள்விகளை எழுப்புவது நமக்குள் எது? அதுதான் மனமா என்பதும் இத்துடன் விசாரிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;b&gt;&lt;u&gt;மனம் என்றால் என்ன? &lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;சிந்திக்கும் பொருளான மனதை புரிந்துகொள்ள சிந்தனை என்றால் என்ன? என்பதில் இவ்விசாரணையை துவக்கலாம். சிந்தனை என்பது மனித உடலின் உள்ளே அதாவது அகத்திற்குள் நடக்கும் ஒரு செயல். இதனை அகத்திற்குள் செய்வது எது? அகம் என்பது ஒரு உடலின் உள்ளார்ந்த பகுதி அல்லது உள்ளமைந்துள்ள வெளி எனப்படுகிறது. ஒரு உடலை தோல் என்கிற எல்லைக்கொண்டு அகம், புறம் என்று பிரிக்கப்படுவதாக கொள்ளலாம். அதாவது ஒரு உடலுக்கு அதாவது உடலின் எல்லையாக உணரப்பட்டுள்ள தோலிற்கு வெளியே உள்ளவற்றை புறம் என்பதாகவும், தோலிற்கு உள்ளே நிகழ்பவை அகம் என்பதாகவும் கொள்ளலாம். ஆனால், அகம் உடலின் உள்ளே உள்ள ஒரு உருப்பா? இடமா? செயலா? மொழியா? என்பது குறித்து பல கருத்தாக்கங்கள் விவாதத்தில் உள்ளன. பொதுவாக, அகம் உடலின் உள்ளார்ந்துள்ள ஒன்று என்பதில் மாறுபாடு இல்லை. இப்படி உள்ளார்ந்த அகத்தை எப்படி உணர்வது? இக்கேள்வியே சிக்கலானது. காரணம் உணர்தல் என்பதும் அகத்தின் ஒரு பகுதிதான் எனும்போது, அகத்தை உணரவே அகம் தேவைப்படுகிறது. ‘நானை‘ உணர ஒரு ‘நான்‘ தேவைப்படுகிறது. ”நான் சிந்திக்கிறேன், அதனால் நான் இருக்கிறேன்” என்கிற புகழ்பெற்ற தெகார்த்தின் கூற்றில், உள்ள முதல்சிக்கல், சிந்திப்பதற்கு முன் அல்லது சிந்திப்பதற்கு என ஒரு நான் வேண்டும் என்பதால், நான் சிந்திக்கிறேனா, அல்லது சிந்திப்பதுதான் நானா? என்ற முரண்பாடு வந்துவிடுகிறது. ஆனால், தெகார்த்தின் சிந்தனையில் ‘நான்‘தான் அகத்தின் மையம் என்பதாக முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு உடலின் அகம் என்பது அதன் ‘நான்‘தான் எனும்போது, அகம் என்கிற நானை உணரும் ஒரு பொறியை மனம் என்பதாக கார்டீசியம் முன்வைக்கிறது எனலாம். அல்லது நானாகிய மனமே அகம் எனப்படுகிறது என்று மாற்றி சொல்லலாம். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;அகமாகிய மனம் ஒரு உடலினை இயக்கக்கூடிய, புறத்துடன் தொடர்புபடுத்தக்கூடிய, உடலின் செயல்-எதிர்ச்செயல்களால் மாறிக்கொண்டிருக்கிற, புற உலகை அறியக்கூடிய, உடலின் உணர்வு, அறிவு, தியானம் என்கிற செயல்களை செய்யக்கூடிய உடலின் உள்ளார்ந்துள்ள ஒரு இயக்கி என்பதாக வரையுறுத்துக் கொள்ளலாம். சமூக-கலாச்சாரத்துடன் ஒரு உடலை அடையாளப்படுத்தும் நானாகவும், சுய இயக்கம் கொள்ளும்போது சிந்தனையாகவும், விசாரத்தில் ஈடுபடும்போது சுயமாகவும், சஞ்சாரத்தில் ஈடுபடும்போது ஆத்மாவாகவும் பல பாத்திரங்களாக ஏற்றி சொல்லப்பட்டுள்ளது. பண்டைய மதங்கள் துவங்கி இந்த அகநிலை என்பது குறித்த வாதவிவாதங்கள் நடந்துகொண்டே உள்ளன. இது ஒருவிதமான கடந்துசெல்லும் தத்துவங்களால் அப்பாலை கருத்தியலாக விளக்கப்பட்டு வந்துள்ளது. தெகார்த் இந்த பண்டைய கருத்துருவங்களின் மேல் தனது தத்துவக்கருவியான சந்தேகம் என்பதைக்கொண்டு அகநிலை என்பதை சிந்தனையாகவும், மனம் என்பதை சிந்திக்கும பொருளாகவும் அதாவது மூளையின் ஒரு பகுதியாகவும் முன்வைத்தார். மூளை பிரக்ஞை என்கிற ஒன்றுடன் சேர்வதால் மனமாகிறது என்பதே தெகார்த்தின் மனம் பற்றிய கருத்தாகச் சொல்லலாம். அதாவது பிரக்ஞையை பிரக்ஞைப்படுத்தியவர். சிந்தனை என்று தெகார்த் பயன்படுத்திய சொல் ஒருவகையில் பிரக்ஞை என்பதற்கான லத்தீன் பொருட்பொதிந்த சொல்லே. காரணம் பிரக்ஞை என்பதற்கான conscious என்கிற ஆங்கிலத்தின் மூலச்சொல் 17-ஆம் நூற்றாண்டிற்கு முன்பு அதாவது தெகார்த்தேவிற்கு முன்பு மேற்குலகில் பயன்பாட்டில் இல்லை. கிரேக்க-லத்தினிலும்கூட இல்லை என்கிறது ஒரு ஆய்வுக் கட்டுரை&lt;a href="#_ftn3_1452" name="_ftnref3_1452"&gt;[3]&lt;/a&gt;. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;b&gt;&lt;u&gt;மனம் என்னும் இருமை – கார்டீசியமும் பிராய்டும்&lt;/u&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;u&gt;&lt;/u&gt;&lt;/b&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;தெகார்த்திற்கு முன்பு மேற்கத்திய தத்துவவியலாளர்கள் மனம் என்பதை ஆத்மா மற்றும் சுயம் என்பதான பிளாட்டோனியக் கண்ணோட்டத்தில்தான் அனுகிவந்தனர். அரிஸ்டாட்டில் பொதுபுத்தி (common sense) என்பதைத்தான் பிரக்ஞை என்பதற்கு பகரமாக பயன்படுத்தியதாக சொல்கிறது இக்கட்டுரை&lt;a href="#_ftn4_1452" name="_ftnref4_1452"&gt;[4]&lt;/a&gt;. தெகார்த் மனம் என்பதை “சிந்திக்கும் பொருளாக“ வர்ணித்த 17-ஆம்நூற்றாண்டிற்கு பிறகே மனம் பற்றிய விஞ்ஞான சிந்தனைகள் உருவாகிறது. தெகார்த்தின் இருமைவாத சிந்தனைக்குப் பிறகுதான் மனம் என்கிற தத்துவம் சார்நத சொல்லாடல் விஞ்ஞானக் கருத்தாக்கமாக மாறியது. அதற்கு முந்தைய மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் மூளை என்பது ஒரு உறுப்பாக மட்டுமே இருந்தது. தெகார்த் சிந்தனை என்பதுடன் இணைந்த மூளையின் செயல்பாட்டிலிருந்து, சிந்திக்கும் பொருள் என்கிற தனிச்சிறப்பாக ஒன்றை பிரித்ததின் வழியாக மனம் என்கிற நவீனக்கருத்தாக்கம் உருவாகியது. அதாவது பொருளில் பொருளாயுதப் பொருள்(physical substance), சிந்திப்பதற்கான பொருள் (mental substance) என்ற ஒரு இருமையை உருவாக்கியதன் வழியாக, சிந்திப்பதற்கான பொருளாக மனம் என்கிற ஒன்று அறிவிக்கப்பட்டது. இன்று மனம் என்று புரிந்துகொள்ளப்பட்டிருப்பது தெகார்த் முன்வைத்த மூளையிலிருந்து பிரிக்கப்பட்ட தனிச்சிறப்பான மனம்தான், அதாவது “கார்டீசிய மனம்”. சிந்திப்பதால் ‘நானா‘க கட்டப்பட்ட தனிமனிதனின் மனம். இம்மனம் மூளையால் இயக்கப்பட்டாலும், உடலிற்குள் ஒரு அக-வெளியாக உள்ளது. இன்றைய உலகின் அடிப்படை அலகாக உள்ள தனிமனிதனின் மனமாக அறியப்பட்டிருப்பது, இயங்குவது, சிந்தனை மற்றம் பிரக்ஞையாக அறியப்பட்டிருப்பது. அதாவது ‘சிந்திக்கும் பொருளாக‘ இருப்பது. பொதுபுத்தியில் மனம் என்பதாக உணரப்பட்டுள்ளது. பௌதீகரீதியாக உடலிற்குள் இல்லாத ஒன்று. இடமோ, நிறையோ, வடிவமோ, நிறமோ, குணமோ, சுவையோ, மணமோ, சூடோ, குளிர்ச்சியோ உள்ளிட்ட எந்த பொருட்பண்பும் அற்றது. அலையா, துகளா என்கிற இயற்பியல் இருமையின் அறிவியலுக்குள் அடங்காதது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;மனம் “சிந்திக்கும் பொருள்” என்பதற்கு தெகார்த் பயன்படுத்திய சொல் கோஜிட்டன்ஸ் (cogitans) என்பதும், லத்தீனில் உள்ள conscientia என்கிற சொல்லை சிந்தனை என்பதை வரையறுக்கவும் தெகார்த் பயன்படுத்துகிறார்&lt;a href="#_ftn5_1452" name="_ftnref5_1452"&gt;[5]&lt;/a&gt;. இதன்பொருள் லத்தீனில் மற்றும் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் கான்சியஸ், தமிழில் பயன்படுத்தப்படும் ஓர்மை, சமஸ்கிருதத்தில் சொல்லப்படும் பிரக்ஞை என்பதாகும். இதனை தெகார்த் இன்று பயன்படும் முழுமையான அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும், சிந்தனை என்பதை பிரக்ஞை என்பதுடன் ஒருங்கிணைத்து தத்துவரீதியாகவே தனது இருமைவாதத்தை முன்வைத்துள்ளார்&lt;a href="#_ftn6_1452" name="_ftnref6_1452"&gt;[6]&lt;/a&gt;. சிந்திப்பது இருப்பிற்கான பிரக்ஞையாக (being consciousness) அவரால் முன்வைக்கப்பட்டது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;அறிவார்ந்த சிந்தனை என்பது மதிப்பீட்டுடன் சம்பந்தப்படுத்தியே தெகார்த்தால் முன்வைக்கப்பட்டது. பகுத்தறிவிற்கான அடிப்படை என்பது சந்தேகம் கொள்வது, சிந்திப்பது, தீர்ப்பு வழங்குவது உள்ளிட்ட அறிவுச் செயல்பாடாகவே உள்ளது. இந்த அறிவுச்செயல்பாடு என்பதே அதிகாரத்தின் செறிவுப்புள்ளியாக உள்ளது. ஆக, மனம் சிந்திப்பதின் வழியாக சுற்றிவளைத்து அதிகாரத்துடன் உறவுகொண்டதாக உள்ளது. சிந்திப்பதற்கான எல்லைகளை புறநிலைகள் வழியாக சமூக அமைப்புகள், மொழி, அறிவு ஆகியவற்றால் கட்டுப்படுத்திவிடுவதன்மூலம், அதிகாரத்திற்கான இயங்கு புள்ளிகளை, களனை வடிவமைத்துவிடுகின்றன. இவ்வாறாக, அதிகாரத்திற்கான விருப்பு மனதின் உள்ளார்ந்த (immanence) பண்பாக மாறியுள்ளது. அதாவது, விருப்பு அதிகாரவேட்கை என்கிற இயல்புணர்ச்சியாக வடிவமைந்துள்ளது. ஒன்றின்மீதான விருப்பம் அதை அடைவதற்கான அதிகார உணர்வாக மாறும்போது வேட்கையாக வடிவமைகிறது. வேட்கை என்பதை அதிகாரம் செறிந்த விருப்பாற்றல் எனலாம். குறிப்பாக, விருப்பு அதிகாரப்பாய்விற்கான வெளியாக கட்டப்பட்டுள்ளது. விருப்பின் திடவடிவமாக மாறிவிட்ட மனம் அதிகாரத்தின் நுண்-இயங்கு வெளியாக உள்ளது. அல்லது மனமாக கட்டமைக்கப்பட்ட இருமைவாத கருத்தாக்கம் அதிகாரத்திற்கான உற்பத்திக்களனாகவும், அதன் வழி சமூக அதிகாரத்தை நிலைநிறுத்திக்கொள்வதற்கு வழிவகுப்பதாகவும் உள்ளது. மனம் அதிகாரத்தின் நுண்-வேதிச்செயலாக உள்ளது. அதுதான் அதிகாரத்திற்கான வேட்கையாக நீட்ஷேவால் வர்ணிக்கப்பட்டது. அதுதான் உழைப்பின் அந்நியமாதலுக்கு காரணமாக மார்க்ஸால் வர்ணிக்கப்பட்டது. அதுதான் பாலியலுக்கான வேட்கையாக பிராய்டால் வர்ணிக்கப்பட்டது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;(தொடரும்)&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;- ஜமாலன் 16-04-2011 &lt;a href="mailto:jamalan.tamil@gmail.com"&gt;jamalan.tamil@gmail.com&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;மந்திரச்சிமிழ் - (ஏப்ரல் 2011 மார்ச் 2012) – 7 இதழில் வெளிவந்துள்ள எனது கட்டுரை பகுதியாக பிரித்து வெளியிடப்படுகிறது.&amp;#160; புத்தகச்சந்தையில் தற்போது அன்னம் புத்தக நிலையத்தில் இவ்விதழ் கிடைக்கும். உள்ளடக்கத்தை கீழ்கணட் இணைப்பை கிளிக் செய்து பார்த்துகொள்ளலாம்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://issuu.com/jamalan/docs/contents"&gt;http://issuu.com/jamalan/docs/contents&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;div align="justify"&gt;   &lt;hr align="left" size="1" width="33%" /&gt;&lt;/div&gt;  &lt;div align="justify"&gt;அடிக்குறிப்புகள்.&lt;/div&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref1_1452" name="_ftn1_1452"&gt;&lt;font size="1"&gt;[1]&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; இடிபல் என்கிற ஆங்கில உச்சரிப்பு தெரியாததால் இதனை ஓடிபல் என்பதாக முன்பு பயன்படுத்தினேன். தெகார்த்தே என்பதும் தெகார்த் என்ற உச்சரிப்பு தெரியாமல் பயன்படுத்தி உள்ளேன். இப்படி பெயர்ச்சொல்களை உச்சரிப்பதில் பல மாறுபாடுகள் மொழிக்கு ஏற்ப உள்ளன. ஆனால், சரியாக உச்சரிக்க தெரியாததால் அந்த சிந்தனையே தெரியாத அறிவற்றவன் என்பதான கருத்தை உருவாக்கி மகிழ்பவர்களுக்குதான் இந்த குறிப்பு. மோகன்தாஸ் கரம்சந்த காந்தியை சரியா உச்சரிக்க தெரியாத ஒரு ஆங்கிலேய சிந்தனையாளரை நாம் இப்படி முட்டாளாக கருதவதில்லை என்பதை மட்டும் கவனத்தில் கொள்ளவேண்டும்.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref2_1452" name="_ftn2_1452"&gt;&lt;font size="1"&gt;[2]&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; தெல்லூஸ்-கத்தாரி ஒரு கருத்தாக்கத்தை வடிவமைக்கும், கண்டுபிடிக்கும், கட்டமைக்கும் ஒரு கலையாகப் தத்துவத்தை பார்க்கிறார்கள். Philosophy is the art of forming, inventing and fabricating concepts. - Deleuze and Guattari தங்களது What is Philosophy என்கிற நூலில்&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref3_1452" name="_ftn3_1452"&gt;&lt;font size="1"&gt;[3]&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; Imagination, Elimiatocism and the Pre-History of Consciousness by Nigel J.T. Thomas – California State University, Los Angels. 1998. http://www.imagery-imagination.com/ieph/ieph.htm&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref4_1452" name="_ftn4_1452"&gt;&lt;font size="1"&gt;[4]&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; Same article &lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref5_1452" name="_ftn5_1452"&gt;&lt;font size="1"&gt;[5]&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; Page-2:Essays on the Concept of Mind in Early-Modern Philosophy - Edited by Petr Glombíček and James Hill- Cambridge Scholars Publishing -2010&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref6_1452" name="_ftn6_1452"&gt;&lt;font size="1"&gt;[6]&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font size="1"&gt; அதேநூல்&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4997678103589622995-2819396947186558639?l=jamalantamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jamalantamil.blogspot.com/feeds/2819396947186558639/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4997678103589622995&amp;postID=2819396947186558639' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/2819396947186558639'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/2819396947186558639'/><link rel='alternate' type='text/html' href='http://jamalantamil.blogspot.com/2012/01/1-1.html' title='இடிபல்[1] முக்கோணத்தில் சிக்கிய கார்டீசிய உடல் – பிராய்டின் மூடுண்ட கனவுகள் - 1'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_8N14Ygk6t2s/TD2IBpou7AI/AAAAAAAACGY/SiQFgAcaiAU/s72-c/freud_wideweb__430x395.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-4103418243147261370</id><published>2012-01-05T00:49:00.000+03:00</published><updated>2012-01-05T01:00:44.022+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ் ஈழம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்திய அரசு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திராவிடம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சாதியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழக அரசு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அயோத்தி'/><title type='text'>கிழக்கின் ”திராவிட இயக்க வரலாறு”</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;img style="display: inline; margin-left: 0px; margin-right: 0px" align="left" src="https://www.nhm.in/img/978-81-8493-598-1_b.jpg" /&gt;கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டு உள்ள &lt;a href="http://rmuthukumar.com/?tag=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81" target="_blank"&gt;ஆர். முத்துக்குமார்&lt;/a&gt; எழுதிய திராவிட இயக்க வரலாறு படித்துக்கொண்டு உள்ளேன். முதல்பாகம் திமுக வரலாறும், இரண்டாம் பாகம் அதிமுக துவகத்துடன் ஜெயலலிதா வரை எழுதப்பட்டு உள்ளது. எம்ஜியார் ரசிகனாக அரசியலில் ஈடுபடத் துவங்கியவன் என்ற முறையில் சுவராஸ்யமான நாவலைப் படிப்பதைப்போல உள்ளது. அப்படி சொல்வதைவிட பரபரப்பான ஆந்திர அரசியல் படங்களைப் பார்ப்பதைப்போல உள்ளது என்று சொல்லலாம். ”இருவர்” என்ற Digital Fact-Fiction ஒன்றை மணிரத்னம் ”உருவாக்கி” வெளியிட்டார். எதிர்கால விஷீவல் பார்வையாளர்களுக்காக. அதில் மோகன்லால், பிரகாஷ்ராஜ் நடிப்பும், தமிழ்சினிமா இசைவரலாற்றை நிகழ்த்திக்காட்டிய ரகுமானின் பாடல்கள் அருமையாக இருக்கும். அபப்படத்தில் மணிரத்னம் உள்ளர்த்தமாக பலவேலைகள் செய்து உள்ளார் என்பதும் அதன் அரசியலும் பேச நிறைய உள்ளது. அது ஒருபுறமிருக்கட்டும்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;நான் நான்காம் அல்லது ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது முதன்முதலாக எம்ஜியாருக்காக திமுக கொடிபிடித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளேன். என்ன கழக கட்சிக்காரர்கள் அங்கங்கு சிறுவர்கள் எங்களை நிறுத்தி மிட்டாய் தருவார்கள். ஈழப்போராட்டம் 83-ல் தமிழகத்தில் நிகழ்த்திய அரசியல் சுணாமியில், அரசியல், தத்துவம், சிந்தனை எல்லாம் மாறி சுழற்றி அடித்துவிட்டது. இன்றோ தமாம் விமான நிலையத்தில் கிடைத்த 3 மணிநேர இடைவெளியில் இந்நூல் படிக்க மிகவும் ருசிகரமாக போனது. ஊரில் விளையாடும் “கள்ளா கள்ளா தாப்பட்டி” என்று ஒரு ஆட்டத்தைப்போல ஒருவர் கையில் ஒருவர் ”திராவிடத்தை” மாற்றி மாற்றி தந்தபடி உள்ளனர். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இந்த ஆட்டம் சிறுவர்கள் சிறுமிகள் சேர்ந்து விளையாடும் ஒன்று. ஒருவர் கையில் ஒரு சிறு கல் வைத்திருப்பார். அவரை மற்றொருவர் துரத்துவார். ஆட்டத்தில் உள்ள மற்றவர்கள் இரண்டு வரிசையாக எதிரெதிராக அமர்ந்திருப்பார்கள். கல்லை வைத்திருப்பவர், சுற்றி சுற்றி ஓடுவார். அமர்ந்திருப்பவர்கள் தங்கள் கையை பின்புறம் வைத்திருப்பார்கள். கல் வைத்திருப்பவர், தன்னை பிடித்துவிடலாம் என்கிற நேரத்தில் கல்லை அமர்ந்திருப்பவர் யாரிடமாவது தந்துவிடுவார். அவர் ஓடுவார், இப்படியே ஆட்டம் தொடரும் பிடிபடும்வரை. அவர்களை பிடிக்கவே முடியாது. காரணம் யார் எப்போ ஆட்டநாயகனாக மாறுவார் என்பதை கையில் உள்ள கல்லே தீர்மாணிக்கும். பார்பனியத்திற்கு எதிராக உருவான திராவிட இயக்கம், பார்பனரின் தலைமையில் வெற்றிபெரும் அளவிற்கு வளர்ந்துவந்து உள்ளது என்றால் எல்லாம் அந்த கைக்குள் மறைத்து வைத்துள்ள கல்லின் மஹிமைதான். ஆட்டக்காரர்கள்தான் மாறுவார்கள். கை மாறும் கல் மாறாது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;கட்டகடைசியில் திராவிடம் தமிழினத்துக்கு எதிரானது என்று சீ&lt;img style="display: inline; margin-left: 0px; margin-right: 0px" align="right" src="https://www.nhm.in/img/978-81-8493-599-8_b.jpg" /&gt;மான் போன்றவர்கள் முழ(ழு)ங்கும் அளவிற்கு திராவிடம் தனக்குள் பிளந்தும் பிணைந்தும் விரிவடைந்து வந்து உள்ளது. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என “சொந்தங்களை“ நோக்கி முழங்கும் சீமான் வரை இவ்வரலாறு தொடரும் போலிருக்கிறது. விடுதலைப்புலிகளின் தலைவர் “தம்பி” வேலுப்பிள்ளை பிரபாகரனை ஆதரித்த “தம்பி” சீமான், பிரபாகரனுக்குபின் ஜெயலலிதாவை ஆதரிப்பதும், காங்கிரஸை எதிர்ப்பதாக சொல்வதும், இந்த நூலின் அடுக்கப்படும் சம்பவங்களை தொடர்பு படுத்தி கோஞ்சம் யோசித்தால் காரணம் புரிந்துவிடும். விடுதலைப்புலிகளின் வளர்ச்சியும், எம்ஜியார், அவருக்குபின் ஜெயலலிதா வளர்ச்சியும், திமுக வீழ்ச்சியும் நிகழ்ந்ததை தற்செயலாக அல்லாமல் தொடர்புபடுத்தி சிந்திக்கும்படி தகவல்வரிசைகள் இந்நூலில் அடுக்கப்பட்டிருப்பது அல்லது சம்பவங்கள் கோர்வையாக நடந்திருப்பது தற்செயலா எனத் தெரியவில்லை. அநேகமாக நண்பர் 3-வது பாகம் எழுதினால், இன்னும் சுவராஸ்யங்கள் கூடலாம். திராவிடத்தில் துவங்கி அது மதவாதமாக, சாதியமாக உருமாறி, எதை படிக்கத் துவங்கினோம் எந்த வரலாறை படிக்கிறோம் என்பதே குழம்பிவிடலாம். திராவிட வரலாற்றைப்போல ஜாலயதார்த்தம் (மதிப்பிற்குரிய எழுத்தளார் பிரேமிளின் மாஜிக்கல் ரியலிசத்திற்கான மொழிபெயர்ப்பு) கொண்ட ஒரு அரசியல் சமூக வரலாறு மற்றொன்று இருக்கமுடியுமா தெரியவில்லை. பல தகவல்கள் இந்நூலில் ஆச்சர்யம் ஊட்டக்கூடியதாக உள்ளது. அசம்பலேஜ் செய்து பல அர்த்தங்களை உருவாக்கலாம். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;எஸ். ராமகிருஷ்ணனின் ராமசாமிகள் வம்ச சரித்திரம் என்கிற கதை திராவிட மற்றும் தமிழ் இலக்கிய ராமசாமிகள் பற்றி பேசும் அருமையான கதை. அக்கதையும் இப்படித்தான் வரலாற்றில் ராமசாமிகள் பல வடிவங்களில் வந்துபோவதை சொல்லும். ஈ.வே.ராமசாமி துவங்கி சுந்தரராமசாமி மற்றும் சோ. ராமசாமி வரை..எத்தனை ராமசாமிகள். பற்றாக்குறைக்கு பாபர் மசூதி ராமசாமி வேறு. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;தமிழவனின் சரித்திரத்தில் படிந்த நிழல்கள் என்கிற நாவல், இந்த திராவிடக்கதையாடலை புனைவாக்கி வரலாற்றை உள்ளோடும் ஒழுங்காக வைத்து எழுதப்பட்டுள்ளது. அதில் பாக்கியத்தாய், பச்சைராஜன், கருணாகரத் தொண்டைமான், மலைமேல் ஒளி, அம்மிக்குழவி என வரும் பாத்திரங்கள் பார்பர் ஒருவனின் வருகையால் மாறும் கதை… இப்படி போகும். இந்நாவல் குறித்த விரிவான விமர்சனத்தை எனது நூலில் வாய்ப்புள்ளவர்கள் வாசிக்கலாம்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;சரி இந்த நூலில் அச்சில் ஏற்பட்ட ஒரு சுவராஸ்யத்தை சுட்டவே இப்பதிவை எழுதினேன். ஜனரஞ்சகமாக பத்திரிக்கைகளின் பத்தி எழுத்து நடையில் எழுதப்பட்டிருந்தாலும் தேதிகள் வாரியாக வரலாற்றை தொகுத்து உள்ளார். அந்நூலில் சமூகநீதி என்கிற 36 வது அத்தியாயத்தில் பக்.265க்குப்பிறகு 42-ம் 43ம் அதன்பின் 268, 269 அதன்பின் 46, 47 என்றும் 273 ற்குபின் 50, 51 அதன்பின் 276, 277ம் தொடர்ந்து 54, 55, 280 என்று உள்ளது. அதாவது பக்கம் இப்படி தொடர்கிறது 265, 42, 43, 268, 269, 46, 47, 272, 273, 50, 51, 276, 277, 54, 55, 280. அச்சே இப்படித்தான் ஆகியுள்ளது. விஷயங்களும் இப்படி தாறுமாறாக நாவல் படிப்பதைப்போல. முந்தைய அத்தியாயங்களில் இறந்துபோன எம்ஜியார் ஜெயலலிதா ஆட்சியில் வந்து திமுகவிற்கு எதிராக தீர்மானம் போடுகிறார். மண்டல் கமிஷன் போராட்டத்தின் தொடர்ச்சியாக பாபர்மசூதி விஷயத்தில் ஜெயலலிதா கோவில் கட்டவேண்டும் என்று பேசிய உடன் எம்ஜியார் தனிக்கட்சி ஆரம்பிக்க யோசிக்கிறார். இப்படியே ஒரு நான்லீனியர் நாவலைப்போல இருக்கிறது. கிழுக்கு பதிப்பகம் இந்த குழப்பத்தை (அல்லது நான் வாஙகிய நூலில் மட்டும் அப்படி உள்ளதா?) அடுத்த பதிவிலாவது சரி செய்வார்களா? அல்லது முழு நூலையும் இப்படி ராண்டமாக மாற்றி இன்னும் சுவராஸ்யமான நான-லினியர் fact-fiction வகை நூலாக வெளியிடுவார்களா? அப்படி வெளியிட்டால் முன்வெளியீட்டு திட்டத்தில் ஒன்றை இப்பவே பதிவு செய்துவிடலாம் என உள்ளேன். )) &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;-ஜமாலன் – 05-12-2011.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4997678103589622995-4103418243147261370?l=jamalantamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jamalantamil.blogspot.com/feeds/4103418243147261370/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4997678103589622995&amp;postID=4103418243147261370' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/4103418243147261370'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/4103418243147261370'/><link rel='alternate' type='text/html' href='http://jamalantamil.blogspot.com/2012/01/blog-post_05.html' title='கிழக்கின் ”திராவிட இயக்க வரலாறு”'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-3463237278458011461</id><published>2012-01-01T01:32:00.000+03:00</published><updated>2012-01-01T01:38:48.876+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><title type='text'>கால அடுக்கு</title><content type='html'>&lt;p&gt;&lt;img src="http://www.chilloutpoint.com/images/2010/09/photos-taken-at-time/photos-taken-at-time-18.jpg" /&gt;வா    &lt;br /&gt;போ    &lt;br /&gt;வரலாம்    &lt;br /&gt;போகலாம்    &lt;br /&gt;வரபோகலாம்    &lt;br /&gt;போகவரலாம்    &lt;br /&gt;வந்துபோகாமல்    &lt;br /&gt;போனதுவராமல்    &lt;br /&gt;வராமலேபோகலாம்    &lt;br /&gt;போகாமலேவரலாம் &lt;/p&gt;  &lt;p&gt;இருந்தும் இல்லாமலும்   &lt;br /&gt;இல்லாமல் இருந்தும்    &lt;br /&gt;வாழ்ந்தும் வாழாமலும்    &lt;br /&gt;வாழாமல் வாழ்ந்தும்    &lt;br /&gt;செத்தும் சாகாமலும்    &lt;br /&gt;சாகாமல் செத்தும் &lt;/p&gt;  &lt;p&gt;இருளில் அடர்ந்து   &lt;br /&gt;வெளிச்சத்தில் படரலாம்    &lt;br /&gt;வெளிச்சத்தில் அடர்ந்து    &lt;br /&gt;இருளில் படலராம்    &lt;br /&gt;இருளில் படர்நது    &lt;br /&gt;வெளிச்சத்தில் அடரலாம்    &lt;br /&gt;வெளிச்சத்தில் படர்ந்து    &lt;br /&gt;இருளில் அடரலாம் &lt;/p&gt;  &lt;p&gt;வரிசைமாத்தி வரிசைமாத்தி வாழ   &lt;br /&gt;நீயாக நான்    &lt;br /&gt;நானாக நீ    &lt;br /&gt;எண்களில் வெறுமையில்    &lt;br /&gt;தலைகுப்பற வீழ்ந்து    &lt;br /&gt;கலைந்தபடி விரிகிறது    &lt;br /&gt;கால அடுக்கு. &lt;/p&gt;  &lt;p&gt;-ஜமாலன் 23-07-2011&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4997678103589622995-3463237278458011461?l=jamalantamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jamalantamil.blogspot.com/feeds/3463237278458011461/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4997678103589622995&amp;postID=3463237278458011461' title='5 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/3463237278458011461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/3463237278458011461'/><link rel='alternate' type='text/html' href='http://jamalantamil.blogspot.com/2012/01/blog-post.html' title='கால அடுக்கு'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-390742214745181998</id><published>2011-12-28T01:32:00.000+03:00</published><updated>2011-12-28T01:33:26.513+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடலரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திறனாய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்ககாலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழகியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Gilles Deleuze'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முபீன் சாதிகா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பின்நவீனத்துவம்'/><title type='text'>திணைதிரிந்த பாலையில் மனம்பிறழ்ந்த குரல்கள் – இறுதி பகுதி : 3</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;a href="http://jamalantamil.blogspot.com/2011/12/1_25.html" target="_blank"&gt;பகுதி – 1&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://jamalantamil.blogspot.com/2011/12/2_26.html" target="_blank"&gt;பகுதி – 2&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://lh3.ggpht.com/-OivGI6Bvrbk/TvpHlomqM2I/AAAAAAAABhc/4q6BBMVVNO4/s1600-h/anbin-aramozhi%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="anbin-aramozhi" border="0" alt="anbin-aramozhi" align="left" src="http://lh4.ggpht.com/-1KSTl-YpEdI/TvpHntCL_uI/AAAAAAAABhk/03zZxNup36Q/anbin-aramozhi_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="208" height="303" /&gt;&lt;/a&gt; காட்சிவிளையாட்டு கவிதைகளாக சிலவற்றை வாசித்து பார்க்கலாம். ”மதில்” கவிதை முதல் வாசிப்பில், ஒரு பாலியல் உந்தம் சார்ந்த கவிதையாக தெரிகிறது. பூனை படிமமாகவும் இருக்கலாம். பூனை போன்றதாகவும் இருக்கலாம். பூனை என்ற பெயர் பெற்றதாக இருக்கலாம். பூனையை பகடி செய்வதாகவும் இருக்கலாம். ஒரு கனவுக்காட்சியாக விரிகிறது இக்கவிதை. இருளில் உறங்கும் ஒருவரின் நள்ளிரவுக்கனவில் நிகழும் காட்சி மதில் மேல் நகரும் பூனை. துணைவிடுத்த விழாநாளில் என்பதில் துணை பிரிந்த ஒரு உடல் காட்சியாகிறது. சங்ககாலத்தில் நிகழ்வதைப்போன்ற காட்சியமைப்பில் இன்றைய ”கள்ளப்பாலியல்”(?) காலந்தாண்டி விகசித்திருப்பதை சொல்லும் கவிதை. இக்கவிதையை தொல்காப்பிய இறைச்சி முறைமையை பயன்படுத்தி திணை அடிப்படையில் வாசித்துப் பார்க்கலாம். கவிதையில் வரும் யாமம் குறிஞ்சித்திணை. அதன் உரிப்பொருள் புணர்ச்சி. கார்காலக் கவின்மரம் என்பதில் கார்காலம் மருதத்திணை. அதன் உரிப்பொருள் ஊடல். கவிதை புணர்ச்சியில் துவங்கி ஊடலில் முடிகிறது. கவிதையின் உள்ளமைப்பின் ஆழ்தளதம் இது. துணையற்ற உடலின் காமம் புணர்ச்சி-ஊடல் என்பதற்கு இடையிலான சிக்கலாக மாறி உள்ளது. ”சுற்றும் நாரும்”..... என்பதால் பாலியல் கள்ளங்கள் பற்றியதற்கான குறிப்பு பொருள் உள்ளது. பூனை வழக்கு மொழியில் ”கள்ளப்பாலியலின்” ஒரு குறியீடு. பூனையாகுதல் என்கிற நிலையிலேயே ”கள்ளப்பாலியல்” நிகழ்வுகள் நடப்பதும் சகஜம். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;”கண்” கவிதையில் மூன்று காட்சிகள் வருகிறது. சங்கப்பாடலின் அகச்சித்தரிப்பு போன்றதொரு இயற்கை வருணனை. காடு அருவி... குளம் வண்டு... குழலி கண்.. என்பதாக ஒரு சிக்கலான வளர்ச்சி உள்ளது கவிதையில். மேலோட்டமாக இது ஒரு இயற்கை வர்ணனை.. இறைச்சியில் பார்த்தால்.. திரும்பவும் குறிஞ்சி.. மருதம் என்பதாகத்தான் வளர்கிறது. காடு.. குளம்.. இந்த பரப்பில் பயணிக்கிறது கவிதை. இதன் அகப்பரப்பு.. புணர்ச்சி.. ஊடல்.. என்பதாக இருக்கலாம். சிக்கல் என்ன வென்றால் மறையும் கண்.. பொதுவாக புராணிகத் தொன்மத்தில்... கண் என்பது யோனியையும்.. பாம்பு என்பது லிங்கத்தையும் குறிக்கும் அடையாளங்கள். அகக்கண்ணும் ஒன்று உண்டு. மறையும் கண் என்பது இன்னும் கொஞ்சம் நுட்பமாக உள்வாங்கப்படவேண்டும். வளியிலா அருவி. காற்றில்லா அருவி எப்படி வேறிடம் விரையும். தடம் மாறிச் செல்வதாக கொள்ளலாம். காட்சி எளிமையானது. குளத்தின் மலரில் தேன் குடித்த வண்டைக் கண்டு கூவும் குஞ்சின் வாயில் பச்சைக்காட்டில் தடம்மாறிச் செல்லும் அருவியில் உள்ள நதிமீன் ஓடும். இது ஒரு அகக்காட்சியாக கண்ணில் தோன்றி மறைகிறது. இது ஒருவகை உணவுச்சுழற்சிபோல.. இரைதேடும் வேட்டையாகிப்போன வாழ்வின் சுழற்சி பற்றியது எனலாம். ஒன்றின் உயிர்ப்பு மற்றொன்றின் இரை என்கிற உள்ளோட்டம் ஒன்று உள்ளது இதில்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;கருத்தாக்க விளையாட்டாக சில கவிதைகளை வாசித்து பார்க்கலாம். ”புகைந்திட்ட பசுஞ் சாம்பல்” இக்கவிதை மொழி புணரப்பட்ட நிலையில் இணைத்து எழுதப்பட்டுள்ளது. இதனை கீழ்கண்டவாறு பிரித்து பொருள்கொள்ளலாம். பெரும்பாலான கவிதைகளில் முபீன் இத்தகைய உத்தியை கையாள்கிறார். சொற்களை இணைத்து சப்தக்கூறுகளாக பிரிப்பது. சற்று தமிழ் இலக்கணமுறைப்படி வார்த்தைகளை பிரித்து வாசிக்கவேண்டும். இப்படி பிரிக்கமுடியாமை வாசிப்பிற்கான சங்கடத்தை தருவதாக உள்ளது. மொழிப்பரிச்சயமற்ற வாசிப்பாளர் இக்கவிதைகளை எதிர்கொள்வதில் பெரும் இடர்ப்பாட்டை அடைகிறார்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;குழையுந் தீ திறன் நள்ளும் மாலை&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;மஞ்சிளம் கவ்வியது இல்லாது ஆகினும்   &lt;br /&gt;இவ்வுயரில் ஆகாதா எம் மஜ்ஜையும் மேவி அங்கனத்தில்    &lt;br /&gt;உலகம் முயங்கல் இல்லாது உய்யச் சிறும் விளை நீலத்தில்    &lt;br /&gt;ஆகாயத்து உய்யும் முகை அந்தியில் அகவி இடமாகத் திட பசுஞ் சுவையது உவப்ப    &lt;br /&gt;மையல் ஆலில் அலய யவ்வனத் தீகை அடர்கோவை பகரும்    &lt;br /&gt;லிங்கம் யார்த்திட்ட கையறு வெளிர் சாந்த மிக    &lt;br /&gt;மடுவுடன் அது அவ்விய அடங்கா உரு பரந்தக்கப் பொன் கண்ணின்    &lt;br /&gt;நக நைய்ய அல்லாக அதிற்பட நாடி இன்னி இக்கரும் புகை    &lt;br /&gt;அகலல் ஆகா மந்தையின் நந்தியின் இடர் பசுமை கலில்    &lt;br /&gt;உலவி கண்ணி அங்க அயித் திறம் அடர் சாம்பலாலே.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;திருநீற்றில் துவங்கும் இக்கவிதை பசு இடபம் லிங்கம் என சுத்தமான சைவசிந்தாந்த கவிதையாக உள்ளது. இது திருமந்திரத்தை நினைவூட்டக்கூடியது. சைவ ஆகமத்தில் முக்கியமானது திருமந்திரம். மாடு மேய்த்துக்கொண்டிருந்த மூலன் ஒருநாள் ஈசனால் ஆட்கொள்ளப்பட்டு திருமந்திரம் எழுதியதாகக் கதை உண்டு.&amp;#160; “தன்னை நன்றாக தமிழ் செய்யும் பொருட்டு என்னை படைத்தனன் இறைவன்” என்கிறார் திருமூலர். சிவத்தை சைவ சித்தாந்தத்தை தமிழ் படுத்தியது திருமந்திரம். அதைப்போல் இக்கவிதை ஏதோ ஒன்றை தமிழ்படுத்த முயல்கிறது. இப்படி சைவக் கருத்தாக்க விளையாட்டாக தமிழ் மொழியை போலச் செய்கிறது இக்கவிதை.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;“இடைச்செருகல்“ தொல்காப்பியத்தின் ஐம்புலன் வரையறையை இடையீடு செய்கிறது. தொல்காப்பியம் உயிர்களை புலன் அடிப்படையில் வகைப்படுத்தியதை இக்கவிதை, புலனற்ற நிலையில் எதிர்நிலையில் வகைப்படுத்தி இடைச்செருகல் செய்கிறது. நிறை உள்ளது உற்றறியக்கூடியது என்றால் நிறையற்றதை என்ன செய்வது? என்பதாக மனம் என்கிற ஆறாம் அறிவுவரை இக்கேள்வியை நீட்டிச் செல்கிறது கவிதை. ஆராயும் அறிவற்ற மனம் மனமற்றது என்பதாக புலனின் நுட்பங்களை பயன்படுத்தாதவர்களை இந்த வகைப்பாட்டிற்குள் வைத்து விளையாடும் ஒரு கருத்தாக்க விளையாட்டு இக்கவிதை. புலனின் கூர்திறத்தை வலியுறுத்துகிறது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;“இன்மை..நிகர்..உயிர்..புகா..அறா..துயில்..புல..ஆழ..ஓடும்..களி..கூட எனும் எழுத்து...“ என்ற கவிதை தொல்காப்பியத்தின் எழுத்து பிறப்பியல் சூத்திரத்தை போலச்செய்யும் கவிதை. அதாவது எழுத்தின் வரைபட விளக்கமாக காட்டி, அதன் சப்தக்கூறை நீக்கிவிடுகிறது. தொல்காப்பிய எழுத்து பிறப்பியலில், எழுத்தின் சப்த உருவாக்கம் பற்றிய சூத்திரங்களை வடித்தார். இக்கவிதை எழுத்தை அதன் வரைபட விளக்கமாக மாற்றி விவரிக்கிறது. ஒருவகையான பேச்சு எழுத்து என்கிற முரணாக தொல்காப்பியத்துடன் விளையாடும் கவிதை இது. “அவளகரம் அவனகரம்“ இக்கவிதையும் ளகரம் னகரம் என்கிற மொழியின் சப்த வித்தியாசம் எப்படி பால்வேறுபாட்டு நிலையாக பாலினமாதலை குறிநிலைப்படுத்துகிறது என்பதை பகடி செய்யும் கவிதை.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;“அன்பின் ஆறாமொழி“ அன்பை எப்படி எல்லாம் உருவகப்படுத்தியும், படிமப்படுத்தியும். காட்சிப்படுத்தியும் மொழிவழியாக அன்பு என்பதை சொல்லி மாளமுடியாத நிலையாக உள்ள இலக்கிய-காதல்-அன்பு என்கிற மொழிதலை விளக்கும் கவிதை. “அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ்“ என்கிற வள்ளுவத்தின் நவீன மொழிதலாக உள்ளது. இன்றுவரை தாழ்கிடைக்காத தவிப்பாக உள்ளது இந்த அன்பும், காதலும் என்கிற எள்ளலாக இதை வாசிக்கலாம்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;தமிழ் கவிதைகளில் சித்திரக்கவி எனப்படும் பழைய வகைப்பட்ட வரைபடக் கவிதைகளை உருவாக்கி வரைபட விளையாட்டாக எழுதப்பட்ட கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. பாம்பு நெளியும் வடிவில் பத்திகளை எதிர் எதிராக பிரித்து எழுதப்பட்ட கவிதை “அரவக்கனா“. இக்கவிதைக்கு இடையில் உள்ள வெற்றிடத்தை உற்று நோக்கினால் கருப்பெழுத்துக்கள் மறைந்து இடையில் உள்ள வெள்ளை வெற்றிடம் பாம்பாக நெளிவதைக் காணலாம். ஒருவகையான கட்புலக் கவிதை இது. இக்கவிதையை மரபான உளவியலில் வாசித்தால்.. (மரபான உளவியல் சிந்தனைகளை விட்டு விலகிச் செல்லும் ஒன்றைப் பற்றி சிந்திக்கிறேன் என்பதால்) இது ஆதித் தொல்மனப் படிமமான அரவம் என்பதைக் குறிக்கும் லிபிடனல் ஆற்றல் அல்லது உட்செறிக்கப்பட்ட பாலியல் ஆற்றல் பற்றியதாக வாசிக்கலாம். கனவுகளில் பாம்பு என்பது ஆதிக்காலம் முதல் ஆண்குறியின் (லிங்கம்) குறியீடுதான். இது ஏவாளின் தொன்மத்தில் துவங்குகிறது. பாம்பு பரமபதத்தில் தீமையாக சித்தரிக்கப்படுதல் என்பதும் பாலியல் தீமை என்கிற மதம் சார்ந்த கருத்துப்புனைவின் ஒரு குறியியல் விளையாட்டு வடிவம்தான். சின்ன சின்ன ஏணிகளில் முன்னேறி பாம்பால் (பாலியலால்) தீண்டப்பட்டவன் தாழ்நிலைக்கு வந்த வாழ்வை துவக்க வேண்டும் என்பதே பரமபதத்தின் உள்சட்டகம். பெரிய பாம்பு கடித்தால் சனியன் பிடித்துவிட்டது என்பார்கள். சின்ன சின்ன பாம்புகளும், தற்காலிக பாலியல் விருப்பை குறிப்பதே. கவிதையின் ஆழ்தளம் இந்த ஆண்குறியாதிக்க பாலியல் பற்றியதாகவே உள்ளது. இக்கவிதை பரமபத வரைபடத்தை வைத்து எழுதப்பட்டள்ளது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;கவிதையில் நாகத்தின் ரத்தின படிகம் துவங்கி முழுதும் பாலியல் குறியீடாக வளர்கிறது. கவிதையை முடிக்கும் வரிகள் அருமை. முயங்கிய சேர்ப்பில் மறந்து / தயங்கிய கூடலில் தொலைந்து /இயங்கிய சூதில் கலைந்து /பதுங்கிய வேடத்தில் அலைந்து / பறிபோனது பரமபதத்து படி. பாண்டவர்களின் சூதாட்டத்தை நினைவூட்டுகிறது. பெண் உறவை, உடமையாக்கி அவளது உடலை வைத்து சூதாடிய கதைதானே அது. பரமபத விளையட்டிற்குள் சிக்கிக்கொண்டுள்ள வரலாறு மற்றும் உடல்கள் பற்றிய அறிவை சிந்திக்கத் தூண்டுகிறது. சொற்களின் அர்த்தங்களை நீக்கிவிட்டு சப்தங்களில் விளையாடுவதில் திளைக்கும் இவரது கவிதை பாணியில் இது சற்றே வித்தியாசமானது. இருந்தும், விடம்-படம்-இடம்-தடம்-உடன்.. என வரும் இந்த வார்த்தைகளின் சப்தசேர்க்கை லயத்தை தருவதாக உள்ளது. &amp;quot;இணைபிரிந்த மோகஊழ்&amp;quot; நல்ல சொற்சேர்க்கை. கவிதைக்குள் காதல், ஊடல், கூடல், முயங்கல், திளைத்தல் என்கிற ஒரு வாசிப்பும் வந்துபோகிறது. காதல், களவு, காமம் என்கிற மொழிச் சேர்க்கைக்குள்ளும் நகர்கிறது கவிதை. வழக்கமான தத்துவச் சிக்கல்கள் பற்றிய மாயாவதம் இல்லாமல் மனதின் உள்மனப் படிமங்களின் நுட்பத்தில் நகர்கிறது கவிதை. இது சற்றே ஆழ்மனதின் ஒட்டுதலுடன் வெளிப்பட்ட &amp;quot;நான்&amp;quot; உள்ள கவிதையா? &amp;quot;நானி&amp;quot;ன் துயர் வெளிப்படும் கவிதையா?&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;“அமிழும் உலகு“ மணற்கடிகை வடிவில் எழுதப்பட்டுள்ள கவிதை. உலகம் காலத்தில் மேலும் கீழுமாய் குவியும் மணற்துகளாய் உள்ளதை காட்சியாக்கிறது. சொற்கள் காலக்கடிகையின் சிறுதுளையில் மேலிருந்து கீழே வீழ்ந்து கொண்டிருப்பதைப்போல் எழுதப்பட்டுள்ளது. சொற்களின் மணற்குவிப்பு மேலும் கீழுமாய் கடிகையை சுழற்றினால் சொற்களும் மாறி புதிய பொருளைத்தரலாம். உலகம் காலத்தில் மணற்துகளாய் அமிழும் என்கிற படிமம், வரைபட வடிவத்தில் உருவாகுவது இக்கவிதை. “வலி“ கவிதையும் வலி பெருகப்பெருக விரிந்து சென்று வலி மின்னலைப் போல் தோன்றி பெருகிக் கொண்டிருப்பதை வரிகளின் பெருக்கமாக.. வலிக்கும் கணமாகவே கவிதை எழுதப்பட்டுள்ளது. வலியும் கவிதையின் வளர்ச்சியும் ஒன்றாக பெருகுவதாக, அதாவது வலி உணரஉணர பெருகிக்கொண்டிருப்பதை அந்த கணத்தையே மொழியாக்கி எழுதப்பட்ட கவிதை. “குகை வயங்கு கேணி“ என்கிற கவிதையும் கேணி போன்று அரைவட்டவடிவில் எழுதப்பட்டுள்ளது. இக்கவிதைக்குள் முன்சொன்னதைப்போல சொற்கள் பிரிக்கப்படாமல் கோர்த்து எழுதப்பட்டுள்ளது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இத்தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் புரிந்துவிட்டதாகவோ அல்லது விளக்கமுடிந்தவை என்றோ சொல்வதற்கில்லை. புரியாமை என்பது தன்முனைப்பு சார்ந்தது என்ற வகையில், புரியாத ஒன்றை எதிர்மறையாகவோ, புறம்பானதாகவோ பார்க்க வேண்டியதில்லை. இது ஒரு பயிற்சி என்பதாக வாசிப்பை விரிவுபடுத்துகிறது. வாசிப்பில் புதிய சிந்தனைகளைத் தூண்டுவதாக அமைகிறது. புதிய உணர்வுகளை தருவதாக உள்ளது. பழகிய வெளியிலிருந்து அப்புறப்படுத்திவிடுகிறது. புதிய வெளிக்குள் கவர்ந்திழுக்கிறது. இக்கவர்ச்சி ஏற்படுத்தும் கேள்வி இத்தகைய ஒரு புதிய முயற்சி அல்லது மொழிச்சிதைவு கொண்ட படைப்பு உருவாகுவதற்கான தேவை என்ன? இது ஏன் தனிப்போக்காக உருவாகி உள்ளது? ஏன் ஒருவர் இப்படி எழுதமுனைகிறார்? தனக்கென்று தனிப்பாணி உருவாக்க முனையும் தன்முனைப்பா? அல்லது வெறும் நுட்பம் சார்ந்த விளையாட்டா? அல்லது தனக்கு ஏற்பட்ட ஒருவித கனவுநிலை, காட்சிநிலை அல்லது சிந்தனை நிலையின் விளைவா? இயல்புமொழியில், பதனப்படுத்தப்பட்ட வாழ்வில், தெளிந்த அறிவில் புழங்குவதாக நம்பும் நமக்கு ஒரு மனப்பிறழ்ச்சியின் சொல்லாடல் வெளியாக விரிந்து கிடக்கிறது இத்தொகுப்பு. உண்மையில், இயல்பான வாழ்வில் உள்ளவர்களின் மனப்பிறழ்ச்சியை பகடி செய்வதைப்போல, ஒரு தெளிவான சிந்தனையும் இதற்குள் அமைவுற்று உள்ளது. அதற்கான அரசியலும், சூழலும் என்ன என்பதே இக்கவிதைகளை வாசிப்பதற்கான கவர்ச்சியைத் தருகிறது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இக்கவிதைகள் முற்றிலும் தமிழையும் தமிழ்வாழ்வையும் எல்லை நீக்கம் செய்ய முயல்கிறது. தமிழை உருதுபோலவோ அல்லது உருதை தமிழ்போலவோ சிந்தித்து எழுதப்பட்டிருக்கலாம். அதற்கு பின்புலமாக ஆங்கில அறிவும், கோட்பாடுகளும் துணை செய்திருக்கலாம். கோட்பாட்டு ரீதியாக. அது ஏன்? என்கிற கேள்வி உள்ளது. தமிழ்ச் சமூகத்தில் ஏன் இப்படி ஒரு போக்கு உருவாகுகிறது என்பது முக்கியம். மௌனி, புதுமைபித்தன், பிரமிள் போன்று இந்த போக்கிற்குள்ளும் ஒரு சமூக மனம் உள்ளது. அது வேதனை கொள்கிறது. அந்த வேதனையை வெளிப்படுத்த ஒரு ரகசிய மொழியைத் தேடுகிறது. அந்த மொழிமூலம் பெருமொழியாக பாசிசமாக உருவெடுக்கும் ஒரு மொழியை நிராகரிக்கவும் அல்லது அதை புரியாமல் செய்யவும் ஆன ஒரு பித்துநிலை மொழிவிளையாட்டை நிகழ்த்துகிறது. அவ்விளையாட்டுதான் இக்கவிதைகள். அதை சராசரி தமிழ்மனம் வாசிக்கமுடியாது. அப்படி வாசிக்க முடியாமல் போனது ஏன்? என்பதில்தான் அதற்கான அரசியல் அடங்கி உள்ளது. அது தனியான ஆய்வு. தமிழ் இனம் இந்துப் பெருமதமாக மாற்றப்பட்டிருப்பது இந்த தமிழ் இன, மொழி மேலாண்மை சைவப்பாசிசத்தில்தான். இது இவருக்குள் ஒருவித நெருக்கடியை எதிர்ப்பை உருவாக்கி உள்ளது. அதை சொல்ல மொழியின் கண்காணிப்பிலிருந்து தப்பி ஒரு ரகசிய மொழியை உருவாக்குகிறார். அதுவே அவரது கவிதைகளாக மாறி உள்ளது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இவரது கவிதைகளில் வரும் மிருகங்கள் பற்றிய சில குறிப்புகள் முக்கியமானவை. நிறைய கவிதைகளில் மிருகங்கள் என்பது சொற்களாக, படிமங்களாக, உடல்களாக, காட்சிகளாக, சப்தங்களாக அதன் தன்மையில் மாறிய நிலையில் எழுதப்பட்டுள்ளன. மிருகங்களாதால் அதாவது “பிக்கமிங் அனிமல்“ என்பதாக மனித தன்னிலையிலிருந்து விலகி ஒரு மிருகமாக உருவாகுதல் என்ற நிலை எனலாம். மனிதமொழியை மிருகங்களின் பேச்சுமொழி வழியாக எல்லை நீக்கம் செய்வதும், மனப்பிறழ்ச்சியின் நாடகமாக சொல் உற்பத்தியாக மாறிவிட்ட குழந்தைமையின் ஸ்கிசோவாக வெளிப்படுவதும் மனம்பிறழ்ந்த இந்த சமூகத்திற்குதான். உண்மையில் அதுதான் வாழ்வதற்கான தெளிவான வெளி என்பதை முன்வைக்கிறது இக்கவிதைகள்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;பிரஞ்சு சிந்தனையாளர்களான டெல்யுஸ்-கத்தாரி காஃப்காவை வாசித்து முன்வைத்த சிறுவாரி இலக்கியம் (மைனர் லிட்டரேச்சர் என்பதற்கான தமிழ் சொல்லாக இது பாவிக்கப்படுகிறது. சிறுபான்மை இலக்கியம் என்பது பொருத்தமானதாக இல்லை என்பதால்.) என்பதற்கு மூன்று பண்புகளை சொல்கிறார்கள். 1. மொழியின் எல்லை நீக்கம் 2. அரசியலில் இடிபல்-பேமலி&amp;#160; நீக்கம் 3. குழுத்தன்மை அதாவது தனிமனிதன் தன்னிலையின்மை குழுப்பேச்சாக வெளிப்படுதல். இக்கவிதைகளில் ஊடாடும் இம்மூன்று பண்புகளையும் மேலே விளக்கியுள்ளோம். தமிழ் பெருமொழியாக மத-இனவாத மொழியாக பெரியார் சொன்ன கறைபடிந்த மொழியாக மாறிவிட்ட நிலையில், அதை எல்லை நீக்கம் செய்கிறது இக்கவிதைகள். பழந்தமிழ் சொற்களால் நவீன தமிழ் மறுக்கப்பட்டு, சங்ககால மொழி நவீன இலக்கியபரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. கவிதைகளில் காதல், கற்பனாவாதம், யதார்த்தவாதம், இலட்சியவாதம், பெண்ணியம் இப்படியாக பெருங்கதையாடல் சார்ந்த &lt;a href="http://lh3.ggpht.com/-4wh0ilDaV3w/TvpHp0q9WFI/AAAAAAAABhs/jNbi0dk69UQ/s1600-h/anbin-aramozhi.jpg1%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="anbin-aramozhi.jpg1" border="0" alt="anbin-aramozhi.jpg1" align="left" src="http://lh3.ggpht.com/-CqvRAFScN3E/TvpHr9o1UqI/AAAAAAAABh0/SOkzbBgKMuM/anbin-aramozhi.jpg1_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="210" height="314" /&gt;&lt;/a&gt;ஆர்ப்பாட்டங்கள் இல்லை. கவிதைகளில் தற்காலக் குடும்பம், அரசு உள்ளிட்ட எந்த நிறுவனங்களும், தாய்-மகன்-குடும்பம்-காதல் உள்ளிட்ட மனிதார்த்த இருப்பும் அதன் இடிபலாக்க சொல்லாடல்களின் பாற்பட்ட தன்னிலைகளும் இல்லை. முற்றிலுமாக அரசியல் சார்ந்த தன்னிலைகள் நீக்கப்பட்டு உள்ளது. இதில் அடையாளப்படுத்திக் கொள்வதற்கான அரசியல் எதுவும் இல்லை. இதன் அரசியல் சமூவயப்பட்டதாக இல்லாமல், ஒரு உடலின் அது உருவாக்கி வாழும் மொழியின் மூலக்கூறுகளின் அரசியலாக உள்ளது. அதாவது மொழிசார்ந்த அரசியலே இக்கவிதைகளின் அரசியல். இதைமீறி இக்கவிதைகள் பற்றிய மேலதிக விமர்சனங்களை இந்த அறிமுக உரையில் தவிர்க்கலாம். குறிப்பாக ஒன்றைச் சுட்டலாம், இக்கவிதைகள் எல்லாம் ஒருவகை மாயாவாத சொல்லாடலுக்குள் சிக்கிவிட்ட தமிழ்மொழியின் மதவாத இறுக்கத்தை பகடி செய்வதாக. இப்படியாக இக்கவிதையின் வாசிப்பில் நாம் ஒரு பாலைவனத்தில் திக்கற்று எல்லைகளை வரைந்து செல்வதைப்போல செல்கிறது கவிதை.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;ஜமாலன் - 01-10-2011.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4997678103589622995-390742214745181998?l=jamalantamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jamalantamil.blogspot.com/feeds/390742214745181998/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4997678103589622995&amp;postID=390742214745181998' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/390742214745181998'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/390742214745181998'/><link rel='alternate' type='text/html' href='http://jamalantamil.blogspot.com/2011/12/3_28.html' title='திணைதிரிந்த பாலையில் மனம்பிறழ்ந்த குரல்கள் – இறுதி பகுதி : 3'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh4.ggpht.com/-1KSTl-YpEdI/TvpHntCL_uI/AAAAAAAABhk/03zZxNup36Q/s72-c/anbin-aramozhi_thumb%25255B2%25255D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-8345380569502279479</id><published>2011-12-26T23:43:00.000+03:00</published><updated>2011-12-26T23:44:39.834+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திறனாய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்ககாலம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அழகியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முபீன் சாதிகா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பின்நவீனத்துவம்'/><title type='text'>திணைதிரிந்த பாலையில் மனம்பிறழ்ந்த குரல்கள் – பகுதி : 2</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;a href="http://jamalantamil.blogspot.com/2011/12/1_25.html" target="_blank"&gt;பகுதி - 1&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://lh6.ggpht.com/-awkxYYzQxk4/TvjcrW0MyaI/AAAAAAAABhM/1LX7LByM9DU/s1600-h/anbin-aramozhi%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="anbin-aramozhi" border="0" alt="anbin-aramozhi" align="left" src="http://lh3.ggpht.com/-qjiTtzX04HM/TvjctBSSHcI/AAAAAAAABhU/5exFxTuQEPU/anbin-aramozhi_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="210" height="307" /&gt;&lt;/a&gt; தமிழில் கவிதையாக இன்று அறியப்பட்டவற்றை விலக்கித் தள்ளிவிட்டு, சங்ககால மொழிநடையை தற்போதைய சமூக உணர்விற்குள் கொண்டு வருவதால், இக்கவிதைகள் சொல்விளையாட்டு, பிம்பவிளையாட்டு, காட்சிவிளையாட்டு, கருத்தாக்கவிளையாட்டு, வடிவவிளையாட்டு என ஐந்துவகையான மொழிவிளையாட்டுகளை நிகழ்த்துவதாக அல்லது இவ்வகை விளையாட்டுகளாக வகைப்படுத்தி வாசித்துக் கொள்ளலாம்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;முதல் கவிதை உண்ணகர... சொல்விளையாட்டாக உள்ள இக்கவிதை மொழி மற்றும் உணவு எந்திரமான வாய் உற்பவிக்கும் சப்தங்களை எல்லை நீக்கம் செய்து அர்த்தங்களாக ஆக்குவதில்லை. அப்படி நாம் அர்த்தங்கள் ஆக்குவதற்கு வெளியிலிருந்த மொழியின் இலக்கண எந்திரம் கொண்டு அதை அவிழ்க்க வேண்டியுள்ளது. ''உண்ணகரரொலியாகலொலித்தவிழ்த்தவித்துதி'' என்பதில் உண்ணவும், ஒலிக்கவுமான வாய்-எந்திரத்தின் உற்பத்தியாகக் கவிதைகளை அவிழ்த்துப் புரிந்துகொள்ள வேண்டியதைப் பற்றியதாகத் துவங்குகிறது. உண்ணத் துவங்கிய வாயின் சப்தம், ஒலியாக உணரத்துவங்கி அதை அவிழ்த்து அர்த்தமாக்கிய மொழியின் தோற்றம் பற்றியது இக்கவிதை. ஒலிதான் உலகை உற்பவித்தது என்கிற பிரணவமையவாதத்தின் பகடியாக இதனை வாசிக்கலாம். பைபிளில் வார்த்தை மாம்சமாகியது. குரானில் உலகு குன் எனப்படும் ஆகுக என்ற சொல்லால் படைக்கப்பட்டது. நாதபிரம்மமான சதாசிவம் உலகை ஓம் என்ற ஒலியில் படைத்தது. மொழியின் தோற்றத்தை சொல்லின் புணர்ச்சி விதிகளை மறுத்து ஒலிகளாக்கி நிகழ்த்தும் ஒரு விளையாட்டு. உடலின் புணர்ச்சி சொல்லின் புணர்ச்சியாகி உற்பத்தி நிகழ்வதை நடித்து காட்டும் கவிதை. இதனை மாயை அவிழ்க்க அறிவு அகன்ற நிலை என்றும், ஒலியின் சப்தரூபமாக பிரணவ தோற்றம் என்றும், ஒருவகை சித்தாந்தம் சொல்லும் “நாதரூபம்“ என்றும் மாற்றி வாசிக்கலாம். இத்தொகுப்பின் வேறு சிலக்கவிதைகளில் இந்த சைவசிந்தாந்த நிலைபாடுகள் வெளிப்பட்டுள்ளன. இது கவிதைக் குரலின் மாயை மீதான ஈடுபாடு எனக்கொள்ளலாம். இதனை சொற்களின் அடிப்படையில் வாசித்தால், அதாவது பித்துநிலையில் உருவாகும் ஒலித்தல்களாக. சித்தமும் பித்தமும் சொற்களாக பிணைந்தும் பிரிந்தும் ஊடாடும் ஒரு நிலை. மேலும், இதற்கு உட்பொருள் தேடக்கூடாது என்கிற விளையாட்டாக உள்ளது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;மொழிவிளையாட்டிற்கு சான்றாக “சிறு பண்“ என்ற மற்றொரு கவிதையை வாசிக்கலாம். இது ஒரு குழந்தைமை தர்க்கத்தைக் கொண்ட கவிதை. குழந்தைகளின் உலகில், நிகழ்கால உலகு என்பது எல்லை நீக்கப்பட்டிருக்கும். குழந்தைகள் தாங்கள் புழங்கும் உலகில், அதற்கான தர்க்கவிதிகளுக்கு உட்பட்ட பொருட்களை உருமாற்றி அதில் வாழ்வார்கள். ஒரு நீளமான குச்சி அவர்களது உலகில் கத்தியாகவோ, அல்லது வேறு ஒரு பொருளாகவோ இருக்கலாம். இயல்பான மனிதர்களான நமக்குதான் அது குச்சி. அக்குழந்தைகள் அதை தங்களது உலகிற்கான பொருளாக பாவிப்பதைப்போல, அவர்களது பேச்சும் அந்த காட்சிக்காண் உலகில், அவர்களது தனி மொழிசார்ந்த ஒன்றாக வெளிப்படும். “சர்ர்ர்” என்ற ஒரு சத்தம் அவர்களுக்கு ஏதோ ஒரு வாகனத்தை குறிப்பதாக வெளிப்படும். இப்படி ஒரு குழந்தைமை சார்ந்த உலகின் உண்மையை-நம்பத்தகுந்ததாக (சிமிலேட்) செய்யப்பட்ட ஒரு வெளியில் புழங்கும் தனிமொழியாக இக்கவிதை இருக்கிறது. சில கவிதைகள் இத்தகைய குழந்தைமை மொழி விளையாட்டைக் கொண்டவையாகவே உள்ளன. இக்கவிதை ஒருவகை பண் அல்லது பாடல். அதில் முடியும் சொல்லில் துவங்கும் அடுத்த வரி. மற்றபடி வரிகளில் தொடர்ச்சி இல்லை. சிறுகுழந்தைகளின் பண்கள் இப்படித்தான் உருவாகும். அதில் தொடர்ச்சியிருப்பதில்லை. அவர்களது நிகழ்த்துதலில் உள்ள பாத்திரமாக வெளிப்படும் வார்த்தைகள். அதில் ராகம் இருக்கும். அர்த்தம் அக்குழந்தைகளுக்கு இருக்கும், நமக்கு இருக்காது. ”முள்ளினுள் பழத்தை: வேர்” இது ஒரு குழந்தைகளின் விடுகதை வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது. “என்றாய் பாவாய்” கவிதையும் இரு குழுந்தைகள் எதிரும் புதிருமாக நின்று கொண்டு விளையாடும் வார்த்தை விளையாட்டு. முதல் வரியை திருப்பிச் சொல்லும் இரண்டாம் வரி. இரண்டும் இரண்டுவித பொருள்களைத் தருவதாக அமைகிறது என்பதே இந்த விளையாட்டின் சுவராஸ்யம். முதல் வரியின் துவங்கும் சொல்லில் இரண்டாம் வரி முடிகிறது. சொற்களின் வரிசை அர்த்தங்களின் வரிசையை உருவாக்குகிறது என்பதே இதன் விளையாட்டு. ஒரு சொல் கர்த்தாவாக ஒன்றிலும், காரணராக ஒன்றிலும் அமையலாம். சொல்லின் இடம் அதை தீர்மானிக்கிறது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;“ஒருசொல் அல்லது மறுசொல்“ கவிதை வாக்கியங்களை மடக்கி எழுதி கவிதையாக்கும் தமிழ் கவிதைச் சூழலின் அவலத்தை நீட்டி, சொற்களை மடக்கி எழுதிப் பார்க்கும் விளையாட்டாகத் தோன்றுகிறது. சொல், மறுசொல் என்கிற பழகிய சொற்களின் படையணிவகுப்பாக மாறிவிட்ட கவிதை சூழலின் பகடியாகத் தோன்றுகிறது. சொற்களை குவித்துவிட்டு அதற்கு அர்த்தம் தேடச்சொல்லும் வாசகனை பார்த்து நகைப்பதைப் போல உள்ளது. நுட்பமாக அதன் சொற் பிரயோகங்களை கூறுகாண் வாசிப்பில் அடுக்கி யோசித்தால், இது சிவன் பற்றிய அவனது திருக்கோலம் மற்றும் நடனம் பற்றிய வரைவடிவக் கவிதையாக தோற்றம் கொள்கிறது. கவிதையின் முடிவு, பதிகங்கள் போல “இருப்பேனை” என்று முடிவதும் அதனால்தானோ? &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;”திரு(நிகராகி)வுளமே”. இதில் அடைப்புக் குறிக்குள் உள்ள வார்த்தைகள் விளக்கமாக மட்டுமின்றி வாசிப்பினை ஒரு குறிப்பிட்ட நிலையில் நிறுத்த முனைபவையாக உள்ளதை விளக்குவதாக உள்ளது. மதப்பிரதிகளின் மந்திரங்களை இப்படித்தான் மறுவிளக்கமாக்கி தரமுனைவார்கள் மதவாதிகள். சான்றாக, குரானின் சூராக்களை நேரடியாக பொருள் கொள்ளவிடாமல், இப்படி அடைப்புக்குறிக்குள் வார்த்தைகளை போட்டு அவர்களது பிரதியாக மாற்றி நம்மை வாசிக்க வைப்பார்கள். அத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எழுதப்பட்டதைப்போல உள்ளது இக்கவிதை. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;“ஐயை” தாய் தெய்வத்துடன் தொடர்புடைய சொற்குவியல்களால் நிரப்பப்பட்ட கவிதை. மூன்று சொற்களைக் கொண்ட கணத்தைப் போன்ற கணிதவியல் சூத்திரங்களாக சொற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கணத்திலும் உள்ள சொற்களின் பொருள் உறவைப் புரிந்துகொள்ளும்படி தூண்டும் இக்கவிதை, பண்டைய அருணகிரிநாதர் பதிகங்களைப் போன்ற தோற்றத்தை தருவதாக உள்ளது. சொற்களின் இணைவுகள் இல்லாமல், வாக்கியங்களாக இல்லாத மொழியின் ஒரு வகை கணித விளையாட்டு. மனித மூளையில் சொற்களின் கணங்கள் இப்படித்தான் உருவாகி உள்ளது. ஐயை என்பது மும்மைகளின் கணங்களாக உள்ளதை இப்படியொரு கணிதமாக மாற்றி முன்வைக்க முனைகிறது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;”இறுதியும், முதலும்” இரு சொற்களின் கணங்களாக உள்ளது. இது ஒரு வகை மனப்பிறழ்ச்சியின் ஒலி வெளிப்பாடாக உள்ளது. அடர்வு என்கிற பொருள் கொண்ட ”துதை” என்கிற கவிதையும் வெட்டுக்கணம் போன்ற ஓர் எழுத்து இரண்டு எழுத்துக்களின் பொதுவாக நின்று இரண்டு வேறுபட்ட பொருளை தருவது. சான்றாக ம(ர)ண என்பதில் மரண மற்றும் ரண என்பதில் ர என்பது பொது எழுத்தாக இருப்பது. ரணத்துடன் தொடர்புடைய மரண என்பதாகக் கொள்ளலாம். அதே போல் நட(ன) என்பதில் நட என்பதும் நடன என்பதும் ஒரே வடிவத்தின் இரண்டு இயக்கமாக உள்ளது. எழுத்துக்களின் சப்த இணைவு, சொற்களின் பெருக்கத்தை உருவாக்கி அர்த்தமாக மொழி அமைவுறுவதை நிகழ்த்துவதாக உள்ளது. வழக்கமான உணர்வு சார்ந்த நிகழ்வுகள் பற்றியதாக இல்லாமல் சொற்களின் விளையாட்டாக மொழி பற்றிய ஆய்வாக அமைந்தவை இவ்வகை கவிதைகள். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;”வானினதுமானினிதுமீனினிதுகானினிதுதேனிதுஊனினதுபொன்னிதுநான்” இதுபோன்று சில கவிதைகளில் திரும்ப திரும்ப ஒலிக்கும் சொற்களின் சலிப்பூட்டும் குரலாக வெளிப்பாடு கொள்வதைக் காணலாம். வாழ்வின் அயற்சி மட்டுமின்றி, ஒட்டுதலற்ற தன்மையால் உருவாகும் ஏற்றத்தாழ்வற்ற குரலாக (மொனாடோனி) வெளிப்பாடு கொள்வது என்பது இத்தகைய மொழிவிளையாட்டுக் கவிதைகளின் ஒரு குறிப்பிட்ட அம்சமாக உள்ளது. இக்கவிதைகள் ஒலிக்குறிப்புகளாக மட்டுமே உள்ளவையாக உள்ளன. ஒரு குழுந்தைமையின் தன்மையில் வெளிப்பாடு கொள்ளும் இதனை இன்றைய நவீனத்துவ வாழ்வில் ஏற்பட்ட அயற்சி மற்றும் பரோனியாவின் வெளிப்பாட்டை நிகழ்த்திக்காட்டும் ஒரு பகடியாகக் கொள்ளலாம். ஒருவகையில் இக்கவிதைகள் பின்நவீன-பரோடி எனலாம். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;பிம்ப-விளையாட்டுக் கவிதைகளாக சிலவற்றை வாசித்து பார்க்கலாம். “பச்சைவிடம்”, கவிதைக்குள் சொற்களாக ஒரு பாம்பின் பிம்பம் நடனமிடுகிறது. “நிற்கும் படத்தில் கொல்ல/விடமிடற்றின் பச்சை” - என்ற வரிகள் பாம்பு என்கிற படிமத்தினை உணர்த்தும் சொற்கள். “கல் கக்கி ஒளி பாயும் / நெளிவை சுருக்கும்” - ஒளிபாயும் கல்லை கக்கி என்பது பாம்பின் நவரத்தினக் கல்கக்கும் ஒரு நாட்டுப்புற நம்பிக்கை பற்றியது. கவிதையின் முதல் பகுதியில் கக்கப்படும் கல். அந்த கல்லின் ஒளியில் நிகழும் பாம்பின் நடனம், சொற்களின் நடனமாக துவங்குகிறது. கவிதை அதன் வடிவத்தில் நின்று சொற்களின் இசையில் காட்சியாக்க முனைகிறது அந்த நடனத்தை. “ஒளி/சுடர்/விழி/பாரா/ஒளியில்” இச்சொற்கள் அந்த நடனத்தின் காட்சியை விளக்குவதைக் காணலாம். ஒளியாக, சுடராக, விழிபாரா ஒளியில் கண்கூசும் ஒளியில் அந்நடனம் நிகழ்கிறது. ஒளியே நடனமாக நிகழ்கிறது. இப்படியே அந்நடனத்தின் பல்வேறு அபிநயங்களை சொல்லிச் செல்லும் சொற்கள். இரண்டாம் பகுதியில் நடனத்தின் இறுதி நிலையை எய்துவதற்கான சரிவு துவங்குகிறது. இசையில் அவரோகணம் என்பதைப்போல. “நிற்கும் / நிலையா / நில் / நிலைக்க / நிலையும்” நிலையற்றதான ஒரு மயக்க நிலையை அடைகிறது. பாம்பின் பச்சை விடமானது ஒரு நவரத்தினக்கல்லாக மாறி அதன் ஒளியில் நிகழும் நடனமே கவிதையாகி உள்ளது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;உயிர் என்பதே ஒரு பிம்பமாக வெளிப்படும் கவிதை ”ஒட்டுயிர்”. நோய் முற்றிய அல்லது நெற்றிப்பொட்டில் வலி தெறிக்கும் ஓர் உயிர் (நாய் அல்லது பூனை) ஒன்று கலந்து மாறுவதைப்பற்றியதாக உள்ளது. காரணம் பைரவ புனுகு என்பது இதன் திறப்பாக அமைந்ததால். இது மெட்டாமார்பசிஸ் என்கிற உருமாற்ற வகை கிடையாது, மியுட்டேஷன் (mutation) என்று உயிரியல் பரிணாமத்தில் நிகழும் ஒரு மாற்றம். கலந்துயிர் வடிவம் என்கிற சொல்லாட்சி வழி இது விளக்கப்படுகிறது. பூனை மீசை சுருங்க நாயுடன் கலந்துயிராக ஒட்டுயிராக மாறுகிறது. பாதியில் நின்றுபோன ஒருவகை கம்ப்யூட்டர் அனிமேஷனாகக் கூட வாசிக்கலாம். நாய் பூனை என்பதை உருவகங்களாகக் கொண்டு வேறு விதமான குணநலனுள்ள கலந்துயிர்களாக சமூக உயிர்களைப் பற்றியதாக வாசிக்கலாம். ஆனால் அது மிகை-இடையீடாக-ஓவர் இண்டர்பிரட்டேஷனாக - ஆகிவிடக்கூடாது. கவிதை ஒட்டுயிர் பிறப்பின் வலியை உணர்த்துவதாக உள்ளது. புலவி நாறுதல் பிரிவாற்றல் போன்றவற்றின் அடியாக இதனை பாலியல் சார்ந்ததாக வாசிக்கலாம். பூனையும் - நாயும் காதல்-புணர்ச்சி-பிரிதல் என்பதாகவும் இதில் சில குறிப்புகள் உள்ளன. அதாவது, உச்சநிலை உருவாக்கும் மதம் மீறியதான கலவி பற்றியதாக இந்த ஒட்டுயிர் வாசிக்கப்படலாம். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;(தொடரும்)&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;- ஜமாலன் - ஜெத்தா, சவுதி அரேபியா - 01-10-2011.&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4997678103589622995-8345380569502279479?l=jamalantamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jamalantamil.blogspot.com/feeds/8345380569502279479/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4997678103589622995&amp;postID=8345380569502279479' title='0 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/8345380569502279479'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/8345380569502279479'/><link rel='alternate' type='text/html' href='http://jamalantamil.blogspot.com/2011/12/2_26.html' title='திணைதிரிந்த பாலையில் மனம்பிறழ்ந்த குரல்கள் – பகுதி : 2'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh3.ggpht.com/-qjiTtzX04HM/TvjctBSSHcI/AAAAAAAABhU/5exFxTuQEPU/s72-c/anbin-aramozhi_thumb%25255B2%25255D.jpg?imgmax=800' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-6449262842173044534</id><published>2011-12-25T23:27:00.000+03:00</published><updated>2011-12-25T23:32:11.701+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திறனாய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இலக்கியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Gilles Deleuze'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாசித்தவைப் பற்றி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முபீன் சாதிகா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பின்நவீனத்துவம்'/><title type='text'>திணைதிரிந்த பாலையில் மனம்பிறழ்ந்த குரல்கள் – பகுதி : 1</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;font color="#000080"&gt;பாலம் பதிப்பகம் வெளியிட்ட &lt;a href="http://mubeensadhika.blogspot.com" target="_blank"&gt;முபீன் சாதிகாவின்&lt;/a&gt; அன்பின் ஆறாமொழி கவிதை தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை பகுதிகளாக பிரித்து வெளியிடப்படுகிறது.&lt;/font&gt;&lt;/p&gt;  &lt;blockquote&gt;   &lt;p align="justify"&gt;&amp;#160;&lt;/p&gt;    &lt;p align="justify"&gt;தன்னிலை என்பது இல்லை: பேச்சின் தொகுப்பு வரிசை ஒழுங்கமைப்பு மட்டுமே உள்ளது, மேலும் இலக்கியம் இவ்வரிசை ஒழுங்கமைப்பினை வெளிப்படுத்துகிறது, அவை புறத்திற்கு தரப்படுபவை போன்றவை அல்ல, ஆனால் குரூரமான அதிகாரத்திலிருந்து அல்லது புரட்சிகர சக்திகள் கட்டமைக்கப்படுவதிலிருந்து வருவதைப் போன்றது&lt;a href="#_ftn1_5934" name="_ftnref1_5934"&gt;[1]&lt;/a&gt;. &lt;/p&gt;    &lt;p align="justify"&gt;– ஜீல் டெல்யுஸ் &amp;amp; பிலிக்ஸ் கட்டாரி (Kafka: Towards A Minor Literature Ch.3 Page:18).&lt;/p&gt; &lt;/blockquote&gt;  &lt;p align="justify"&gt;இக்கவிதைகளை தொகுப்பாக வாசிக்கையில், காஃப்கா என்று ஓர் எழுத்தாளன் தனக்காக எழுதுகிறான் என்று மௌனி சொன்னதைப்போல இவ்விருவரும் தனக்காக எழுதினார்கள் என்று முபீன் சாதிகா என்கிற இக்கவிஞர் சொல்லக்கூடும் என எண்ணத் தோன்றுகிறது. காரணம், அவர்களின் புனைவுகளில் உள்ள புரியாமையே இக்கவிதைகளுடன் ஏற்படும் முதல் பரிச்சயம். இப்படி சொல்வதால், இக்கவிஞரை இலக்கிய மாஸ்டர்களாக அறியப்படும் அவர்களுக்கு இணையாக வைப்பதான வழக்கமான ஒப்பீட்டு சிந்தனைதரும் மேல்-கீழ் தோற்றத்தையோ கற்பனையோ கொள்ளவேண்டியதில்லை. இவ்வொப்பீடு அவர்களது படைப்பு வெளிப்பாடு கொள்ளும் நுட்பம் சார்ந்தே இங்கு கவனத்தில் கொள்ளப்படுகிறது. ஒப்பீட்டிற்குக் காரணம், புரியாமை என்கிற ஒற்றுமை மட்டுமல்ல, மொழியை சிதைப்பதன் வழியாக, இலக்கியம் என்ற வகைமையை வாழ்தலுக்கான வெளியாக மாற்றிக் கொள்வதும், பெரும்பான்மையினர் மொழியை அவர்களைவிட ஒரு குறிப்பான வடிவத்தில் பயன்படுத்தும் முறை, பரிமாற்றுமொழியை கையாளும் திறன், தங்களது பூர்வீகமொழியில் அரூபமாக சிந்திக்கும்முறை, என்பதாக வழக்குமொழி (வர்னாகுலர்), பரிமாற்றுமொழி (வெகிகுலர்) மற்றும் தொன்மமொழி (மித்திக்கல்) என்கிற மும்மொழியில் இயங்கிய தன்மை எனலாம். இப்படி இயங்குவதால் பெருமொழியினை எல்லை நீக்கம் செய்து, அங்கு பரிச்சயமற்ற மாற்றுவடிவம் ஒன்றை முன்வைப்பவர்களாக உள்ளனர். இக்கவிதைகள் பரிச்சயமான மொழியில், பரிச்சயமற்ற வடிவத்தில், பழக்கமற்ற உணர்வுகளுடன் முன்வைக்கப்பட்டுள்ளதே, புரியாமைக்கான காரணம் என எண்ணத்தோன்றுகிறது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;புரியாமை என்பது என்ன? என்ற கேள்வி முக்கியமானது. புரியாமை அர்த்தமாக்கலோடு உறவுடையது. அர்த்தமாக்கல் மொழியின் அரசியலோடு உறவுடையது. எனவே, புரியாமை மொழிசார்ந்த அரசியலோடு அல்லது வாசிப்பின் அரசியலோடு தொடர்புடையதாக மாறிவிடுகிறது. தெளிவாகவும், அர்த்தம் உள்ளதாகவும், ஒழுங்கமைப்பிற்கு உட்பட்டதாகவும் இருக்கவேண்டும் என்ற ஒருவகை “மதவாதம்”, “அரசுவாதம்” மற்றும் “நிறுவனவாதம்” என்கிற இருக்கும் நிலையை காப்பதும், அதில் மகிழ்வடைவதும் அல்லது அதில் துயறுருவதும் ஆன இன்றைய அமைப்பை அப்படியே ஏற்பதாகும். இக்கவிதைகள் அதற்கு எதிரானவையாக உள்ளன என்பதே இதை வாசிக்க தூண்டும் முதல் விஷயம். ஒருவகையில் இக்கவிதையின் அரசியல் பழகிய செண்டிமெண்டலான உணர்வுகளை பகடி செய்வதும், புதிய உணர்வுகளுக்கான உந்துதலை முன்வைப்பதும், சிலவேளை மொழியின் சப்தங்களை வெளிப்படுத்தும் மனப்பிறழ்ச்சியின் குரலாகவும் வெளிப்பட்டுள்ளது. அதனால் சிதைவுற்ற குரலை ஒழுங்காக உணர்ந்து கொண்டிருக்கும் மனநிலையில் வாசிக்கமுடியாமல் அல்லது அப்படி வாசித்தபின் இது ஒரு பைத்தியக்குரல் என்பதாக ஒதுங்கிவிடும் பாதுகாப்பு மனநிலைக்கு தள்ளிவிடுகிறது. வாசிப்பின் மனநிலை இப்படி என்றால், எழுதப்பட்ட மனநிலை என்னவாக இருந்திருக்கலாம் என்று சற்றே ஊகித்துப் பார்க்கலாம்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;மௌனி போன்று எழுத்தை ஓர் உடலாகக் கொண்டாடும் தன்மை இக் கவிதையில் உள்ளது. அதனோடு விளையாட, கோபிக்க, காதல் கொள்ள, காமுற, சண்டையிட இப்படி ஓர் அணுக்கமான சக உடலாக எழுத்தை கொள்பவர்கள் மிகக் குறைவு. இது ஒருவகை எழுத்தில் வாழ்தல். அல்லது எழுத்தை ஓர் உருவாகுதலாகக் (becoming) கொள்ளுதல். அவர்கள்தான் “உனக்கு புரிவதைப்பற்றி எனக்குக் கவலையில்லை“ என்று எழுதுவார்கள். ஏனென்றால் எழுத்தும், எழுதுதலும் ஒரு செயல்பாடு என்கிற நிலைதாண்டி அதுவாக மாறிவிடுவது. அதாவது எழுத்தின் வழி ஆசிரிய உடலாக உருவாகி, எழுத்திற்கு பின் சமூக உடலாக மாறுதல். இப்படித்தான் எழுத்து ஒரு மர்மமாக, மாயமாக, கூடுவிட்டு கூடுபாயும் மந்திரமாக மாறிவிடுகிறது. இது ஒரு சித்துநிலை. பித்துநிலை அல்ல. சித்துநிலையில் பிரக்ஞை தெளிவுடன் இயங்கும். பித்து நிலையில் பிரக்ஞை தெளிவற்றதாக ஆகிவிடும். இது வித்தியாசமான ஒரு படைப்பாதல் நிலை.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இப்படைப்பாதலால் இக்கவிதைகள் மரபார்ந்த சொல்லாட்சிகள் வழி மரபுகளை எல்லைநீக்கம் (de-territorialize) செய்துவிடுகிறது. மரபாக வாசித்துப் பழகியவரின் இடம் நீக்கப்பட்டுவிட்டதால், இடமற்ற வெளியில் நின்று வாசிக்கும் பழக்கமற்ற வாசிப்பில் கவிதை பித்தின் உளறலாக தெரிகிறது. அடையாளம் மறுக்கும் இம்மொழியால் வாசகன் பெரும் மனக்கிலேசத்தை அடைந்துவிடுகிறான். மொழியின் இலக்கணம் சிதையும் போது வாசகனின் பதனப்படுத்தப்பட்ட வாழ்வும் சிதைந்துவிடுகிறது. விதிமறைந்து நிகழும் இவ்விளையாட்டில், விதியோடு போனவர்கள் விளையாட முடியா திகைப்பில் ஆழ்ந்து “புரியாமை”யின் விதிக்குள் சிக்கிக்கொள்கிறார்கள். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;“புரியாமை” பற்றிய இந்த அலசல் நுகர்விற்கான படைப்பு பற்றியதல்ல. படைப்பாக சொல்லப்படுகிற ஒன்றைப் பற்றியது. பரவசத்தின் ஓர் உச்சநிலையை தரும் படைப்பு செயல்பாடு பற்றியது. அத்தகைய பரவசநிலையை இக்கவிதைக்குள் பயணிக்கும் வாசகமனம் அடைய உழைப்பு அவசியப்படுகிறது. இந்த உழைப்பின் வழி நுகர்வாளனை வாசகனாக, வாசகனை ஆசிரியனாக உருவாக்கும் கவிதைகள். அதனால் படைப்பவரின் தன்னிலையாக்கமாக அல்லது தன்னிலை வெளிப்பாடாக இல்லை. மொழிவினைபடும் ஓர் உடலின் பாதிப்பாக உள்ளது. கவிதைக்குள் “நான்“ என்கிற தன்னிலை மையம் இல்லை. அதாவது மொழி பதிக்கவேண்டியதை எழுத்தாக பதித்துவிட்டு வெளியேறிவிடுவதைப்போல உள்ளது. ”வானினது அது நின் வான் இனிது இனிது வான் இது இது வான்” இப்படி சொல்லப்பட வேண்டியதை ”வானினதுவதுநின்வானினிதினிதுவானிதுவிதுவான்” இப்படி சொல்லக்கூடிய “நான்“ மையமுள்ள நானாக இருக்கமுடியாது. அது போதம் சிதைந்ததாக, மொழியை வெளித்தள்ளி தனது தன்னிலையை சிதைத்துக்கொள்வதாக மட்டுமே இருக்கமுடியும். இப்படி, சில கவிதைகளில் வெறும் ஒலிக்குறிப்புகளும், உணர்வை அல்லது ஒரு கற்பனையை அல்லது ஒரு படிமத்தை வைத்து சிந்திப்பது நிகழ்கிறது. சிந்தித்தவற்றை சொற்களைக் கொண்டு ஓவியங்களாக வரைவது. வரையப்பட்ட ஓவியத்திற்கான மன இயக்கமாக கவித்துவத்தை முன்வைப்பது இப்படியாகக் கவிதை ஒரு வரைகலையாக மாறி உள்ளது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;மொழிகொண்டு வரையப்பட்ட மையமற்ற ஒரு பின்நவீன ஓவியம் போன்றவை இக்கவிதைகள். பின்நவீனத்துவ நிலை முன்வைக்கும் மொழி விளையாட்டுகள் தான் இக்கவிதைகள். மிகவும் உக்கிரமான தோற்றத்தைத் தந்தாலும், அத்தோற்றத்திற்குள் மொழியை கலைத்துப்போட்டு விளையாட அழைக்கும் தன்மையே உள்ளது. வாசிப்பவரை உக்கிரமடைய வைக்கும் தொந்தரவை தந்துகொண்டு கவிதையின் மொழி நம்மை பார்த்து நகைப்பதைப் போல நகைத்து நகர்ந்துவிடுகிறது. இக்கவிதைகள் ஒருவகை மொழியின் சோதனைமுயற்சி எனக்கொண்டால், சோதனை முயற்சி எப்போதும் அர்த்தமாக்கலுக்கு ஒரு மாற்றாகும் என்பதால், அர்த்தமாக்கல் என்கிற பழகிய விளையாட்டிற்கு மாற்றாக அர்த்தமின்மையைப் போன்ற தோற்றம் தருபவையாக உள்ளது. ஆனால், கவிதையின் இந்த விளையாட்டை புரிந்துகொள்வது சவாலாக உள்ளதால் வாசிப்பவர் அயர்ச்சியடைவதாக உள்ளது. வாசகனின் மந்தையான வாசிப்பை சவாலுக்கு அழைக்கிறது. அல்லது பழகிய புரிதலுக்குள் அடைபட மறுக்கிறது. அதை மீறி வாசிப்பவனை வேறு அறிதலுக்கும் சிந்தனைக்கும் நகர்த்துகிறது. ஆசிரியன்-பிரதி-வாசகன் என்கிற முப்பரிமாணத்தில் ஆசிரியன் முற்றிலுமாக மறைந்து போய்விட்ட பிரதி. அதனால் வாசகனிடம் எஞ்சியிருப்பது பிரதியும் வாசிப்பும் &lt;a name="_GoBack"&gt;&lt;/a&gt;மட்டுமே. ஆசிரியனின் சுவடும், தடமும் இல்லாமல் பிரதியில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தைக்கோரும் கவிதைப்பிரதி. ஆசிரியன் என்ன சொன்னான் என்கிற புதிரை விடுவிக்கும் விமர்சன விளையாட்டு சாத்தியமற்றதாக உள்ளது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;பிரதி வாசிப்பவரை வாசகராகவோ அல்லது நுகர்வாளராகவோ மாற்றுகிறது. வாசகராக மாற்றக்கூடிய பிரதிகளை வாசகப்பிரதி அல்லது படைப்பு என்று சொல்லலாம். நுகர்வாளராக மாற்றும் பிரதியை நுகர்வுப்பிரதி அல்லது சரக்கு எனலாம். வாசகப்பிரதியான இக்கவிதைகள் ஆழ்ந்த மற்றும் பலமுறை வாசிப்பிற்கு பிறகே கவிதைக்கான உணர்தலைப் பெறும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது. அதாவது வாசகரை உருவாக்க முனையும் எழுத்துப் பிரதியாக உள்ளது. முதல் வாசிப்பில் கவிதை வாசகனை விலக்கித் தள்ளுகிறது அல்லது மீண்டும் மீண்டும் வாசிக்க நிர்பந்திக்கிறது. ஒருவேளை கவிதை தானே நுகர்வை நிராகரிப்பதாக உள்ளதோ? எப்படியோ? நான் இக்கவிதைகளை அறிந்துகொண்ட முறையை இங்கு முன்வைக்கலாம் என்று நினைக்கிறேன். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;(தொடரும்…)&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;- ஜமாலன் - ஜெத்தா, சவுதி அரேபியா - 01-10-2011.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;குறிப்பு-&lt;/p&gt;  &lt;div align="justify"&gt;   &lt;hr align="left" size="1" width="33%" /&gt;&lt;/div&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref1_5934" name="_ftn1_5934"&gt;[1]&lt;/a&gt; There is no subject: there are only collective arrangements of utterance-and literature expresses these arrangements, not as they are given on the outside, but only as diabolic powers to come or revolutionary forces to be constructed. – Gilles Deleuze and Felix Guattari - (What is minor literature – page 18). &lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4997678103589622995-6449262842173044534?l=jamalantamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jamalantamil.blogspot.com/feeds/6449262842173044534/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4997678103589622995&amp;postID=6449262842173044534' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/6449262842173044534'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/6449262842173044534'/><link rel='alternate' type='text/html' href='http://jamalantamil.blogspot.com/2011/12/1_25.html' title='திணைதிரிந்த பாலையில் மனம்பிறழ்ந்த குரல்கள் – பகுதி : 1'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-5566125866397307944</id><published>2011-12-22T11:39:00.000+03:00</published><updated>2011-12-22T11:43:58.513+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பின்காலனியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடலரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிம் கி-டுக்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Korean Film'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்பட ஆய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொரிய திரைப்படங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Gilles Deleuze'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kim Ki-Duk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பின்நவீனத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>திரையில் விளையாடும் மனப்பிறழ்ச்சி கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள் - பகுதி : 4</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;a href="http://jamalantamil.blogspot.com/2011/12/1.html" target="_blank"&gt;பகுதி –1&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://jamalantamil.blogspot.com/2011/12/2.html" target="_blank"&gt;பகுதி – 2&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://jamalantamil.blogspot.com/2011/12/3.html" target="_blank"&gt;பகுதி - 3&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;கிம் கி-டுக் திரைப்பயணம் &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://lh4.ggpht.com/-V9L9V2UQRWw/TvLtvvXfx_I/AAAAAAAABg8/UGpQzqpuaZs/s1600-h/vlcsnap-2011-08-06-02h41m28s36%25255B4%25255D.png"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="vlcsnap-2011-08-06-02h41m28s36" border="0" alt="vlcsnap-2011-08-06-02h41m28s36" align="left" src="http://lh6.ggpht.com/-Aef7y09AGyI/TvLtyoIFQYI/AAAAAAAABhE/McVE0O3AXEY/vlcsnap-2011-08-06-02h41m28s36_thumb%25255B2%25255D.png?imgmax=800" width="347" height="207" /&gt;&lt;/a&gt; கிம் கி-டுக்கின் படங்கள் ஆசிய காட்டுமிராண்டித்தனத்தை காட்டுவதான ஒரு வாசிப்பை ஐரோப்பிய மையவாதப் பார்வையிலிருந்து தருவிக்கலாம். ஐரோப்பா கீழ்திசை நாடுகளை வர்ணித்த பாலியலும், வன்முறையும் நிறைந்த நாகரீகமற்ற காட்டுமிராண்டிகள் என்கிற கருத்தாக்கத்தை இப்படங்கள் நிதர்சனமாக காட்டுவதாக இதனை நீட்டிக்கலாம். இதன்மூலம் ஐரோப்பா இத்தகைய படங்களை கொண்டாடி முன் வைப்பதன்மூலம், ஒருவித ஐரோப்பிய மையவாத அரசியலை மறுஉருவாக்கம் செய்வதும், அதற்கான சான்றாக இதனை உள்ளீட்டு அளவில் இயக்கமடையச் செய்வதாகவும் கொள்ளலாம். அரேபிய இஸ்லாமியத்திற்கு எதிராக ஈரான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் படங்களை உலகப்படங்கள் என்கிற வகைத்திணையில் ஐரோப்பிய திரைஉலக-தீர்மானிப்பாளர்கள் முன்வைக்கிற அரசியலுடன் இதனை இணைத்துக்காணலாம். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;இவரது படங்கள் முற்றிலும் வித்தியாசமான உடல்களை காட்சிப்படுத்துவதால், குறிப்பாக பெண் உடல்களை கீழ்நிலைப்படுத்துவதாக புரிந்துகொள்ளப்பட்ட பெண்ணியலாளர்களால் புறக்கணிக்கப்பட்டன. இப்படங்ளில் உள்ள உடல்கள் முன்சொன்னதைப்போல யதார்த்த உடல்களாக கருதுவதால் வரும் சிக்கலே இது. சினிமா காட்டும் உடல்கள் யதார்த்த உடல்கள் அல்ல. அவை சினிமாட்டிக் உடல்கள் எனும்போது அந்த உடல்கள் ஏற்படுத்தும் புலனியக்க செயல்பாடுகளே கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். இப்படங்கள் பெண்ணை ஒரு நுகர்வுப்பொருளாகவோ, அல்லது மீக்காமம் கொண்ட யதார்த்த உடல்களாகவோ சித்தரிக்கவில்லை, மாறாக உடலின் சாத்தியப்பாடுகளை விவரிக்க முயல்கிறது. பார்த்து பழகிய புலனிற்குள் ஒரு உடசைலை ஏற்படுத்துகிறது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;அழகியல்ரீதியாக இப்படங்கள் ஒரு இயங்கும் ஓவியங்களைப்போன்று நமக்குள் யதார்த்தை மீறிய ஒரு அழகுணர்ச்சியை கட்டமைக்கிறது. காதல் என்பது அடிப்படையாக உள்ளது இவரது படங்களில். காதலை பலவிதமான சொல்லாடல் தளங்களில் வைத்து ஆராயும் ஒரு திரை முயற்சி. காதலையும் குரோதத்தையும், பாலுறவு, வன்முறை என்கிற மனித மனதின் அடிப்படை இயல்பூக்கங்களை தனது பேசுபொருளாக கொள்வதால், இப்படங்கள் இயல்பு திரிந்த பிம்பங்களின் இயக்கமாக உள்ளது. ஒருவகையில் இப்படங்களை ஆழமன இயக்கமாக கொண்டு வாசிக்கலாம். பொரும்பாலான படங்களிலும் கண்காணிப்பு என்பது அடிப்படிடையான அரசியல் ஆயுதமாக அல்லது மீ-காணுதல் என்பது இன்றைய உடலரசியல் நிலையாக மாறி உள்ளதை சொல்லக்கூடிய காட்சிகள் உள்ளன. அரசு மற்றும் இந்த உலகின் சமூக அதிகாரம் கண்காணிப்பின் வழியே இப்படி தனிமனித உடல்களை தனது அதிகாரத்தின் விருப்புறுதி பாயும் எந்திரங்களாக கட்டமைத்துள்ளது என்பதை பலவிதமாக காட்சிப்படுத்த முனையும் படங்களே இவைகள்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;டெல்யுஸ்-கத்தாரியால் முன்வைக்கப்பட்ட அங்கங்களற்ற உடல் (body without organs) அல்லது உறுப்புகளற்ற உடல்&lt;a href="#_ftn1_3894" name="_ftnref1_3894"&gt;[1]&lt;/a&gt; என்கிற ஒன்றின் ஒரு குறிப்பிட்ட தன்மையை விளக்கக்கூடியதாக உள்ளது இவரது படங்கள். அங்கங்களற்ற உடல் அல்லது உறுப்புகளற்ற உடல் என்பது சமூகவிதிகளினால், சமூக அதிகாரத்தினால் கட்டப்பட்ட எந்த ஒரு அங்கத்திலும் அல்லது அமைப்பிலும் அல்லது நிறுவனத்திலும் (ஆர்கனைசேஷன்) பங்குபெறாத உடல். இந்த உலகை ஒரு அங்கமாக சுருக்கிவிட்ட நிலையில், எந்த ஒன்றும் ஒரு அங்கத்தின் பிரதிநிதியாக மாறிவிட்ட நிலையில், உடலானது ஒரு உயிர்-மருத்துவ அங்கமாக மாறிவிட்ட நிலையில், சமூகத்தின் எந்த விதிமுறைக்கும் மேல்-கீழான அதிகார வரிசைக்கும் உட்படாத, அங்கங்களை இழந்த உடல்களாக மாறிவிட்ட உடல்களுக்கான முயற்சியே கிம் கி-டுக்கின் படங்களில் வரும் உடல்கள் எனலாம். அவர்கள் சமூக-வெளியின் அங்கங்களாக இருப்பதில்லை. எந்த சமூக-அறவிதிக்கும் உட்படுவதில்லை. முற்றிலும் அங்கங்களை விட்டு வெளியேறிய உடல்களாக உள்ளனர். உடலின் விருப்பு என்பது உருவாகி பாய்ந்து செல்லும் புள்ளிகளைக்கொண்ட உடல்களாக உள்ளனர். சமூகத்தின் விருப்பை தனக்குள் பாயவிடும் சமூக-அங்கத்தினராக உள்ள உடல்களாக அல்லாமல், தனக்கான விருப்பை தன்னிலிருந்து பாயச்செய்யும் உடல்களாக உள்ளது. கிக் கி-டுக்கின் திரைப்பட உடல்கள் இத்தகைய அங்கங்ளற்ற உடல்களாக நிறுவனம் சாராத பழகிய அங்கங்களின் (அக்சுவலைஸ்) செயல்பாடுகளை மறுத்து கற்பனார்த்தம் பொருந்திய (விர்ட்சுவலஸை) செயல்பாடுகளில் அதிகம் செயல்படுபவையாக உள்ளன. ஒருவிதமான மனப்பிறழ்ச்சி உடல்கள் அவை. சமூக விதிகளுக்கும், அதன் நிறுவன அமைப்பிற்கும் எதிராக செயல்படும் உடல்கள். இத்தகைய உடல்களை தனது சினிமா மூலம் காட்சிப்படுத்தியதன் மூலம் நமது புலனில் ஒரு மூலக்கூறு மாற்றத்தை செய்ய முயல்கிறது இப்படங்கள்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;(முடிந்தது.)&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;ஜமாலன் (02-07-2011 – 05-09-2011) -&amp;#160; நிழல் அக்.-டிசம்பர் 2011&lt;/p&gt;  &lt;div align="justify"&gt;   &lt;hr align="left" size="1" width="33%" /&gt;&lt;/div&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="#_ftnref1_3894" name="_ftn1_3894"&gt;[1]&lt;/a&gt; Body without organ என்பதை தமிழில் சொல்வதில் உள்ள சிக்கல் ஆர்கன் என்கிற சொல் உறுப்பு (organ) என்பதையும் அமைப்பு (organization) அல்லது நிறுவனம் என்பதையும் குறிக்கும். அ ங்கங்களற்ற அல்லது உறுப்புகளற்ற உடல் என்பதை ஒரு உடலின் உறுப்புகள் அற்ற நிலையாக புரிந்துகொள்ளக்கூடாது. அதாவது சமூகவிதிகளுக்குள் அல்லது எதாவது ஒரு சமூக அங்கத்திற்கு உட்பட்ட உடல் அல்ல என்பதையே குறிக்கும். இன்றைய சமூக வாழ்க்கை என்பது நிறுவனமயமாகிவிட்ட நிலையில், அதாவது நமது உடல் உறுப்பகள்கூட நிறுவனவிதிகளுக்கு உட்பட்டே இயங்குகிறது என்பதாக புரிந்துகொள்ள வேண்டும், இந்நிறுவனங்களின் விதிகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் ஒரு உடலே பன்மைத்தன்மைக் கொண்டதாக, பாசிசத்திற்க எதிரானதாக இருக்கும் என்பது இவர்களது நிலைபாடு. இது ஒரு கருத்தாக்கம் அல்ல. ஒரு இச்சமூகத்திற்க எதிரான சோதனை, செயல்முறை அல்லது பாசிசத்திற்க எதிரான வாழ்நிலை. இது விரிவாக புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று. &lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4997678103589622995-5566125866397307944?l=jamalantamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jamalantamil.blogspot.com/feeds/5566125866397307944/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4997678103589622995&amp;postID=5566125866397307944' title='2 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/5566125866397307944'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/5566125866397307944'/><link rel='alternate' type='text/html' href='http://jamalantamil.blogspot.com/2011/12/4.html' title='திரையில் விளையாடும் மனப்பிறழ்ச்சி கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள் - பகுதி : 4'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://lh6.ggpht.com/-Aef7y09AGyI/TvLtyoIFQYI/AAAAAAAABhE/McVE0O3AXEY/s72-c/vlcsnap-2011-08-06-02h41m28s36_thumb%25255B2%25255D.png?imgmax=800' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-8411243228898731612</id><published>2011-12-20T13:19:00.000+03:00</published><updated>2011-12-20T13:23:53.580+03:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பாலியல் அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடலரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கிம் கி-டுக்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Korean Film'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரைப்பட ஆய்வு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கொரிய திரைப்படங்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Gilles Deleuze'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='காமம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='Kim Ki-Duk'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பெண்ணியம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பின்நவீனத்துவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>திரையில் விளையாடும் மனப்பிறழ்ச்சி கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள் – பகுதி : 3</title><content type='html'>&lt;p align="justify"&gt;&lt;a href="http://jamalantamil.blogspot.com/2011/12/1.html" target="_blank"&gt;பகுதி&amp;#160; -1&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://jamalantamil.blogspot.com/2011/12/2.html" target="_blank"&gt;பகுதி -2&lt;/a&gt;&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://lh6.ggpht.com/-CR__dK2_6ps/TvBhbYss0nI/AAAAAAAABdc/HaMO5usNJ_E/s1600-h/clip_image002%25255B7%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="clip_image002" border="0" hspace="12" alt="clip_image002" align="left" src="http://lh6.ggpht.com/-dBd0EynzUfY/TvBhdSgkGjI/AAAAAAAABdk/RQHVICS9znQ/clip_image002_thumb%25255B4%25255D.jpg?imgmax=800" width="307" height="235" /&gt;&lt;/a&gt;ரியல் பிக்ஷன் (Real Fiction (2000)) சினிமாவிற்குள் எடுக்கப்பட்ட சினிமா இது. எது புனைவு என்பதை மறைத்து விளையாடும் ஒரு படம். உண்மை X புனைவு என்கிற எதிர்மைகளை தகர்த்துவிட்டு உண்மையின் புனைவை காட்டும் படம். ஒரு சாமானியனுக்கு வாய்த்திருப்பது இத்தகைய கனவுகளும், பகற்கனவுகளும் நிறைந்த ஒரு புனைவு உலகம்தான். ஒரு பார்க்கில் அமேச்சுர் ஓவியனாக, படம் வரைந்து தந்து காசு சம்பாரிக்கும் ஒருவன் தனது சூழலுக்கு காரணமானவர்களை, தன்னை சின்ன சின்ன அவமானங்களுக்கு ஆளாக்கியவர்களை தனது புனைவில் பழிவாங்கி தனது ஆழ்மனதின் வேட்கைகளை நிறைவு செய்துகொள்வதே இப்படம். இந்த ஓவியனின் வாழ்வில் நடந்த பல அவமானங்கள், நிராகரிப்புகள், பலமற்றவன் இந்த சமூகத்தில் வாழ்வதில் உள்ள அவலம் ஆகியவற்றை வரிசையாக அடுக்கிச் செல்லும் இக்கதையாடலில், உண்மைபோன்று காட்டப்படும் புனைவுதான் வாழ்க்கை என்பதை சொல்கிறது. ஒரு உடலுக்குள் கட்டமைக்கப்பட்ட மனசாட்சி என்பது எப்படி சுயதணிக்கை மற்றும் கண்காணிப்பினை கொண்ட கார்ட்டீசியன் தியேட்டராக செயல்படுகிறது என்பதையும் பிராய்டிய வேட்கை-நிறைவு பிம்பங்களின் பாதுகாப்பு செயலியக்கமாக மனப்புனைவுகள் எப்படி செயல்படுகிறது என்பதையும் சொல்லும் படம். இப்படத்தில் இந்த மனசாட்சியும், மனமும் உரையாடும் காட்சியின் நாடகீயத்தன்மை ஒரு துப்பாக்கி முனையில் கதையை சொல்லி, இறுதியில் மனசாட்சியை கொன்றுவிட்டு வெளியேறும் மனம், தொடர்ந்து தன்னை அவமதித்தவர்களை வரிசையாக கொன்றுவிட்டு பிறகு யதார்த்தநிலைக்கு திரும்பிவிடும். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;படத்தின் நிகழ்தளம் என்பது யதார்த்தம் அல்ல. அது புனைவான மனோவியல் யதார்த்தம். ஒரு ஆழ்மனப்பரப்பிற்குள் ஓடும் பிம்பங்களின் நாடகீய இயக்கமே இப்படம். இதில் ஆழ்மன இயக்கத்தில் நகரும் பிம்பங்களின் தொடர்ச்சியை ஒரு பெண்ணால் கேமிரா கொண்டு தொடர்ச்சியாக எடுக்கப்படுகிறது. பொதுவாக நாயக பிம்பம் என்பது நாயகிகளின் விழித்திரை என்கிற இயக்க பரப்பிற்குள் செயல்படுவதை தமிழின் பல நாயகபிம்ப படங்களைக்கொண்டு உணரலாம். குறிப்பாக எம்ஜியார், பாக்யராஜ், சத்யராஜ் படங்களில் ஒரு பெண் விழிக்குள்தான் இந்நாயகர்களின் இயக்கம் நிகழ்வதாக ஒரு உள்ளார்ந்த பிம்ப இயக்கம் இருப்பதை உணரலாம். நாயகனின் எல்லா செயல்களையும் ஒரு பெண் விழித்திரைக்குள் அங்கீகரித்து நிகழும் புனைவியக்கமாக இருக்கும். இந்த பெண்விழி என்பதின் மீ-காணுதலை ஒரு கேமராவாக மாற்றி படம் முழுவதும் அக்கேமரா நாயகனை சுற்றி சுற்றி ஒரு பெண்ணால் இயக்கப்படுவதாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த பெண்விழி இப்படத்தில் ஒரு கட்டத்தில் கொல்லப்பட்டுவிடுவதன்மூலம், அந்த மீ-காணுதலின் அரசியல் விமர்சிக்கப்படுகிறது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://lh5.ggpht.com/-8pV5CMqumQs/TvBheSlzV6I/AAAAAAAABds/NVUTnyy1ORo/s1600-h/clip_image002%25255B8%25255D%25255B5%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="clip_image002[8]" border="0" hspace="12" alt="clip_image002[8]" align="left" src="http://lh4.ggpht.com/-DS1y_E6eUK0/TvBhghpxEOI/AAAAAAAABd0/aGTF9r5z4nM/clip_image002%25255B8%25255D_thumb%25255B3%25255D.jpg?imgmax=800" width="314" height="183" /&gt;&lt;/a&gt;2001-ல் எடுக்கப்பட்ட அட்ரஸ் அந்நௌன் (Address Unknown (2001)) அமெரிக்க இராணுவத்தால் கலப்பினமாக உருவான ஒருவனிலிருந்து துவங்கும் கதை. அமெரிக்க ராணுவ முகாம் ஏற்படுத்தும் பண்பாட்டு தாக்கம் என்கிற பின்புலத்தில் விரிந்து செல்கிறது. இப்படத்தில் கண் என்பது ஒரு பாலியலுக்கான காம-பிம்பமாக காட்டப்படுகிறது. முதல்காட்சியில் ஒரு விளையாட்டு துப்பாக்கி தயாரிக்கப்படுவது குளோஸப்பில் துவங்கி, அதை தனது தங்கையின் தலையில் வைத்து பழத்தை சுடுவதாக அவளது கண்ணை சுட்டு அவளது ஒருவிழி தெறிப்பதில் துவங்குகிறது. இக்காட்சியின் பிம்ப செயல்பாடு என்பது, அமெரிக்க ராணுவத்தின் ஊடுறுவல் ஏற்படுத்தும் கலாச்சார தாக்கத்தில், துப்பாக்கி என்பது விழிப்பாவையை போக்கும் ஒரு காம சொல்லாடலாக உணர்த்தப்படுகிறது. விளையாட்டு துப்பாக்கியின் இவ்விபரீதம், நிஜ ராணுவம் ஏற்படுத்தும் விபரீதத்தை சொல்லிச்செல்கிறது. விழியிழந்த பெண் தனது காம இச்சையை தீர்க்க நாயை தனது பாவாடைக்குள் விட்டுக்கொள்வதும், சுயமைதுனம் செய்துகொள்வதும், இரண்டு ரவுடிகளால் பாலியல் பலவந்தத்திற்கு ஆளாகுவதும், இறுதியில் அமெரிக்க இராணுவத்தானால் போதை உண்டு அவனோடும் இணைகிறாள். அமெரிக்க ராணுவத்தான் அவளது விழிப்பாவையை சரி செய்து தரவிரும்பவும் கண்பெறுகிறாள் அவள். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://lh3.ggpht.com/-jZPXph_L-ac/TvBhidop7tI/AAAAAAAABd8/CpiZRpxDX7I/s1600-h/clip_image002%25255B10%25255D%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="clip_image002[10]" border="0" hspace="12" alt="clip_image002[10]" align="left" src="http://lh5.ggpht.com/-tEr64rdPt-k/TvBhkaj7zcI/AAAAAAAABeE/aqox1kILKoQ/clip_image002%25255B10%25255D_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="324" height="185" /&gt;&lt;/a&gt;முற்றிலும் நமது இயல்பான புலன் உணர்வால் உள்வாங்கமுடியாத பிம்பங்களின் கொடூரம் அந்நாட்டின் காலனியம் உருவாக்கி உள்ள மனச்சிதைவை விவரிப்பதாக உள்ளது. இயைபு திரிந்த போர் உருவாக்கிய மனங்களின் கொடூரம். நமக்கு போரின் வலியை உணர்த்திச் செல்கிறது. மகன் தாயின் முலையை அறுத்தல், அவளது கள்ளக்காதலனை, நாயைப்போல நாய்களின் பார்வையில் வைத்து கொல்லுதல், தற்கொலை செய்த மகனை தனது வாழிடத்தில் வைத்து உண்ணுதல்.. இப்படி பழகிய புலனுணர்விற்கு அப்பால் வரும் இப்பிம்பங்கள் தூய்மையான போரில் உறைந்த நமது காலத்தின் பிம்பங்களாக நம் கண்முன் விரிகிறது. போர்க்காலத்தின் கொடூரங்கள் பிம்பமாக்கப்பட்ட இப்படத்தில், போதைதாண்டிய காதலை வலியுறுத்தி, தனக்கு கிடைத்த கண்ணை, காதலனுக்காக தானே குத்திக்கொண்டு விடும் பெண்ணுடன் முடிகிறது. படத்தில் ஏற்கனவே அமெரிக்க இராணுவத்தான் ஒருவனால் பிள்ளையை பெற்று ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்டு ஒரு பழைய பேருந்தில் வாழும் தாய் மகன் கதையில் துவங்கும் படம், மற்றொரு அமெரிக்கனால் கையகப்படுத்தப்படும் பெண் அவனிடமிருந்து விலகி காதலனை சந்திப்பதாக அந்த வட்டம் முடிகிறது. முகவரி அற்றவர்களாக மாற்றப்படும் இராணுவ தாக்குதல்களினால் உருவாகும் வன்முறையைவிட, பண்பாட்டு தாக்குதல் உருவாக்கும் சிதைந்த மனிதர்களின் மனநிலையை காட்சிப்படுத்தும் இப்படத்தில், கண் என்பதன் பிம்பம் முற்றிலும் நமது கண் என்கிற புலனை தாண்டிய ஒரு சினிமாட்டிக் புலனாக கட்டமைக்கப்பட்டுள்ளது. காலனிய எஜமானர்கள் பரப்பும் கலாச்சார ஏகாதிபத்தியத்தை நுட்பமாக சித்தரிக்கும் இப்படம், எப்படி உடல்-பாலியல் தளத்தில் தனது காலனிய அரசியலை கட்டமைக்கிறது என்பதை வெளிப்படுத்திக்காட்டுகிறது. நமது புலனிற்கு ஒரு சவாலாக அமைந்த பிம்பங்களின் தொடர் இயக்கமாக உள்ள இப்படம் உண்மையில் காலனிய கலப்பினமாதலில் முகவரி தெரியாதவர்களைப் பற்றியது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;கோஸ்ட் கார்ட் (&lt;a href="http://www.koreanfilm.org/kfilm02.html#coastguard"&gt;The Coast Guard&lt;/a&gt; (2002)) - பூமியில் பிரிக்கப்பட்டுள்ள ஒரே பகுதி கொரியப்பகுதி எனத்துவங்கும் இப்படம், போருக்கு பிறகு தென்கொரியாவின் கடற்பகுதியை உளவாளிகளின் ஊடுறுவலில் இருந்து பாதுகாக்கும் கடலோரக் காவற்படையைச் சேர்ந்த ஒருவன், எல்லை தாண்டி புணர்ச்சியில் ஈடுபடும் இரு காதலர்களில், அந்த காதலனை உளவாளி என தூரத்திலிருந்து பார்த்து சுட்டுக் கொன்றுவிடுவான். அக்காட்சியில், அப்பெண் கீழே இருக்க அவள் மேல் படர்ந்து புணரும் அக்காதலன், ஒவ்வொரு முறையும் மேலே எழும்பி தனது உடலை அசைத்து இயக்குவது, ஒரு உளவாளி பதுங்கி பாறைக்கு மேல் உளவு பார்ப்பதைப்போல காட்சிப்படுத்தப்பட்டு, அதனால் அவர்களை சுட்டுவிடுவான், ஒரு தேசப்பற்றாள இராணுவ வீரன். இறந்த காதலன் அவளோடு புணர்ந்தநிலையில் அவள்மீது ரத்தவெள்ளத்தில் சரிய, உச்சப்புணர்ச்சியில் நிகழ்ந்த மரணத்தால் மிரண்ட அந்த பெண், அவ்வுடலை தள்ளி விட்டு அவனது கைகளை பிடித்திழுக்க, அக்கை அவளோடு வந்துவிட, காதலனை துண்டான ஒற்றைக்கையுடன் எழும் அப்பெண்ணிற்குள் புணர்ச்சியும், காதலனின் பெயரும் உறைந்துவிட, அவளது காலம் அத்துடன் நின்றுவிடும். சினிமாவில் அதன்பின் வளரும் காலம், அவளது அந்த ஒற்றை வினாடியை தாண்டாத காலத்துடன் நகர்ந்து செல்ல, அந்த நிகழ்வை நடத்தியவன், இராணுவத்தால் பாராட்டப்பெற்றாலும், அவனது குற்ற உணர்ச்சியும், ஊரின் பேச்சும் அவளை மனச்சிதைவிற்கு ஆளாக்கிவிட, இராணுவத்தை விட்டு வெளியேறினாலும், தொடர்ந்து இராணுவத்தான் என்கிற நிலையை தாண்டமுடியாத காலம் அவனுக்குள் உறைந்துவிடும். இப்படி உறைந்த இரண்டு காலங்களுக்கு வெளியே உலகத்தின் காலம் இயங்க, இம்மூன்று காலங்களும் சினிமாவின் அறிதலுக்குள் சிக்கித்தவிப்பதே இப்படம். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://lh4.ggpht.com/-sRB-niIu-0k/TvBhmYxKdMI/AAAAAAAABeM/dkdRbP0KSW8/s1600-h/clip_image002%25255B12%25255D%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="clip_image002[12]" border="0" hspace="12" alt="clip_image002[12]" align="left" src="http://lh3.ggpht.com/-zEvbb6sdgMQ/TvBhoiDEIEI/AAAAAAAABeU/mQ_O-JumYGs/clip_image002%25255B12%25255D_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="307" height="175" /&gt;&lt;/a&gt;அந்த மனச்சிதைவான பெண், தனது சிதைவை தனது அண்ணனிடம் வெளிப்படுத்தும் இடத்தில் உடல்குறித்து வைக்கப்படும் பிம்பம் முக்கியமானது. அவளது அண்ணன் முன்பு அவள் தனது குட்டைப்பாவாடையை தூக்கிக்கொண்டு மூத்திரம் கழிப்பாள். மூத்திரம் பெய்தல் என்பதன்மூலம் பெண்ணுடல் ஒரு வெற்று பிம்பமாக ஆகிவிடுகிறது. வெறுமனே ஆன ஒரு உடல்.. எல்லா உணர்வுகளையும் விட்டொழித்த உடலாக.. தன்னிலையற்ற உடலாக மாறி, நாம் விரும்பி வைத்துள்ள உடலையும் மாற்றியமைக்கிறது. அதன் ஒலி, அதன் இயக்கம் அதன் எல்லா வகையான விருப்பு, வெறுப்புகள் என்ற வகைமைகளும் இனிமேல் நாம் உருவாக்கி வைத்துள்ள சிறையிலிருந்து நீக்கப்பட்டு அது சினிமாவால் படைத்தளிக்கப்பட்ட ஒரு உடலாக மாறிவிடுகிறது. அப்பெண்ணுடல் காமத்தால் ஒரு உடலாக மாறிவிட்ட நிலையில், அந்த ஆணுடல் கொலையால் ஒரு உடலாக மாறிவிடுகிறது. ஆண், பெண் உள்ளிட்ட எந்த ஒரு தன்னிலையுமற்ற இரு உடல்கள், தன்னிலை உள்ள உடல்களாக சினிமாவிற்குள் உள்ள உடல்கள், பார்க்கும் நம் உடல்கள் இவற்றை கேள்விக்கு உட்படுத்துவதாக மாறிவிடுகிறது. உடலும் அதன் சதையும் சினிமாட்டிக் உடலாக சதையாக மாறிவிட நமது சதை மற்றும் உடலுடன் அந்த உடலை இணைத்து, அதன் சதையையும், உடலையும் பெற்றுவிடும் ஒரு “பாதிப்பை“ அது நிகழ்த்திவிடுகிறது. &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://lh4.ggpht.com/-ICoPtZlU_uE/TvBhqTgWStI/AAAAAAAABec/F_lcoTn1M3I/s1600-h/clip_image002%25255B14%25255D%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="clip_image002[14]" border="0" hspace="12" alt="clip_image002[14]" align="left" src="http://lh5.ggpht.com/-W-9eG3GAkCg/TvBhsYpzo-I/AAAAAAAABek/lDMCxN7c78s/clip_image002%25255B14%25255D_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="324" height="185" /&gt;&lt;/a&gt;இப்படத்தின் மற்றொரு பிம்பம், பலராலும் பாலியல் புணர்ச்சி செய்யப்பட்ட அம்மனநிலை சிதைந்த பெண் வயிற்றில் வளரும் சிசுவை, பலவந்தமாக அவளது வயிற்றிற்குள் கைவிட்டு வெளியேற்றியதால், குருதி சொட்ட நடந்து வந்து வீட்டில் உள்ள மீன்தொட்டியில் உள்ளே இறங்கி, அத்தொட்டி முழுவதும் உள்ள நீர் செந்நிறமாக அதில் உள்ள கருப்பாக ஆண்குறிபோன்ற வடிவம் கொண்ட ஒரு மீனை எடுத்து பச்சையாக கடித்து தின்பாள். இயல்வாழ்வில் நம்மால் பார்க்கவோ அல்லது சிந்திக்கவோ முடியாத இந்த பிம்பம், இவ்வுலகின் ஒட்டுமொத்த உறவும், லிங்கமையவாதத்தால் ஆண்குறி வேட்கைக்கானதாக கட்டமைக்கப்பட்டதற்கு எதிரான ஒரு உடலின் வன்முறையாக இங்கு வெளிப்படுகிறது. இது நமது உடல்நிலையில், காமம் என்பதன் குரோதம் எப்படி ஆண்மையமாக செயல்படுகிறது என்பதை உணர்த்துவதாக உள்ளது. அந்த பிம்பம் நமக்கு ஏற்படுத்தும் அசூசைதான், ஒரு உடல் மீதான மலர்ச்சியான உறவின் சாத்தியப்பாட்டை உணர்த்துவதாக உள்ளது. நுட்பமாக இராணுவம் என்பதை இந்த ஆண்குறியாக பிம்பப்படுத்துவதே இப்படத்தின் கதையாடல் எனலாம். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://www.koreanfilm.org/kfilm02.html#badguy"&gt;Bad Guy&lt;/a&gt; (2002) – வணிகரீதியாக வெற்றியைத்தந்த இப்படம், கிம் கி-டுக்கை ஹாலிவுட் படஉலகம் பேசும்படி செய்தது. இப்படத்தின் நாயகனாக வருபவரின் நடிப்பும், அவரது உடல்மொழியும், மனதில் அப்படியே உறைந்துபோகும் ஒன்று. அவ்வளவு நுட்பமாக செதுக்கப்பட்ட ஒரு பாத்திரம் அது. முகத்தில் சமூக புறக்கணிப்பால் உருவான ஒரு ஆழ்ந்த அழுத்தமான சோகம், வெறுப்பு, குரோதம், அதே நேரத்தில் அன்பிற்காக ஏங்கும் ஏக்கம், என ஒட்டுமொத்த உணர்வை முகத்தில் தேக்கி நிற்கும் இப்பாத்திரம், ஒரு பாலியல் தரகன். கிம் கி-டுக்கின் பாத்திரங்கள் எதுவும் மனம் மாறி சமூவயமாகி திருந்துவதோ, &lt;a href="http://lh4.ggpht.com/-sLzTO6_79dc/TvBhtu3R8lI/AAAAAAAABes/mdPH0BSl1bI/s1600-h/clip_image002%25255B16%25255D%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="clip_image002[16]" border="0" hspace="12" alt="clip_image002[16]" align="left" src="http://lh3.ggpht.com/-uAV06bmrTYc/TvBhvtcckeI/AAAAAAAABe0/OcR-TfvffVk/clip_image002%25255B16%25255D_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="324" height="194" /&gt;&lt;/a&gt;உபதேசிப்பதோ இல்லை. இறுதிவரை தனது காதலியைகூட காமத்தரகனாக இருந்து விற்பவனாக வரும் இப்பாத்திரம் சமூகப்புறக்கணிப்பின் நுட்பமான வார்ப்பு. ஒரு பார்க்கில் தனது காதலனுக்காக காத்திருக்கும் அழகிய இளம்பெண் ஒருத்தியால் வசீகரிக்கப்பட்ட இவன், அவள் இவனைக்கண்டு அஞ்சுவதால் ஒருவித உணர்விற்கு ஆட்பட்டு, அவளை பொது இடத்தில் முத்தமிட்டுவிடுவான். பொது இடத்தில் நடந்த இச்சயெலால் அங்கு வந்த இராணுவத்தினர் அவனை அடித்து அவளிடம் மன்னிப்பு கேட்கச் சொல்லும்போது, இறுதிவரை தனது செயலுக்காக வருந்தாதவனாக இருக்கும், அவனை அப்பெண் காறி உமிழந்து அவமானப்படுத்திவிடுவால், அப்பெண்ணை தனது சதிவலைக்குள் கொண்டுவந்து ஒரு விபச்சாரியாக மாற்றி, அவளது செயல்களை வெளிப்புறம் வழியாக பார்க்க முடிந்த கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டு இருப்பான். ஒருவகை கண்காணிப்பு என்பதன் வாயரிஸ்டிக் பாலின்பமாக அதுவே ஒரு மீ-காணுதலாக மாறிவிட்டிருப்பதை நுட்பமாகச் சொல்லிச்செல்லும் கதையாடல். இங்கே போர்ண் படங்கள் உருவாக்கும் மீ-காணுதல் நுட்பம் எப்படி ஒரு உடலை பாலியல் விழைச்சு எந்திரமாக கட்டமைக்கிறது என்பதை உருவகித்துக் காட்டுகிறது இப்படம். போர்ண் படங்கள் பார்ப்பதன் வழியாக உருவாகும் வாயரிஸ்டிக்-இன்பம் பார்வையாளர்கள் அனைவரையும் பாலியல் தரகர்களாக விமர்சிப்பதாக இதனைக் கொள்ளலாம். அவனால் பாலியல்-தொழிலாளியாக மாற்றப்பட்ட அப்பெண் அவன்மீது வெறுப்புக் கொள்வதும், அந்த வெறுப்பு அவன் மீதான் காதலாக மாறுவதும்தான் இப்படத்தின் முக்கியமான சரடு எனலாம். காதலியின் உடல் புனிதம், பரத்தையின் உடல் அசுத்தம் போன்ற சமூக அறமதிப்பீட்டு நிறுவனங்கள் உடலின் அங்கங்களில் உருவாக்கி உள்ள மேல்-கீழ் படிவரிசையை கவிழ்த்துவிடுகிறது இப்படம்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;”இயற்கை எழில் சூழ்ந்த ஜீஸான் நீர்நிலையில் (Jusan Pond) அமைந்துள்ள ஆலயத்தில் வாழும் பௌத்த துறவி வழியாக நம் வாழ்வின் மகிழ்வு, கோபம், துயரம் மற்றும் இன்பம் ஆகியவற்றை விவரிப்பதே என் நோக்கம்” என்று கிம் கி-டுக்கால் எடுக்கப்பட்ட படம் &lt;a href="http://www.koreanfilm.org/kfilm03.html#springsum"&gt;Spring, Summer, Fall, Winter... and Spring&lt;/a&gt; (2003). &lt;a href="http://lh3.ggpht.com/-GctlI1jkLPo/TvBhxE8WXtI/AAAAAAAABe8/NJZ6PWrhX3M/s1600-h/clip_image002%25255B18%25255D%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="clip_image002[18]" border="0" hspace="12" alt="clip_image002[18]" align="left" src="http://lh5.ggpht.com/-1vivzUjU0iI/TvBhy4e5TiI/AAAAAAAABfE/LKo0K247MyY/clip_image002%25255B18%25255D_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="310" height="179" /&gt;&lt;/a&gt;இயற்கை எழிலின் ஒரு ஓவியமாக கேமராவால் வரையப்பட்ட படம் இது. ஒரு மனித வாழ்வில் நிகழும் நான்கு முக்கியகாலங்கள் பருவகாலங்களுடன் ஒப்புமை செய்து எடுக்கப்பட்டுள்ளது. பௌத்தம் சொல்லும் பிறவிச்சுழற்சி என்பதை தனது வழக்கமான காமம், குரோதம் இரண்டைக்கொண்டு விவரிக்கிறது இப்படம். பௌத்தம் தனக்குள் ஒடுக்கிய இவ்விரண்டு இயல்பூக்கங்கள் எப்படி வெளிப்பாடு கொள்கிறது என்பதை நுட்பமாக விளக்கிச் செல்கிறது. பருவகாலங்களும் உடலின் உண்ர்வுகளும் கொள்ளும் கால-பிம்பங்களைக் கொண்டு பெளத்தத்தை விளக்க முனைகிறது. இங்கும் பௌத்தம் என்பது ஒரு கருவியாக எடுத்துரைப்பிற்கான புறவடிவமாக எடுத்தாளப்பட்டாலும், உள்ளார்ந்து பேசப்படுவது, உடலின் உட்செறிந்துள்ள இந்த இயல்பூக்கங்கள் எப்படி மனிதஉடலை வழி நடத்துகின்றன என்பதைதான். ஒரு உடல் தான் ஏற்றுகொண்டுவிட்ட பிம்பத்தை எப்படி காலத்தில் வைத்து நகர்த்த முனைகிறது என்பதையும், அதற்காக அது கொள்ளும் துயரமும்தான் வாழ்தல் என்பதை சொல்வதாகிறது. உலகம் விருப்பையும், அதை அடைவதற்கான வேட்கையையும் கொண்டது என்கிற நிறுவனமயத்தின் அடிப்படையை விவரித்த பௌத்தம் எப்படி சமூகத்தின் மற்றொரு நிறுவன அங்கமாகி உள்ளது என்பதை விமர்சிப்பதாக உள்ளது. இப்படத்தின் குறியீடுகள், பிம்பங்கள் விரிவாக சிதைச்சங்கேதப்படத்தப்பட வேண்டியவை. பருவகாலங்கள் என்பது எப்படி ஒரு காஸ்மிக் விசையின் உள்ளார்ந்த ஆற்றலாக சமூகத்தின் மனப்போக்குகளை உருவாக்கி பெருக்குகிறது என்பதே இப்படத்தின் மையமான பிம்பமாக்கலின் உந்துவிசை. பருவகாலங்களை உடலின் உணர்வுகளுடன் ஒப்புமைப் படுத்துகிறது இப்படம். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;2004-ல் எடுக்கப்பட்ட சமாரிட்டன் கேர்ள் (&lt;a href="http://www.koreanfilm.org/kfilm04.html#samaria"&gt;Samaritan Girl&lt;/a&gt; (2004)) – இரண்டு மாணவிகளின் பாரிஸ் போகும் கனவில் துவங்குகிறது. கிம் கி-டுக்கிற்கு ஐரோப்பா குறிப்பாக பாரிஸ் என்பது ஒரு முக்கியமான புலனறிச் செயல்பாடாக இருந்து, அதன் மீதான பல சரடுகளை அடுக்கும் கதையாடல்களை உருவாக்கிச் செல்வதாக உள்ளது. ஐரோப்பா மீதான ஒருவித காதல்-வெறுப்பு உறவைக் கொண்டவராக உள்ளார். இம்மாணவிகளில் ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு பணம் சம்பாரிப்பார். மற்றொருவர் ஒரு காவல் அதிகாரியின் மகள். இ&lt;a href="http://lh5.ggpht.com/-3F3Jdj3TKIo/TvBh0QPzejI/AAAAAAAABfM/jVJv51XZJak/s1600-h/clip_image002%25255B20%25255D%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="clip_image002[20]" border="0" hspace="12" alt="clip_image002[20]" align="left" src="http://lh4.ggpht.com/-MNS69P-Y_xY/TvBh2GSLwAI/AAAAAAAABfU/JsBtvHnMr1A/clip_image002%25255B20%25255D_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="340" height="194" /&gt;&lt;/a&gt;ருவரில், பாலியல் தொழில்புரியும் பெண் தனது கனவு பிம்பமாக கொள்வது இந்திய தாசியாக இருந்த பண்டைய வசுமித்ரா என்கிற பாத்திரத்தை. வசுமித்ரா எப்படி பாலியலை ஒரு தொழிலாக அன்றி கலையாக கையாண்டார் என்பதை விளக்கும் அப்பெண், தானும் அதனை ஒரு கலையாக கையாள்வாள். பரத்தமை என்பது விக்டோரியன் அறத்திற்குள், கிறித்தவ அறத்திற்குள் பாவமாக குறியிடப்பட்ட நிலையில், கீழைத்தேய அறத்தில் அது ஒரு கலையாக பரிணமித்திருப்பதை சொல்வதாக உள்ளது. இந்த தோழி காவல்துறையின் கெடுபிடியில், தனது உயிரை ஒரு விளையாட்டுப்பொருளாக மாற்றி மாடியிலிருந்து கீழே குதித்துவிடுவாள். தோழி இறந்த பின்னும் அந்த தோழியாக உருவாகுதல் என்பதாக தொடரும் இப்படம், பேர்ட் கேஜ் படத்தின் நகர்புறக் கதையாடல் எனலாம். இதிலும் உடல் என்பதில் உள்ள காமம் எப்படி நுகர்வாக மாறுவதும், அது மற்றொருவரின் குரோத உணர்வை அதிகரிப்பதாகவும் நகர்வது. பெண்ணுடல் காமமாகவும், ஆணுடல் அதனை காப்பதற்கான குரோதம் கொண்டதாகவும் உடல் பற்றிய பிம்பங்களை திரையில் உருவாக்கிகாட்டுவதே கிம் கி-டுக்கின் கதையாடல் உத்தி எனலாம். நிறுவனம், அதற்கு வெளியில் உள்ள உடல்கள், நிறுவனமற்ற உடல் பிம்பத்திற்குள் நிறுவன உடல் பிம்பங்கள் இடம் மாறிப்போவதும், தடம் பற்றி தன்னை உருவாக்கிக் கொள்வதுமான கதையாடல்கள் இவை. ஆண் பெண் என்கிற உடல்கள் காமம் குரோதம் கொண்டும் காதல் போர் கொண்டும் பிம்பமாக்கப்படுவதே இவரது படங்களின் மையமான உத்தி எனலாம். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://www.koreanfilm.org/kfilm04.html#3iron"&gt;3-Iron&lt;/a&gt; (2004) –காலியான வீடு (empty house) என்ற பொருள்கொண்ட இப்படம் சினிமாட்டிக் அறிதலில் ஒரு முக்கியமான படம். இரவு என்பதே இப்படத்தின் &lt;a href="http://lh3.ggpht.com/-LKBeRU6fwOg/TvBh3gsk55I/AAAAAAAABfc/fBo6f5Cg4Ag/s1600-h/clip_image002%25255B22%25255D%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="clip_image002[22]" border="0" hspace="12" alt="clip_image002[22]" align="left" src="http://lh4.ggpht.com/-zglAJvkC9mk/TvBh5h3lYGI/AAAAAAAABfk/hNeWlbCGcbs/clip_image002%25255B22%25255D_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="321" height="184" /&gt;&lt;/a&gt;பிம்பச் செயல்பாடு எனலாம். இரவை பிம்பமாக்கியதன்மூலம், முற்றிலும் புதியதான ஒரு புலனறிச் செயல்பாட்டை செய்கிறது இப்படம். வழக்கமாக காமம், குரோதம் என்பதை இரவின் அகவெளியிலிருந்து வெளியேற்றி பகலின் புறவெளியில் வைத்து பேசுகிறது. இரவுடன் தொடர்புடைய கள்ளமாக அறியப்படும் காம உணர்வை, கொலை, திருட்டு ஆகியவற்றை இரவின் உள்-இருளின் ஒரு அழகியல் செயல்பாடாக மாற்றிவிடுகிறது. யாருமற்ற வீட்டில் இரவில் தங்கிச்செல்லும் ஊமை நாயகன், அவனோடு இருளில் உள்கட்டில் ஒடுக்கப்பட்ட பெண், இவள் வெளிச்சத்தில் தன்னை விளம்பரப்பொருளாக பரவச்செய்யும் விளம்பரநாயகி, ஆனால், கணவனால் வீட்டிற்குள் பூட்டப்பட்டவள். இவ்விருவருக்கும் இடையில் உருவாகும் உறவே இரவுதான். இரவு என்கிற காலத்தை அதன் உள்அழகை பிம்பமாக்கியதன்மூலம், நாம் காணாத ஒரு இருள் உலகை வெளிச்சமாக்கிவிடுகிறது இப்படம். கால-பிம்பம் என்பதற்கு சரியானதொரு எடுத்துக்காட்டு. காலம் என்பது இதில் உடனடித்தன்மையாக வரலாறு அற்று கணங்களாக வந்து போகிறது. இரவு என்கிற காலத்தின் பாதியாய் உள்ள இருள் பகுதி காதலின் பிம்பமாக ஆக்கப்பட்டு கண்முன் இயங்கிச் செல்கிறது. கணவன் இருப்பை மறுதலித்து கள்ளமாக உள்ள காதல் நிழலிருப்பாக அதுவே நிஜ இருப்பாக ஒரு மாயத்தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது இறுதியில். “it’s hard to tell that the world we live in is either a reality or a dream” என்ற வாசகத்துடன் முடியும் இப்படத்தில், இறுதிக்காட்சியில் காதலனுடன் இணையும் இருவரும் எடை எந்திரத்தின் மீது நிற்க, அது சுழிநிலையில் இருக்கும். எடையற்றதான ஒரு நிலையை அடைந்துவிட்டதான காட்சியை காட்டும் இப்படம், வாழும் உலகு புனைவா? கனவா? நிஜமா? நிழலா? என்பதை விளக்குவது கடினமானது என்கிற கேள்வியுடன் முடிகிறது.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://www.koreanfilm.org/kfilm05.html#bow"&gt;The Bow&lt;/a&gt; (2005) மிகவும் கலைத்தரத்துடன் நிலப்பரப்பே இல்லாமல் நீர்ப்பரப்பில், ஒரு பெயரற்ற கடலில் உள்ள ஒரு பழைய கப்பலில் எடுக்கப்பட்ட படம். ஐசல் படத்தின் சாயலில் எடுக்கப்பட்ட படம் என்றாலும், இதில் காதல் என்பதன் இளமை முதுமை பின்னணிக்கொண்டு அலசப்படுகிறது. சிறுமியாக உள்ளபோது தனது கப்பலுக்கு எடுத்துவந்து வளர்க்கும் ஒரு முதியவர், அவளை திருமணம் செய்ய 17வயதிற்காக காத்திருப்பார். அக்கப்பலில் மீன்பிடிப்பதற்காக வரும் இளைஞன் ஒருவனுடன் அப்பெண்ணிற்கு காதல் உருவாகிவிடும். உண்மையில் அப்பெண் அந்த இளைஞனை பார்த்தபின்தான் தனது “தானை“ வயதை, தனது பாலினத்தை உணர்வாள். அதன்பின் அந்த முதியவரின் தொடுகை என்பது முந்தைய தந்தமையிலிருந்து அவளது உணர்வில் விலகிவிடும். இது ஒருவகை இடிபலுக்கு எதிராக தந்தை மகள் மேல் கொள்ளும் காதலாக, தந்தமை என்பதை கேள்விக்கு உட்படுத்துவதாக உள்ளது. தானே வளர்த்து தானே மணக்க விரும்பும் நிலை. அப்பெண் அந்த இளைஞனுடன் கொள்ளும் உறவும், அந்த முதியவன் கொள்ளும் உறவும் ஒரு முக்கோணக்காதலாக வடிவம் கொண்டாலும், மனித மனத்தின் எதிர்மையாக உள்ள பண்புகளை விளக்குவதாக வில் என்கிற கருவி ஒரு முக்கிய குறியீட்டு பிம்பமாக வருகிறது. அக்கருவி, அப்பெண்ணை பாதுகாப்பதற்கான கொலைக்கருவியாகவும், அப்பெண் மீதான காதலை சொல்லும் இசைக்கருவியாகவும் பயன்படுத்தப்பட்டிருப்பது ஒருவித வன்முறை-காதல் என்கிற இருமையின் வேறுபட்ட பரிமாணங்களை விளக்குவதாக உள்ளது. பாலியல் உந்தத்தின் குறியாடாகி நிற்கும் அந்த வில்லும், அம்பும், காதலின் குறியீடாகி மாறி நிற்கும் இசைக்கருவியாகவும் இருமை தன்மைக் கொண்டிருப்பதால், மனித மனதின் உள்ளார்ந்துள்ள இந்த இரு உணர்வுகளின் இருமையாக வெளிப்படுகிறது. வில் என்பது குறி சொல்வதற்கான ஆயுதமாகவும் இதில் பயன்படுத்தப்படுகிறது. மிகவும் அழகியலுடன் படமாக்கப்பட்டுள்ள இதன் காட்சிகள், முற்றிலும் புதியதொரு உணர்வெல்லைக்கு நம்மை இட்டுச் செல்பவையாக உள்ளது, &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://lh5.ggpht.com/-cJQUVq0QMtE/TvBh7SHbNwI/AAAAAAAABfs/wp1zzXqSKxU/s1600-h/clip_image002%25255B24%25255D%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="clip_image002[24]" border="0" hspace="12" alt="clip_image002[24]" align="left" src="http://lh6.ggpht.com/-hIsHzFJhguk/TvBh9BA5nrI/AAAAAAAABf0/N_-ehA2quTs/clip_image002%25255B24%25255D_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="330" height="188" /&gt;&lt;/a&gt;ஒலி-ஒளி பிம்பம் என்பதுதான் இப்படத்தில் செய்யப்பட்டுள்ள புதிய முயற்சி. வில்லின் ஒலியில் எழும் நாதம், வில்லின் நாணை மீட்டி அம்பை எய்துவதில் உள்ள ஒலி இவைதான் இந்த படத்தின் பிம்பமாக நம் மனதில் அலையை எழுப்பிச்செல்கிறது. இறுதிக்காட்சியில் அந்த முதியவரின் மரணத்தை குறிநிலைப்படுத்திய இசைமீட்டிய அம்பு, அப்பெண்ணொடு கொள்ளும் விர்ட்சுவலான புணர்ச்சி ஏற்படுத்தும் பிம்பம் காதலின் ஒருவகை தொன்மமாக்கலின் உணர்வை உருவாக்குவதாக உள்ளது. குறிப்பாக ஒரு ஆன்மீக-யதார்த்தமாக இக்காட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியில் இவ் வாக்கியங்களுடன் படம் முடிவடைகிறது – Strength and a beautiful sound like in the tautness of a bow. I want to live like this until the day of I die. இசையும், உடலும், காமமும், காதலும் நீர்பரப்பின் பிரத்யேக விதிகளுக்குள் இயங்குகிறது. படத்தில் நிலம் பற்றிய ஒரு காட்சிகூட இல்லை என்பது படத்தை அறிந்துகொள்வதற்கான பிறிதொரு தளத்தை திறக்கிறது. நிலம் அங்கமுள்ள உடல் என்றால், நீர் அங்கங்களற்ற உடல். நிலத்தின் நிறுவன விதிகள் செயல்படாத நீர்ப்பரப்பில் நிகழும் கதையாடல்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;&lt;a href="http://www.koreanfilm.org/kfilm06.html#time"&gt;Time&lt;/a&gt; (2006) – காதலில் முக அழகும் அதன் வசீகரமும் ஏற்படுத்தும் உணர்வு என்ன? காதலுக்கும் அதற்கும் உள்ள உறவு என்ன? என்பதை சோதிக்கும் ஒரு வரைபட-ஒட்டு விளையாட்டே இப்படம். பிளாஸ்டிக் சர்ஜரியின்மூலம் அடையாளம் என்பது என்ன என்ற கேள்வியை எழுப்பும் நவீனகாலத்தை பிம்பமாக்கிவிடுகிறது. இதில் கதை இல்லை காலம் என்பதே கதையாகி &lt;a href="http://lh4.ggpht.com/-K_zO5Wycbq0/TvBh-g7l9TI/AAAAAAAABf8/Y8pJjQOe3wI/s1600-h/clip_image002%25255B26%25255D%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="clip_image002[26]" border="0" hspace="12" alt="clip_image002[26]" align="left" src="http://lh3.ggpht.com/-Npl_TvHYOZk/TvBiAU3ZkiI/AAAAAAAABgE/1wXh4BhQ-D4/clip_image002%25255B26%25255D_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="355" height="199" /&gt;&lt;/a&gt;உள்ளது. காதல் முகத்தின் அழகுடன் பொறுத்தப்பட்டதாக உள்ள சமூக அழகுணர்ச்சியை அடிப்படையாக கொண்டு அதனை விமர்சிக்கிறது இப்படம். தனது முகம் சலிப்பை ஏற்படுத்திவிட்ட்தால், தன் காதலன் மற்ற பெண்களை ரசிக்கிறான் என்கிற தன்னுடமை மனப்பிறழ்ச்சிக்கு (பொஸஸிவ்னெஸ் டிஸ்ஆர்டர்) ஆளான பெண், தன் காதலனை ரசிக்கும் பெண்களின் ஒவ்வொரு அங்கத்தையும் (கண்-காது-மூக்கு-வாய்) இணைத்து ஒரு முகத்தை பிளாஷ்டிக் சர்ஜரியில் உருவாக்கிக் கொள்வாள். தனது முகம் மாறிய நிலையில் காதலனை அணுகி புதியதொரு காதல் வாழ்வை துவங்குவாள். தனது பழைய காதலியின் நினைவில் உழலும் அவன், அவளது தன்னுடமை மனநிலை ஏற்படுத்திய சிக்கலினால், அவள் முகம்மாறியதை அறிந்து, தானும் தனது முகத்தை மாற்றி அவளிடமிருந்து மறைந்துவிடுவான். அவனது மாறிய முகத்தை தேடி மனப்பிறழ்ச்சி அடைந்துவிடுவாள் அவள். காட்சிகளும் ஒரே இடங்கள் ஒரே பெண் இரண்டு வேறுபட்ட முகங்கள் என்பதாக சலிப்பாகவே நகர்த்தப்படுகிறது. படத்தோடு நாமும் சலிப்படையும் ஒரு நகர்வை செய்கிறது இப்படம். ஆண் பெண் இருவரும் ஒருவர் மற்றவரிடம் விரும்புவது எதை? இருவரது வேறுபட்ட பால்-பேத உலகங்கள், கனவுகள், எதிர்பார்ப்புகள் என்பதாக விவரித்து செல்கிறது. நவீன காலம் எப்படி காதலில் சோர்வையும், அயர்ச்சியையும் வழங்குகிறது என்பதையும், புத்தாக்கம் செய்துகொள்ளமுடியாத ஒரு பழக்கப்படுத்தப்பட்ட வாழ்வின் அவலம்தான் இந்த காலம் என்பதை இவ்விருவரின் தீவிர உறவில் வைத்து பேசுகிறது இப்படம். நவீனகாலம் என்பது பழகிய சலிப்பும் அயர்ச்சியும் என்பதை ஒரு உணர்வாக காட்டிவிடுகிறது நமக்குள் இப்படம். ஐசல் என்ற படத்தில் காதல் என்பது ஆட்டுவிப்பு மன்பிறழ்ச்சியை (அப்ஸசிவ் டிஸ்-ஆர்டர்) பிம்பமாக்கினால், இதில் தன்னுடமை மனப்பிறழ்ச்சியை (பொஸசிவ் டிஸ்-ஆர்டர்) பிம்பமாக்கி உள்ளார் கிம் கி-டுக். ஒருவரது முகத்தை கிழித்து மாற்றும் அதிகாரத்தை எந்த அறக்கோட்பாடுமின்றி எடுத்துக்கொண்டுவிட்ட மருத்துவ உலகின் அறம் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கும் படம்.&lt;/p&gt;  &lt;p align="justify"&gt;Breath (2007) – முந்தைய படத்தில் காதலின் சலிப்பை சொன்ன கால-பிம்பம் என்றால், இப்படத்தில் மனைவியின் சலிப்பை சொல்லும் கால-பிம்பம் எனலாம். கணவன் ஒரு பெண்ணோடு உறவு வைத்து உள்ளதால், மனம் பேதலித்த மனைவி, வாழ்வில் சலிப்புற்று தனது பிறழ்ச்சியை, ஒரு தூக்குத்தண்டனை கைதியுடன் களிக்கும் விளையாட்டே இப்படம். தொடர்ந்து &lt;a href="http://lh6.ggpht.com/-GxvFcU0TTg4/TvBiCGQtSLI/AAAAAAAABgM/3oWe9h1epDg/s1600-h/clip_image002%25255B28%25255D%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="clip_image002[28]" border="0" hspace="12" alt="clip_image002[28]" align="left" src="http://lh4.ggpht.com/-fZ5JK-7mihc/TvBiDn5p8mI/AAAAAAAABgU/gbRT5ksbDz4/clip_image002%25255B28%25255D_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="336" height="191" /&gt;&lt;/a&gt;தற்கொலைக்கு முயலும் ஒரு தூக்குத்தண்டனைக் கைதி, தொலைக்காட்சி மற்றும் மீடியாக்களால் மிகைப்படுத்தப்பட்டு மீ-யதார்த்த பிம்பமாக மாற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து வீட்டின் தனிமையில் தொலைக்காட்சியைத் தவிர வேறு புழங்குவெளியற்ற குடும்பத்தலைவி அல்லது மனைவியின் மீ-காணுதலில் அம் மீ-யதார்த்த பிம்பத்தொடு ஒரு உறவை உருவாக்கிக் கொள்வாள். அப்பிம்பத்தின் முன்னாள் காதலி என்று. தனது மீ-யதார்த்த பிம்பத்தால், அந்த கைதியை அவனது சிறையில் சந்தித்து அவனோடு தனது இளமைக்காலத்தில் மூச்சுமுட்டிய கதையை சொல்லி, அவனோடான தனது காதலை நாடகமாக நடத்திக்காட்டுவாள். இப்படத்தில் அவள் சிறை அறையை ஒரு சிமிலேட்டேட் பருவகால இயற்கைப்பகுதிகளாக உருவாக்கி, தானும் அப்பருவகால உடைஅணிந்து அதற்கேற்ப பாடல் ஆடல் என, ஒரு புதிய சிமிலேட்டேட் உலகை உருவாக்கி காட்டுவாள். இப்படம் போத்ரியார் சொல்லும் சிமில்க்ரா மற்றும் ஹைபர்-ரியலை உருவாக்கி காட்டமுனைந்த ஒருபடம். &lt;/p&gt;  &lt;p align="justify"&gt;Dream (2008) – சினிமாவில் மட்டுமே சாத்தியமான ஒரு பேண்டஸிவகையான பின்நவீனத்துவப்படம் இது. கனவுக்கும் உண்மைக்குமான ஒளிப்பட விளையாட்டே இப்படம். கனவும் நிஜமும் தனது எல்லை கலைந்து ஒன்றாகிவிட்ட நிலையில் ஒரு ஆணும், பெண்ணும் தங்களது உறவின் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளும் கதை. இரண்டு காதல் ஜோடிகள், தன்னைவிட்டு விலகிப்போன காதலியின் நினைவில் வாழும் ஆணும், காதலனால் புறக்கணிக்கப்பட்ட பெண்ணும் ஒன்றிற்கு ஒன்று பொருந்திப்போகும் வகையில் கனவின் வழி உறவு கொள்கிறார்கள். ஆணிண் கனவில் வரும் காட்சிகள், தூக்கநடையாளராக உள்ள பெண்ணால் யதார்த்தத்தில் நடத்தப்படும். ஆண் கனவில் காணும் அவனால் நடக்கும் &lt;a href="http://lh6.ggpht.com/-2MjE7fgSTyw/TvBiFasIDdI/AAAAAAAABgc/oV4y8Pg390Y/s1600-h/clip_image002%25255B30%25255D%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="clip_image002[30]" border="0" hspace="12" alt="clip_image002[30]" align="left" src="http://lh5.ggpht.com/--gxptDWpw8U/TvBiHt5KZEI/AAAAAAAABgk/LyaA3T4JK2A/clip_image002%25255B30%25255D_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="353" height="191" /&gt;&lt;/a&gt;விபத்து, நிஜத்தில் அநத பெண்ணால் நடத்தப்பட்டு அதற்கு பொறுப்பானவளாக கைது செய்யப்பட்டுவிடுவாள். அவளை காப்பாற்ற முனையும் அவன், தனது கனவுதான் காரணம் என்பான். அவர்களுக்கிடையில் ஒரு ஒப்பந்தம் உருவாகும். அவன் கனவு காண்பதால், அவளுக்கு பிரச்சனை என்பதால், அவன் தூங்காமல் இருப்பதே தீர்வு என்பதால் தூக்கத்திலிருந்து தப்பிக்க அவர்கள் படும்பாடும் அதன் நீட்சியாக கொலை மற்றும் தற்கொலைவரை நீண்டுவிடும். கனவில் நிகழ்த்தப்படும் கொலைக்கு தண்டனை &lt;a href="http://lh3.ggpht.com/--xlRXjOMcBA/TvBiJqKkCDI/AAAAAAAABgs/Iwqvkve7CdY/s1600-h/clip_image002%25255B32%25255D%25255B4%25255D.jpg"&gt;&lt;img style="border-bottom: 0px; border-left: 0px; display: inline; margin-left: 0px; border-top: 0px; margin-right: 0px; border-right: 0px" title="clip_image002[32]" border="0" hspace="12" alt="clip_image002[32]" align="left" src="http://lh5.ggpht.com/-flVgP7a-8dw/TvBiMMF8h5I/AAAAAAAABg0/VTwvyQOvsbk/clip_image002%25255B32%25255D_thumb%25255B2%25255D.jpg?imgmax=800" width="349" height="189" /&gt;&lt;/a&gt;உண்டா? என்கிற ஒரு அவலச்சுவை நிறைந்த கேள்வி ஒன்றை எழுப்புவதன்மூலம், தண்டனை. சிறை என்கிற நிறுவனங்கள் பற்றிய விமர்சனத்தை முன்வைக்கிறது. தூக்கம் என்கிற இயல்புணர்வு பற்றிய இப்படம், ஒருவரின் கனவு பிறிதொருவரின் வாழ்வு என்பதான ஒரு புதிய அறிதலை முன்வைக்க முனைகிறது. இப்படத்தில் சில காட்சிகள் சராசரி நிகழ்வுகளை தாண்டிய சினிமாவில் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்ட பிம்பங்களைக் கொண்டதாக அமைந்து உள்ளது. இரண்டு காதல் ஜோடிகளும் ஒருவர் மாற்றி ஒருவர் ஒரு வெட்டவெளியில் உரையாடும் காட்சி என்பது நமது கற்பனையின் விரிவெல்லைக்கு அப்பாற்பட்டது. வழக்கமாக கிம் கி-டுக் காட்டும் காமம், குரோதம் என்பது இங்கு தூக்கம் மற்றும் கனவு என்பதாக பதிலீடாகி, கனவிற்குள் நிகழ்ந்து நிஜத்தில் வெளிப்படுவதாக உள்ளது. இறுதியில் கொலை நிகழந்தபின் குற்றவாளி யார்? கனவு கண்டவனா? நிஜத்தில் அதை நடத்தியவளா? என்கிற பிரச்சனை முன்வைக்கப்படுகிறது. உண்மையில் கொலைக்கான காரணம் அல்லது தூண்டுதல்தான் கொலையா? நிஜத்தில் நடந்ததுதான் கொலையா? இது ஒரு வகை பாராசைக்காலாஜியை போலச்செய்து பண்ணப்பட்ட படம். இப்படத்தின் கால-பிம்பம் கனவுதான். இறுதியில், வண்ணத்துப்பூச்சி வழியாக உயிர் பரிமாற்றம் நடைபெறும் காட்சி முற்றிலும் புதியதொரு உணர்வை தருவதாக உள்ளது. &lt;/p&gt;  &lt;p&gt;தொடரும்)&lt;/p&gt;  &lt;p&gt;-&amp;#160; ஜமாலன் (02-07-2011 – 05-09-2011) – நிழல் அக்.-டிசம்பர் 2011&lt;/p&gt;  &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/4997678103589622995-8411243228898731612?l=jamalantamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://jamalantamil.blogspot.com/feeds/8411243228898731612/comments/default' title='கருத்துரைகளை இடு'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=4997678103589622995&amp;postID=8411243228898731612' title='1 கருத்துரைகள்'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/8411243228898731612'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/4997678103589622995/posts/default/8411243228898731612'/><link rel='alternate' type='text/html' href='http://jamalantamil.blogspot.com/2011/12/3.html' title='திரையில் விளையாடும் மனப்பிறழ்ச்சி கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள் – பகுதி : 3'/><author><name>ஜமாலன்</name><uri>http://www.blogger.com/profile/06985271377653395385</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='26' height='32' src='http://i227.photobucket.com/albums/dd149/Jamalan/Image3
