tag:blogger.com,1999:blog-4997678103589622995.post1159840625522880213..comments2023-06-24T11:36:51.117+03:00Comments on மொழியும் நிலமும்: புத்தகச்சந்தை-2011 பதிப்பகங்கள் எனும் அறிவின் அதிகாரமையங்கள்ஜமாலன்http://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4997678103589622995.post-65828843145302700982012-01-10T04:22:17.982+03:002012-01-10T04:22:17.982+03:00அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-57063355989657357572011-01-27T09:21:56.124+03:002011-01-27T09:21:56.124+03:00நன்றி.
அதே பெயரில்லா நண்பரா? அல்லது மற்றொரு பெயர...நன்றி.<br /><br /><br />அதே பெயரில்லா நண்பரா? அல்லது மற்றொரு பெயரில்லா நண்பரா தெரியவில்லை என்றாலும் கருத்திற்கு நன்றி.<br /><br />//இதற்கு காரணம் யார் யார் என்பதையும் சொல்லுங்களேன்.<br />பூக்கோவை அப்படி அடையாள அரசியல் கண்ணியில் அடைத்தது யார் யார்/ எந்த குழு என்பதை வாசுவோ, நீங்களோ சொல்லலாமே.<br />20 ஆண்டுகளாக பூக்கோ பூக்கோ என்று பேசியும்,எழுதியும் உண்மை இதுதான் என்றால் விமர்சனத்தை அங்கிருந்து துவங்கலாமா. ஏன் இப்படியாயிற்று என்று கேட்கலாமா.//<br /><br />நியாயமான கேள்வி. 20 ஆண்டுகால விரிவான ஆய்விற்கான கேள்வி. யார் யார் அடைத்தார்கள் என்பது தொடர்ந்து வாசிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு தெரியாதிருக்க நியாயமில்லை. இது குறித்து ஒரு முறையான உரையாடல் களத்தை ஆய்வை செய்வதற்கான நிறுவனங்களோ இயக்கமோ குழுவோ இல்லை. இப்படி இல்லாமல் போனதற்கான காரணத்தை ஆராய முனைவதுதான் இந்த பதிவு. இப்படி ஆராயக்கூடிய சிறு சூழல் அமைப்புகள் இல்லாது ஒழித்தவை எது என்பதே இப்பதிவில் உரையாடலாக துவக்கப்பட்டுள்ளது.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-73905046775993646972011-01-26T17:32:51.967+03:002011-01-26T17:32:51.967+03:00’அருமையாக சொன்னீர்கள். அப்படித்தான் ஆகிவிட்டது. இல...’அருமையாக சொன்னீர்கள். அப்படித்தான் ஆகிவிட்டது. இலக்கியத்தில் மட்டுமல்ல எதிலும் இங்கு எந்த கொட்பாடுகளும் வளர்சியடையவில்லை. அவை எல்லாம் ஒரு பேஷன் மற்றும் அப்பளையன்ஸ் என்கிற அளவில்தான் உள்ளன. உங்களின் இந்த சீற்றத்தை நானும் பகிர்ந்துகொள்கிறேன்.’<br /><br />இதற்கு காரணம் யார் யார் என்பதையும் சொல்லுங்களேன்.<br />பூக்கோவை அப்படி அடையாள அரசியல் கண்ணியில் அடைத்தது யார் யார்/ எந்த குழு என்பதை வாசுவோ, நீங்களோ சொல்லலாமே.<br />20 ஆண்டுகளாக பூக்கோ பூக்கோ என்று பேசியும்,எழுதியும் உண்மை இதுதான் என்றால் விமர்சனத்தை அங்கிருந்து துவங்கலாமா. ஏன் இப்படியாயிற்று என்று கேட்கலாமா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-68927071323983604062011-01-26T17:26:44.526+03:002011-01-26T17:26:44.526+03:00தீராநதியில் தொடர்ந்து எழுதுவது யார் ?.அ.மார்க்ஸ் த...தீராநதியில் தொடர்ந்து எழுதுவது யார் ?.அ.மார்க்ஸ் தமிழவன்.நீங்களும் ஒரு தொடர் எழுதினீர்கள். அப்போது தீராநதி பற்றி நீங்கள் இப்படி எழுதவில்லையே- ஏன்?உங்களுடைய பிரச்சினை என்ன- தமிழில் தரமான நூல்கள் இல்லை என்பதா அல்லது சில பதிப்பகங்கள் குறுகிய காலத்தில் புத்தக விற்பனை/தயாரிப்பில் ஏராளமான நூற்களை வெளியிட்டுத்தள்ளுகின்றன என்பதா.<br /><br />அடையாளம்,விடியல் போன்ற பதிப்பகங்களும் இயங்குகின்றன.<br />அவற்றின் நூற்களையும் காசு கொடுத்து வாங்குபவர்கள் இருக்கிறார்கள்.தலையணை அளவு நூற்களை அவையும் வெளியிடுகின்றன. இங்கு அனைவருக்கும இடம் இருக்கிறது, சந்தையில் இடம் இருக்கிறது. <br /><br />இன்று தமிழில் பலதரப்பு நூற்கள் கிடைக்கின்றன.ஏராளமான மொழிபெயர்ப்புகள்,அபுனைவு நூல்கள்<br />வெளிவந்த வண்ணம் உள்ளன.<br />ஐரோம் ஷ்ர்மிளா, ராம் குகா, நந்திதாக ஹஸ்கர் நூற்களை மொழிபெயர்ப்பில் கொண்டுவந்துள்ளது யார் என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.<br />உங்களுடைய பிரச்சினை கிழக்கு, காலச்சுவடு, உயிர்மை போன்ற வெளியீட்டு நிறுவனங்கள் பெரிய அளவில் செயல்படுவது என்பது என்று தோன்றுகிறது. அதை வெளிப்படையாக எழுதலாம்.கோட்பாட்டுப் பூச்சாண்டிகள் தேவையில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-48026524715171486092011-01-24T11:44:25.710+03:002011-01-24T11:44:25.710+03:00maturedurai கூறியது...
//நண்பர் திரு ஜமாலன் அவர்...maturedurai கூறியது...<br /> <br />//நண்பர் திரு ஜமாலன் அவர்களே!<br />இது வஞ்சப்புகழ்ச்சியோ அல்லது வஞ்சகமான புகழ்ச்சியோ அல்ல!என் உள்ளத்திலிருந்து வரும் உண்மையான<br />வார்த்தைகள்!//<br /><br />நண்பரே மன்னிக்கவும். பொதுவாக அனானிகள் இப்படிதான் எதாவது எழுதி நம்மை குழப்பபுவார்கள். அதனால்தான் அப்படி எழதினேன். நீங்கள் சுட்டிய வரிகள்தான் அந்த கட்டுரையில் விரிவாக பேசப்படவேண்டிய வரிகள். அதை சரியாக சுட்டி உள்ளீர்கள். “தலைவணங்ககிறேன்” என்ற வார்த்தை ஏற்படுத்திய அதிர்ச்சிதான் அப்படி எழுதக்காரணம். இதுபோன்ற வார்த்தைகள் சுயமாரியாதை சார்ந்த குற்றஉணர்வை உருவாக்கக்கூடியவை. அம்பேத்கர் சொன்னதுபோல “நாம் யாருக்கும் அடிமை இல்லை. யாரும் நமக்கு அடிமை இல்லை” இதுதான் இன்று ஒவ்வொரு தனிமனிதனும் உணரவேண்டிய அரசியல். உங்களை புரியாமல் வெளியிட்ட எனது கருத்திற்கு வருந்துகிறேன்.<br /><br />உங்கள் அனுபவங்கள் விளக்கங்கள் அருமையாக உள்ளது. உங்கள்மீது ஒரு நன்மதிப்பை உருவாக்கிவிட்டது. உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் மதிப்பு மிக்கவை. காரணம் திராவிட இயக்கங்களின் தற்போதைய நிலை என்பது குறித்த உங்களைப் போன்றவர்களின் வாக்கமூலங்கள் முக்கியமானவை. எனது எழுத்து அறிமுகப்படுத்தும் உங்களைப் போன்றவர்கள்தான் அதன் நோக்கத்தை சரியாக கொண்டு சேர்க்கிறது.<br /><br />//எனவே,கோவிலில் 'அவாள்'மட்டுமே ஆட்சிசெய்ய முடியும் என்பதைப்போல இந்நாட்டிலும் இனிமேல் 'தலை'வரும் அவர்தம் வழிவந்தவரும் மட்டுமே ஆட்சிசெய்ய முடியும்என்று தந்திரமாக மாற்றப்பட்ட விதத்தினை தாங்கள் எடுத்துக்காட்டியவுடன், தங்களைப் பாராட்டவேண்டும்போலத் தோன்றியது. எனவே பாராட்டினேன். உள்நோக்கம் ஒன்றுமில்லை!//<br /><br />ஆம் அதான் நடக்கிறது இங்கு. இது ராஜராஜ சோழனை பகடி பண்ணும் திராவிட அரசியலின் தமிழ் என்கிற தேசியவாத வேரில் உள்ளது இதன் சிக்கல். இந்த வேர் “அவாளி“ன் “பொன்னியின் செல்வன்” (காவேரி மைந்தன்) என்கிற நாவலாக, கதையாக அன்றே பார்ப்பனியர்களால் வரைந்து தரப்பட்டுள்ளது. மீண்டும் அது குடும்ப வாரிசுகளால் பார்ப்பனிய-இந்துத்துவ-கூட்டணியால் திரைப்படமாக வர உள்ளது. அது குறித்தும் விரிவாக எழதனும்.<br /><br />உங்கள் கருத்திற்கு நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-7955578039723495282011-01-24T07:14:26.651+03:002011-01-24T07:14:26.651+03:00"அப்படியா? என்ன வஞ்சப்புகழ்ச்சியா இல்ல வஞ்சகம..."அப்படியா? என்ன வஞ்சப்புகழ்ச்சியா இல்ல வஞ்சகமான புகழ்ச்சியா? எது என்றாலும் சரிதான். :) :) நன்றி"<br />நண்பர் திரு ஜமாலன் அவர்களே!<br />இது வஞ்சப்புகழ்ச்சியோ அல்லது வஞ்சகமான புகழ்ச்சியோ அல்ல!என் உள்ளத்திலிருந்து வரும் உண்மையான<br />வார்த்தைகள்!<br />இதுவரை என்னைப்பற்றித் தங்களிடம் நான் அறிமுகம் செய்து கொள்ளவில்லை.ஆகவே உங்களுக்கு அப்படி நினைக்கத் தோன்றுகிறது போலும்!<br />நான் ஓய்வுபெற்ற உயர்அரசு அலுவலர்(தமிழ்நாடுஅரசு கல்வித்துறை)<br />பதின்மவயதில் திராவிட அரசியலில் கவனம் செலுத்தி,அறிஞர் அண்ணாவின் எழுத்துக்களை "நம்நாடு" பத்திரிகையில் ஒன்று விடாமல் படித்து,தமிழில் புலமை பெற்றேன்.<br />மூதறிஞர் ராஜாஜி குலக்கல்வித்திட்டத்தினைக் கொண்டுவந்தபோது நான் தொடக்கப்<br />பள்ளியில் பயின்றுகொண்டு இருந்தேன்.அப்போது என் தந்தையார்<br />எனக்கு ஒரு கடிதம் எழுதியது எனக்கு<br />இன்னும் நினைவில் இருக்கிறது:"நீ இனிமேல் உன் பள்ளிப்படிப்புடன் நம் <br />குலத்தொழிலான தறித்தொழிலையும்<br />கற்க வேண்டி வரும்!"<br />ஆக,இதைக் குறித்து நான் அநுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன்.<br />எனவே,கோவிலில் 'அவாள்'மட்டுமே ஆட்சிசெய்ய முடியும் என்பதைப்போல இந்நாட்டிலும் இனிமேல் 'தலை'வரும் அவர்தம் வழிவந்தவரும் மட்டுமே ஆட்சிசெய்ய முடியும்என்று தந்திரமாக மாற்றப்பட்ட விதத்தினை தாங்கள் எடுத்துக்காட்டியவுடன்,தங்களைப் பாராட்டவேண்டும்போலத் தோன்றியது.<br />எனவே பாராட்டினேன்.உள்நோக்கம்<br />ஒன்றுமில்லை!MatureDuraihttps://www.blogger.com/profile/03651425180677136086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-19494136860958684852011-01-22T10:52:55.109+03:002011-01-22T10:52:55.109+03:00வாசு..
உங்கள் கருத்து மிக முக்கியமான ஒன்று. சூழல்...வாசு..<br /><br />உங்கள் கருத்து மிக முக்கியமான ஒன்று. சூழல் அப்படித்தான் உள்ளது. இங்கு “வெகுசனம்“ என்கிற ஒன்று பாமராத்தனமாக அறிவற்ற ஒரு கூட்டம் என்பதாகவே புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மிகவும் சிகக்லான பலவற்றையும் சிந்தித்து பிரித்து ஒவ்வொன்றையும் அதன“ நுட்பதிட்பங்களுடன் அனுகவேண்டி உள்ளது. எழுதுவதற்கான ஆர்வமற்ற சூழல்தான். <br /><br />//இந்த ரசமாற்றத்தால் சிறுபத்திரிக்கை உலகம் வெகுஜன சினிமா,அரசியலுக்கு ஆட்களை தயார்படுத்தி அனுப்பும் தொழிற்சாலையாக மாறிவிட்டது.//<br /><br />அருமையாக சொன்னீர்கள். அப்படித்தான் ஆகிவிட்டது. இலக்கியத்தில் மட்டுமல்ல எதிலும் இங்கு எந்த கொட்பாடுகளும் வளர்சியடையவில்லை. அவை எல்லாம் ஒரு பேஷன் மற்றும் அப்பளையன்ஸ் என்கிற அளவில்தான் உள்ளன. உங்களின் இந்த சீற்றத்தை நானும் பகிர்ந்துகொள்கிறேன்.<br /><br />விரிவான கருத்திற்கு நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-35372793557647775262011-01-22T08:07:19.524+03:002011-01-22T08:07:19.524+03:00ஜமாலன்,
கொலை வெறியெல்லாம் ஒன்றுமில்லை.நேற்றுதான் ஒ...ஜமாலன்,<br />கொலை வெறியெல்லாம் ஒன்றுமில்லை.நேற்றுதான் ஒரு நண்பரை சந்தித்து ஃபூக்கோ,லகான்,இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம். பேசிக்கொண்டிருக்கையில் ஒரு பிரபல திரைப்பட இயக்குநர் வந்தார். இயக்குநர் வந்தபின் நமது நண்பரின் பவ்யம்,பல்லிளிப்பு,பரவசத்தை சகிக்கமுடியவில்லை.உடனடியாக அங்கிருந்து வெளியேறி வீட்டில் இணயத்தளத்தில் உங்கள் கட்டுரையை வாசித்து சம்பவத்தின் தாக்கத்தில் மறுமொழியை இட்டேன். மேற்கத்திய கோட்பாடுகளை கொண்டு எதைப்பற்றி எப்படி எழுதுகிறோம் என்பது முக்கியம் என்று நினைக்கிறேன்.ஏனெனில் நம்மிடையே உதாரணங்கள் உண்டு. மிக எளிதாக ஃபூக்கோவை அடையாள அரசியல் என்ற கண்ணியில் அடைத்தாயிற்று. ஃபூக்கோவின் பல பங்களிப்புகளை தமிழில் உதாசீனப்படுத்துகிறோம்.ஃபூக்கோவை எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவு செய்தாயிற்று.இம்மாதிரி டெல்லூஸ்_கத்தாரி, போத்திரியார் போன்றவர்களின் பங்களிப்பை நாம் ஏன் வெகுஜன கலாச்சாரம்/அரசியலுக்கு மட்டும் எடுக்கிறோம்? இவர்களின் கோட்பாடுகளை ஆய்வு பூர்வமாக இலக்கியப்பிரதிகளை ஆராயவேண்டும். இதனால்தான் அதிமுக்கிய சிந்தானாவாதிகள் பெயர்களின் உச்சரிப்பு மட்டும் எல்லா மட்டத்திலும் உலா வருகிறது. தத்துவமும் கோட்பாடும் சினிமா அரசியலுக்கு மட்டுமல்ல என்பதை நாம் உணரவேண்டும். இதனால்தான் சினிமா,அரசியல்,இலக்கியம்,தத்துவம் என்ற வரையறுப்பு நொறுங்கி ஒரு குழப்பமான சூழலில் சிக்கியுள்ளோம்.இந்த ரசமாற்றத்தால் சிறுபத்திரிக்கை உலகம் வெகுஜன சினிமா,அரசியலுக்கு ஆட்களை தயார்படுத்தி அனுப்பும் தொழிற்சாலையாக மாறிவிட்டது. இதற்கு பொருளாதார,இணைய தொழில்நுட்பங்களின் பங்கையும் மறுக்கமுடியாது. இணையத்தளத்தின் வழியாக வரும் புதிய நுகர்வோர்க்காக (consumer, NOT READER ) புத்தகங்களின் scale of production நம்மை பயமுறுத்துகிறது....vasuhttps://www.blogger.com/profile/03628367937249042252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-28391989397697939792011-01-21T22:57:22.453+03:002011-01-21T22:57:22.453+03:00வாங்க வாசு
நான் கூட டெல்யுஸ் கத்தாரி லக்கான் போன்...வாங்க வாசு<br /><br />நான் கூட டெல்யுஸ் கத்தாரி லக்கான் போன்றவர்ளை பயன்படுத்தி சினிமா துவங்கி இன்னும் பலவற்றை எழுதியும் எழுதலாம் என உள்ளேன். நீங்கள் இப்படி தாக்குகிறீர்களே.<br /><br />ஏனிந்த கொலைவெறி? <br /><br />கருத்திற்கு நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-92069832939752067892011-01-21T19:48:08.108+03:002011-01-21T19:48:08.108+03:00இலக்கியம், தத்துவம் போன்ற புண்ணாக்கள் வேண்டாம்.வேண...இலக்கியம், தத்துவம் போன்ற புண்ணாக்கள் வேண்டாம்.வேண்டியது புகழ்,பணம்.ஒன்று சினிமாவுக்கு போவது மற்றொன்று பெரிய பதிப்பகத்தின் காலில் விழுவது.இன்னொன்றும் உண்டு, அதாவது இணையத்தளத்தில் எதையாவது கிறுக்கி ( மாவோசியம் பற்றி,எதையும் புரிந்து கொள்ளாமால் பின் நவீனத்தும் போலி என்ற கிண்டல், லத்தின் அமெரிக்க உலரள்,இத்தியாதிகள்...)அல்லது இடைநிலை பத்திரிக்கை ஒன்றை துவங்கி வெகுஜன சினிமா என்ற கொசுவை டெல்லூஸ் கத்தாரி,லக்கான் போன்ற புல்லட்களால் திரையை துளையாக்கி,திரையில் வரும் பிம்ப ஹீரோக்களை மறுத்து, இதோ பார் நான் தான் ஹீரோ( எழுதியவர்கள்)என்ற மற்றொரு அறிவு ஜீவி பிம்பங்கள் பயமுறுத்துவது படித்த ஆழமான வாசகர்களை அல்ல மாறாக கோடம்பாக்கத்தில் நுழைவுச்சீட்டு பெறுவதற்கு.இன்னும் கோடம்பாக்கத்தில் அல்லது அண்ணா சாலை கோவிலுக்கு நுழைவதற்கு மற்றொரு வழி ஒரு இடைநிலை பத்திரிக்கை__பரவலான கவிதைகள் ( கவிதைகள் நுட்பமாகவும்,நுணுக்கமாகவும் எலி,பறவை,செடி பற்றி மிக மிக எளிமையாக இருக்கவேண்டும்)ஒரு சிறுகதை ( கதை_ மனித உறவுகளின் அவநம்பிக்கையை பற்றி பேசவேண்டும்)ஒரு கட்டுரை ( ஜார்கண்டில் நடப்பது என்ன? அல்லது மணிரத்தனம்,கமலஹாசன் படத்தை மிக ஆழமாகவும் விரிவாகவும் ஆராய்வது).இப்பத்திரிக்கையை பெண் அரசியல்வாதிகள்/தொழிலதிபர்கள் மூலம் வெளியிடுவது.... மகா கேவலமாக இருக்கிறது...இதைப்பற்றி விரிவாக கோட்பாடு ரீதியாக எழுதிக்கொண்டிருக்கிறேன் (excreesance, branding)...பார்க்கலாம்...நல்லவேளை நீங்கள் தப்பித்தீர்கள்..செந்தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு பார்க்கும் திசைதோரும் புத்தகங்களாக தெரிகிறது...புதிய சட்டமன்றமே திருக்குறளின் நகலை அடுக்கி கட்டப்பட்டிருக்கோமோ..vasuhttps://www.blogger.com/profile/03628367937249042252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-79459678636398067642011-01-21T11:01:25.906+03:002011-01-21T11:01:25.906+03:00நன்றி அஜய்.
//மேலும் சில எழுத்தாளர்கள் ஒரு brandஆ...நன்றி அஜய்.<br /><br />//மேலும் சில எழுத்தாளர்கள் ஒரு brandஆக சிறு பதிப்பகங்களால் உருவாக்கப்படுகிறார்கள். //<br /><br />இது முக்கியமான அவதானம். ஆம் பிராண்டுகள்-நுகர்வு-என உள்ளது இந்தத சந்தை.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-69504928427626235002011-01-21T10:59:30.928+03:002011-01-21T10:59:30.928+03:00பிளாகர் ஜோதிஜி கூறியது...
நன்றி ஜோதிஜி. அப்படியா...பிளாகர் ஜோதிஜி கூறியது...<br /><br />நன்றி ஜோதிஜி. அப்படியா?ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-9497371752614177182011-01-21T06:43:12.345+03:002011-01-21T06:43:12.345+03:00நல்ல கட்டுரை ஜமாலன். சிறு பத்திரிக்கை/பதிப்பகம் என...நல்ல கட்டுரை ஜமாலன். சிறு பத்திரிக்கை/பதிப்பகம் என்பது அதிகாரத்திற்கு எதிரான ஒன்று என்ற பொது மன கட்டமைப்பை கலைத்து போடுகின்றது இந்த பதிவு. இப்போதெல்லாம் பல சிறு பதிப்பகங்களின் அரசியல் மற்ற எதற்கும் சளைக்காமல் உள்ளது. மேலும் சில எழுத்தாளர்கள் ஒரு brandஆக சிறு பதிப்பகங்களால் உருவாக்கப்படுகிறார்கள். வாசிப்பையே குருகச்செய்யும் சூழல் பெருகி, ஒரு சில பதிபகங்களுக்கே அதிகாரம் ஏற்படுவதாக தான் உள்ளது இன்றைய சூழல். <br /><br />அஜய்WordsBeyondBordershttps://www.blogger.com/profile/17977837061092838646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-6562887742401496482011-01-21T03:39:21.017+03:002011-01-21T03:39:21.017+03:00இப்போது மற்றொரு லாபி உண்டு. ரூபாய் அறுநூறு என்றாலு...இப்போது மற்றொரு லாபி உண்டு. ரூபாய் அறுநூறு என்றாலும் எவரும் பணத்தைப் பார்ப்பதில்லை. அதன் வடிவமைப்பைக் கண்டு மயங்கி தழுவி முகர்ந்து அப்படியே எடுத்துக் கொண்டு போகின்றார்கள் என்று விஸ்தாரமாக விவரிப்பு வேறு. மனதிற்குள் ஆச்சரியம்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-39556682378690972872011-01-19T19:12:01.111+03:002011-01-19T19:12:01.111+03:00நன்றி அருள் எழிலன்.
உங்கள் அவதானம் தந்போதைய நிலைய...நன்றி அருள் எழிலன்.<br /><br />உங்கள் அவதானம் தந்போதைய நிலையை சுட்டுவதாக உள்ளது.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-54297656397439293242011-01-19T14:09:54.009+03:002011-01-19T14:09:54.009+03:00மிகவும் நல்லக் கட்டுரை, கூடுதலாக இந்தச் சந்தையில் ...மிகவும் நல்லக் கட்டுரை, கூடுதலாக இந்தச் சந்தையில் அண்ணாதுரை பற்றிய நூல்களைக் காண முடிந்தது. அரசாங்க ஆர்டரில் அதற்கு தனி இடம் என்றார்கள். மற்றபடி ஒரு நூலை வாங்கிப் படிக்கும் ஆசையை விலையைக் கேட்டால் போய் விடுகிறது. சூழ்ச்சி, வஞ்சகம், வசவுகள், ஜால்ராக்கள், குழு அடையாளங்கள் என்று என் எல்லாமே நடக்கிறது. கையில் பணமில்லாமல் பதிப்பக உரிமையாளர்களை இல்லை, சிறு பத்திரிகை அதிபர்களைச் சார்ந்து பொழுது போக்க அல்லது காசு வாங்கி குடித்துக் கதைக்கும் நண்பர்களை இப்போதெல்லாம் காணவே முடிவதில்லை. அவர்கள் இப்போது இந்த சந்தையில் தேவைப் படாதவருகளும்தானே?<br /><br />டி.அருள் எழிலன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-34428240566280684322011-01-19T08:47:53.570+03:002011-01-19T08:47:53.570+03:00@maturedurai
//மிகச்சரியான கணிப்பு!தங்களின் அரசிய...@maturedurai <br />//மிகச்சரியான கணிப்பு!தங்களின் அரசியல்<br />அறிவிற்குத் தலை வணங்குகிறேன்!//<br /><br />அப்படியா? என்ன வஞ்சப்புகழ்ச்சியா இல்ல வஞ்சகமான புகழ்ச்சியா? எது என்றாலும் சரிதான். :) :) நன்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4997678103589622995.post-29222527557907091862011-01-18T22:44:55.926+03:002011-01-18T22:44:55.926+03:00"எங்கெங்கு காணினும் வாரிசுகளின் அரசியலும், கட..."எங்கெங்கு காணினும் வாரிசுகளின் அரசியலும், கட்சிகளும், தலைமையும் என பார்ப்பனிய குலக்கல்வித் திட்டமாக அரசியல் மாற்றப்பட்டும், அது மக்களால் பரவலாக ஏற்கப்பட்டும் உள்ளது."<br />மிகச்சரியான கணிப்பு!தங்களின் அரசியல்<br />அறிவிற்குத் தலை வணங்குகிறேன்!MatureDuraihttps://www.blogger.com/profile/03651425180677136086noreply@blogger.com