tag:blogger.com,1999:blog-4997678103589622995.post8692411434666738686..comments2023-06-24T11:36:51.117+03:00Comments on மொழியும் நிலமும்: பின்நவீனத்துவம் எனும் பேரண்டபட்சிஜமாலன்http://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-57499645126132255662007-10-15T11:16:00.000+03:002007-10-15T11:16:00.000+03:00பின் அமைப்பியல் முறையியலை- அதாவது ஒரு அமைப்பு சார்...பின் அமைப்பியல் முறையியலை- அதாவது ஒரு அமைப்பு சார்ந்த கோட்ப்பாட்டின் மையமிழப்பை அல்லது மையமழிப்பை பயன்படுத்தி சமூகத்தின் மையமிழந்த தன்மையை அவலங்களை வெளிக்கொணருத்லை தான் பின் நவீனத்துவம் என்கிறீர்கள்...<BR/><BR/>இப்படி தெளிவா முன்னாடியே சொல்லியிருக்கலாம்ல?<BR/><BR/>அப்போ இது இந்துயிஸத்துக்கும்,பெரியாரியத்துக்கும், மார்க்ஸியத்துக்கும் எல்லாத்துக்குமே பொருந்தும் இல்லையா?<BR/>ஏன்னா இவை எல்லாமே அமைப்பியியலால் அலசப்படக்கூடிய அமைப்பு ஒழுங்குகள்...<BR/><BR/>எப்போ நம்மால பின் நவீனத்துவத்துக்கும் ஒரு கோட்பாடு வகுத்து (சுற்றிக்கொண்டு) விளக்க முடிஞ்சுதோ அப்போ அதுவும் ஒரு அமைப்பு ஒழுங்கு ஆயிடுச்சு.(நீங்க தான் விளக்கியிருக்கீங்க..)<BR/><BR/>அப்போ அதுக்கும் ஒரு மையம் அமைஞ்சுடுச்சு, அமைப்பியலால் அலசப்பட கூடிய ஒரு அமைப்பு ஒழுங்காவும் மாறிடுச்சு. கட்டுடைத்தல், மையமிழப்பு எல்லாம் இதுக்கும் உண்டு... அதாவது இதுவே ஒரு பின் அமைப்பு முறையியலாயிடும்.. பின் நவீனத்துவதுக்கு இப்போ சொன்ன எந்த இயல்பும் இதுக்கு இல்லாம போயிடும்...(Cease To Exist) இது ஒரு Chain Reaction மாதிரின்னு நினைக்கிறேன்..<BR/><BR/>இதுக்கும் The Big Bang Theoryக்கும் தான் தொடர்பு இருக்கும்னு எனக்கு தோணுது.. எதுக்கும் விஜயக்காந்த் சாரை ஒரு வார்த்தை கேட்டுப்போம்...மாயன்https://www.blogger.com/profile/02179209014689382418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-45673525659945444472007-10-09T20:07:00.000+03:002007-10-09T20:07:00.000+03:00நண்பர் ஜாலிஜம்பருக்கு...படிக்கத்துவங்கியதற்கு வாழ்...நண்பர் ஜாலிஜம்பருக்கு...<BR/><BR/>படிக்கத்துவங்கியதற்கு வாழ்த்துக்கள். ஒரே ஒரு கருத்து மட்டும்:<BR/><BR/>//சுந்தர ராமசாமி,நகுலன்,ஜெயமோகன் போன்றவர்களை நவீன எழுத்தாளர்களாக கருதுகின்றனர்.இவர்களையெல்லாம் படிக்காமல் பின் நவீனத்துக்கு வரவே கூடாது என்பது எனக்கு நன்றாகவே புரிந்து விட்டது//<BR/><BR/>இது ஒரு சரியான முடிவல்ல. தவிரவும், பின்நவீனத்துவத்திற்கும் இந்த எழுத்தாளர்களுக்கும் உள்ள உறவு பற்றி எனக்குத் தெரியவில்லை. நான் நீங்கள் கூறிய ரமேஷ்=பிரேம் நூலைப்படித்ததில்லை. சு.ரா.-வின் எழுத்தக்கள் குறைந்தபட்சம் நவீனத்துவம் சார்ந்தவையா? என்பதே விவாதித்திற்கு உரியது. அவரது எழுத்துக்கள் அவை சாதித்தவைற்றைக்காட்டிலும் அல்லது அவற்றின் தகதிக்கு மேலும் பிரபலமாக போற்றி தூக்கி உயரத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பது உயர்சாதி அரசியல் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஜெயமோகன் நாவலான விஷ்ணுபுரம் = ஜெயகாந்தனின் ஜெயஜெய சங்கரா + கல்கியன் பொன்னியன் செல்வன் கலந்த ஒரு காப்பியக் கலவை. பலபகுதிகள் குதிரை யானை பற்றிய கலைக்களஞ்சியக் கருத்துகளாக விவரிக்கப்பட்டிருப்பது அலுப்பூட்டக் கூடியது என்றாலும்.. படிக்க ஆர்வத்தை தூண்டும் நாவல்தான். அதற்கும் பின்நவினத்துவத்திற்கும் உள்ள உறவு பற்றி தெரியவில்லை. ஜெயமோகன் வாசகனை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு செல்லாத ஒரு மையத்தவ எழத்து. சு.ரா.வும் அப்படித்தான். வாசகனை தன்னைப்பின்பற்றிச் செல்ல நிர்பந்திக்கும் அல்லது அவ்வாறு உள்ளிழுக்கும் எழுத்துக்கள். இவை பின்நவீனத்தவத்திற்கு ஏற்புடையவை அல்ல. நகுலன் ஒரு மையமற்ற புனைவை படைத்தவர் என்று அவரது நகுலனின் டைரிக்குறிப்பு படிக்கத்துங்கி என்னால் உள்வாங்க முடியவில்லை. அதனால் நகுலன் நான் படித்ததில்லை. அது எனது புரிதல் குறைபாடாகக் கூட இருக்கலாம். இருப்பினும் நீங்கள் எல்லாவற்றையும் வாசிப்பது அவசியமானதுதான். வாசிப்பிற்கு எல்லையோ வரையறையோ இல்லை. ஆணால் முறைப்படுத்தி வாசிப்பதும் அதனை சரியான முறையில் உள்வாங்குவதுமே முக்கியம். வாசிப்பு ஒரு அற்புத உலகை உங்களுக்கு காட்டும். தொடர்வோம் இவ்வுரையாட்லை வாய்ப்புக் கிடைக்கும்போது. வாழ்த்துக்கள்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-78335381796289027452007-10-09T19:26:00.000+03:002007-10-09T19:26:00.000+03:00பைத்தியக்காரனின் எழத்துநடை அருமை. 3D விளக்கமும் அர...பைத்தியக்காரனின் எழத்துநடை அருமை. 3D விளக்கமும் அருமை. விசாயன் கிடைக்க விநாயகன் அருள்புரியட்டும்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-71296817429543316532007-10-09T17:16:00.000+03:002007-10-09T17:16:00.000+03:00பதிவிற்கு நன்றி ஜமாலன்.உங்கள் பரிந்துரையின் படியே ...பதிவிற்கு நன்றி ஜமாலன்.உங்கள் பரிந்துரையின் படியே பிரேம்-ரமேஷின் "பேச்சு-மற்பேச்சு,பின் நவீனத்துவத்தை நோக்கி" என்னும் நூலை வாங்கி படித்துக் கொண்டிருக்கிறேன்.<BR/><BR/>சுந்தர ராமசாமி,நகுலன்,ஜெயமோகன் போன்றவர்களை நவீன எழுத்தாளர்களாக கருதுகின்றனர்.இவர்களையெல்லாம் படிக்காமல் பின் நவீனத்துக்கு வரவே கூடாது என்பது எனக்கு நன்றாகவே புரிந்து விட்டது.சாலிசம்பர்https://www.blogger.com/profile/11914103643750793443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-46814710728719283502007-10-09T16:01:00.000+03:002007-10-09T16:01:00.000+03:00வியாசன் சொல்லச் சொல்ல கீ போர்டில் எழுத்துக்களை தட்...வியாசன் சொல்லச் சொல்ல கீ போர்டில் எழுத்துக்களை தட்டிக் கொண்டே வந்த விநாயகனின் விரல்கள் சோர்வடைந்தன. உடனே தன் தந்தத்தை உடைத்து வார்த்தைகளை அடிக்க ஆரம்பித்தான். உற்பத்தியான வார்த்தைகள் ஸ்கிரீன் முழுக்க நிரம்பிய தருணத்தில், சார்வாகனனின் மூச்சுக் காற்றில் வார்த்தைகள் பொசுங்க ஆரம்பித்தன.<BR/><BR/>மிரட்சியுடன் சார்வாகனனை ஏறிட்ட விநாயகன் அதிர்ந்தான். சார்வாகனனின் கண்களை அவனால் பார்க்க முடியவில்லை. சார்வாகனன் அணிந்திருந்த 3டி (டெத் ஆஃப் தி ஆர்த்தர், டிஸ்கோர்ஸ், டி கன்ஸ்ட்ரக்ஷன்) கண்ணாடி விநாயகனை பார்த்து புன்னகைத்தது... தனக்கொரு கண்ணாடி வேண்டி விநாயகன் தவித்த நொடியில், வியாசன் கரைந்தான்... <BR/> <BR/>மொழியும், நிலமுமாக பேரண்ட பட்சி பறக்க ஆரம்பித்தது... தனக்கொரு வியாசனை தேடி விநாயகன் அலைந்து கொண்டிருக்கிறான்...கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.com