காகமும் ஊர்க்குருவியும் - மனுசங்கடா? நாங்க மனுசங்கடா?

தீண்டாமை நிலவுடமை செறிந்துள்ள தஞ்சையில் மட்wall between castesடுமல்ல மதுரை நெல்லை என்று தமிழகம் ஏன் இந்தியாவெங்கும் ஒரு சமூகத் தீங்காக உள்ளது.  மேலே உள்ள சுவர் சீன நெடுஞ்சுவரோ அல்லது ஜெர்மனியில் உடைத்தெறியப்பட்ட பெர்லின் சுவரோ அல்ல. நம்ம மதுரை உத்தப்புரத்தில் தலித்துகளையும் உயர் சாதியையும் பிரிக்க உயர் சாதி கட்டிய சுவரே. தலித்துகள் முகத்தில் விழிப்பதுக்கூட பாவம் என்று மனுவாதத்தையும் தாண்டிய கொடுமை இது. இச்சுவர்பற்றிய ஆதவன் தீட்சண்யாவால் எழுதப்பட்டுள்ள கட்டுரை கீற்று இணையதளத்தில் உள்ளது.  (நண்பர் கல்வெட்டு இதனை இங்கு மீள்பதிவு செய்துள்ளார்.) இது குறித்து இந்து பத்திரிக்கை 17-04-2008-ல் செய்தி வெளியிட்டுள்ளது. இச்செய்திக்கான வாசகர் கடிதங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இப்பிரச்சனை குறித்து 25-02-2008 நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. இச்செய்திகளில் வரும் தகவல்கள் மீண்டும் மீண்டும் தலித் மக்களை மனிதர்களாக மதிக்காத உயர்சாதி திமிரும், அவர்களுக்கு கர்மப்பலன் கூறி சொர்க்கத்திற்கு இடம் போட்டு வைக்கும் மனுவாதத்தின் அடிப்படையும் அதனை கட்டிக்காக்கும் இந்துத்துவா வியாதிகளும் (நன்றி கோவி.கண்ணன்) இந்த சாதிய புனித உடலை காப்பதில் தீவிரமாய் உள்ள பார்ப்பனிய கும்பலும் இந்திய சமூக அடிப்படையாக கட்டமைக்கப் பட்டுள்ளதை தெளிவுபடுத்தவதாக உள்ளன. தமிழகத்தில் தொடரும் இக்கொடுமைகள் பற்றிய ஆய்வுகள் பிரண்ட்லைனில் பேசப்பட்டுள்ளது. 

1950-ல் இந்திய அரசு தீண்டாமை என்பதை சட்டவிரோதமாக அறிவித்தது. 58 ஆண்டுகள் ஆகியும் நிலமை தனது மனச்சுவற்றின் ஒரு புறவடிவக் குறியீடாக சுவரெழுப்பி வெளிப்படுத்தும் கோர வடிவத்தை எடுத்துள்ளது. பார்ப்பனிய மன்னராட்சிக் காலங்களில்கூட இத்தகைய நடைமுறைகள் இருந்ததாக வரலாற்றில் படித்ததில்லை. இன்று தீண்டாமை என்பது மறைமுகமாக பல வடிவங்களை எடுத்தள்ளது. ஒரு காலத்தில் “தீண்டத்தகாதவர்கள்“ எச்சில் துப்பி நிலத்தை “தீட்டாக” ஆக்கிவிடக்கூடாது என கழுத்தில் கலயத்தை கட்டியும், பெண்கள் மேற்சட்டை அணிவதை தடைசெய்தும் பல வன்கொடுமைகளை நேரடியாக செய்துவந்த உயர்சாதியினர் இன்று 80-ற்கும் மேலான பல நடைமுறைகளை கையாளத் துவங்கியுள்ளனர். அவற்றின் உச்சகட்ட வடிவமே 500-மீட்டர் நீளமுள்ள இந்த தீண்டாமைப் பெருஞ்சுவர். சாதியத்தின் ஆணிவேராக விளங்கும் இந்த தீண்டாமை எனகிற வன்கொடுமையின் ஒரு அகங்கார வெளிப்பாடு இது.

ஆலன் டாண்டிஸ் என்கிற மானுடவியல் ஆய்வாளர் இத்தீண்டாமைக் குறித்து இந்திய நாட்டப் புறக்கதைகளின் அடிப்படையாகக் கொண்டு பிராய்டிய அடிப்படையில் ஆய்வு ஒன்றை செய்துள்ளார் தனது “Two Tales of Crow and Sparrow:A Freudian Folkloristic Essay on Caste and untouchability" என்கிற நூலில். அதில் “சாதியும், தீண்டாமையின் மூலம் மனித உடலினுள் உள்ளது” என்கிறார். தலையில் (வாயில்) பிறந்த பார்ப்பனர்கள் உயர்சாதி என்பது வாய் என்கிற உயிர்ப்புடன் சேர்ந்த புனிதக் குறியீடாகவும், காலில் பிறந்தவர்கள் தூய்மையற்ற நிலத்துடன் இணைவதால் சாவு மற்றும் குதம் மற்றும் மலத்துடன்  இணைந்த தூய்மையற்றதாகவும் குறியிடப்பட்டுள்ள ஒரு மனப்படிவு ஆகும் என்கிறார். அவர் காகம் மற்றும் ஊர்க்குருவி பற்றிய காஷ்மிர் முதல் கன்யாக்குமரி வரை நிலவி வரும் இரண்டு நாட்டார் வாய்மொழிக் கதைகளை எடுத்துக் கொண்டு இந்த ஆய்வை மானுடவியல் மற்றும் நாட்டுப்புறக்கதை ஆய்வியல் அடிப்படையில் செய்து வாசித்துக் காட்டியுள்ளார்.  இங்கு இதனை சுட்ட நேர்ந்தது வாய்மொழி மற்றும் குதவழி பண்புகள் (anal and oral traits) என்பது பிராய்டியம் முன்வைக்கும் மிகமுக்கிய குழந்தமை உளவியல் கருத்தாக்கங்கள் ஆகும். கால்வழியாக பிறந்தவர்களை தீண்டத்தகாதவர்களாகவும் முகம்வழியாகப் பிறந்தவர்களை உயர்ந்தவர்களாகவும் குறியிடும் மதவாதப் பிரதிகளை நாட்டார் கதையடிப்படையில் மீள்வாசிப்பது ஒரு முக்கிய கருதுகோளாகும். தீண்டாமை என்பது மலம் என்கிற “அசிங்கத்துடன்“ அதாவது தூய்மையற்றதானதாகவும் அதனால் அது புணிதமற்றதாகவும் ஆழ்மனதில் கட்டமைக்கப்பட்டவையே இந்த நாட்டார்கதைகள். இவ்வாய்வு பற்றி பிறிதொரு பதிவில் விளக்க முயல்வோம்.

தலைப்பில் உள்ள மனுசங்கடா நாங்க மனுசங்கடா என்பது கவிஞர் இன்குலாப் அவர்களால் கீழ்வென்மணியில் 47 தலித்துகளை உயிருடன் கொழுத்திய நிலவுடமை பயங்கரத்தினை கண்டு கொதித்து எழுதப்பட்ட பாடலின் தலைப்பு. அப்பாடல் 80-களில் தமிழக நக்சல்பாரி மற்றும் மார்க்சிய-லெனினிய இயக்கங்களின் மந்திரப்பாடலாக இருந்தது. அப்பாடலை பாடி பல இரவுகள் எங்கள் மாணவர் சங்க கலைக்குழு பல கிராமப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளது. அப்பொழுது நேரடி அனுபவங்களாக கிடைத்த தீண்டாமைக் கொடுமைகள் எண்ணற்றவை. அவை பற்றிய ஆழியுரனின் சாதி சூழ் உலகு!! என்கிற பதிவில் எனது பின்னோட்டம் ....

ஒரத்தநாடு பகுதிகளில் 85-ல் எனது மாணவப் பருவத்த்தில் ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் எங்களது மாணவர் சங்கம் சார்பாக 10 முதல் 15 நாட்களுக்கு village campaign என்கிற கிராம பிரச்சாரத்திற்கு போவோம். அந்த வருடம் ஒரத்தநாட்டு தோழர்களின் ஏற்பாடால்.. நாங்கள் பாப்பாநாடு, கண்ணந்தங்குடி துவங்கி மேலையூர் கீழையூர் ஆம்லாப்பட்டு (எனது நினைவு சரியாக இருந்தால்.. களப்பால் குப்புவின் சமாதி உள்ள அக்கிராமத்தில் அவரது சமாதி முன்பு வீரவணக்கப் பாடல்கள் பாடியுள்ளோம்.) என சுற்றி பிரச்சாரம் செய்திருக்கிறோம். பெரும்பாலும் தங்குவது தலித் தோழர்கள் வீட்டில் அல்லது பொது இடமான கோவில் சமூகக் கூடங்களில். சாப்பாடு கலை நிகழ்ச்சி முடிந்தவுடன் ஒவ்வொரு நபராக அழைத்துச் சென்ற உங்கள் வீட்டில் உள்ளதை சாப்பிடத் தாருங்கள் என பார்க்க வந்தவர்களிடம் அறிவித்து விடுவோம். அவர்களும் நாங்கள் 10 முதல் 15 பேர்கள் என்பதால் ஒவ்வொருவராக அழைத்துச் சென்று விடுவார்கள். இரவு விளக்கு கம்பங்களில் அல்லது அரிக்கேன் விளக்கின் ஒளியில் அரசியல் வகுப்புகள், பட்டி மன்றம் நடத்துவோம்.

ஒருமுறை ஒரு கிராமத்திற்கு பிரச்சாரம் செய்யப்போகும்போது (எங்கள் தோழர்களில் பெரும்பாலும் தலித்துகள் என்றாலும் தலித்தல்லாதோரும் இருந்தனார்.)அங்கிருந்த இடைநிலைச்சாதியினர் ஊருக்குள் எங்களை விடாமல் வாயிலிலேயே வழிமறித்து விட்டனர். எங்களை அழைத்த தோழர் அவர் அந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் அனுமதிக்கவில்லை. காரணம் தலித்தகளிடம் தங்கி அவர்களுக்கு ஆதரவாக கூலிப்பிரச்சனையில் நாங்கள் பிரச்சாரம் செய்ததே.  அன்று அங்கு பல பகுதிகளில் இரட்டைக் குவளைமுறை இருந்ததை தோழர்கள் அழைத்துப் போய் காட்டியுள்ளார்கள். ஒவ்வொருநாள் மாலையிலும் ஒரு கிராமம் விட்டு மற்றறொரு கிராமத்திற்கு பயணம். நடந்துதான். பாப்பாநாட்டிலிருந்து கண்ணந்தங்குடிக்கும். கண்ணந்தங்கடியிலிருந்து மேலையூர் இப்படி. பல கிராம பெயர்கள் நினைவில் இல்லை. ஆனால், சாதியம் என்பது கீழைத் தஞ்சை பகுதியில் அதிலும் கள்ளர்கள் மற்றம் தலித் முரண்கள் நிறைந்தே காணப்படுவதை அனுபபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக எங்களை சாப்பிட அழைத்தச் செல்பவர்கள் பெரும்பாலும் தலித்துகள்தான். சாதி தெரியாத எங்களை அழைத்துச் செல்ல அந்த இடைநிலை சாதியினருக்கு மனம் ஒப்பவில்லை போலும்.

தீண்டாமை ஒரு பாவச்செயல் என்றார் காந்தி. அதனை புனிதமான செயலாக பாவிக்கின்றன இன்றைய சாதிகள். தெல்லஸ்-கொத்தாரி கூறும் “becoming minor' (சிறுபான்மையாக இருத்தல்) என்பதைப்போல “becoming untouchable“ (தீண்டத்தகாதவராக இருத்தல்) என்பதை விடுதலைக்கான வாழ்நிலையாக மாற்றி, உயர் சாதியினரை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி அவர்களின் இருத்தலையும் மாற்ற வேண்டும் போலிருக்கிறது. லெனின் கூறியதுபோல “ அரசியல் என்பது இரத்தம் சிந்தும் யுத்தம்“-தான் போலிருக்கிறது. எவன் ஒருவன் தன்னைத் “தீண்டத்தகாதவனாக“ உணர்கிறானோ அவனே இன்றைய சாதிகளை எதிர்த்து போரிடமுடியும் என்று தோன்றுகிறது. அதனால்தான் காந்தி தன்னை ஒரு சூத்திரனாக அறிவித்துக் கொண்டார் போலிருக்கிறது.

- ஜமாலன்.(29-04-2008)

உலக புத்தக தினம்

180px-WBD_logo_08_RGB
உலகபுத்தகதினத்தை ஒட்டி 2008-ல் எழுதப்பட்ட பதிவு இது. மீள்பதிவு செய்யப்படுகிறது நணபர்களின் மறுவாசிப்பிற்காக. சென்னை வந்து இரண்டு புத்தக சந்தைகளுக்கு போனேன். புத்தக விற்பனை என்பது அத்துனை சுவராஸ்யமாக இல்லை. கூட்டமோ மிகக்குறைவு. தமிழில் நிறைய மொழிபெயர்ப்பு புத்தகங்களை காணமுடிந்தது. குறிப்பாக டான் குவிக்ஜாட்.  புத்தக வாசிப்பு என“பதை ஒரு இயக்கமாகவும், புதிய தலைமுறையினருக்கு பழக்கமாகவும் மாற்றவேண்டியது இன்றைய அவசிய தேவையாக உள்ளது. 


ஏப்ரல் 23 - இன்று ஐக்கிய நாட்டு சபையால் அறிவிக்கப்பட்ட “உலக புத்தகம் மற்றும் காப்புரிமை” தினம். இந்த  நாளை அறிவிக்க காரணமான இருவர் மிகைல் சொ்வாண்டிஸ் மற்றும் ஷேக்ஸ்பியர். இருவரது நினைவுதினம் இன்று. இருவரது நினைவு தினமும் ஒரேநாளில் இல்லை என்றாலும் இங்கிலாந்து மற்றும் ஸ்பெயினில் பயன்படுத்தப்பட்ட நாட்காட்டிகளான ஜீலியன் மற்றும் கிரிகோர் ஆகியவற்றினால் நிகழ்ந்த 10-நாள் வித்தியாசப் பிழையே இவை ஒரே நாளாகக் கருதப்படக் காரணம் என்கிறது விக்கி

ஷேக்ஸ்பியர் எப்படி உலcervantes
க இலக்கியத்தின் ஒரு மதிப்புமிக்க இடத்தை பெற்றுள்ளாரோ அதைப்போல மிகைல் சொ்வாண்டிஸ் ஸ்பானிஷ் இலக்கியம் மட்டுமின்றி உலக இலக்கியத்தில் முக்கியத்துவமான இடத்தைப் பெற்றவர். அவரது “டான் குயிக்ஜோட்“ என்கிற புனைவானது வரலாறு மற்றும் இன்றைய  புதியவகைப் புனைவுகளுக்கு அடிப்படையான பார்வையை தந்த ஒரு படைப்பிலக்கியம் ஆகும்.  இப்புனைவே மேற்திசை நாடுகளின் நாவல் வடிவத்தின் முன்னொடியாகும். இன்றைய 20-நூற்றாண்டின் மிகச்சிறந்த நாவலாரியர்களை பாதித்த ஒரு புதினம் ஆகும். கார்லஸ் பியாந்தஸ், தாஷ்தாவொஸ்கி, ஸ்காட், டிக்கின்ஸ், மெல்வில், பிளாபர்ட், ஜாய்ஸ், போர்ஹே போன்ற நாவலாசிரியர்களை பாதித்த ஒரு புதினமாகும். கீழ்திசை இலக்கியத்தில் அரேபிய இரவுகள் எப்படி மேற்திசை எழுத்துலகின் ஒரு முக்கிய பாதிப்போ அதைப்போலத்தான் இப்புதினமும்.


ஸ்பெயினின் ஈரோ நாணயங்களில் பொறிக்கப்பட்ட ஒரு எழத்தாளர் இவர். இப்புதினத்தை எழுதிய செர்வாண்டிஸ் ஷேக்ஸ்பியரின் சமகாலத்தவர் என்பதுடன் இருவரும் ஒரே தேதியில் (ஏப்ரல் 23-ல்) இறந்துள்ளனர். ஷேக்ஸ்பியர் செர்வாண்டிஸைப் படித்துள்ளார். ஆனால், செர்வாண்டிஸிற்கு ஷேக்ஸ்பியரை தெரியவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் செர்வாண்டிஸ் மற்றும் ஷேக்ஸ்பியர் இருவரும் ஒருவராக இருக்கலாம் என்கிறார் கார்லஸ் பியாந்தஸ். விஞ்ஞானப் புரட்சியை முன்மொழிந்த பிரான்ஸிஸ் பகூன் என்பவரால் இப்புதினம் எழுதப்பட்டிருக்கலாம் என்கிற கருத்தும் உள்ளது. ஆக, இந்நாளை உலக புத்தக நாளாக அறிவித்திருப்பது இந்த இலக்கியவாதிகளின் நினைவை மீளாக்கம் செய்வதற்கான ஒரு வாய்ப்பாகும். ஷேக்ஸ்பியர் பற்றி அறிமுகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. பரவலாக அவர் அறியப்பட்ட ஒருவர்.

உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினமான இன்book_illustrationறு..
  1. கணிப்பொறியில் தேடி அடைவதை மட்டுமே அறிவின் ராஜபாட்டையாகக் கொள்ளாமல் படிக்கும் பழக்கத்தை தொடரவும் அதனை வளரும் தலைமுறையினருக்கு பழக்கவும் முயற்சிப்போம்.
  2. நாம் குறைந்த பட்சம் புத்தகங்கள் வாங்கிப் படிக்கும் பழக்கத்தையும் அல்லது பரிசுப் பொருட்களாக புத்தகங்களை அளிப்பதை பழக்கமாக்கிக் கொள்வோம்.
  3. வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்பதை சமையல் அறைக்கு சமமான அவசியத்துடன் பாவிப்போம்.
மனிதர்கள் அறிவை இரண்டு மூலங்களில் பெறுகிறார்கள். ஒன்று நேரடி அறிவு. அது அனுபவங்களின் வாயிலாக பெறுவது. மற்றது மறைமுக அறிவு. அது புத்தகங்கள் வாயிலாக மட்டுமெ பெற முடியும். புத்தக வாசிப்பு என்பது ஒருவகை இதம் தரும் சுகமாகும். அது பாலின்பம் தரும் இதத்தைப் போன்றது. அதனால் புத்தகம் வாசிப்பது என்பது அடிப்படையான பழக்கமாக மாற்றிக் கொள்வது அவசியம்.

”ஒரு புத்தகம் என்பது பல கருத்துக்களின் தொகுதி என்ற வகைமைக்கு உரியது. இன்னமாதிரியான தனிப்பட்ட ஒரு கருத்துக்கு மட்டுமே உரியது என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாதது. அது பெருகும்தன்மை (மல்டிபிளிசிட்டி) கொண்டது.” என்கிறார்கள் தெல்லஸ்-கொத்தாரி(1). ஒரு புத்தகத்தை நாம் இன்றைய உடனடித் தேவைக்கு வாங்கினாலும்.. அது வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் பல்கிக் பெறுகிக்கொண்டே இருக்கும். புத்தகம் ஒரு பொருளல்ல கருத்தின் திட வடிவம் அல்லது பொருளின் பாய்ம வடிவம் எனலாம். அது வாசிக்கவாசிக்க உற்பத்தியாகி பெருகிக் கொண்டிருக்கும் ஒன்று. நம்மை நாம் தேடி அடைய நிச்சயமாக நமக்கென ஒரு புத்தகம் தனது எழுத்துக்களுடன் தனது பிரதித் தன்மையுடன் காத்திருக்கிறது. கண்டிப்பாக ஒருநாள் அந்த புத்தகத்தில் நாம் நம்மை அடையாளம் கண்டு நம்மையே நாம் பெருக்கிக் கொள்ள முடியும். படிக்காதவர்களுக்கு இது சாத்தியமில்லையா? என்று கேட்கக்கூடும். அவர்களும் இந்த மறைமுக அறிவை பிற மனிதரிடமிருந்தும் சமூகத்திடமிருந்துமே பெறுகிறார்கள். அந்த பிற மனிதர் பெற்ற ஒருவர் நிச்சயமாக வாசிப்பு அறிவுள்ளவராகத்தான் இருப்பார். சுயம்புலிங்கங்கள் எல்லாம் சமூகமாகிவிட்ட தொடர்பு சாதனங்களால் ஆளப்படுகிற ஒரு உலகில் சாத்தியமில்லை. அறிவு சமூகத்தில் எண்ணற்ற முனைகளிலிருந்த எண்ணற்ற மூலங்கள் வழிகயாகப் பீய்ச்சப்படுகிறது. நாம் ஏற்றாலும் ஏற்காவிடடாலும் அது நம்மை நமது உடலை ஊடறுத்துக் கொண்டு சென்றவண்ணம் உள்ளது.  இனி, படிக்காத மேதை எல்லாம் சாத்தியமில்லை. படிக்கத் தெரியாத மேதையாக வெண்டுமானால் இருக்கலாம். உலகை படித்துக்கொண்டே இருப்பவர்தான் மேதையாகிறார். ஆக, வாசிப்பின் அவசியத்தை வலியுறுத்தம் ஒரு நாளாக இதனைக் கருதிக் கொள்வோம்.

”புனித புத்தகம்” என்பதும் அதை காலங்காலமாக வாசிப்பது என்பதும் எல்லா மதங்களிலும் அடிப்படையான ஒரு இயக்கமைப்பாக இருப்பது அதனால்தான். உண்மையில் மறைநூல்கள்தான் மதங்களை காக்கின்றன. மறைநூல்களுக்காகத்தான் மதங்களே தவிர. மதங்களுக்காக மறைநூற்கள் இல்லை. அதனால்தான் பைபிள் ”வார்த்தை மாம்சமானது” என்றது. சொல் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டே இருப்பதால்தான் மதங்கள் தங்களது மறைநூல்களை மைய்யமானதாக புணிதமானதாக வைத்துள்ளன. மனித உடல் முதலில் அச்சம் கொண்டது ஒலி என்கிற சத்தத்திற்காகாத்தான் இருந்திருக்க வேண்டும். அதனால் தான் அந்த சத்தத்தை மொழியாக ஒழுங்கமைத்துக் கொண்டுள்ளது. அதையே ஆயுதமாக்கி இன்று தன்னைச் சுற்றியுள்ள இயற்கையை வெல்லத் துடிக்கிறது. இயற்கை இரைச்சல் என்றால் சமூகம் என்பது இசையாக உள்ளது. அந்த இசையின் மகுடிக்குள் அடங்கிய பாம்புகளாகத்தான் நாம் உள்ளோம்.  அதனால்தான் இத்தனை மதங்கள், இசங்கள் என ஒவ்வொன்றாக வந்த வாசித்துக் கொண்டுள்ளன. நாமும் அதற்குள் மயங்கியபடியே கழி(ளி)க்கிறொம். அதனால்தான் நீட்ஷே கூறினார் ”நாம் கடவுளை கைவிட முடியும் என்று தோன்றவில்லை ஏனென்றால் நாம் இன்னும் இலக்கணத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறொம்.” ( "I am afraid we are not rid of God because we still have faith in grammar.")

-ஜமாலன். (23-04-2008)

குறிப்பு (1) பக். 21 - தெலூஸ்-கொத்தாரி - எம்.ஜி. சுரேஷ் - 2007 - அடையாளம் வெளியீடு.

ரமேஷ்-பிரேமின் படைப்புகள் - ஒருநாள் கருத்தரங்கு

ரமேஷ்-பிரேம் படைப்புகள் முழுமையும் பற்றிய ஒருநாள் கருத்தரங்கு புதுவையில் மிதக்கும் நூலகம் என்கிற அமைப்பால் ஒழுங்கமைக்கப்பட்டள்ளது.

இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம் - வள்ளலார் சாலை, வெங்கட்டா நகர், புதுச்சேரி.

நாள்: 12-04-2008

நேரம்: காலை 9:30 மணி.

தொடர்புக்கு: மணோ.மோகன் - 9944757467  - வெ. குமார் - 9894910605.

அறிவிப்பு:

 Invitation_1

Invitation_2 Invitation3

பச்சைமரத்தில் பதியும் பதிவர்கள்

நண்பர் நாகார்ஜினன் தனது இரண்டுமாத கால பதிவு அனுபவங்கள் குறித்து இரண்டு பதிவுகளில் பேசியுள்ளார். அதில் பதிவில் நடந்தவரும் பிரபு ராஜதுறை மற்றும் வெங்கட் ஆகியவர்களின் பின்னொட்டப்பெட்டிக் குறித்த விவாதம் ஒன்றை சுட்டிக்காட்டி தானும் பின்னொட்ட பெட்டியை திறப்பதாக சொல்லியுள்ளார். அந்த விவாதத்தில் வெங்கட்டிற்கு இடப்போன பின்னொட்டம் வளர்ந்து பதிவாகிறது இங்கு.

இது ஒரு பயனுள்ள விவாதம். மீண்டும் மீண்டும் பேசப்படும் பதிலவுலகமா? பத்திரிக்கை உலகமா? என்கிற விவாதமாக இருப்பதால் இது குறித்து வெங்கட் கட்டுரையை முன்வைத்து வெட்டியும் ஒட்டியம் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்

1. வெங்கட்டின் பின்னோட்டத்தில் பத்ரி மற்றும் சிரில் அலக்ஸ் கூறுவதுபோல மின்னஞ்சல் மற்றும் பின்னோட்ட பெட்டியில் பெரிய வேறுபாடுகள் இல்லை. என்ன மின்னஞ்சலில் கொஞ்சம் வேலை அதிகம், பலரும் பின்னோட்டம் இடமாட்டார்கள். போகிற போக்கில் எதையாவது போடமுடியாது என்பதைத்தவிர இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. உண்மையில் உரையாட விரும்புபவர்கள் மின் அஞ்சல் செய்வதன் மூலம் காத்திரமான உரையாடலை துவக்கலாம். “பெருசு“ என்று நீங்கள் கூறுபவர்கள் மின் அஞ்சலை திறந்துதான் வைத்துள்ளனர்.

2. செத்த மரத்திற்கும், தினமும் தண்ணீர் ஊற்றும் உயிர்ப்புள்ள மரத்திற்கும் வித்தியாசங்கள் நிறைய, என்றாலும், பத்தி எழுத்தைப் பொறுத்தவரை வெங்கட் சில நியாயமான வாதங்களை வைத்துள்ளார். அதே நேரம் இலக்கிய வகைப்பட்ட எழுத்தையும் இதழியல் வகைப்பட்ட எழுத்தையும் பிரித்து பார்ப்பது அவசியம். அவற்றில் உயர்வு தாழ்வு பார்க்கமுடியாது. எழுத்து என்பதற்கு மதிப்பீடுகள் வாசக தளத்திலும் எழுதப்படும் தளத்திலும் உண்டு. அம்மதிப்பீடுகளி்ல் உயர்வு தாழ்வு கற்பிப்பவை அரசியல் சார்ந்தது. ஞாநியின் எழுத்தும் ஜெயமோகன் எழுத்தும் ஒன்றல்ல. ஒவ்வொன்றும் அதனளவில் சரியானதே. அதற்கான அரசியல் குணாம்சங்களைக் கொண்டவை. அவர்கள் எழுதுவது சிறந்தது என்றோ பதிவுகளில் எழுதுவதோ தவறு என்றோ பார்க்க முடியாது.

3. பதிவுகள் வெறும் பத்தி எழுத்தை மட்டும் கொண்டதாக அதாவது தகவல் அடிப்படையிலானவையாக மட்டும் இல்லை. பத்தி எழுத்து என்பது தகவல் அடிப்படைகளில் அல்லது நிகழ்வுகள் அடிப்படையில் பேசப்படுவது. அதில் கோட்பாட்டு தத்துவங்கள் அதிகம் பேசப்படுவதில்லை. அனால் அதை தாண்டிய எழுத்து என்பதாக நாம் அறியும் “செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்” எழுத்துக்களில் அரசியல், தத்துவம், ஆன்மீகம் இலக்கியம் என பலவகை எழுத்துக்கள் அவற்றின் கோட்பாட்டு தர்க்க அடிப்படையில் உள்ளன. அவை இதழியல் சாராதவை அல்லது இலக்கியம் சார்ந்தவை. சாரு, ஜெயமோகன், எஸ்ரா மற்றும் நாகார்ஜினன் போன்ற எழுத்தாளார்கள் செத்த மரங்களில் செதுக்கிக் கொண்டிருப்பவர்கள் அல்ல. அவர்களது எழுத்தும் பத்தி எழுத்தும் ஒன்றல்ல. அவற்றில் இலக்கியம் அரசியல் ஆன்மீகம் எனப் பலவற்றைப்பற்றிய உரையாடல்கள், குறிப்புகள் உள்ளன. அவற்றிற்கு பெருக்கச் (generative) செயல்பாடு உள்ளது. அதனால் அவற்றை பத்தி எழுத்துக்களின் மட்டத்தில் மட்டுமே நிறுத்திப் பார்க்க முடியாது. இதன் பொருள் பத்தி எழுத்து தரம் குறைந்தவை என்பதல்ல அதன் நோக்கம் வாசகத் தளம் வேறு. பத்தி எழுத்துக்கள் உடனடித் தன்மை வாய்ந்தவை. அவற்றின் ஆய்வுத்தன்மையும் குறைவு. அனால் நம்பகத் தன்மை அதிகம். கூடுதலாக அவை புனைவு அல்ல, உண்மையாகவோ அதற்க்கு நெருக்கமானதாகவோ நம்பப்படும் இதழியல்வகை எழுத்துக்கள்.

4. பிரபு ராஜதுறை முன்வைக்கும் ஆங்கில வார்த்தைகளை கூடுமானவரை தவிர்ப்பது என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு. பதிவுகள் அந்தவகையில் தமிழிற்கு பெரும் பங்காற்றியுள்ளதை யாரும் மறுத்தவிடமுடியாது. பதிவுகளை குறைத்து மதிப்பிடமுடியாது என்பதுடன் வெங்கட்டின் வாதமே பத்திரிக்கை எழுத்தை ஒரு உயர்ந்த மதிப்பிட்டில் வைத்துதான் எழுதப்பட்டுள்ளது. அல்லது பதிவுலக எழுத்தை உரைப்பதற்கான உரைகல்லாக அந்த எழுத்துக்களில்தான் போய் அளவிட்டுப் பார்க்ககப்படுகிறது. அவரது பதிவின் முன் அனுமானமே அந்த அடிப்படையில்தான் எழுதப்பட்டுள்ளது.

5. ஆக, எப்படி வெங்கட் முன்வைக்கும் பின்னோட்ட பெட்டி என்பது நமது உரிமையோ அதேபோல் மின்னஞ்சலை மட்டும் முன்வைப்பது அவர்களது உரிமை. அதை நாம் கீழிறக்கம் செய்து பார்க்க முடியாது. அவர்களை “பழமையில் ஊறிப்போன படைப்பாளிகளாலும், விமர்சகர்களாலும்“ என்று எழுதுவதன் மூலம் நாம் அடைய விரும்பம் அடையாளம் பதிவுலகம் நவீன சிந்தனையின் பிரதிநிதி என்பதா? இணையத்தில் படித்துவிட்டு ஒரே வாரத்தில் அவர்கள் எழுதினால்.. அடுத்த நிமிடமே நாம் பதிவில் எழுதுகிறோம். இரண்டிலுமே எழுதுபவரின் புரிதல்தான் பிரச்சனையே ஒழிய எப்படி என்பதில் இல்லை. ஒரு வசதி பதிவில் எழுதினால் தட்டிக் கேட்கலாம் உடனடியாக. தற்சமயம் பத்திரிக்கையில் எழுதினாலும் பதிவில் தட்டிக் கேட்கலாம் என்பதற்கு பல சான்றாதாரங்கள் உள்ளது என்பதால் இதில் பின்னோட்டம் என்பது ஒரு பிரச்சனையே இல்லை. சமீபத்தில் ஜெயமோகனை பதிவுகளும் பத்திரிக்கைகளும் ஒன்று சோ்ந்து காய்ச்சி எடுத்தது நினைவிருக்கலாம்.

6. சான்றாக, ஜெயமோகன் பிரச்சனையை எடுத்துக் கொள்வோம். அதில் பத்திரிக்கை என்ன செய்தது? பதிவுலகம் என்ன செய்தது? என்பதை பார்த்தால் இப்பேச்சுக்களின் வழியாக கட்டப்படும் விஷயங்களை புரிந்து கொள்ள முடியும். ஒரு எழுத்தாளனின் 'தான்' குறித்த அரசியல் கோட்பாடுகளிலிருந்து, ஊடகங்களின் எல்லைகள் அவை கட்டமைக்கும் கருத்துக்களம், கருத்து சுதந்திரம் பற்றிய கருத்துக்கள் வரை இதற்குள் வெவ்வேறு வடிவங்களில் பேசப்பட்டன. பகடி, அங்கதம், நையாண்டி, நகைச்சுவை அவற்றின் கோட்பாடுகள் உளவியல் அரசியல் ஆழ்மன தணிக்கை என இன்னும் ஆழமாக உள்ளே செல்ல வேண்டிய பல தளங்கள் இவற்றில் மிச்சமிருந்தாலும் இதனை மேலோட்டமாக ஒட்டியும் வெட்டியும் சென்றுள்ளன இந்த பதிவுலக உரையாடல்கள். இனி தமிழ் எழுத்தாளன் புதிதாக உருவாகி வந்துள்ள வித்தியாசமான இந்த பதிவுலக வாசக வட்டத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டிய நிலை உருவாகி உள்ளது. இனி எழுத்தாள ஆழ்மனம் பதிவுலக வாசகனையும் தனது உரையாடலுக்குள் உள்ளடக்கி அவனது கண்காணிப்பு தணிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு எழுத்துச் சூழலை இந்த உரையாடல் திறந்து விட்டுள்ளது. இதோடு ஜெயமோகன் குறிப்பிடுவதைப்போல ஆனந்த விகடன் போன்ற பத்திரிக்கைகள் கையாளும் வெகுசன அரசியல்தளம் பற்றிய கவனமும் இந்த எழுத்தாளனை கட்டமைக்கும் கூறாக மாறியுள்ளது. நுட்பமாக பார்த்தால் இந்த உரையாடல் பெரும்பத்திரிக்கை/சிறு பத்திரிக்கை வெகுசன எழுத்து/இலக்கிய எழுத்து அல்லது கனமான எழுத்து போன்ற வகைத்திணைகளின் முரண்களின் அடிப்படையில் கட்டப்பட்டிருப்பதை காணலாம். ஜெயமோகனின் இப்பிரச்சனைக் குறித்த பதிவுகள் அனைத்திலும் இரண்டு முக்கிய அரசியல் கருத்தாக்கங்கள் நுண்ணளவில் விழிப்புற்று போராடின. அது ஒரு 'பண்பாட்டு போராக'வே நிகழ்ந்தது. அதில் ஜெயமோகனை ஆதரிப்பவர்கள் யார் என்பதும் அவரை எதிர்க்க வேண்டிய தேவை என்ன என்பதையும்கூட இவை சொல்லிக் காட்டியுள்ளன. பரந்துபட்ட மக்களுக்கு புரியாததை எழுதுவதாக வைக்கப்படும் வாதத்தையும் அதில் கண்டோம். உண்மையில், எழுத்தின் அல்லது இத்தகைய கனமான இலக்கியத்தின் பணி ரசிகர்களை உருவாக்குவதல்ல வாசகனை உருவாக்குவதுதான். மக்கள் எல்லோரையும் கடைத்தேற்றுவதல்ல மாறாக மக்களை மேம்படுத்தும் முன்னணிகளை உருவாக்குவதுதான். பதிவுகள் பத்திரிக்கைகளைவிட குறைவான வாசகப் பரப்பையே கொண்டுள்ளன. அதேசமயம் பொது வாசகத் தளத்தைவிட சற்றே வலிமையானதாக உள்ளது. அறிவின் அதிகாரத்தைக் கொண்டதாக உள்ளது. ஆனந்த விகடனைவிட அதிக துயரத்தை ஜெயமோகனுக்கு பதிவுலகம் தந்துள்ளது. அதிகமான அதிகாரத்தை இந்த பதிவெழுத்துக்கள் செலுத்தியுள்ளன. அதிக உரிமையையும் எடுத்துக் கொண்டுள்ளன. இவை தனிமனித தாக்குதலையோ அல்லது குழு நலன்களையோ அடிப்படையாகக் கொண்டவை அல்ல. அதேசமயம் தன்னை வெளிப்படுத்தி தனக்கான ஒரு அடையாளத்தை கட்டமைத்துக் கொள்வதாகவும் பதிவுலகம் இப்பிரச்சனையை அனுகியுள்ளது. ஆக, ஜெயமோகன் பின்னோட்ட பெட்டியை இணைக்கவில்லை என்பதற்காக அவரது எழுத்துக்கள் பதிவுலக விமர்சனத்திலிருந்து தப்பிவிட்டதா?

7. பின்னோட்டப்பெட்டி இல்லாவிட்டாலும் நம்மைப்போல தனிப்பதிவாக பொட்டு அதனை கண்டிக்கும் வசதி உள்ளது. பிறகு எதற்காக அவர்களை “செத்த மரங்களில் செதுக்கும் கலைஞர்கள்“ என்று அழைக்க வேண்டும். செத்த மரத்தில்தான் சிற்பம் செதுக்க முடியும். உயிருள்ள மரத்தில் (சுயபுலம்பல்களைக் கொண்ட பதிவுகளைப்போல) முதிராத காதலர்கள் பெயர்தான் செதுக்கமுடியும் என்பதாக இந்த தலைப்பை விமர்சிக்க முடியும். பிரச்சனை சில முன்முடிவுகளுடன் எழுதப்படுவதின் விளைவே இது என்பதைச் சொல்லத்தான்.

8. பதிவுகளை உயர்த்துவதன் மூலம் பத்திரிக்கைகளை குறைவாக மதிப்பிட முடியுமா? பதிவர்களை ஜனநாயகவாதிகளாக சித்தரிக்கும் இந்தபோக்கு சரியா? உண்மையில் பதிவுகளின் மதிப்பீடுகள் அப்படித்தான் வெளிப்படுகிறதா? பதிவுலக சண்டைகள் பத்திரிக்கை சண்டைகளைவிட பிரபலம். அப்புறம் போலிப்பிரச்சனைகள். ஆக, நிறைகுறை இரண்டிலும் உள்ளது. சாதகமானதை நமக்கு சாத்தியமானதாக எடுத்தக்கொள்வதே சரியானது. தவிரவும் அவர்கள் பின்னோட்ட பெட்டியை போடாததால் விமர்சனத்தை சந்திக்கும் திராணியற்றவர்கள் என்பது பல ஆயிரம் ஆண்டுகால எழுத்து சரித்திரத்தையே மறந்துபோனதாகிவிடும். பதிவுகளுக்கு முன்பே எழுத்தும் பத்திரிக்கையும் உண்டு. அதில் இந்த எழுத்தாளர்களும் எழுதிக்கொண்டுத்தான் இருக்கிறார்கள். உண்மையில் பதிவுலகம் என்பதும் தற்காதலின் மற்றொரு அதீத வடிவமே. அதற்கு இந்த எழுத்தாளர்கள் தங்கள் வாசகப்பரப்பை விரிப்பதுடன் அவனுடன் ஒரு உயிரோட்டமுள்ள தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளவே பதிவுகளில் எழுதுகிறார்கள். அதைவிட்டு இங்கும் அவர்கள் திரண்டு வந்து விட்டதாக எண்ணிக் கொள்வது “ஆலையில்லாத ஊரில் இழுப்பைப் பூ சக்கரை“ என்கிற மணோபாவத்தை வெளிப்படுத்துவதாகத்தான் இருக்கும்.

வால்பகுதியாக (டைல்பீஸ் என்பதை இப்படிச் சொல்லலாமா?) ஒரு சின்ன கலந்துரையாடல்.

(வெங்கட்- வாதம் இந்த வண்ணத்தில் உள்ளது.)

"இன்று அச்சு ஊடகங்களில் எழுதுபவர்கள் பலரும் விஷயதானத்திற்கு இணையத்தையே முற்றாக நம்பியிருக்கிறார்கள். வலைக்குறிப்புகளும் இணைய சஞ்சிகைகளும் இவர்கள் எழுதுபனவற்றுக்கு அடிப்படையாக இருப்பதை அடையாளம் காணமுடிகிறது.”

- இணையம் என்பது பொதுவானது. அதன் பிரதிநிதியாக நாம் நம்மை கருதிக்கொள்ள முடியாது. இணையம் பரவலானது என்பதுடன் அனுக எளிமையானது என்பதாலும்தான்.

”ஆனால் அச்சிலேறுபவை எல்லாம் இணைய உலகில் வ(வா)சிக்கும் பலரையும் சென்றடைவதை இவர்கள் அறிவதில்லை.”

- அச்சில் ஏறுபவை எல்லாம் இணையத்திற்கும் பதிவிற்கும் எதிரானவை அல்ல. அவர்களும் பதிவுகளை எல்லாம் வாசிக்கிறார்கள். அப்படி வாசிக்க வேண்டும் என்பதும் அவர்களது அங்கீகாரம் தேடுவதும் பதிவர்களிடம் உள்ள ஒரு ஆசைதானே.

”இந்த வாசகர்களின் உலகம் வேறு, இங்கே பிம்பங்கள் தொழப்படுவதில்லை. அது எழுத்தாளர்-வாசகர் என்ற இடைக்கோடு அழிந்துபோன வேற்று உலகம் என்பதைப் பழமையில் ஊறிய படைப்பாளிகள் அறிவதில்லை.”

- பதிவுலகம் மற்றொரு பிம்ப உற்பத்தித் தொழிற்கூடம்தானே ஒழிய இங்கு எந்த பிம்பமும் அழிக்கப்படுவதில்லை. பிம்பப் பால்வினை நோய் பீதிக்கப்படாமல் சீரோ-டிகிரியில் எழுத்து சாத்தியமா?

”மேல் நின்று உபதேசிப்பது இங்கே எடுபடாது; எதுவுமே சக-விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவையல்ல. கறாரான விமர்சனங்கள் முன்வரும்பொழுது அவர்களால் அந்த வீச்சை எதிர்கொள்ள முடிவதில்லை.”

- மேல்நின்று உபதேசிப்பதாக ஒரு எழுத்தாளனை அனுகுவதால்தான் பிரச்சனை. கறாரான விமர்சனம் என்பதே தவறான ஒரு அனுகுமுறை. எழுத்துக்களுடன் உரையாடலாம், மறுக்கலாம், அழிக்கலாம். விமர்சனம் என்ற பெயரில் நடைபெறும் தனிமனித தாக்குதல்தான் பிரச்சனை. அந்த சந்தர்ப்பத்தில் ஒரு எழுத்தாளர் அல்லது பதிவர்  என்ன சொல்வார். Artaud கூறியதுதான் “are you critic? suck my cock". எழுதுபவர் தனது உலகம் சிறியது என்பதை உணர்ந்தால் போதும். அதேபோல் விமர்சிப்பவரும்.

”மறுபுறத்தில் இவ்வூடகத்தில் கிடைக்கும் பல வசதிகள் அவர்களைத் தொடந்து கவர்ந்திழுத்துக்கொண்டே இருக்கின்றன. இதனால்தான் இவர்களில் பலரும் மறுபிறவி எடுத்து வலைப்பதிய வருகிறார்கள். இந்த முறை அதீத கவனத்துடன் மறுவினைக்கான வாசலை மூடிவிட்டுத்தான் தங்கள் கடையை விரிக்கிறார்கள்..."”

இதற்கு பதில் நாகார்ஜினன் கூறியுள்ளார்.

ஒரு விஷயம் - என் எழுத்துக்கு இணையத்தை மாத்திரம் நான் நம்புவதில்லை. புத்தகங்கள் எப்போதும் உண்டு. எல்லாவற்றுக்கும் அடிப்படையாக நான் முக்கியமாகக் கருதும் அறிவியல்-இலக்கிய-தத்துவ-வரலாற்றுப் பிரச்னைப்பாடுகள் என் சிந்தனையில் எப்போதும் இடம்பெறும்.
இருந்தாலும் இணையம் என்பது வேறுவகை வடிவம் என்பதால் வெங்கட் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது. “பெரிய எழுத்தாளர்களுக்கு” வெங்கட் விட்டிருப்பது நிச்சயம் ஒரு சவால்தான். ஒரு பரிசோதனையாக அதை ஏற்கிறேன்!
என் தளத்தில் பின்னூட்டங்களை இன்றிலிருந்து அனுமதிக்கிறேன் - விரைவில் அதற்கான மாற்றங்கள் செய்யப்படும். அடுத்த ஒரு மாதம்வரை என் இணைய தளத்தின் பின்னூட்டப்பெட்டி திறந்திருக்கும். ஒட்டியும் வெட்டியும் வரும் கறாரான கருத்துக்கள் நிச்சயம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன்.
அதேவேளை நேற்றுக் கூறியது போல “சூப்பர்!”, “பிச்சிட்டீங்க…”, “பயனுள்ள பதிவு”, “புரியலே”, “post-modernism ஒழிக” போன்ற வகை எழுத்துக்களை வரவழைத்து, போட்டு, நன்றிதெரிவிக்க விருப்பமில்லை; போடவில்லை என்றால் “கருத்து-சுதந்திரத்தை மறுக்கிறீர்களா?” என்ற வம்பை வாங்க வேண்டாமே என்பதால்தான் பின்னூட்டங்கள் இதுவரை இடம்பெறவில்லை. தவிர வேறு காரணங்கள் இல்லை!

-ஜமாலன் - 02-04-2008

Share |
ஜமாலன். Blogger இயக்குவது.