தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!” - தொடரும் உரையாடல் -2

எனது தீராநதிக் கட்டுரையான “கன்னிவெடி புதைக்கப்பட்ட உடல்களும் கற்பித நிலங்களும்.”  என்கிற கட்டுரைக்கு விஜி“ஸ் என்பவரால் முன்வைக்கப்ட்ட விவாதம் எனது முந்தைய பதிவான ”தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” வில் சொல்லப்பட்டது.  அப் பதிவிற்கான அவரின் நீண்ட பின்னொட்டத்தின் தொடர் உரையாடலுக்கான எனது பதில் நீண்டுவிட்டதாலும்,  பொது விவாத நோக்கிலும் "தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!” - தொடரும் உரையாடல்". என்கிற தனிப்பதிவாக இடப்பட்டது.  அதற்கு அவரது தொடர உரையாடலாக முன்வைக்கப்பட்ட பின்னொட்டத்திற்கான பதில் இங்குத் தனிப்பதிவாக இடப்படுகிறது. ஒரே பதிவில் இந்த உரையாடலைத் தொடர்வதால் இது தனிப்பட்ட உரையாடலாக போய்விடும் என்பதால். இதனை பொதுத் தளத்திலான உரையாடலாக மாற்றவே தனிப்பதிவாக முன்வைக்கப்படுகிறது.

நண்பர் viji's ற்கு..

முதலில் நீங்கள் எனது கன்னிவெடி.. கட்டுரையை முறையாகப் படித்து புரிந்து கொண்டிருந்தால் இந்த அளவிற்கு தம் கட்டி பேசமாட்டீர்கள். காரணம் அக்கட்டுரையில் தேசியம் குறித்த பல உரையாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன என்பதுடன் தேசியம் என்பதும் ஒரு கற்பிதமே என்பதையும் அது முன்வைக்கிறது. அதை முழுதாகப் படிக்காமல் அதில் உள்ள ஒரு வையாபுரிப்பிள்ளையின் குறிப்பை மேலோட்டமாக படித்துவிட்டு அது எந்த சூழலில் சொல்லப்பட்டுள்ளது என்றும் புரியாமல் வாதத்தை கிளப்பினீர்கள். இருந்தும் அது பொதுவாக தப்பாக புரிந்து கொள்ளப்பட ஏதுவாகாமல் அதை தொடர்ந்தேன் நான்.  இந்த உரையாடல் அந்த தளத்தை தாண்டி கால்டுவெல் பற்றியதாக வளர்ந்து செல்கிறது. உண்மையில் ஒருவித “காழ்ப்புணர்வு” அல்லது “தமிழ் மீதான எரிச்சலுமே” உங்கள் விவாதத்தில் இருக்கிறது. சம்பந்தமில்லாமல் கருணாநிதி பணமூட்டை அரசியல் என்பதிலிருந்து உங்கள் உள்ளே செலுத்தப்பட்டிருக்கும் தமிழின எரிச்சல் புகைவிடுவது தெரிகிறது. முதலில் உங்கள் முன் அனமானங்கள் அபிப்பராயங்களை விட்டுவிட்டு பேசப்படுவதை ஒட்டி பேச முயலுங்கள். நிற்க. 

//>நீங்கள் இந்த விவாதத்தை தொடங்க வேண்டியது கவிதாசரணில்தான்.

சரி, ஆவன செய்ய முயல்கிறேன்.. ஆனாலும் நீங்கள் சில கருத்துகளை முன்வைத்து சில கேள்விகளை கேட்பதால் சில பதில்களை சொல்லவேண்டுயுள்ளது.//

நன்றி பதில்களுக்கு.

//>இந்தியாவின் ஒரே மொழிக்குடும்பம் என்று கட்டமைக்கப்பட்ட மாக்ஸ்முல்லரின் கருத்தை மறுத்து

மாக்ஸ்முல்லர் சமஸ்கிருதத்தைப் பற்றி எழுதினாறே தவிற எல்லா இந்திய மொழிகளைப் பற்றி கருத்து கூறவில்லை.//

180px-Max_Muller நீங்கள் முதலில் ஒன்றை தெரிந்து கொள்வது நல்லது. எதையும் தெளிவாக படித்தவிட்டு எழுதுங்கள். இது ஒருவகை செலக்டிவ் அம்னீஷியாவாகிவிடக் கூடாது. மாக்ஸ்முல்லர் பற்றி நீங்கள் அதிகம் படிக்க வேண்டாம். விக்கிபீடியா போன்ற ஆன்-லைன் அகராதிகளைப் படித்தால் போதும். அவர் சமஸ்கிருதம் பற்றி மட்டும் எழுதவில்லை, ஆரியம்தான் உயர்ந்த இனம் ஐரோப்பிய மூல இனம் என்றும் சமஸ்கிருத மொழிதான் இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தின் அடிப்படை என்றும் எழுதியவர். ஆரியன் என்கிற கருத்தாக்கத்தைக் கட்டமைத்தவர் அவர்தான். நீங்கள் உண்மையில் நோக வேண்டியது அவரைத்தான். இன்றைய எல்லா பார்ப்பன-ஆரிய மேலாண்மை அதை எதிர்த்த திராவிட-தமிழ் இனப் போராட்டம் எல்லாம் அந்த புள்ளியில் துவங்கியதுதான். ஆரிய இனம் என்கிற இனவாதக் கண்ணோட்டத்திற்கான விதை அவரால் போடப்பட்டதுதான். அதன் பக்கவிளைவுதான் மற்றதெல்லாம். சரி உங்கள் கருத்தின் அடிப்படையிலேயே சொல்கிறேனே கால்டுவெல்லும் திராவிட-மொழிக்குடும்பம் பற்றிதான் எழுதினார். சமஸ்கிருதம்-பற்றி எழுதவில்லை.

//>“கால்டுவெல் திராவிட மொழிக்குடும்பம் என்பதற்கான ஆதாரங்களை தனது நூலில் தொகுத்ததே மிகப்பெரும் பங்களிப்பாகும்“. இதில் என்ன வேடிக்கை உங்களுக்கு?

என் வேடிக்கை அதல்ல. தமிழ் கலாசார, அரசியல் வளர்சிக்கே கால்ட்வெல்தான் வித்திட்டார், அவர்தான் ரட்சகன் என்ற துதிபாடல் பஜனைதான் வேடிக்கை. //

உண்மைதான் இதில் மறுப்பதற்கொ வேடிக்கை விளையாட்டிற்கோ என்ன உள்ளது? கால்டுவெல்தான் தமிழ் என்கிற குறிப்பாக திராவிடம் என்கிற கருத்தாக்கத்தை கட்டமைத்தவர். அவர்தான் தமிழ் மற்றும் திராவிடத்தின் ரட்சகர் தமிழ் இனமானத்தையும் திராவிடத்தைம் முன்வைக்கும் அரசியல் போக்கிற்கு. தமிழும் தமிழ் அரசியலும் வேறு வேறு அல்ல. தமிழ் ஒரு மொழி என்ற நிலையைத்தாண்டி அது அரசியல் கருத்துருவமாக ஆகிவிட்டபின்.. தமிழ் வேறு தமிழினம் வேறு என்பதாக பேசமுடியாது. அதாவது “தமிழ் வாழ்க! தமிழன் ஒழிக!“ என்பது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலான கோஷமே தவிர பயனுள்ள வாதமாகாது. துதிபாடுதல் பஜனை போன்றவற்றை தமிழன் கற்றுக்கொண்ட பின் அதை திரும்ப நடைமுறைப்படுத்துவதில் தப்பென்ன? அதை கற்றுத் தந்ததால்தான் இந்த பிரச்சனைகளே. ஆங்கிலேயருக்கு துதிபாடியவர்களைப் பார்த்து தமிழனும் துதிப்பாடக் கற்றுக்கொண்டான்.

//>சிந்துவெளி நாகரீகம் தமிழ் கலாச்சாரத்தை சேர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஆய்விற்குரிய கருத்தாக உள்ளது.

இதெல்லாம் ஒரு யூகம், ஸ்பெகுலேசனே தவிர, திட்டவட்டமாக யாராலும் சிந்து நாகரீகத்தைப் பற்றி பேசமுடியவில்லை. முப்பது வருடம் ஆய்வுக்கப்புரம், 1998லேயே ஐராவதம் மகாதேவன், சிந்து எழுத்துகள் யாராலும் இண்டர்ப்ரெட் செய்யவில்லை; அவர் சாகும் வரை நிலமை அப்படி இருக்கலாம் என்கிறார். தமிழர்கள் தன்மானத்திற்கு ஏன் இப்படிப்ட்ட ஸ்பெகுலேசன்க்ளும், 19ம் நூற்றாண்டு மொழியியல்களும். அவை தேவையே அல்ல.. மொழியியல், தொல்லியல் ஆய்வுகளை, அதன் நிபுணர்கள் பரிசீலித்து கொள்ளட்டும்.//

நல்லா காட்டுறாங்கடா படத்த. ஒடுக்கப்பட்ட இனம் தனது அடையாள அரசியலை நிலைநிறுத்த வரலாற்றை தேடுதல் என்பது அவசியம். ஒடுக்குபவர்களுக்கும் வரலாற்றை தனதாக்கி ஆண்டுக் கொண்டிருக்கும் ஆண்டைகள் வேண்டுமானால் வரலாற்றை விட்டுவிடலாம். அடிமைகளுக்கு வரலாறு தேவை. அப்பொழுதுதான் ஆண்டைகள் எப்படி வரலாற்றை திரித்து தங்களை ஆண்டு வருகிறார்கள் என்பது புரியும். இந்த ஸ்பெக்குலேஷன் ஊகம் எல்லாம்.. மூலவர்களாக தங்களைக்க் கட்டமைத்துக் கொண்டவர்கள் வழிகாட்டியதுதான். ஏன்? சிந்துவெளி நாகரீகத்தை ஒரு ஆரிய நாகரீகமாகவும், ஆரியர்கள் அல்லது பிராமணர்களின் புர்வஜென்ம புமியாக இந்தியா அதாவது “பாரத்“ இருப்பதாகவும் வரலாற்றை முன் வைப்பவர்களிடம் இதனை நீங்கள் சொல்ல வேண்டும். நிபுணர்கள் வேறு தமிழர்கள் வேறா? என்ன சொல்ல வருகிறிர்கள்? நிபுணர்கள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர்களா? ஒரு இனத்தின் வரலாற்றை மொழியை நிபுணர்கள்தான் கட்டமைக்கிறார்கள். அதனால் பிரச்சனை பாமரர்களிடம் இல்லை உண்டு கொழிக்கும் வர்க்கத்திற்கு துணைப்போகும் கருத்தியலை கட்டமைக்கும் நிபுணர்களிடம்தான் உள்ளது.  

//>அப்படி எனில் கிழக்குலகச் சிந்தனைகள் பற்றி பல வால்யும்கள் மாக்ஸ் முல்லர் போட்டிருக்காவிட்டால் நமது “உன்னதங்கள்” எல்லாம் ஆத்துலையும் சேத்துலையும் கடந்து அல்லாடி குண்டு சட்டியில் ஓட்டிய “குதிரை” (சிந்துவெளிக்குதிரை அல்ல) ஆகியிருக்கும்

மாக்ஸ்முல்லர் இந்தியக் கலாசத்திற்கு அளித்த கொடை ஒன்ருமில்லை. அவர் ஒரு வரி எழுதாமல் இருந்தாலும் இந்திய கலாசரம் தன் போக்கில் போய்கொண்டுதான் இருக்கும்.. இன்னொன்று, அவர் இந்தியாவிற்க்கு வரவில்லை, ஆத்துலையும் சேத்துலையும் கடந்து அல்லாடி ஒடினார் என்பது கற்பனை.//

என்ன இது? புசணிக்காயைக் கூட சோற்றில் மறைக்கலாம் புதத்தை மறைக்க முடியுமா? மாக்ஸ்முல்லர் ஒரு தனிச்சிறப்பான அறிவாற்றல் உள்ள மேதை. அவர் ஜெர்மன் தாய்மொழி என்றாலும் சமஸ்கிருதம், அரபி மற்றும் பாரசீக மொழிகளைக் கற்றுத் தேர்ந்நதவர். மிகப்பெரிய கீழ்திசைவியல் ஆய்வாளர். 50 - தொகுப்புகளாக கீழ்த்திசை “புனித“ சிந்தனைகளை மொழி பெயர்த்து வெளியிட்டவர். இந்தியாவை அதன் பாரம்பரிய “புனிதம்“ என்று சொல்லித் திரியும் வேதகால “பொற்கால“த்தை உலகிற்கு உணர்த்தியவர் மட்டுமல்ல அதன்மூலம் இந்தியாவிலேயே ஆரிய மேண்மை மற்றும் மேலாண்மை பற்றிய கருத்தாக்கத்தைக் கட்டமைத்தவர். “அழித்த கொடை ஒன்றுமில்லை“ என்பதிலேயே நீங்கள் மாக்ஸமுல்லர் பற்றிக் கொண்டிருக்கும் அறிவாற்றல் விளங்குகிறது. யார் எழுதாவிட்டாலம் உலகம் தன்போக்கில் போய்க் கொண்டிருக்கும் என்கிற சாராம்சவாத கருத்தியலை எடுத்து வராதீர்கள். அது அடிப்படையில் தவறான கருத்து. ஏனென்றால் கதைகளும், தொண்மங்களும், புராணங்களும் மற்றும் இலக்கிய, வரலாற்று, விஞஞான ஆவணங்களும் இல்லாமல் உலகம் இல்லை. மொழிதான் உலகை படைக்கிறது. இதை நான் சொல்லவில்லை சைவசித்தாந்தம்கூட “நாதரூப“ உலகம் என்பதன் பிண்ணனி இதுதான். உலகம் “ஆகுக“ என்கிற சொல்லால் படைக்கப்பட்டதாக குரான் கூறுகிறது. வார்த்தை மாம்சமானது என்பது பைபிளின் வாக்கு. இப்படி.. உலகம் சொற்காளால் அதனால் பின்னப்பட்ட கதைகளால் ஆனது. அதனால் ஆய்வுகளும் அறிக்கைகளும் இல்லாமல் உலகம் என்பது இல்லை. இதுகுறித்து விரிவாக பேசுவது இங்கு உசிதமல்ல. குறிப்பாக காலனியக் கட்டுமானம் என்பதும் மேற்குலகம், கிழக்குலகம் என்பதும் ஆய்வகள் மற்றும் பிரதிகள் வழியாக கட்டமைக்கப்பட்டதே. அதனால் கால்டுவெல் எப்படி பஜனைப்பாட திராவிடர்களுக்கு ஒரு கடவுளோ அப்படி மாக்ஸ்முல்லர் ஆரிய பஜனைப்பாடிகளக்கு ஒரு கடவுள். போகிற போக்கி்ல் அந்த மாமேதைகளை தூக்கி எறிந்துவிட முடியாது.

அப்பறம் விவாதத்தை சரியாக படித்தால் தெரியும்  “ஆத்துலையும் சேத்துலையும் கடந்து அல்லாடி ஒடினார்“ என்று நான் சொல்லவில்லை. அங்கு குறிப்பிடுவது மாக்ஸ்முல்லரை அல்ல இந்தியா உலகிற்கே வழிகாட்டி உன்னதக் கலாச்சாரத்தைக் கொண்டது என்று தலித் வாயில் சாணிப்பால் புகட்டி தனது மனித நேயத்தை பண்பாட்டை பறைசாற்றிக் கொண்டிருக்கும் “இந்திய உன்னத பண்பாட்டு பஜனைக் கொஷ்டிகளைத்தான்“ சொன்னேன். மாக்ஸ்முல்லர் இல்லாவிட்டால் உலகளவில் இந்த உன்னத உடுக்கையடிகள் இல்லாமலே போயிருக்கும். கொஞ்சம் தெளிவாக அதைப் படியுங்கள்.

//>தமிழ் என்கிற இனக்கட்டுமானம் ஒரு காலனிய அரசியல் கட்டுமானம் என்பதுடன் அதற்கு ஆரிய பார்ப்னீய மேலாண்மையை எதிர்த்து விழிப்புக்கொண்ட ஒரு வரலாற்றுத் தேவை இருக்கிறது என்பதையும் மறுக்கமுடியுமா?

மறுக்க முடியும். சிலப்பதிகாரம் முதலிய காப்பிய காலங்களில் கூட தமிழ் என்ற இனக்கட்டுமானம் இருந்தது. ஆனால் ஆரிய பார்ப்னீய மேலாண்மைக்கு எதிரானது அல்ல.//

தமிழ் என்கிற இனக்கட்டுமானம் காலனியக் காலத்தையது. இனம் என்பதே காலனிய ஒடுக்கமுறைக் கருவிதான். இதனை மாங்கு மாங்கு என்று எனது கன்னிவெடிகள் கட்டுரையில் எழுதி உள்ளேன். விடியவிடிய கதைக்கேட்டு விடிஞ்சதும் “சீதைக்கு ராமன் சித்தப்பன்“ என்கிற கதையாக உள்ளது. சங்ககாலத்தில் தமிழ் என்கிற இனம் (இன்றைய மொழியில்) இருந்தது. ஆனால் அது தன்னை இனமாக உணரவில்லை. ஒரு குடியாக உணர்ந்தது. அதேபோல் சிலப்பதிகாரம் காலத்திலும் தமிழ் என்கிற இனம் இருந்தது. அது அரசர்களின் குடிமக்களாக இருந்தது. அதற்கு இனம் என்கிற உணர்வு வகையாகாது. அடுத்து களப்பிரர்கள் காலத்தில்தான் பௌத்த பிக்குவான புசிதபாதர் என்பவர் மதுரையில் “திராவிடச் சங்கம்“ என்கிற ஒன்றை உருவாக்குகிறார். நீங்கள் கூறிய சிலப்பதிகாரம் உள்ளிட்ட பேரிலக்கியங்கள் அக்காலத்தில் தோன்றியதுதான்.  (தமிழக பண்பாடும் வரலாறும்- கே.கே. பிள்ளை பாருங்கள்.) அக்காலத்தில் ஆரிய-பார்ப்பனிய மேலாண்மை இருந்ததையும் அதற்கு எதிராக சமண, புத்தமத எழுச்சியும் அதனை ஆதரித்த அரசுமே களப்பிரர்கள். ஆக ஆரிய மேலாணமையை எதிர்த்து களப்பிரர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்ததையும் அதன்பின் வந்த சைவ வைணவ எழுச்சிகள் களப்பிரர்கள் ஆட்சியை அகற்றியதையும், அதன்பின் தோன்றிய மூவேந்த பேரரசுகள் சைவ வைணவச் சார்புப் பேரரசுகளாக இருந்ததும் வரலாறு. ஆக, ஆரிய மேலாதிக்கம் என்பதை உணர்ந்து எதிர்க்கும் நிலை களப்பிரர்கள் காலத்தில் இருந்துள்ளது. ஆனால் அது இன்றை இனம் என்கிற கருத்தில் செயல்படவில்லை. மதம் என்கிற வடிவில் செயல்பட்டது. மதம் என்பது உலக பற்றிய நிலவுடமைச் சொல்லாடல் என்றால் இனம் என்பது முதலாளித்துவச் சொல்லாடல். இதன்பொருள் ஆரிய மேலாண்மையை எதிர்ப்பதற்கான வடிவம் என்பது அந்ததந்த காலத்து கருத்தியல்களால் கட்டப்பட்ட சொல்லாடல்கள் வழியேதான் சாத்தியமாகும். இதுவும் விரிவாகப் பேசப்படவேண்டிய ஒன்று. போகட்டும். நீங்கள் கூறவருவதன் சாரம் இதுதான் ”நான் உதச்சிக்கினே இருக்கேன் நீ வாங்கிகினே இரு”, எல்லாம் ஒன்றாக ஒத்துப்போவோம் என்பதுதான். இதுதான் பல ஆண்டுகளாக செய்யப்படும் திராவிட தமிழின தலித் மற்றும் பெண்கள் ஆதிவாசிகள் மீதான கலாச்சாரா ஒடுக்குமறையாக ஆரிய-பார்ப்பனிய மேலாண்மையால் செய்யப்பட்டு வருகிறது.

//ஆங்கில, மேற்கத்திய சிந்தனை முறைபடி – அதுவும் 19ம் நூறாண்டு சிந்தனைப் படி, இந்தியா போன்ற அடிமை நாடுகள் தங்களால் சுய அரசாங்கம் செய்ய முடியாதவை; ஏனெனில் அடிமைநாடுகளில் நடக்கும் (ஆரிய-திராவிட)இன சுரண்டல்களை தடுக்கவே கடவுள் ஆங்கிலேயர்களை அதிகார வர்கமாக அனுப்பினான். அதனால் நீங்கள் சொல்லும் சரித்திர தேவை இந்தியர்களுக்கு வந்தது அல்ல; ஆங்கிலேய அதிகார வர்கத்துக்கு வந்தது//

உண்மைதான் ஆங்கிலேயர்களின் தேவைதான் இந்திய வரலாற்றை இப்படி எழதியது. இதில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. கடவுள் ஆங்கிலேயர்கள அனுப்பியதாக சொல்வதை ஒரு பெரும்போக்கான பாமரக் கருத்துநிலையாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இன்று ஆங்கிலேயர்கள் கட்டமைத்த வரலாறு என்பதில் உள்ள சிக்கலே ஆரிய-மேலண்மைக் கருத்தியல் அடிப்படையிலேயே இந்த வரலாறு கட்டப்பட்டுள்ளது என்பதுதான். அதனால் ஒரு மாற்று வரலாறு அல்லது மாற்றுக் குரல் என்பது அவசியம். என்றாலும், ஒடுக்கப்பட்டவர்களின் வரலாறும் ஒடுக்குபவர்களின் வரலாறும் ஒன்று அல்ல. ஒடுக்கபவன் அதாவது ஆரிய-மேலாண்மை என்கிற ஒரு வரலாற்றுப் பெருமிதத்தை நிலைநாட்டி அதை இந்திய மக்களின் அன்றாட வாழ்க்கையாக மாற்றிவிட்டான். இந்நிலையில் ஆங்கிலேயர்கள் கட்டமைத்திருந்தாலம், ஒடுக்கப்பட்டவனுக்கு இந்த வரலாறு அவசியப்படுகிறது. ஏனென்றால் இந்த “உட்டாலக்கடி“ பெருமிதத்தை அழித்தொழிக்க ஒரு மாற்றுப் பெருமிதம் தேவை. மனித உயிர் மற்றும் உடல் வெறுமையில் இருப்பது சாத்தயமில்லை. ஏதெனும் ஒன்றுடன் குறிப்பாக நிலத்துடன் அல்லது பண்பாட்டுடன் இணைவதன் மூலம்தான் தனது இருப்பை உணரமுடியும். அதனால் திராவிட-தமிழ் என்கிற பண்பாட்டு உருவாக்கமும் ஆரிய-பார்ப்பனிய பண்பாட்டு உருவாக்கமும் சமமானது அல்ல. ஒன்று ஆக்க நிலையிலும் மற்றது அழிவ நிலையிலும் செயல்படுபவை. ஆக, ஆங்கிலேயம் கட்டமைத்த வரலாறு என்று சொல்வது ஒருவகை பார்ப்பனத் தந்திரமே ஒழிய பரந்துபட்ட மக்களுக்கானது அல்ல.  ஆங்கிலேய அதிகார வர்க்கம் தனது இடத்தில் உயர்சாதி மற்றும் பார்ப்பன அதிகார வர்க்கத்தை வைத்துவிட்டுப் போய்விட்டது என்ன செய்வது? அதனால் போராட்டம் தொடர்கிறது. அம்பேத்கர் மற்றும் பெரியார் ஆங்கிலேயர்களே பரவாயில்லை என்று கூறியதன் பின்னணி இதுதான்.

நவின இந்திய வரலாறு எப்படி கட்டப்பட்டது என்பதை இந்தப் பதிவுகளைப் படியுங்கள் நெரமிருந்தால். நண்பர் ராமானுஜத்தின் இந்தியவரலாறு பற்றிய உரையாடல் இங்கு உள்ளது. எனது வரலாற்று உருவாக்க எநதிரம். ராமன் எனும் நவின தொன்மம் இங்கு உள்ளது. இவை வரலாற்று உருவாக்கம் பற்றிய புரிதலைத் தரலாம். குறைந்த பட்சம் எனது பார்வையையாவது உங்களுக்குச் சொல்லலாம்.


//> நீங்கள் கால்டுவெல்லை மறுக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக திராவிட மொழிக்குடும்பம் என்கிற கருத்தாக்கமே தவறு அப்படி ஒன்று இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்

நீங்கள் பெரிய தவறு புரிகிறீர்கள். கால்ட்வெல் எதோ எழுதிவிட்டு போனார். அதை மறுக்க நான் யார். மொழியியல் அடிப்படையில் நான் திராவிட மொழிக் குடும்பம் ஒன்றுள்ளது என்பதை ஏற்கிறேன். ஆனால் அதனால் தமிழ் சமுதாயத்திற்க்கு எதோ பெரிய சுபிட்சம் ஏற்பட்டுள்ளது என்பது உளரல், கால்ட்வெல் பஜனை மடத்தனம்.அதைத்தான் சொல்கிறேன்.//

கால்டுவேல் ஏதொ எழுதிவிட்டுப் போனார் என்பதிலேயே உங்களது வெறுப்பு வெளிப்படுகிறது. யாரும் கால்டுவெலை மறுக்க வேண்டிக் காத்திருக்கவில்லை. நீங்கள் கங்கணம் கட்யதால் அதை எழுதினேன். கால்டுவேலை மறுப்பது என்பது அவரது கருத்தாக்கத்தை அழித்தொழிப்பதன் மூலமே சாத்தியம். பரவாயில்லை உங்கள் பெருந்தன்மைக்கு ஒரு பாராட்டு குறைந்தபட்சம் திராவிட-மொழிக்குடும்பம் ஒன்று இருப்பதை அங்கீகரித்ததற்கு. மறுபடியும் மறுபடியும் கிளிப்பிள்ளை மாதரி சொன்னதையெ சொன்னால் எப்படி? தமிழ்சமூகம் என்கிற கட்டுமானத்திற்கு கால்டுவெல் பிரதி ஒரு அடிப்படை. அதுதான் அதன் முக்கியத்தவம். அதுதான் தமிழர்களின் தன்மானத்திற்கான அடிப்படை. மக்களக்கு சுபிட்சம் ஏற்பட ஒரேவழி.. உயரசாதி-பார்ப்பன மணோபாவத்தை விட்டு எல்லாம் சமம் எனகிற சமத்துவ சிந்தனைக்கு வந்து பிறகு மலம் அள்ளுதல் துவங்கி அத்தனை வேலைகளையும் பொதுவாக்கி அதை ஒரு பொதுத் தொழிலாக மாற்றினால் வரும் “சுபிட்சம்”. கால்டுவெல் பஜனை மடத்தனமாக இருந்துவிட்டுப் போகட்டுமே.. அறிவாளிகள் அதை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும். 

//உதாரணமாக, ஒரு இலங்கியல் விஞ்ஞானி, புலி, பூனை, மற்றும் பல விலங்குகள் அவற்றின் நடை, எலும்புகள், மூளை வளர்ச்சி, வால் நீளம் ஆகியவற்றை கோள் காட்டி , அந்த விலங்குகள் ஒரு `விலங்குக் குடும்பம்` என்கிறார். அந்த விஞ்ஞான தீர்ப்பினால் அவ்விலங்குகளுக்கு எதாவது நன்மை உண்டா? உங்கள் லாஜிக் அதைப்போல் உள்ளது//

அப்படியா சொல்லவே இல்ல. சின்ப்புள்ளத்தனமா நான் தான் கொஞ்சம் ஒவரா உளறிட்டனோ. கண்டபிடிச்சிட்டாங்கய்யா? கண்டபிடிச்சிட்டாங்க? என்ன சொல்லி சமாளிக்கலாம். ம். ஆண்டவன் மேல பாரத்த போட்ட ஒரு பீஸ போட்டு உடுவோம். (வடிவேலுக்குரலில் வாசியுங்கள்.)

மனிதன் ஒரு பண்பட்ட மிருகம். மிருகத்திற்கு தன்னுணர்வ என்கிற 6-வது புலன் இல்லை. இதெல்லாம் தெரியாத ஒரு விலங்கியல் விஞ்ஞானி விஞ்ஞானி இல்லை கசாப்புக் கடைக்காரன். மொழி என்பது விலங்கிலிருந்து தன்னை வித்தியாசப்படுத்தி உயர்வகைப் பாலூட்டியான மனிதன் வளர்த்துக் கொண்டுள்ள ஒரு ஆற்றல். அல்லது அது ஒரு உடலின் புலனுருப்புப் போன்றது. மொழிதான் மனிதனை கட்டமைத்துள்ளது. மொழி இல்லையேல் மனிதன் இல்லை. அவன் ஒரு விலங்கினமாகவே இருந்திருப்பான். இதன்பொருள் மனிதன் விலங்கைவிட உயர்ந்தவன் என்பதல்ல. மனிதன் ஒரு மற்றொருவகையினம் அல்லது பரிணாமத்தின் உயர்வகை விலங்கு என்று வைத்தக் கொள்ளுங்களேன். அதனால் மொழிக்குடும்பம் மட்டுமல்ல.. பேசப்படும், எழுதப்படும், காணப்டும், கேட்கப்படும், உணரப்படும் எதுவும் மனிதனுக்கு நன்மை பயப்பவையே. நன்மை என்றவுடன் 3 வேளை உண்டு கழித்து மணைவிகளை “உண்டாக்கி“ கழிக்கும் பயன்பாடுகள் இதில் நேரடியாக இல்லை. ஆனால், மனிதன் உயரிவாழ்தல் என்பதும் தன்னை அர்த்தப்படுத்திக் கொள்வதும் இந்த மொழிகளால்தான். உண்ணவும், உண்டாக்கவும்கூட மொழி அவசியப்படுகிறது. இல்லாவிட்டால் விலங்ககளைப்போல பொறுக்கியோ அல்லது வேட்டையாடியோ உண்ணவும், குடும்பம் போன்ற அமைப்புகள் இல்லாமல் யாருடனும் கூடி உண்டாக்கதலும் நடைமுறையாக இருந்திருக்கும். மனிதன் மொழியை அடைந்தவுடன் தன்னை அதற்கு உட்படத்திக் கொள்கிறான். இதுவும் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியதே. குறிப்பாக திராவிட-மொழிக்குடும்பம் என்பதுதான் தமிழனை கட்டமைத்துள்ளது ஒரு இனமாக என்பதையே இத்துடன் 100-வது முறையாக சொல்கிறேன். திரும்பவும் அதையே சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தமிழனுக்கு திராவிட மொழிக்குடும்பம் ஏற்படுத்தியிருக்கும் மிகப்பெரிய நன்மை ஆரிய-சமஸ்கிருத-பார்ப்னிய மேலாண்மையை எதிர்த்து தன்னை தமிழனாக முன்வைக்கம் ஒரு மிகப்பெரிய விடுதலைப் பரப்பை தன்னம்பிக்கையை தன்மானத்தை சுயமரியாதைய ஏற்படுத்தி உள்ளது. தமிழன் தன்னை ஆள்வதற்கான தன்னிலையை கட்டமைத்தது. தமிழனின் அறிவுப்பரப்பை வரலாற்றை தனது பெருமிதத்தை நிலைநாட்டியுள்ளது. இவைதான் தமிழன் உண்ணவும், உண்டாக்கவுமான உணர்வுகளை தந்துள்ளது. இல்லாவிட்டால் வேதம் கேட்டு காதில் ஈயத்தை ஊற்றிக்கொள்ளும் செவிடர்களாக தான் சார்ந்த பெண்ணுடலை பார்ப்பனுக்கு தந்துவிட்டு தண்டனையாக பார்ப்னுக்கு சவுக்கடியும், பார்ப்பன பெண்ணுடலை தான் அனுபவித்துவிட்டால் அவனது ஆண்குறியை அறுப்பதுமான சமததவமற்ற ஒரு “வஞ்சனையான வஞசகமான சமூக நீதிக்கு” அடிமையாகி இருந்திருப்பார்கள். இதெல்லாம் பேச நிறைய உள்ளது. மற்றொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.     

//> சமஸ்கிருதம் இந்தியாவிற்குள் நுழைந்தது என்பதை மறுக்க மாடடீர்கள் என நினைக்கிறேன்.

இந்தியாவில் பல மொழிகள் பல காலங்களில் நுழைந்தன. ஆரிய , திராவிட, திபெத்திய, ஆஸ்திரோ-ஆசிய, இன்னும் இனம் தெரியாத மொழிக் குடும்பங்கள் கிமு 8000 முதல் கிமு 3000 வரை நுழைந்தன தமிழ்நாட்டில் தொன்தமிழ் 2700 ஆண்டுகள் முன்னால் நுழைந்தது//

அதக்கு என்ன இப்போ? இந்தியாவின் புர்வீகம் பற்றியதல்ல இந்த உரையாடல். இது உங்கள் வரலாற்று அறிவின் அசாத்தியத்தை காட்டுகிறது. இடையில் தமிழ் நுழைந்தது என்பதன் மூலம் தாங்கள் கட்டமைக்க விரும்பபு கருத்து புரிகிறது. நுழைந்தது அல்ல பிரச்சனை மற்ற எந்த திபேத்திய. ஆஸ்திரேலிய இன்ன பிற மொழிகளும் தமிழனை, பெண்களை, சூத்திரர்களை மற்றும் தலித்துகளை  அடிமையாகவும் தான் மட்டுமே வாழப்பிறந்தவர்களாகவும் உலகில் தனது பாஷையே தேவ பாஷையாகவும் சொல்லி பிறரை ஆப்படிக்க முயலவில்லை. அதனால் திராவிட-மொழிக் குடும்பம் என்கிற கருத்தாக்கமும் ஆரிய-சமஸ்கிருதம் என்கிற இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்கிற கருத்தாக்கமும் அரசியல் சமநிலைக் கொண்டதல்ல. ஒன்று உயிர்வாழ முயல்வது மற்றது பிற உயிரை அழிப்பது.

//> அதனால் எல்லாவற்றையும் விதந்தோந்தி ஏற்பதும் கண்மூடி நிராகரிப்பதும் என்வரையில் சரியான நிலைப்பாடு இல்லை.

துதி மனப்பான்மையை கண்னை மூடி நிராகரிக்கிரேன். எவ்வித பஜனாவளிகளையும், அது தமிழ்நாட்டு `பகுத்தறிவி`லிருந்து, உற்பத்தியானாலும், கருணநிதி போன்ற திராவிட பணமூட்டைகள் ஆசிபெற்றாலும் மறுக்கிறேன்.//

வாங்க சார். இப்பத்தான் நீங்கள் மனம் திறந்து உரையாடுகிறீர்கள். அருமை. இத இத இததான் நான் எதிர்பார்த்தேன். “பகுத்தறிவு“ எனகிற ஒவ்வாமையும், கருணாநிதி என்கிற அச்சமூட்டும் கனவும் (nightmare) உங்களை ஆட்டிப்படைக்கிறது அழைக்கழிக்கிறது. அதைபேசும் தருணம் இதுவல்ல. உங்களது பிரச்சனை கால்டுவெல்லோ, தமிழினமோ, கருத்தியலோ அல்ல கருணாநிதியும் அவரது பணமூட்டையும்தான்.  நாளை கருணாநிதி மஞ்சள் துண்டை மாற்றி காவித்துண்டுடன் சமஸ்கிருதம் தேவபாஸை என்று அறிவித்து அனைத்து பார்ப்னர்களுக்கும் பழைய பொற்காலத்தை முன்வைத்தாலும் நீங்கள் கருணாநிதி என்கிற காழ்ப்புணர்சியில் அதை மறுக்கலாம். மெய்பொருள் காண்பதல்ல அறிவு... யார் சொன்னான் என்பதே அறிவு. அதிலும் கருணாநிதியா ”கண்ணுல காட்டப்படாது” என்றால் என்ன செய்வது? இவ்வளவு நேரப்பேச்சும் வெட்டியாக விழலுக்கு இரைத்த நீர்தானோ? கருணாநிதியே தனது தமிழுணர்வை மறந்தாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போலிருக்கிறது. தமிழையும் தமிழனையும் மற்றும் கருணாநிதியையும் பகுத்தறிவையும் வாழ வைத்துக் கொண்டிருப்பது நாங்களல்ல நீங்கள்தான் என்பது உங்களுக்குப் புரியும்போது இந்த உரையாடல் வேறு தளத்தில் உங்களுக்குப் அர்த்தம் தரலாம். அதுவரை இப்படி உரையாடி களைப்பதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்?

பதில் என்ற பெயரில் எதாவது புதிய பிரச்சனையுடன் வாருங்கள் நண்பரே.. சொன்னதையே வேறு வேறு வாக்கியங்களில் சொல்வதால் நமது உரையாடல் அலுப்புட்டும் திண்ணைப்பேச்சாக அல்லது வெட்டிக்கதையாக ஆகிவிடும்.
நன்றி.. தொடர் உரையாடலுக்கு.

அன்புடன்
ஜமாலன்.

”தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!” - தொடரும் உரையாடல்.

எனது தீராநதிக்கட்டுரையான “கன்னிவெடி புதைக்கப்பட்ட உடல்களும் கற்பித நிலங்களும்.”  என்கிற கட்டுரைக்கு விஜி“ஸ் என்பவரால் முன்வைக்கப்ட்ட விவாதம் எனது முந்தைய பதிவான ”தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” வில் சொல்லப்பட்டது. அப்பதிவிற்கான அவரின் நீண்ட பின்னொட்டத்தின் தொடர் உரையாடலுக்கான எனது பதில் நீண்டுவிட்டதாலும்,  பொது விவாத நோக்கிலும் இங்கு தனிப்பதிவாக இடப்படுகிறது.

நண்பர் viji's ற்கு..

நீங்கள் இந்த விவாதத்தை INFORMATION_IS_POWERதொடங்கவெண்டியது கவிதாசரணில்தான். அதன் சுட்டி எனது பதிவில் தந்துள்ளேன். அவர்களுக்கு அஞ்சல் அனுப்பி இதனை நீங்கள் விவாதிக்கலாம். எனது ”கண்ணிவெடிக்” கட்டுரையில்.. தமிழன் பற்றிய வரையறையை ஆய்வளாரும் முனைவருமான எஸ். வையாபுரிப் பிள்ளையை முன்வைத்துப் பேசி உள்ளேன். அதனால் கால்டுவெல் பற்றிய பதிவை மீள எனது பதிவில் இடவேண்டி வந்தது. நீங்கள் என்னடாவென்றால் என்னை ஒரு “ஆழ்ந்த அகன்ற” தமிழ் ஆய்வாளனாக கருதி விவாதத்தை தொடங்குகிறீர்கள். இருப்பினும் பொன் வைக்கும் இடத்தில் புவாவாது வைக்க முயல்கிறேன்.

//"உண்மையில் கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலை அடியாதாரமாகக் கொண்டுதான் செம்மொழித் தமிழின் கருத்தியல் களம் பரந்து விரிகிறது"

There is little connection between a the classical Tamil literaure or the knowledge of it and the comparitive linguistic studies. Even in the absense of comparitive language studies, Tamil literature stands on it's own.

Caldwell was the first man to synthesize the amount of knowledge gathered by mid 19th century. His scholorship shows the possibilities and limitations of 19th century linguistics. But to glorify Caldwell or his work as a historical figure who uplifted the status of Tamils or Tamil borders on the ridiculous//

ஒப்பிலக்கியம் என்பது பிரதிகள் மீதான ஒரு அரசியல் செயல்பாடு. இச்செயல்பாடு இந்திய காலனிய அமைப்பிற்கு பின் பரவலாகியது. இந்த கால்டுவெலின் நூல் சமஸ்கிருதம்தான் இந்தியாவின் ஒரே மொழிக்குடும்பம் என்று கட்டமைக்கப்பட்ட மாக்ஸ்முல்லரின் கருத்தை மறுத்து திராவிட மொழிகள் என்கிற தனித்ததொரு மொழிக்குடும்பம் சமஸ்கிருத துணையின்றி உள்ளதை எடுத்துக்காட்டியது.  ஆரிய திராவிட முரணை கட்டமைத்த இக்கூற்று ஆரிய மேலண்மைக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்கியது என்பது முக்கியம். தமிழ் இலக்கியம் பற்றி இங்கு யாரும் பேசவில்லை. நீங்களாக இலக்கியம் ஒப்பிலக்கணம் இல்லாமல் உயர்ந்து நிற்கும் என்று இலக்கியத்தைக் கொண்டு வந்து மொழி விவாதத்தில் முடிபோடுகிறீர்கள். உண்மையில் ஒப்பிலக்கியம் என்பது தமிழ் இலக்கியப் பெருமிதம் பற்றியது அல்ல. அது திராவிட மொழிக்குடும்பம் பற்றிய ஒரு கண்டுபிடித்தலை முன்வைத்தது. அல்லது டிராட்ஸ்மென் கூறுவதுபோல “கால்டுவெல் திராவிட மொழிக்குடும்பம் என்பதற்கான ஆதாரங்களை தனது நூலில் தொகுத்ததே மிகப்பெரும் பங்களிப்பாகும்“. இதில் என்ன வேடிக்கை உங்களுக்கு? தமிழ் என்கிற கருத்துருவத்தை அல்லது திராவிடம் என்கிற கருத்துருவத்தை கண்டடைந்து அதற்கான நில எல்லைகளை திராவிட மொழிக்குடும்பம் என்று காட்டித் தந்தது அவரது ஆய்வுதான். இது தமிழ் பற்றிய அடிப்படையான விஷயம்.

ஒருவேளை கால்டுவேல் இல்லாவிட்டால் வேறு ஒருவர் அதை செய்திருக்கக்கூடும். உண்மையில் இந்த திராவிடக் கருத்தாக்கத்தை முதன்முதலில் முன்வைத்தவர் சென்னை மாகாண ஆட்சியாளராக இருந்த எல்லிஸ் என்பவர்தான் (சென்னை எல்லீஸ் சாலை அவர் பெயரால்தான் உள்ளது.) இது குறித்து விரிவாக டிராட்ஸ்மெனின் சமீபத்திய நூலான, ஒரே நேரத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிடப்பட்ட “திராவிடச்சான்று“ (காலச்சுவடு வெளியீடு) பேசுகிறது. வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

மேலும் கால்டுவெல் பற்றி படிக்க.  

http://www.sangam.org/articles/view2/?uid=1033
http://www.tamilnation.org/heritage/muller.htm

//"கால்டுவெல் மட்டும் இந்த நூலை எழுதாமல் இருந்திருந்தால் இன்றைய இந்தியப் பெருவெளியில் தமிழ்ச் சமூகம் என்னவாக இருந்திருக்கும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது"

Whether Caldwell lived or not would have made no difference on the status of Tamil. Tamil lives or dies by the use or the nonuse by each generation. Tamil is no more developed than Malayalam or Hindi or Punjabi as of today since there are no good books especially in Science in Tamil. Till such time there are original research papers in Tamil or original thoughts published in Tamil, Tamil is no more developed today than it was in the time Caldwell//

என்ன பிரச்சனை உங்களது பிரச்சனை? தமிழ் என்கிற தண்ணுணர்வை தந்தது தமிழ் என்கிற கருத்துருவம்தான். அந்த கருத்துருவத்தை உருவாக்கியது கால்டுவெல்லிற்கு முக்கிய பங்கு உண்டு. நிச்சயமாக கால்ட்வெலின் இந்த கண்டுபிடிப்பு இல்லாமல் இருந்திருந்தால் தமிழ் என்கிற உணர்வே அற்றும் தமிழ் ஒரு தனித்துவமிக்க மொழியாக இல்லாமல் அழிந்துபட்டிருக்கலாம், அல்லது இதைவிடவும் உன்னத நிலையை அடைந்திருக்கலாம். பிரச்சனை அது அல்ல. கால்டுவெல் வந்தபின் தமிழ்நிலை என்ன என்பதுதான்? மலையாளம் இதர மொழிகளில் வளர்ச்சி உள்ளது என்பது அவர்கள் வெளியிடும் புத்தக எண்ணிக்கைகளை வைத்து அளவிடப்படுவதில்லை. தமிழில் விஞ்ஞான சிந்தனை வளரவில்லை என்பது ஒரு வாதம் அல்ல.  விஞ்ஞான சிந்தனை வளர்ந்த நல்ல புத்தகங்கள வெளியிட்டு விட்டதால் அந்த மொழிகள் எந்த அளவிற்கு வளர்ந்து செம்மொழியாகி உள்ளது என்று கூற முடியுமா? மலையாளம் என்பது தமிழின் சேய்மொழிதான் என்பதும் அதற்குள் சமஸ்கிருதம் என்பது பாதிக்கு பாதி தமிழுடன் கலந்தும் உள்ளது என்பதும் ஆய்வாளர்கள் காட்டும் முடிவு. அறிவை உருவாக்குவது மட்டுமல்ல உருவான அறிவைக்கொண்டு வாழ்க்கையை இடையீடு செய்வதும்தான் அறிவின் பணி. அதனால் கால்டுவெல் வெளிவந்துவிட்ட ஒரு யதார்த்தம். அதனை எதிர்கொண்டுதான் வேண்டும்.

தமிழில் நல்ல நூட்கள் வரவில்லை என்பது ஒரு அடிப்படையான நழுவல். விஞ்ஞான சிந்தனை வளரவி்ல்லை என்பதும் அப்படியே. அதற்கு பல சமூகக் காரணங்கள் உள்ளது. குறிப்பாக ஆரிய மேலாண்மையை எதிர்த்து கேள்வி கேட்ட தன்மானம் மிக்கதாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது தமிழ் சமூகம். (இந்தவகை அடையாள அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், இன்றைய அரசியல் அவசியம் கருதி அதை முன்வைக்க வேண்டி உள்ளது.) தமிழ் கால்டுவெல் காலத்திற்குப்பிறகு வளரவேயில்லை என்றால் முதலில் இரண்டு காலத் தமிழையும் ஒப்பிட்டு வளராததை ஆதாரத்துடன் சொன்னால் புரிந்து கொள்ள நலமாக இருக்கும். தமிழ் வளரவில்லை என்கிற சவளைப் பிள்ளைவாதம் எல்லாம் இப்பொழுது எடுபடாது. ஆகச்சிறந்த பல இலக்கியங்கள், உலகச் சிந்தனைகள் தமிழில் எழுதப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருகிறது. முதலில் கால்டுவெல் காலத்து அறைக்குள் உடகார்ந்து கொண்டில்லாமல் சன்னலையாவது (windows - google search and blogs) திறந்து பாருங்கள். 

//"சிந்துவெளி நாகரிகம் தமிழ்ச் சமூகத்தினுடையது என்று சொல்வதுகூட எளிதாய் இருந்திருக்க முடியாது"

Nobody except rabid Tamil fanatics accepts that Sindhu Nagarigam was Tamil.//

இந்தக் குதிரைக்கதை எல்லாத்தையும் ஓட்டியாச்சு முன்பே. தமிழ் பானடிக்ஸ் பற்றிய ஆரிய பானடிக்ஸ்களின் காய்ப்பு எரிச்சல் எல்லாம் இந்த சிந்துவெளி குதிரைக் கதையில் அம்பலப்பட்டு அந்தோ கதியானதைப் பற்றி பல பதிவுகளும் கட்டுரைகளும் வந்துவிட்டது. கதவை திறங்கள் காற்று வரட்டும். சிந்துவெளி நாகரீகம் தமிழ் கலாச்சாரத்தை சேர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஆய்விற்குரிய கருத்தாக உள்ளது. அதேசமயம் அது ஆரிய-வேதகால நாகரீகத்தைச் சேர்ந்தது அல்ல என்பதும் பெருவாரியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. சிந்துவெளி நாகரிகம் எதைச் சேர்ந்தது என்பது வேர்தேடி அரசியல் சார்ந்ததாக உள்ளது. அதன் வெளிப்பாடுதான் கவிதாசரணின் கூற்றும் அதை எதிர்த்து வந்துள்ள உங்கள் கூற்றும். சிந்துவெளி நாகரீகம் யாரைச் சேர்ந்தது என்பதன் வழியாக பெறப்படும் பெருமிதங்கள் மற்றொரு வரலாற்று வன்முறைக்கான விதையைக் கொண்டவைதான்.

//"இந்திய ஒற்றைத் தேசியத்தில் தமிழ்ச் சமூகம் ஆகக் கீழான தலித் சமூகமாக மிதிபட்டு நசுங்கிப் போயிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது"

Utter rubbish//

இது ரப்பிஸ்தான். தலித்துகளை காலில் போட்டு மிதிப்பதை 3000 ஆண்டுகளாக ஒரு மதக் கடமையாக ஒரு மனுக் கடைமையாகச் செய்து வருவது ரப்பிஸ் இல்லை. இதுதான் ரப்பிஸ்??? தலித்துகளை மிதிப்பதைப்போல தமிழ் சமூகத்தை ஒடுக்கவும் அதனை வளரவிடாத இனப்பிரச்சனையும் இல்லை என்கிறீர்களா? தமிழ் இனத்தின் வாழ்வுரிமைக்கான ஜனநாயகக் கோரிக்கை இல்லையா? அது அங்கீகரிக்கப்பட் வேண்டாமா?

//" இன்றைய அரசியல் களத்தில் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தமிழ்ச் சமூகத்தைத் தலைநிமிர்ந்து செம்மாந்து நிற்க வைத்த பெருமை கால்டுவெல்லையே சாரும். "

This is utterly false. If all the achivements of Tamils over the last 150 years can be traced to a book written by a foreigner in a foreign language for the benefit of his fellow countryman, then there is nothing more demeaning for Tamils. This is a patent nonsense.//

அய்யா என்ன புரிதலில் இதை எழுதுகிறீர்கள் என்று புரியவில்லை. நீங்கள் ஆங்கிலேயர் இல்லை ஆனாலும் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். அப்பிடியிருக்க இந்த  நூல் அந்நியரான ஒருவரால் ஆங்கிலத்தில் வந்ததால் இதனை பின்பற்றுவது தவறாக தெரிகிறதா? அப்படி எனில் கிழக்குலகச் சிந்தனைகள் பற்றி பல வால்யும்கள் மாக்ஸ் முல்லர் போட்டிருக்காவிட்டால் நமது “உன்னதங்கள்” எல்லாம் ஆத்துலையும் சேத்துலையும் கடந்து அல்லாடி குண்டு சட்டியில் ஓட்டிய “குதிரை” (சிந்துவெளிக்குதிரை அல்ல) ஆகியிருக்கும். இத்தகைய சிந்தனைகள் உலக அளவிலானவை. ஆங்கிலேயக் காலனிய அரசியலுடன் இந்த “உலகலாவிய“ காப்புரிமை என்பது உறவு கொண்டது. இன்று ஆங்கிலேயக் காலனியம் கட்டமைத்த பார்வையின்றி உலகைப் பார்ப்பதும், புரிந்து கொள்வதும் அதீத அரசியல் புரிதலின்றி சாத்தியமில்லை. பின்காலனியச் சிந்தனைகள் இதன் மீதுதான் தங்களது கவனத்தைக் குவிக்கின்றன. தமிழ் என்கிற இனக்கட்டுமானம் ஒரு காலனிய அரசியல் கட்டுமானம் என்பதுடன் அதற்கு ஆரிய பார்ப்னீய மேலாண்மையை எதிர்த்து விழிப்புக்கொண்ட ஒரு வரலாற்றுத் தேவை இருக்கிறது என்பதையும் மறுக்கமுடியுமா?

//" "வெள்ளையின மக்களே மேன்மை யானவர்கள், கறுப்பினத்தார் கீழானவர்கள்" என்னும் சமஸ்கிருதக் கோட்பாட்டை அடித்து நொறுக்கியவர் கால்டுவெல். "

After tracing all the Tamils history to a white man writing in a white man's language for the benefit of other white men, the above statement is ironic and contradictory.//

என்ன சொல்ல வருகிறிர்கள்? வெள்ளையினத்தவரான கால்டுவெல் எழுதியதால் அது வெள்ளையினத்தவருக்கும் சாதகமானதாக உள்ளது என்பதில் எந்த முரண்பாடும் இல்லை. ஆனால் அது இங்கு நிலவிய சமஸ்கிருத மேலாண்மைக் கோட்பாட்டை அடித்து நொறுக்கியத என்பது உண்மை. பிரச்சனை அது சரியா தவறா என்பது அரசியல் சார்ந்தது. ஒருவேளை ஆரிய-திராவிட முரண் என்பதை நிராகரிக்கும் மனிதேநேயமிக்கவராக நாம் இருந்தால், உடனடியாக தலித் உள்ளிட்ட அனைவரையும் தமிழ் போன்ற இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்ட மொழிகளையும், நாகரீகத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட ஆதிவாசிகளையும் அதிகாரத்திற்கு கொணடு வந்து நாம் பார்த்து இனபுறுபவராக இருக்க வேண்டும்.  அப்படி இருந்தால் கால்டுவெலும் தேவையில்லை தமிழ் இனஉணர்வும் தேவையில்லை. அது சாத்தியமில்லை எனும் போது இவை எல்லாம் அவசியமானவைதான். இப்படி ஒரு நிலையை அங்கீகரிக்கவே நமக்கு இத்தனை மனத்தடைகளும், சங்கடங்களும் உள்ளபோது எப்படி தமிழினம் தனது தன்மானத்தை விடும். வெள்ளைக்காரர் என்றவகையில் அவர் எழுதியதில் அவருக்கு ஒரு அரசியல் உள்நோக்கம் இருந்திருக்கலாம், அதைவிடவும் அப்பிரதி தமிழக அரசியலில் ஒரு பங்களிப்பை செய்துள்ளது. நீங்கள் கால்டுவெல்லை மறுக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக திராவிட மொழிக்குடும்பம் என்கிற கருத்தாக்கமே தவறு அப்படி ஒன்று இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.  இஙகு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன், இனம் பற்றிய எனது கருத்தை கண்ணிவெடிகள் பற்றிய எனது கட்டுரையில் படித்திருப்பீர்கள். 

//"சமஸ்கிருதம் இந்தியாவுக்குள் நுழையுமுன்பே தமிழுக்குக் கடன்பட்டது என்பதைத் தர்க்கபூர்வமாக நிறுவிக்காட்டியவர் அவர்"

This is a plain lie. He considers such a possibility as one of the hypotheses. He is not sure of the prehistory of languages. He was only an amatuer in linguistics and he was not a historian or archeologist by inclination. Caldwell does not make wild claims in his book.

Caldwell Bhajanai may suit the dravidian politicians, but it won't give them any extra knowledge. The Dravidian bajanai of Caldwell has not given them any mastery of language or sciences can be seen from the fact that THERE IS NO TAMIL TRANSLATION OF CALDWELL'S BOOK. The only things dravidians can do is bajanai.//

இந்த பஜனை யார் செய்கிறார்கள்? ஆரிய மேண்மை என்கிற 3000 ஆண்டுகால பஜனைக்கு பதிலாக, பாவம் தமிழர்கள் சம்மா 150 ஆண்டுகள் செய்தவுடன் ஏனிந்த கொலைவெறி? நீங்கள் கவிதாசரண் கூறுவதை மறுக்க முதலில் கால்டுவெல் படித்து அப்படி நிரூபித்துக் காட்டப்படவில்லை என்பதை சொன்னால் என்னைப்போல பமரர்களுக்கும் புரியும். சமஸ்கிருதம் இந்தியாவிற்குள் நுழைந்தது என்பதை மறுக்க மாடடீர்கள் என நினைக்கிறேன். (செமட்டிக் மதமான யுதர்களுக்கும் பிராமணர்களுக்கும் தொடர்பு உள்ளது என்றும் இருவருக்கும் மூலம் ஒன்றுதான் என்றும் கூறும் ஆய்வுக் கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள். எனது கட்டுரையில் குறிப்பு உள்ளது.) அப்படி நுழையும்முன் தமிழ் அல்லது தமிழின் மூல மொழி அல்லது திராவிட மொழி என்பது இருந்திருக்கும்.  வேண்டாம் ஏதொ ஒரு மொழி இருந்திருக்கும். ஏன் வேதத்தி்ல் தஸ்யுக்கள் எனப்படும் கருப்பர்கள் ஏதோ எழுதுவதாக ஒரு சுலோகம் சொல்கிறதாம் எங்கோ படித்த நினைவு. எனவே வேதமொழியான சமஸ்கிருதம் வாய்மொழியாகவும், கருப்பர்கள் மொழி எழுத்து மொழியாகவும் இங்கு இருந்திருக்கிறது. அதனால் மொழி என்பது ஒன்றுடன் ஒன்று கலந்தும் இணைந்தும் விலக்கியுமே இயங்கக் கூடியது. தூய மொழி என்பது ஒரு பாசிசக்கனவு. எப்படி தூய இனம் என்பது பாசிசவடிவமோ அப்படித்தான் இதுவும். தூய மற்றும் ஒழங்கு என்பதே பாசிசத்திற்கான முன் ஒட்டுத்தான். பன்மையும் கலவையும்தான் எல்லாம்.

ஆகையினால் நண்பரே.. ஆரிய-திராவிட முரண் என்பது ஒரு காலனியக் கட்டுமானம் என்பதும்.. கால்டுவெலின் இந்த நூலே “மறவர்கள்“ மற்றும் தமிழர்களை ஆங்கில இராணுவத்தில் இணைப்பதற்கான ஆய்வாகத் துவங்கியதே என்றும் சில குறிப்புகள் கூறுகின்றன. குறிப்பாக திருநெல்வேலி பற்றிய கால்டுவெல்லின் ஆய்வு நூல். கால்டுவெல் நூல் தமிழில் இதுவரை வெளிவரவில்லை என்பது ஒரு முக்கியமான அவலநிலைதான். அதற்கான காரணங்களழல் ஒன்று பல்கலைக்கழகஙகள்கூட முன்மஙற்சி எடுக்கவில்லை என்பதுதான். இதுவே தமிழினம் கருத்தியல் அளவில் ஒடுக்கப்ட்டுள்ளதற்கான சான்றாக கொள்ளலாம். அதாவது அந்தநூலை வெளியிடுவதில் ஆதிக்கம் வகிக்கும் சாதியினரக்கோ அல்லது அதிகார வர்க்த்திற்கோ ஏதொ பிரச்சனை இருக்கலாம். 800-பக்க நூலை முழுமையாக மொழி பெயர்த்து வெளியிடுவது என்பது இன உணர்வள்ள சின்ன நிறுவனங்களால் சாத்தியமா? என்பதும் இதனுடன் இணைத்துப் பார்கப்பட வேண்டியதாக உள்ளது. ஆனால் டிராட்ஸ்மெனின் “திராவிடச்சான்று“ பேராசிரியர் இரதம. சுந்தரம் மொழிாயர்ப்பில் தமிழில் வந்துள்ளது காலச்சவடு பதிப்பக வெளியீடாக.

அதனால் எல்லாவற்றையும் விதந்தோந்தி ஏற்பதும் கண்மூடி நிராகரிப்பதும் என்வரையில் சரியான நிலைப்பாடு இல்லை. எனக்கும் இனம், மொழி, மதம், பாலினம் போன்ற எல்லா அடையாளத் தன்னிலைகள்மீதும் உடன்பாடில்லைதான், அதற்காக அவை முன்வைக்கும் ஜனநாயகக் கோரி்க்கைகளை நிராகரித்துவிட முடியாது. தமிழினம் ஒடுக்கப்படும்போது அதற்கான இனக்கோரி்க்கையை முன்வைப்பதில் அதன் அடையாள அரசியல் வரலாற்றுப் பெருமிதம் ஆகியவை முக்கிய பங்காற்றுகின்றன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.  ஆரியமேலாண்மை அல்லது ஆரியமேண்மை என்பது வரலாற்றில் முன்வைக்கப்பட்ட ஒரு அவலம் என்பதை உணர்வதின் வழியாகவே தமிழினம், திராவிடம். தலித்தியம் போன்ற கருத்தாக்கங்களின் அறிகுறிகளை நீக்க முடியும். அதைவிட்டு யார் முன்னாடி என்கிற பழம்பெருமை பேசவதில் யாருக்கும் பயனில்லை.

//(My Vista machine does not take in Murasu fonts, so I cannot write in Tamil now) //

நீங்கள் NHM Writer என்று ஒரு தமிழ் எழுதி உள்ளது. அதை முயற்சித்துப் பாருங்கள் விஸ்டாவில் வேலை செய்யலாம். அப்பப்ப தமிழும் கொஞசம் பொழச்சிப் போட்டுமே.. :)

நன்றி உங்களது நீண்ட விவாதத்திற்கு.

அன்புடன்
ஜமாலன்.

”தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!”

தீராநதி செப்டம்பர் 2008 இதழில் வெளிவந்த எனது கன்னிவெடி புதைக்கப்பட்ட உடல்களும் கற்பித நிலங்களும். என்கிற கட்டுரை குறித்து வெளிவந்துள்ள ஒரு பின்னொட்டம்.

??????????? ???? said...
"எஸ். வையாபுரிப்பிள்ளை தொகுத்த சென்னைப் பல்கலைக்கழக நிகண்டில் தமிழன் என்பதற்கான வரையறையாக "பார்பனரல்லாதவரும் சூத்திரனல்லாதவரும்” என்று சொல்லப்பட்டள்ளது. "
You are wrong. This is what Tamil Lexcicon says:
4. தமிழன் tamiḻaṉ : (page 1757)
வசனநூல்.
தமிழன் tamiḻaṉ
, n. < id. 1. One whose mother-tongue is Tamil; தமிழைத் தாய்மொழி யாக உடையவன். 2. A Tamilian, as dist. fr. āriyaṉ; ஆரியனல்லாத தென்னாட்டான். ஆரியன் கண்டாய் தமிழன்கண்டாய் (தேவா. 744, 5). 3. Caste man, as dist. fr. paṟaiyaṉ; பறைய னொழிந்த
The last definition means Tamilian is a Caste Hindu as distinct from 'Paraiyan'. In other words the caste Hindus appropriated the Tamilian badge for themselves and excluded 'pariayans' even from that.
The Lexicon definitions is not a prescriptive one, but merely descriptive ones i.e. as used in literature or newspapers or daily life.

அதற்கு எனது பதில்.

உங்களது விரிவான சுட்டிக்காட்டுதலுக்கு நன்றி. எஸ். வையாபுரிப்  பிள்ளையின் இந்த வரையறைப்பற்றி சமீபத்தில் வெளிவந்துள்ள ”A Comparative Grammar of the Dravidian or South Indian Languages" என்கிற ராபர்ட் கால்டுவெல்லின் திராவிட ஒப்பிலக்கண நூலின் புதிய பதிப்பாக வெளிவந்துள்ள கவிதாசரணின் அறிமுகக் குறிப்பிலிருந்து இது எடுத்தாளப் பட்டுள்ளது. அப்பகுதி இங்கு..

கவிதாசரணிலிருந்து...

தமிழ்ச் சூத்திரர்கள் தங்களை மட்டுமே தமிழர்களாக நிறுவிக் கொண்டார்கள். பார்ப்பனர்களையோ தாழ்த்தப்பட்டவர்களையோ தமிழர்களாக அவர்கள் ஏற்கவில்லை என்னும் முறைகேட்டை கால்டுவெல் துல்லியமாக எடுத்து வைத்துத் தாழ்த்தப்பட்டவர்களும் தமிழர்களே என்று நிறுவுகிறார். அந்தப் பகுதியையும் அதன் நிறம் கசிந்த பல பகுதிகளையும் வெட்டியெறிந்துவிட்டே "தமிழர்கள்" அவர் நூலுக்கு மூன்றாவது பதிப்பைக் கொண்டு வருகிறார்கள். அவர் எடுத்துக் காட்டிய உண்மை மறைக்கப்பட்டுவிட்டதால், எப்போதும் போலவே வையாபுரிப் பிள்ளை தொகுத்த தமிழ் அகராதியில் "பார்ப்பானொழிந்த பறையனொழிந்த தமிழ் பேசுவோரே தமிழர்கள்" என்று குறிப்பிடும் பழைய முறையைப் பேணிக் கொண்டார்கள். இதை எதிர்த்து அண்மைக் காலங்களில் கிளர்ச்சி நடந்தது. உண்மையில் இந்தக் கிளர்ச்சி கால்டுவெல் காலந்தொட்டே நடந்திருக்க வேண்டும். அதை மறைத்த பெருமை இந்தச் சுரணையற்ற தமிழர்களையே சாரும்.

கவிதாசரண் ஆகஸ்டு-செப்படம்பர் 2008 ல் வெளிவந்த அப்பகுதி இங்கு முழுமையாக மீள்பதிவு செய்யப்படுகிறது.

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை நடத்திய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் வெளியீட்டுக் கருத்தரங்கு விழா

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை நடத்திய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல் வெளியீட்டுக் கருத்தரங்கு விழா

150px-Caldwellஇராபர்ட் கால்டுவெல் 1875இல் இரண்டாம் பதிப்பாகத் திருத்தி வெளியிட்ட "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" (A comparative Grammar of the Dravidian or South Indian Languages) என்னும் நூல் 1913இல் பல்வேறு விடுபடல்களுடன் மூன்றாம் பதிப்பாக வெளியிடப்பட்டது. மூல நூல் மொழியியல், வரலாற்றியல், சமூகவியல் என முப்பரிமாணம் கொண்டது. அவற்றில் மொழியியலை மாத்திரம் தக்க வைத்துக்கொண்டதே மூன்றாம் பதிப்பு - ஆகவே, குறை பதிப்பு. இப்போது கால்டுவெல்லின் 1875ஆம் ஆண்டின் முழுமையான ஆங்கிலப் பதிப்பு கவிதாசரண் பதிப்பகம் மூலம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

அந்நூலை முன்வைத்து 24.04.2008ஆம் நாள் காலை 10:30 மணி முதல் மாலை 5:30 வரை, சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் இலக்கியத் துறை தன் பவளவிழாக் கலையரங்கில் கருத்தரங்கும் வெளியீடும் நடத்தியது. காலை நடந்த கருத்தரங்கிற்குத் தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் பேராசிரியர் வீ.அரசு அவர்கள் தலைமை ஏற்று நூலையும் அதன் மூலத்தை மீட்டெடுத்த பதிப்பையும் பற்றி விரிவான ஆய்வுரை நிகழ்த்தினார். அவரைத் தொடர்ந்து பேராசிரியர் மு.வேதசகாயகுமார், "கால்டுவெல் ஆய்வுகள்" பற்றி உரை நிகழ்த்தினார். இவர் கால்டுவெல் நூலைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருபவர். அவருடைய உரையும் அவ்வாறே. "கால்டுவெல் எழுதிய நூல்கள் ஏற்படுத்திய சர்ச்சைகள்' என்பதையே ஒரு தனி நூலாகக் கொண்டுவரலாம் எனும் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அவரது ஆய்வுரை அமைந்தது.
அடுத்து, அ.மங்கை, "காலனியமும் மொழி ஆய்வுகளும்" எனும் தலைப்பில் ஒப்பிலக்கணம் எழுதப்பட்ட சூழல், தேவை பற்றி அரிய தகவல்களுடன் விரிவாகப் பேசினார். அவருக்குப் பின்னர் "திராவிட மொழியியலும் கால்டுவெல்லும்" என்னும் பொருள் பற்றி இலக்கண மாதிரிகள் பலவற்றை மேற்கோள் காட்டி பேராசிரியை ந.கலைவாணி ஒரு வகுப்பறைப் பேராசிரியராகத் தகவல்கள் தந்தார்.
பிற்பகல் வ.கீதா, "காலனியமும் இனவியல் ஆய்வுகளும்" என்பது பற்றி ஆய்வுரை நிகழ்த்தினார். தமிழ், வடமொழி இரண்டும் பெண்மொழி, ஆண்மொழி என்று அழைக்கப்பட்டது பற்றிய தகவல்களோடு அ.மங்கையின் உரையைப் பலமுறை மேற்கோள் காட்டி இனவியல் முறைமைகளை விளக்கினார். அவரைத் தொடர்ந்து கவிதாசரண், "கால்டுவெல் நூல்பதிப்பு அரசியல்" பற்றி எடுத்துரைத்தார். கால்டுவெல் பறையர்களைப்பற்றி எழுதிய கட்டுரை மறைக்கப்பட்டதை வேதசகாயகுமார் முதன்முதலில் கவிதாசரண் இதழில் அம்பலப்படுத்தியதையும் அக்கட்டுரையே இந்நூல் கொண்டுவரக் காரணமென்றும், பழைய படியைத் தேடிக் கண்டுபிடிப்பதில் பொ.வேல்சாமி செய்த உதவியையும் நினைவு கூர்ந்தார். மூன்றாம் பதிப்பில் விடுபட்ட பகுதிகள் பற்றிக் குறிப்பிட்டு அவற்றுக்குப் பின்னுள்ள அரசியலை விரிவாகச் சொன்னார்.

கருத்தரங்க முடிவில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூலை வெளியிட்டு முதுபெருந் தோழர் இரா.நல்லகண்ணு அவர்கள் அரிய உரை நிகழ்த்தினார். பறையர்கள் பட்ட அவலங்களை உதாரணத்துடன் விளக்கினார். ஒரு வெளிநாட்டுக்காரர் இவ்வளவு பெருமுயற்சியும் நல்லெண்ணமும் கொண்டு மண்ணை, மக்களை, மொழியை ஆய்ந்திருப்பது வியப்புக்குரியது என்றார்.
தொடர்ந்து பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் பேசினார். நூலில் கால்டுவெல் வாழ்க்கைக் குறிப்பை இணைத்திருந்தால் நன்றாயிருக்கும் என்றார். திராவிட இயல் இன்று பெரும் பரப்பையும் வீச்சையும் கொண்டு திகழ்வதைக் குறிப்பிட்டு, கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி வரலாறு போன்ற எல்லா நூல்களையும் ஆழ்ந்து ஆய்தல் வேண்டும் எனச் சொன்னார்.

மேடையில் கவிதாசரண்கள் நூலாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். கவிதாசரண் தன் ஏற்புரையில் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறைக்கும் அதன் தலைவர் பேராசிரியர் வீ.அரசுவுக்கும் தன் மனமார்ந்த நன்றியை நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தார். பேராசிரியர் மணிகண்டன் தன் நன்றி நவிலலில் கால்டுவெல் நூல் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டதில் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் விருப்பம் நிறைவேறியிருப்பதாகக் குறிப்பிட்டார். விழா மேடையில் முதுபெரும் தமிழ்மகனார் மா.சு.சம்பந்தனார் அவர்கள் நூல் பெற்றுச் சிறப்பு செய்தார்.

நூல் பற்றிச் சில கருத்துகள்:

1. "பார்ப்பானுக்கு அடிமையாய் இருந்தாலும் இருப்பேனே தவிர பறையனுக்குச் சகோதரனாய் இருக்க மாட்டேன்" என்னும் தமிழ்ச் சாதியின் வெறியுணர்வே தமிழின் தனித்துவத்தையும் மீறி அவர்களைப் பார்ப்பனத் தகைமைகளுக்கு முன்னுரிமையும் முதலிடமும் கொடுக்க வைத்துள்ளது. அதன் காரணமாகவே "பறையர் முதலான தாழ்த்தப்பட்டவர்கள் திராவிடர்கள்தாம்" என்னும் கால்டுவெல்லின் கட்டுரையை அவர் நூலிலிருந்தே உருவிப்போட்டுவிடத் துணிச்சலைக் கொடுத்திருக்கிறது.

2. பறையர் முதலானவர்கள் பார்ப்பனர் முதலான உயர்சாதியினரின் முறையற்ற பாலுறவால் "நடத்தை கெட்டவர்கள் பெற்றுப்போட்ட குழந்தைகள்" என்பதாக ஐரோப்பியர்கள், பார்ப்பனர்கள், உயர்சாதித் தமிழர்கள் போன்றோரால் இழிவாக வைத்து எண்ணப்பட்டிருந்த காலம் அது. இது ஆய்வு ரீதியாகவோ நடைமுறை அறிவிலோ மெய்ப்பிக்கப்பட முடியாத கட்டற்ற மனத்தின் ஆகப்பெரும் பொய்ப்புனைவு என்பதைக் கால்டுவெல் ஐயத்திற்கிடமின்றி நிறுவுகிறார். இந்தப் பொய்யிலும்கூட ஒரு விஷயம் பாருங்கள்: வல்லுறவு கொண்ட பொறுக்கிகள் மேல்குலத்தவர்களாம். வல்லுறவுக்காட்பட்ட பெண்கள் பெற்றுப்போட்ட குழந்தைகள் சாதி கெட்டவர்களாம். இந்தச் சடங்குத்தனமான வகைப்பாட்டை நம்புகிறவர்கள்தாம் மேன்மக்கள் எனில் மேன்மையின் கீழ்மை எவ்வளவு கோரமானது அதைத்தான் கால்டுவெல் வலுவாக நிறுவுகிறார். அதைச் சகித்துக்கொள்ள மறுத்தவர்கள்தாம் அவர் நூலைச் சிதைத்தவர்கள்.

3. மாதவியின்பால் கோவலன் "விடுதல்அறியா விருப்பினன்" ஆயினன் என்பார் இளங்கோவடிகள். தமிழின் மேல் கால்டுவெல்லின் நேசமும் அப்படிப்பட்டதுதான். 53 ஆண்டுக்காலம் தமிழோடு வாழ்ந்து தமிழ் மண்ணில் அடக்கமானவர். கோவலன் மாதவியை நேசித்தாலும் அவனது ஆவியில் கலந்தவள் கண்ணகி மட்டும்தான். கால்டுவெல்லுக்கும் அப்படித்தான். ஆயினும் அவரது விளைச்சல் தமிழ் மண்ணோடுதான்- கோவலன் மாதவியிடம் பெற்றாற்போல.

4. மலையாளத்தைத் தமிழின் சகோதரி என்பதைவிடப் புதல்வி என்றே சொல்லலாம் என்பது கால்டுவெல்லின் எண்ணம். மொழி ரீதியாக அதற்கொரு சான்று சொல்கிறார். தமிழில் கிழக்கு, மேற்கு என்று திசைகளைச் சொல்கிறோம். கிழக்கு என்றால் கீழே, தாழ்வாக (கிழங்கு என்றால் நிலத்தின் "கீழ்" விளைவது) என்னும் பொருள் தருவது. அதுபோல மேற்கு என்பது மேல்நோக்கி, மேடாக என்றாகிறது. தமிழ்நாட்டுக்கு மேற்கு நோக்கிச் செல்லும்போது ஏறுமுகமாக, மலைநோக்கியும், கிழக்கு நோக்கிச் செல்லும்போது இறங்குமுகமாக, கடலை நோக்கியும் அமைகிறது. ஆகவே இவை காரணப் பெயர்கள். மலையாளத்திலும் திசைகளுக்கு இதே பெயர்கள்தாம். ஆனால் கேரளத்தில் கிழக்குத் திசை ஏறுமுகமாகவும், மேற்குத்திசை கடலை நோக்கி இறங்குமுகமாகவும் நிலப்பரப்பைக் கொண்டது. எனவே, அங்கே இத்திசைகள் இடுகுறிப் பெயர்களாக, தமிழ்ப் பெயர்களை உள்வாங்கிக் கொண்டனவாக உள்ளன. அதாவது அவர்கள் தமிழர்கள், தமிழ்நாட்டிலிருந்து நகர்ந்து சென்றவர்கள் என்பதாக முடிவுக்கு வரலாம். நம்பூதிரிகள் "நாங்கள் "படுஞ்ஞாயிறு" என்றுதான் மேற்கை அழைக்கிறோம்" என்று சொன்னபோது "அடடே, அது இன்னும் நல்ல தமிழாயிற்றே" என்கிறார் கால்டுவெல். இதுபோன்று பல சாத்தியப்பாடுகளையும் அவர் மொழிகளூடாக ஆராய்கிறார்.

5. கால்டுவெல் தொல்காப்பியத்தை அறிந்திருந்தார் என்பது இன்றுவரை இருட்டடிப்புச் செய்யப்பட்டே வருகிறது. 07-05-2007இல் இரவு 11.30 மணியளவில் பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ்மொழி பற்றிய நிகழ்ச்சியில் கால்டுவெல் தொல்காப்பியத்தை அறிந்திருக்கவில்லை என்றே "தமிழறிந்த" மூன்று பேர் பேசிக்கொண்டிருந்தார்கள். அனால் உண்மை என்னவெனில் அவர் தொல்காப்பியத்தை அறிந்திருந்தார் என்பதுதான். தொல்காப்பியத்தில் "என்மனார் புலவர்" எனப்படுவது தொன்மையை நிலைநாட்டும் பொருட்டு என்பதாகிறது. ஆனால் "என்மனார்" என்பதற்கு மாற்றாக "என்பர்" என்று சொன்னாலே அது தொன்மையைச் சுட்டக்கூடியதுதான் என்கிறார் கால்டுவெல்.

6. கால்டுவெல்லுக்கு முன்பே "திராவிடம்", "திராவிட மொழிகள்" என்னும் சொற்கள் புழக்கத்திலிருந்தன. கால்டுவெல் செய்ததெல்லாம் அக்கருத்துகளைத் தொகுத்து, ஆழமும் விரிவும் கொண்டதாக்கி, தமிழின் செம்மொழித் தகுதியை ஐயத்திற்கிடமின்றி நிறுவியதுதான். உண்மையில் கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூலை அடியாதாரமாகக் கொண்டுதான் செம்மொழித் தமிழின் கருத்தியல் களம் பரந்து விரிகிறது. இன்னும் சொல்லப்போனால் கால்டுவெல் பொருளாழப்படுத்திய "திராவிடம்"தான் தமிழகத்தை ஒரு நூறாண்டுக் காலம் குலுக்கிக்கொண்டிருக்கிறது, ஒரு நாற்பதாண்டுக் காலம் ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. இது கால்டுவெல்லின் நாமறிந்த முகம். அவருக்கு இன்னொரு முகமும் உண்டு. வெகு தீவிரமான தெளிவான சமூக முகம். அந்த முகம் 1913க்குப் பிறகு முற்றாக மறைக்கப்பட்டுவிட்டது.

7. கால்டுவெல் மட்டும் இந்த நூலை எழுதாமல் இருந்திருந்தால் இன்றைய இந்தியப் பெருவெளியில் தமிழ்ச் சமூகம் என்னவாக இருந்திருக்கும் என்று நினைக்கவே அச்சமாக உள்ளது. சிந்துவெளி நாகரிகம் தமிழ்ச் சமூகத்தினுடையது என்று சொல்வதுகூட எளிதாய் இருந்திருக்க முடியாது. இந்திய ஒற்றைத் தேசியத்தில் தமிழ்ச் சமூகம் ஆகக் கீழான தலித் சமூகமாக மிதிபட்டு நசுங்கிப் போயிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைய அரசியல் களத்தில் இன ரீதியாகவும் மொழி ரீதியாகவும் தமிழ்ச் சமூகத்தைத் தலைநிமிர்ந்து செம்மாந்து நிற்க வைத்த பெருமை கால்டுவெல்லையே சாரும். "வெள்ளையின மக்களே மேன்மை யானவர்கள், கறுப்பினத்தார் கீழானவர்கள்" என்னும் சமஸ்கிருதக் கோட்பாட்டை அடித்து நொறுக்கியவர் கால்டுவெல். சமஸ்கிருதம் இந்தியாவுக்குள் நுழையுமுன்பே தமிழுக்குக் கடன்பட்டது என்பதைத் தர்க்கபூர்வமாக நிறுவிக்காட்டியவர் அவர்.

8. தமிழ்ச் சமூகம் ஒருவகையில் ஆரிய சமூகத்தைவிடவும் குரூரமானது என்பதைக் கால்டுவெல்லைக் கொண்டே நம்மால் மெய்ப்பிக்க முடியும். தமிழ்ச் சமூகம் தன் தலை நிமிர்வுக்கான கால்டுவெல்லின் ஒரு முகத்தை மட்டுமே ஏற்றுக்கொண்டது. அவருடைய இன்னொரு முகம் பறையர்கள் முதலான தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களே - வெள்ளாளர்களின் சகோதரர்களே என்று உறுதிபட மெய்ப்பித்துக் காட்டிய முகம். அந்த முகத்தைத்தான் அவர் மறைவுக்குப் பின் ஆதிக்கத் தமிழ்ச் சாதிகள் முற்றாக மறைத்துவிட்டன- ஒளித்து வைத்துவிட்டன. இன்றைய தமிழ் மக்களுக்கு, ஏன் அறிஞர்கள் என்று சொல்லிக் கொள்கிறவர்களுக்கும்கூட கால்டுவெல்லின் அந்த முகம் முற்றாகத் தெரியாது. தெரிந்துகொள்ள முயலவே இல்லை. அதை வெளிக் கொண்டுவரும் முயற்சியாகத்தான் கால்டுவெல் ஒப்பிலக்கணம் முழுமையாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

9. தமிழ்ச் சூத்திரர்கள் தங்களை மட்டுமே தமிழர்களாக நிறுவிக் கொண்டார்கள். பார்ப்பனர்களையோ தாழ்த்தப்பட்டவர்களையோ தமிழர்களாக அவர்கள் ஏற்கவில்லை என்னும் முறைகேட்டை கால்டுவெல் துல்லியமாக எடுத்து வைத்துத் தாழ்த்தப்பட்டவர்களும் தமிழர்களே என்று நிறுவுகிறார். அந்தப் பகுதியையும் அதன் நிறம் கசிந்த பல பகுதிகளையும் வெட்டியெறிந்துவிட்டே "தமிழர்கள்" அவர் நூலுக்கு மூன்றாவது பதிப்பைக் கொண்டு வருகிறார்கள். அவர் எடுத்துக் காட்டிய உண்மை மறைக்கப்பட்டுவிட்டதால், எப்போதும் போலவே வையாபுரிப் பிள்ளை தொகுத்த தமிழ் அகராதியில் "பார்ப்பானொழிந்த பறையனொழிந்த தமிழ் பேசுவோரே தமிழர்கள்" என்று குறிப்பிடும் பழைய முறையைப் பேணிக் கொண்டார்கள். இதை எதிர்த்து அண்மைக் காலங்களில் கிளர்ச்சி நடந்தது. உண்மையில் இந்தக் கிளர்ச்சி கால்டுவெல் காலந்தொட்டே நடந்திருக்க வேண்டும். அதை மறைத்த பெருமை இந்தச் சுரணையற்ற தமிழர்களையே சாரும்.

10. இதன் இன்னொரு தொடர் நிகழ்வாகக் கால்டுவெல் கூடுதல் தகவல் தருகிறார். தலித்துகளும் தங்களுக்குக் கீழாகத் தலித்துகளைப் பேணி வந்தார்கள் என்பதே அந்தத் தகவல். அதாவது பறையர்கள் தங்களை விடத் தாழ்ந்தவர்களாக செருப்பு தைப்பவர்கள், துணி வெளுப்பவர்கள் போன்றோரை ஒதுக்கி வைத்தனர் என்கிறார். ஆக, இந்தியாவில் ஒவ்வொருவனும் தனக்கொரு தலித்தை உருவாக்கிக் கொள்வதையே குறியாகக் கொண்டிருக்கிறான் என்றாகிறது. இது வர்க்கப் பிரச்சினையின் உள் மடிப்புகளில் படிந்திருக்கும் செல்லரிப்புச் சிதிலம். இந்த உள்வட்டச் சிதிலங்களைக் களையாமல் தலித்தியம் வெல்வதெப்போது?

11. தமிழ்ச் சமூகம் இடங்கை, வலங்கை என்று இரண்டாகப் பிரிந்து மோதிக்கொண்டது என்பதைக் கால்டுவெல்லும் குறிப்பிடுகிறார். "இடங்கை" என்றால் மாற்றத்தைக் கோருவது. "வலங்கை" என்பது இருப்பதைத் தக்கவைத்துக்கொள்வது. இதன் உலகளாவிய நவீனப் பெயர்கள்தாம் இடதுசாரி, வலதுசாரி என்பதை அறிய நமக்கு வியப்பு ஏற்படுகிறது. பறையர்கள் எப்போதும் வலங்கையர்களாகவும், பள்ளர்கள் இடங்கையர்களாகவும், "நீயா, நானா? யார் பெரியவர்?" என்னும் மோதலைத் தொடர்ந்தனர் என்கிறார். இன்றைக்கும் அந்த மோதல் தொடர்கிறதெனில் தலித்துகளுக்கு எப்போது விடுதலை வரும்? பறையர்கள் வலங்கையர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டதிலிருந்து அவர்களின் தூர்ந்துபோன பின் வரலாற்றை ஒருவாறு யூகிக்க முடிகிறது.

12. தென்னிந்தியா முழுதுமுள்ள பெருநகரக் கண்டோன்மென்டுகளிலும் சந்தைகளிலும் பெருவாரியாகத் தமிழைக் கேட்கலாம் என்கிறார் கால்டுவெல். இப்படித் தமிழை ஒலிக்கச் செய்தவர்கள் படைப் பிரிவுகளிலும் வெள்ளையர் மனைகளிலும் பணியமர்த்தப்பட்ட, சிப்பாய்களாயிருந்த பறையர்கள்தாம். அண்மையில் பி.ஏ.கிருஷ்ணன் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து இது பற்றிய கூடுதல் விவரங்களும் கிடைக்கின்றன. சாதிக் கொடுமைகளுக்கு அஞ்சி படைப் பிரிவில் இருந்த பறையர்கள் தங்கள் குடும்பத்தையும் தங்களோடே அமர்த்திக் கொள்வார்கள் என்றும், இன்னும்கூடத் தமிழ் அவ்வாறு புழங்கிக் கொண்டிருக்கிறது என்றும் அவர் சொல்கிறார். இப்படிப்பட்டதொரு கொடும் தள்ளிவைப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கென்றே கால்டுவெல் எழுதிய "பறையர்கள் திராவிடர்களே, தோடர்களும் திராவிடர்களே" என்னும் பகுதிகளையும், திராவிடர்கள் "மலையிறங்கி வந்து அருள்வாக்கு சொல்லி மீண்டும் மலையேறும் தெய்வ வழிபாட்டினர்" - வேறு வகையில் சொன்னால்- பேய் வழிபாட்டினர் என்னும் உண்மைகளையும் முற்றாகக் களைந்துவிட்டுத் தங்களுக்குப் பிடித்த மாதிரி நூலைச் சிதைத்து வெளியிட்டுக் கொண்டனர்.

13. திராவிட மொழிகளில் தமிழ் தவிர மற்றவை சமஸ்கிருதத்தோடு ரசாயணக் கலவைக்கு உட்பட்டுவிட்டதையும் தமிழ் மட்டும் விதிவிலக்காய் இருப்பதையும் கால்டுவெல் சுட்டுகிறார். ஒரு மொழியின் எழுத்துப் பயன்பாட்டை அல்லது இலக்கியத்தை யார் வசப்படுத்துகிறார்களோ அவர்கள் அந்த மொழியைத் தங்கள் ஆளுமைக்குள் கொண்டுவந்துவிடுவார்கள் என்கிறார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பார்ப்பனர்களே முதல் இலக்கியத்தைப் படைத்தார்கள். ஆகவே அவை சமஸ்கிருதமயமாயின. ஆனால் தமிழில் மூல இலக்கியங்கள் பார்ப்பனர்களுக்கு முன்பே தமிழர்களாலேயே படைக்கப்பட்டுவிட்டன. தொடர்ந்து வந்த பார்ப்பனர்களின் பங்களிப்பு மூல இலக்கியங்களை மீறியதாக இயங்க முடியவில்லை என்கிறார். வள்ளுவர் திருக்குறளை இயற்றினார். அதற்குப் பரிமேலழகர் உரை எழுதினார். இதை "பறையராகக் கருதப்படும் வள்ளுவர் எழுதிய குறளுக்குப் பார்ப்பனராகிய பரிமேலழகர் உரையெழுதும்படியாகத்தான் பார்ப்பனியத் தாக்கம் தமிழை வந்தடைந்தது" என்கிறார். அதாவது முயன்றால் தனித் தமிழ் சாத்தியமே என்பது அவர் கண்டுணர்த்தும் உண்மை. உரை எழுதுவது ஒன்றும் பொருள் விளங்க வைப்பதற்கல்ல. குறைந்த பட்சம் சந்துபொந்துகளிலாவது தங்கள் வர்ணாசிரமக் கருத்துகளைப் புகுத்துவதற்குத்தான்.
ஒன்றை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். மொழி என்ற அளவில் சமஸ்கிருதம் வளமானது என்பதில் ஐயமில்லை. தமிழின் இறையாண்மையை மதிக்கும் எனில், அதைத் தமிழின் அரிய நட்பு மொழியாக ஏற்பது தமிழுக்கு உகந்ததுதான். ஆனால் பாம்புக்கு ஒழுக்கம் கடிவாயில் நஞ்சை உமிழ்வதுதானே? சமஸ்கிருதம் தொடுவாயிலும் நஞ்சுமிழும் நற்கருணைப் பாம்பு.

நன்றி கீற்று.காம் மற்றும் கவிதாசரண்.

பின் குறிப்பு - இம்முறை சென்னைப் பயணத்தின்போது எனது நீண்டநாள் ஆவல்களில் ஒன்றான பேராசிரிரியர் கார்லோஸ் (தமிழவன்) அவர்களை சந்திப்பதற்கான வாய்ப்ப கிடைத்தது. சென்னை பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அவரை நானும் நண்பர் நாகார்ஜீனனும் சந்தித்து 2 நாட்கள் உரையாடிய அரிய வாய்ப்பு அது. நண்பர் நாகார்ஜீனன் அவர்களை சந்தித்து சுமார் 12 அல்லது 13 ஆண்டுகள் இருக்கலாம். அந்த இரண்டுநாள் பல உரையாடல்கள் பயனுள்ள விதத்தில் இருந்தது. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்துறைத் தலைவராக உள்ள பேராசிரியர் வீ. அரசுவையும் சந்தித்து உரையாடிக் கொண்டிருந்தபோது அவர் இந் நூலைப்பற்றி சொன்னார். உடனடியாக கவிதாசரனை தொடர்பு கொண்டு நூலை கேட்டபோது அன்று மாலை தனது உடல் நலம் சரியில்லாத நிலையிலும் அந்த நூலை எங்களுக்கு எடுத்து வந்து தந்த கவிதாசரனின் ஆர்வமும் அந்நூலின் பரவாலாக்கத்திற்கு அவர் எடுக்கும் முயற்சியும் உண்மையில் நெகிழ்ச்சியுட்டுவதாக இருந்தது. கடின உழைப்பிற்கு பிறகு அந்த நூலை முழுமையாக அவர் வெளிக் கொண்டுவந்துள்ளார். ஒரு பல்கலைக்கழகமோ அல்லது தமிழ் செம்மொழி மையமோ செய்யவேண்டிய ஒரு அரிய பணியை அவர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இராபர்ட் கால்டுவெல்லின் இந்நூலின் பழைய பதிப்பை ஆர்வமுள்ளவர்கள் இங்கு அழுத்திப் படித்துக் கொள்ளலாம்.

-குறிப்பும் மீள்பதிவும் ஜமாலன்.

எரியும் பிரபஞ்சம் தலையில் சுழல்கிறது

கடவுளைக் காண விரும்பும் அறிவியலும், காணாமல் போகக் கூடிய பிரபஞ்சமும்

-ராஜன் குறை

றிவியல் என்றால் மனிதன் எதையும் அறிந்துகொள்ளாமல் விடக்கூடாதுதானே. இந்த பிரபஞ்சம் ஒன்று இருக்கிறது! எல்லையில்லாமல்!அது எப்படி துவங்கியிருக்கும் என யோசிக்க வேண்டாமா? கடவுள் படைத்தார் என்றோ, அது தான்தோன்றி என்றோ சொல்லிவிட்டு போக முடியுமா? எண்பது ஆண்டுகளாக ஆற்றலைப் பற்றிய புரிதல் வளர்ந்ததையொட்டி, Big Bang Theory என்ற ஆதி வெடிப்பை பற்றிய கோட்பாடுகள் உருவாயின. இதை முழுதும் புரிந்துகொள்ள அணு ஆற்றல் பருப்பொருளாக மாறுவதன் மர்மத்தை அறிய வேண்டும். அப்போதுதான் அனைத்தையும் பற்றிய கோட்பாட்டை (Theory of Everything) உருவாக்கமுடியும்.

ஜெனிவாவிற்கு அருகே, பிரான்ஸ்-சுவிட்சர்லாந்து எல்லையில் பூமிக்கு 300 அடி ஆழத்தில் 27 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கத்தில் LHC (Large Hydron Collider) என்ற பிரம்மாண்டமான ஆய்வுக்கூடத்தில் அறிவியலின் அறியப்பட்ட எல்லைகளைக் கடக்கும் பரிசோதனை ஒன்று இன்னும் சில நாட்களில் செப்டம்பர் 10ம் தேதி தொடங்கவிருக்கிறது. இரு திசைகளிலிருந்து அணுக்கதிர்கள் அச்சுரங்கத்தினுள்ளே செலுத்தப்படப்போகின்றன. அவை சந்திக்கும்போது…?

(ரோபோ படத்திற்கான செட் இல்லை: இதுதான் LHC)

1290 டன் எடையுள்ள ‘அணுத்துகள்மானி’-சும்மா நான் வைக்கும் பெயர்- இத்துளையின் வழியாக 100 மீட்டர் இறக்கப்பட்டது. (இதுபோன்ற பிரம்மாண்ட தகவல்களை வலைத்தளங்களில் தவறாமல் படித்து மகிழுங்கள். Google இல் போய் Large Hydron Collider என்று போட்டால் போதும். CERN என்று போட்டால் இந்த அமைப்பு பற்றி மேலும் தகவல்கள் கிடைக்கும்) ஒருமுறை அல்ல, ஆயிரக்கணக்கான முறை அணுத்துகள்களை (particles) பல விதமான வேகங்களில், சூழல்களில் மோதவிடுவதுதான் இந்த ஆராய்ச்சி என புரிந்து கொள்கிறேன்.

ஒரு ஆராய்ச்சி அல்ல; ஆறு பெயர்களில் பல ஆய்வுகள் அணுத்துகள் மோதல்களின் மூலம் நடத்தப்படப் போகின்றன. இதன் பலன்களுள் ஒன்று என்னவென்றால் ஆற்றலிலிருந்து பருப்பொருள் உருவாகக் காரணமாக இருக்கலாம் என கருத்தளவில் ஊகிக்கப்பட்டுள்ள ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) என்ற சமாச்சாரத்தைக் காட்டித்தரலாம் எனக் கூறப்படுகிறது. இதை கடவுள் துகள் (God Particle) எனக் குறிப்பிடுகின்றனர். ஹிக்ஸ் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றாலும், அறிவியலாளர்களில் பலர் இறைவனை அணுக விழைபவர்கள். இத்திட்டத்தின் அறிவியலாளர் ஒருவர், Jos Engelen, “கடவுளுக்கு மிக அருகே மனிதன் செல்லப்போகும் தருணமிது” எனக்குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரபஞ்சம் எப்படி உருவாகியது என்பதை அணுகிச்சென்று புரிந்துகொள்வதே இப்பரிசோதனையின் நோக்கம். எதிலிருந்து என்றோ, எதனால் என்றோ அறிவியலால் கேட்க முடியுமா? எனவே கடவுளை நெருங்குவதாக நினைக்கிறார்கள் அறிவியலாளர்கள். (கடவுள் துகள் உருவாகும் சாத்தியத்தை குறிக்கும் போலி நிகழ்வு “simulated event”)அணுத்துகள் மோதும் பரிசோதனை புதியது அல்ல. அதன் பரிமாணங்கள் இம்முறை பிரம்மாண்டமாயிருக்கின்றன. Anti-matter எனப்படும் எதிர்பொருள் எப்படி இயங்குகிறது என்ற முக்கிய கேள்விக்கு பதில் தேடுகிறார்கள்.இந்த பரிசோதனைகள் எதைக்குறித்து என்று விளக்கும் விதமாக LHC அறிவியலாளர் ஒருவர் ஒரு ராப் பாடல் படம் எடுத்திருக்கிறார். விஞ்ஞானிகள் ஆடிப்பாடி விளக்கும் இந்த அற்புதமான பாடலை அவசியம் கேளுங்கள். நாளும் கோடிக்கணக்கானவர்கள் youtube இல் கேட்டு மகிழும் இதை நாமனைவரும் உடனே கேட்க வேண்டிய தேவையும் உரிமையும் கடமையும் இருக்கிறது. ஒருமுறை கேட்டுவிட்டு மேலே படியுங்கள். http://link.brightcove.com/services/link/bcpid1488655367/bclid1453516501/bctid1753815421ஆனால்

இந்த அறிவியலாளர்கள்களும் மற்ற துறையினர் போலத்தான். ஒருவர் செய்வதை மற்றவர் எதிர்ப்பது. LHC-ஐ எதிர்ப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? LHC அணுத்துகள் மோதல்களில் கருந்துளைகள் உருவாகும் என்கிறார்கள். இந்த கருந்துளைகளுக்கு ஒரு கெட்ட பழக்கம். அது சில சமயம் உலகத்தையே அல்லது உலகங்கள் அடங்கிய பிரபஞ்சத்தையே விழுங்கிவிடும். (அதாவது பூமியின் சுற்று வட்டாரம் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.) இப்பரிசோதனையை நிறுத்தக்கோரி வழக்கு தொடர்ந்த ஒட்டோ ரோஸ்லர் என்ற ஜெர்மானிய பேராசிரியர் “ஒரு ஓடுகாலி கருந்துளை நான்கு ஆண்டுகளில் வளர்ந்து உலகை விழுங்கிவிடும்” என்கிறார்.

இதற்கு LHC நடத்துபவர்கள் என்ன சொல்கிறார்கள்? சிறிய கருந்துளைகள் நிறைய உருவாகும்; ஆனால் அவை உடனே அழிந்துவிடும் என்கிறார்கள். இயற்கையில் நடக்காதது எதையும் நாங்கள் செய்யவில்லை. ஆகவே உலகத்திற்கும் அதன் “உடனடி பிரபஞ்சத்திற்கும்” எதுவும் ஆபத்தில்லை என்கிறார்கள். (உடனடி பிரபஞ்சம் - இச்சொற்றொடர் என்னுடையது; கருந்துளை எவ்வளவு பெரிதாகும் எனத்தெளிவாகத் தெரியாததால்) வழக்குகளினடிப்படையில் தடையுத்திரவு எதுவும் பிறப்பிக்கிப்படவில்லை என்றாலும் மனிதயுரிமை அடிப்படையில் போடப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் இருக்கிறது. இவ்வழக்கு எழுப்பும் பிரச்சினை சுவாரசியமானது.

இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட அரசாங்கங்கள் CERN அமைப்பில் பார்வையாளர் தகுதி வகிக்கின்றன. ஐரோப்பிய அரசாங்கங்கள் இதன் உறுப்பினராக உள்ளன. இப்பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் உலக விஞ்ஞானிகள் பகிர்ந்துகொள்ள பிரம்மாண்டமான தகவல் பகிரும் ஆற்றல் கொண்ட GRID என்ற கணனி மற்றும் optical fibre தொடர்பமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்பரிசோதனை அறிவியலின் விளிம்பில் நிகழ்வதால் என்ன விளைவுகள் உருவாகும் என்பதை முற்றிலும் கணிக்க முடியாது என்பதை அறிவியலாளர்கள் ஒப்புக்கொள்கின்றனர். ஏதுமறியா மக்களின் உயிரை பணயம் வைத்து இப்பரிசோதனையை செய்ய இந்த அரசாங்கங்களுக்கும், அறிவியல் நிறுவனத்திற்கும் உரிமை இருக்கிறதா என இந்த வழக்கு கேட்கிறது.

உலகில் வெகுஜன இயக்கங்கள் எதுவும் இந்த பரிசோதனைக்கு இன்னும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை (குறைந்த பட்சம் வலைத்தளங்களில் இன்னும் நான் பார்க்கவில்லை) பெரும்பான்மையோருக்கு இன்னும் தகவலே தெரிந்திருக்காது. இந்நிலையில் மக்களின் ஒப்புதலை பெறாமல் இத்தகையை பரிசோதனைகளில் ஈடுபடுவது மனிதர்களின் அடிப்படை உயிர்வாழும் உரிமை மீறல் என்கிறது ஹவாயில் போடப்பட்டுள்ள வழக்கு.

மக்களின் ஒப்புதலை பெறலாம் என்று வைத்துக்கொண்டால்கூட, கூடவே அழியக்கூடிய விலங்கினங்கள், தாவரங்கள் இவற்றின் ஒப்புதலை எப்படிப் பெறுவது என்று ஒருவர் கேட்கலாம். எந்த அறத்தின் அடிப்படையில் இதுபோன்ற துணிகர செயல்களில் அனைத்துயிர்களும் ஈடுபடுத்தப்படுகின்றன? இதை ஹவாய் நீதிமன்றம் தீர்மானிக்க முடியுமா? இதுபோன்ற வழக்குகள் முடிவுக்கு வர பல்லாண்டுகள் ஆகும். இன்னும் சில நாட்களில் தொடங்கும் இப்பரிசோதனையும் பல்லாண்டுகள் நடக்கலாம். திடீரென்று ஒருநாள் பிரபஞ்சத்தைக் காணவில்லையென்றால் தேடாதீர்கள் என்று மட்டும் சொல்லத்தோன்றுகிறது. “இந்த எரியும் பிரபஞ்சம் என் தலையில் சுழல்கிறது; அதை எங்கே வைப்பது எனக்குப் புரியவில்லை” என்ற பிரக்ஞை பத்திரிகையில் படித்த சதிகுமார் என்ற பஞ்சாபிக் கவிஞரின் வரி நினைவுக்கு வருகிறது.

நன்றி சத்தியக்கடுதாசி.

 

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.